Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

9/22/2018

ஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்

அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார்.

9/18/2018

அடக் கொடுமையே.... இங்கேயுமா....

நாடு முழுவதும், 2017 ஜூன் வரை, பல்வேறு நீதிமன்றங்களில், 6,400 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

9/15/2018

மனச்சாட்சியே! நீ எங்கே இருக்கிறாய்?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், செப்டம்பர் 4 அன்று தில்லி நாடாளுமன்ற வீதியில் பிரம்மாண்டமான போராட்டப் பேரணியை நடத்துகிறது. அதையொட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை இது..

9/14/2018

இந்நிலை என்று மாறுமோ?

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசால், அக்குழுவின் தலைவராக, நிபுணர், மாதவ் காட்கில் நியமிக்கப்பட்டார்.

9/13/2018

3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…


தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.

காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.

உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் – சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.

உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.

இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

9/11/2018

காலாண்டு தேர்வு வினாக்கள் - ஆசிரியர்கள் அதிர்ச்சி


காலாண்டு தேர்வில் 80% கேள்விகள் புத்தகத்தினுள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டு இருந்ததால் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.

9/10/2018

உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர்தான் !!


உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் 
நீங்கள் கோடீஸ்வரர்தான் !!

மச்சங்கள் ஒருவருடைய குணங்கள் மற்றும் அவரது எதிர்கால பலன்களை துல்லியமாக சொல்லக்கூடியது என பழங்கால முறைகள் தெரிவிக்கின்றன. அதன்படி உடலின் எந்த பகுதியில் மச்சம் இருந்தால் செல்வம் கொட்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

காது :

கன்னம் மற்றும் காதுகளுக்கு இடையே மச்சம் இருந்தால் இளவயதிலேயே இவர் கோடீஸ்வரர் ஆக வாய்ப்புள்ளது.

உதடு :

ஒருவருக்கு உதட்டின் மேல் மச்சம் இருந்தால் அவர்கள் மிக அதிர்ஷ்டகரமானவர்கள். அவர்களிடம் செல்வம் எப்போதும் இருக்கும்.

வலது கன்னம் :

ஒருவரது வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் திருமணத்திற்கு பின்னர் அவர் செல்வந்தராக போவதை குறிக்கிறது.

உள்ளங்கால்கள் :

ஒருவருக்கு உள்ளங்கால்களில் மச்சம் இருந்தால் அவர்கள் பணத்தை விரும்புபவர்கள் அதுமட்டுமில்லாமல் உலகெங்கும் சுற்றி பார்க்க கூடிய யோகம் அவர்களுக்கு இருக்கிறது.

தொப்புள் :

தொப்புளின் கீழே வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் செல்வந்தர் ஆக நிறைய வாய்ப்புகள் உண்டு.

தாடை :

தாடையில் மச்சமிருப்பவர்கள் யாருடனும் அவ்வளவு எளிதில் ஒட்ட மாட்டார்கள். தனிமையை விரும்புவார்கள். அல்லது நெருக்கமான சிலரிடம் மட்டுமே பேசுவார்கள்.

இடுப்பு :

இடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்களை நோக்கி பணம் வந்து கொண்டே இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

மூக்கு :

ஒரு நபரின் மூக்கு நுனி அல்லது வலப்புறம் மச்சம் காணப்பட்டால் அவர்கள் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கோடீஸ்வரர் ஆகியே தீருவார் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் 30 வயதிற்குள் இவர் வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.

மார்பு :

மார்பின் வலது பக்கம் மச்சம் இருந்தால் அந்த நபர் அமைதியாகவும், செல்வம் மிகுந்த ஒரு வாழ்வையும் வாழ்வார்கள்.

வலது உள்ளங்கை :

வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்கள் எப்போதும் வெற்றியை நோக்கி பயணித்தபடியே இருப்பார்கள். உள்ளங்கையின் மேல் பகுதிகளில் மச்சம் இருந்தால் இவர்கள் இளமையிலேயே செல்வந்தர்களாக இருப்பார்கள்.

நெற்றி :

நெற்றியின் மையப்பகுதியில் மச்சம் இருப்பவர்கள் வாழ்வில் சீக்கிரம் நிலை பெற்று விடுவார்கள். இவர்களிடம் பொதுவான அளவில் பணம் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.

9/07/2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்

தற்போது உள்ள தமிழக அரசுப் பள்ளிகளில் பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

9/06/2018

உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம் - ஒரு தேடல்


உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சினிமாக்காரர்கள் போல் இல்லீங்க நல்லாசிரியர்கள்...!

பல நிகழ்ச்சிகளில், 'உங்களுக்கு, மிகவும் பிடித்த தொழில் எது?' என, நிருபர்கள் கேட்ட போதெல்லாம், சட்டென, 'ஆசிரியர் பணி' என்றார், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம்.

9/05/2018

தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ..


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

9/04/2018

எதை மறந்தாலும் இதை மட்டும் மறக்காதீர்கள் !


உதவிக்கு செய்த நன்றி..!

9/03/2018

எந்த விரதத்திற்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?


விரதங்களின் பலன்கள்..!

பொதுவாக விரதங்கள் நாம் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றே. ஆனால் எந்த விழாவின் போது விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது யாரும் அறிந்ததில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

புத்தக கண்காட்சி ஒரு சாமானிய ஏக்கம்


புத்தக வாசிப்பு, மனிதனை பக்குவப்படுத்துகிறது. சாதாரண மனிதனை கூட, சமூக பார்வையுள்ள, நல்ல குடிமகனாக மாற்றுவதில், புத்தகங்கள் ஆற்றும் பணி, மகத்தானது.

8/30/2018

"தொப்பைக்கான " காரணங்களும் தீர்வும் - ஒரு அலசல்



"தொப்பை ஏற்படப் பல காரணங்கள் இருந்தாலும், அதிகமாக உணவு உட்கொள்வதும், உடல் உழைப்பு இல்லாததும்தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்" என்கிறார்கள் மருத்துவர்கள்.

8/29/2018

எங்களுக்கு ஒரு நியாயம்.. உங்களுக்கொரு நியாயமா?


'முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை, 136- லிருந்து, 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்' என, 2014ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

8/28/2018

அறிய "நோய்" வந்துள்ள ஒரு சிறுவனுக்கு (ஸ்ரீஹரன்) உதவி செய்யலாமே..


மே மாதம், பள்ளிகள் தொடங்க சில நாட்களே இருந்த நேரம் அது. ஆறாம் வகுப்புக்குச் செல்லப்போகும் மும்முரத்தில் இருந்தான் 11 வயது நிரம்பிய ஸ்ரீஹரன். லீவு முடியப்போகிறது என்பது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், புது பேக், சீருடை போட்டுக்கொண்டு சில வாரங்களில் தன் நண்பர்களைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் சந்தோஷமாக இருந்த ஸ்ரீஹரனுக்கு அப்போது தெரியாது, தான் இந்த வருடம் ஸ்கூலுக்கு செல்ல முடியாது என்று...

8/27/2018

குழந்தைகளா அல்லது பொதி சுமக்கும் கழுதைகளா? சிந்திப்பீர்


இன்றைய சிறு வயது பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஒரு பாடம் சம்பந்தமாக, ஐந்து புத்தகங்கள் வீதம், ஐந்து பாடங்களுக்கு, 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள், நோட்டுகள், டிபன் பாக்சை முதுகில் சுமந்து செல்கிறார்கள்.

இதில், யோகா, அபாகஸ் என, வேறு சில பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள்.  தினமும், மன அழுத்தத்துடன், வீடு திரும்புகிறார்கள்.

8/25/2018

சென்னை பயோகிராஃபி - சென்னை டே 2018


சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. தற்போது சென்னையின் நெரிசல் மிகுந்த பகுதிகளாக இருக்கும் எக்மோர், வேப்பேரி, திருவல்லிக்கேணி போன்றவை அக்கம்பக்க கிராமங்களாக இருந்திருக்கின்றன.

8/24/2018

நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற,நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்:-

எல்லா மாணவ,மாணவிகளும் நல்லமதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டிவாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

8/23/2018

இந்தியா இன்று இப்படித்தான் இருக்கிறது...


ஒரு கிராமத்தில் குடி தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

6/25/2018

Plus two Maths Unit Test - 1 Question Paper Tamil Medium

Plus two Maths Unit Test - 1 Question Paper

அணிகளும், அணிக்கோவைகளும் ....

Download Here

6/04/2018

நீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்..

நீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்.. தோராயமாக மாணவர்களிடம் கொள்ளையடித்த நீட் கோச்சிங் பண விபரம் கடைசி பத்தியில்...

5/16/2018

நான் ஒரு ஆசிரியர்.....

நான் ஒரு ஆசிரியர்.........
ஒரு மருத்துவரின் பின்னால்
நான் இருக்கிறேன்
ஒரு ஆசிரியராக.......

5/13/2018

அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்?

தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

5/11/2018

திருவாசகமும்.... மனைவிகளும்...

_ஒருவர் தினமும் கோவிலுக்கு ""திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.

5/07/2018

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் ....



இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்

5/05/2018

குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்

குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்

NEET EXAM எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக இதை படிங்க...

இவ்வளவு பதட்டமான சூழ்நிலையிலும் நீட் தேர்விற்கு தயாராகும் மாணவ செல்வமே.....

5/04/2018

உங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர்கள்...

*நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!* 📲


5/03/2018

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? தெரியாத தகவல்கள்..

சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்' என்று சொல்வர்.

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.2018) ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்..

​என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

5/02/2018

செல்போன் பயன்படுத்தும் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு

அந்தப் பெண்மணி ஓர் ஆசிரியை. அன்றைக்கு இரவுச் சாப்பாடு முடிந்த பிறகு, வகுப்பு மாணவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விடைத்தாள்களைத் திருத்த உட்கார்ந்தார்.

5/01/2018

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய வசதி.!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதுதான் துல்லியமாக கேட்கும் வகையில் உதவும் புதிய பாட்காஸ்ட் பிளேயர்.

4/30/2018

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி:

கலசபாக்கம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால், அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எம்.எல்.ஏ. பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சி சின்னகல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குமாரி. இவர்களுக்கு பி.யுவராஜ் (வயது 22) என்ற மகனும் செண்பகவள்ளி என்ற மகளும் உள்ளனர்.

யுவராஜ் 1-ம் வகுப்பு முதல், 5-ம் வகுப்பு வரை சீட்டம்பட்டு அரசு ஆரம்ப பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆர்ப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 418 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வரை மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து விட்டு, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. படித்துவிட்டு, ஓராண்டாக ஐ.ஏ.எஸ்.தேர்வுக்குப் படித்து வந்தார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், பிறந்த கிராமத்துக்கும் பெருமைத் தேடி கொடுத்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், சிறுவயது முதலே படிப்பில் மிகவும் கவனம் செலுத்தி வந்தேன். அரசு பள்ளிக்கூடத்தில் படித்து, தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்துக்கொண்டு இருக்கும்போது, அங்குள்ள பேராசிரியர்கள் ஐ.ஏ.எஸ். படிக்க ஊக்கப்படுத்தினர்.

அதன்படி சகாயம், இறையன்பு போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முன்னுதாரணமாக மனதில் நினைத்து படித்து வந்தேன். முதலில் சென்னையில் உள்ள மனித நேய மையத்தில் 2 மாதம் படித்தேன். நான் பிளஸ்-2 படிக்கும்போது, அரசு சார்பில் வழங்கிய மடிக்கணினியை வைத்து இணையதள வசதியுடன் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் மாநிலத்தில் முதல் இடம் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், 74-வது இடம் பெற்றுள்ளேன்.

நான் ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த பின்னர், என்னை பொதுப்பணி துறை செயலாளராக நியமித்தால், கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார நடவடிக்கை எடுப்பதுடன் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 510 குளங்கள் காணாமல்போய் உள்ளதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பேன். எனது சொந்த கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நூலகம் அமைத்து என்னை போன்ற மாணவர்கள் அதிக புத்தகங்களை படித்து அரசு தேர்வுகளில் வெற்றி பெற ஊக்குவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், அவருடைய வீட்டுக்கு நேரடியாக சென்று இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார். குடிசை வீட்டில் வாழும் யுவராஜீக்கு உடனடியாக பசுமை வீடு கட்டித்தரப்படும். அவருக்கு, டெல்லி சென்று பயிற்சி பெற தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும், என்றார்.

4/27/2018

எப்படி இருக்கிறது +1 புது பாட புத்தகம்

புதிய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 புத்தகம், கறுப்பு -வெள்ளையில் இருந்து, வண்ணமயமாக மாறியுள்ளது. 

4/26/2018

பெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...

”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”

Mr.. மோடியும்... நரகமும்....

மோடி, எலிசபெத் ராணி, ரஷ்ய அதிபர் புதின்...... மூவரும் நரகத்திற்கு சென்றனர்.

4/25/2018

அறிவோம் ஐ.ஐ.எப்.பி.டி.,!

தொழில்நுட்பங்களை உணவு பொருட்களில் உட்புகுத்தி, அதனை  பதப்படுத்தும் செயல்முறைகளை, இயற்கை எழிலுடன் கற்றுத் தரும் பிரத்யேக கல்லூரி ஐ.ஐ.எப்.பி.டி., எனப்படும் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம்!

4/24/2018

எட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்...

எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்!

''நீர் இழப்பு என்றால் என்ன டாக்டர்?''

4/23/2018

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!
.

ஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது, பலன்பூர். இங்குள்ள படான் பகுதியை சேர்ந்தவர் ராகுல்.

4/22/2018

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு,கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.

நம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்?

இது வேடிக்கையான ஒரு சொல்லாடலாக மாறிவிட்ட இன்றைய சூழலில், இது ஒரு உண்மையான நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் செய்தி.

4/21/2018

தூக்கம் தொலைத்த இரவுகள்.!

கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா?

4/20/2018

இலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா?

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 -  25% இடஒதுக்கீடு 2018-2019 - 

ஆன்லைன் - விண்ணப்பதிவு.

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்.

4/19/2018

தமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..

கர்நாடக முதல்வர் : என்னப்பா , தமிழ்நாட்டுல இருந்து ரெண்டு நாளா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும் னு சவுண்டக் காணோம்? தண்ணியே வேணாமோ?

கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா?

பிடித்த வேர்க்கடலை இதய நோயை தடுக்கவும், கர்ப்பிணிப் பெண்களின் உடல்நல ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுகிறது. வேர்க்கடலையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள்.

4/18/2018

கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்! - கவர்னரின் செயலை விமர்சிக்கும் `தி வீக்' நிருபர்

ருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரிப் பெண்களைத் தவறாக வழிநடத்த முனைந்ததாக அந்தக் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி அண்மையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஒரு ஆசிரியையின் கனவு... !

"பசங்களா..
ஒரு சின்ன கற்பனை..
அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கள்லாம் என்னவா பிறக்க விரும்புவிங்க..?

ஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்!

குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

4/17/2018

புரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.. ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட்

அருப்புகோட்டை , நான்கு மாணவிகளிடம் பேராசிரியை நடத்திய உரையாடல்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பேராசிரியை மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரைக் கைது செய்தபோது, ' மீடியாக்கள் முன்னிலையில் அவர் பேசிவிடக் கூடாது' என்பதில் காவல்துறை அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். 

சித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார்கள் தெரியுமா?

சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்கு பின் ஒளிந்துள்ள உண்மை!

குஞ்சிதபாதம் என்றால் என்ன?

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு ஆனந்த தாண்டவம் என்று பெயர்.

4/16/2018

உடம்பை பார்த்து கொள்ளுங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

இப்போ பிரபலமான மருத்துவமனைல ஒரு ஷிப்டுக்கு டயாலிஸிஸ் பண்றவுங்களோட எண்ணிக்கை கிட்டதட்ட 100 பேர்...

ஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு

நான் சுமார் நான்கு மாதத்திற்கு முன் பஸ் அடிக்கடி வராத சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருக்கும் சமயம் 8ஆம் வகுப்பு அரசுப்பள்ளி சீருடை அணிந்தமணவன் ஒருவன் லிப்ட் கேட்டான்.

4/15/2018

சளிப் பிரச்சனை இருக்கா? பலருக்கும் தெரியாத கற்பூரத்தின் நன்மைகள்

கற்பூரம் நல்ல வாசனையையும் கொண்டது. இந்த வாசனையைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த கற்பூரம் தான் இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் விக்ஸில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

*எச்சரிக்கை!* - தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க

‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மி விட்டால் போதும், அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.

4/14/2018

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

இனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம்

பிளஸ் 2 வரை இனி ஒரேபள்ளியாக துவக்கவும்,அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டியஇடங்கள் குறித்தஆய்வறிக்கையை மே5க்குள்
அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

4/13/2018

கமலஹாசன் - க்கு கடிதம் மூலம் கேள்வி கேட்ட எச் ராஜா....

துக்ளக் இதழில் எச் ராஜா ஜி,  கமலஹாசனுக்கு எழுதிய சாட்டையடி கடிதம் !!

காவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன ? - நகைச்சுவைக்கு மட்டும்.

அண்ணே தமிழ்நாடு கொதிச்சி நிக்குண்ணே ஐபில் எல்லாம் விரட்டியாச்சி..

மிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான Online புகார்

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

4/12/2018

GoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க.

#Gobackmodi ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஒட்டுமொத்தப் பி.ஜே.பி-யினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது!

இந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...

மோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா ?

4/11/2018

கண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்!

கால் கிலோ காஃபித்தூள்!
ஒரு உரையாடல்!

10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் !!

நேற்று 10.04.2018 10ஆம் வகுப்பு கணித தேர்வு நடைபெற்றது . இதில் 6ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய முறைகளில் கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது .10ஆம் வகுப்பு வினாத்தாள் வடிவமைப்பு படி கேள்விகள் இடம் பெறவில்லை.முதல் கேள்வியே தயாரிக்கப்பட்ட வினா மாணவர்களை பயமுறுத்தும் விதத்தில் அமைந்தது.

4/10/2018

புதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் புதிய பாட திட்டம் அறிமுகப் படுத்த உள்ளது.

கே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்!

டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற முத்திரையை மாற்றத்தான் அடித்து ஆடினேன்’ என்று பஞ்சாப் அணி வீரர் ராகுல் கூறினார்.

வாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் ஆப்பில் நீங்கள் உங்கள் குரலை பதிவு செய்து மெசேஜ் அனுப்புவதற்காக சிறிது சிரமப்படவேண்டும். அதாவது மைக்ரோபோன் பட்டனை விரல்களால் நீண்ட அழுத்திக் கொண்டே குரலை பதிவு செய்ய வேண்டியிருந்தது. 

4/09/2018

நேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் வென்ற கதை...




இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் மன்னராக பரவலாக அறியப்படும் ஜித்து ராய் சர்வதேச அளவில் பல வெற்றிகள் பெற்றுள்ளார்.

இவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியின் மூலம் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்.

சிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"

கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"

மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"

________________________________
*கணவர்:"இந்த பொடுகு மருந்தை*
*தேய்ச்சி விடேன்டி!"*

*மனைவி: "ஏன்,*
*நீங்களே தேய்க்க கூடாதா?"*

*"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்*
*சொல்லி அனுப்பினார்,அதான்"*
_______________________________

*சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?*

*புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.*

*புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.*
________________________________

கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*

ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *"வரமா"* இருக்கனும்..

இல்ல ஊருக்கு போன மனைவி *"வராம"* இருக்கனும் ..
_______________________________
மகன்:
சகலை என்றால் என்னப்பா?

அப்பா:
ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...
____________________________
Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??..

"ரொம்ப நீளம்னு எழுது..."

Source : Whatsapp

4/08/2018

மனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா

இன்றைக்கு உணவு மாற்றத்தால் வருகிற சர்க்கரை வியாதி, தைராய்டு சிக்கல், ரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படுகிற மன அழுத்தம், மூட்டு வலி… என்றெல்லாம் உடனே பட்டியலிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

அடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி

தோல்விகளைச் சந்திக்காத இயக்குனர் என்ற பெயரை தக்கவைத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘பாகுபலி’ படத்தின் மூலமாக பிரமாண்ட இயக்குனர்களின் பட்டியலில் உலக அளவில் இடம்பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தோடு சேர்த்து இதுவரை 11 படங்களை இயக்கியிருக்கும் எஸ்.எஸ். ராஜமவுலியின் அனைத்தும் படங்களுமே வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது படங்கள் அனைத்திலும் படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேஸ்வரராவ், இசையமைப்பு எம்.எம்.கீரவாணி. இது தவிர ராஜமவுலி இயக்கிய 11 படங்களில் 9 படங்களுக்கு அவரது தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

எஸ்.எஸ்.ராஜமவுலி ஆரம்ப காலகட்டத்தில்,  இயக்குனர் கே.ராகவேந்திரராவ் வழிகாட்டுதலின் பேரில் தொலைக்காட்சி தொடர்களை இயக்கிக்கொண்டிருந்தார். பின்னர் கே.ராகவேந்திரராவ் தயாரிப்பில் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ என்ற படத்தை இயக்கினார். ஜூனியர் என்.டி.ஆர். அறிமுகமான ‘நின்னு சூடாலனி’ திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், அவரை வைத்து ராஜ மவுலி இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு சினிமாவில் நிலைத்து நிற்கவும் அந்த வெற்றி உதவியது.

2001-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ‘ஸ்டூடண்ட் நம்பர்-1’ என்ற பெயரிலேயே தமிழிலும் வெளியான இந்தப் படத்தில் சிபிராஜ் நடித்திருந்தார்.

இதையடுத்து 2003-ம் ஆண்டு மீண்டும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ‘சிம்ஹாத்ரி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்தப் படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் ‘கஜேந்திரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அடுத்ததாக நிதின், ஜெனிலியா நடிப்பில் 2004-ம் ஆண்டு ‘சை’ என்ற படம் வெளியானது. இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர் ‘பாகுபலி’ ஹீரோவான பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் 2005-ம் ஆண்டு ‘சத்ரபதி’ என்ற படத்தை இயக்கினார். வெற்றிப்படமான இந்தப் படம், ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் பிரபலமானதைத் தொடர்ந்து, தமிழில் ‘சந்திரமவுலி’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது.

ரவிதேஜா, அனுஷ்கா நடிப்பில் ராஜமவுலி இயக்கி, 2006-ம் ஆண்டு வெளியான ‘விக்ரமார்க்குடு’ படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, அந்தப் படமும் தமிழில் கார்த்தி, தமன்னா நடிப்பில் ‘சிறுத்தை’ என்ற பெயரில் ரீமேக்கானது. இந்தப் படத்தை அடுத்து ராஜ மவுலியுடன் மூன்றாவது முறையாக ஜூனியர் என்.டி.ஆர். இணைந்தார். இந்தக் கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியான ‘எமதொங்கா’ திரைப்படம், ராஜமவுலி பிரமாண்ட இயக்குனர் என்பதற்கான அஸ்திரவாரத்தை அமைத்துக் கொடுத்தப் படம் என்றால் அது மிகையல்ல. இந்தப் படத்தில் எமலோகத்தில் நடை பெறுவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சிரஞ்சீவி மகன் ராம் சரணுடன் இணைந்தார் ராஜமவுலி. தனது முதல் படத்தில் வெற்றிபட இயக்குனரான பூரிஜெகந்நாத்துடன் இணைந்து ‘சிறுத்தா’ படத்தைக் கொடுத்த ராம்சரணுக்கு, அந்தப் படம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. எனவே தொடர் வெற்றியைக் கொடுத்து வரும் ராஜமவுலியிடம், தன் மகனை சேர்த்து விட்டார் சிரஞ்சீவி. தெலுங்கில் ‘மகதீரா’ என்ற பெயரிலும், தமிழில் ‘மாவீரன்’ என்ற பெயரிலும் வெளியான இந்தப் படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாத்துறையினர் அனைவரையும் ராஜமவுலியை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தது.

இதனால் அவரது அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அனைவரும் அடுத்து என்ன பிரமாண்டப் படத்தை இயக்கப்போகிறார்? என்று கூர்ந்து கவனித்த வேளையில், சாதாரணமாக ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை இயக்கினார். அதுவரை தெலுங்கில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சுனிலை கதாநாயகனாக வைத்து ‘மரியாதை ராமண்ணா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி. அதற்கு இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டதே சான்று ஆகும். சந்தானம் நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம், மரியாதை ராமண்ணாவின் ரீமேக்தான்.

அடுத்ததாக ராஜமவுலி, ஈயை வைத்து கிராபிக்ஸ் மூலம் பிரமாண்டமாக இயக்கியிருந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. சுதீப், நானி, சமந்தா நடிப்பில் தெலுங்கில் ‘ஈகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் வெளியான அந்தத் திரைப்படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அடுத்ததாக வெளியான ‘பாகுபலி’ படத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதன் வெற்றி உலகம் அறிந்த ஒன்றாகிப்போய்விட்டது. உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடிவரை அந்தப் படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் ராஜமவுலி. ‘பாகுபலி’ திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி ஆகிய இரண்டு நாயகர்கள் நடித்ததைப் போலவே, அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் ஆகியோரை இயக்குகிறார் ராஜமவுலி. இந்தப் படத்தின் கதைக்களம் குத்துச்சண்டையை அடிப்படையாகக் கொண்டது என்று அரசல்புரசலாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

எது எப்படியோ.. இதுவரை தான் இயக்கிய 11 படங்களையும் வெற்றிப்படமாக்கிக் காட்டிய ராஜமவுலி, தன்னுடைய அடுத்த வெற்றிக்கு தயாராகிவிட்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...


தினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்படி உண்பது என்றும் பலருக்கு தெரிவதில்லை. சரி தினமும் உண்பதால் அப்படி என்ன நன்மை கிழே பார்க்கலாம்.

ஒரு முட்டையில் 212 mg கொழுப்பு உள்ளது ஆனால் இது உடலின் ரத்தத்தில் கலபதில்லை எனவே இது உடலுக்கு நன்மையே.

தினமும் 1 முட்டை சாப்டிடுவதால் கண் பார்வை அதிகரிக்கிறது மேலும் அது கண்பார்வையை மேம்பட செய்கிறது.
இதில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் சத்துக்கள் இருப்பதால் உடலின் கட்டுமானத்துக்கு மிகவும் பயன்படுகிறது.

தினமும் முட்டையை அவித்து உண்பதால் உடலுக்கு நல்ல சத்து மற்றும் சக்தி கிடைக்கிறது.

Article source : Google

How To use Amma wifi?

ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும் ‘அம்மா வை-பை’ வசதியை எப்படிபயன்படுத்துவது என்று விரிவாக பார்க்கலாம்.
#AmmaWiFi மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் 50 இடங்களில் ‘வை-பை’ சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் ‘வை-பை’ மண்டலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

4/07/2018

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீடியோ இணைப்புடன்

பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீடியோ இணைப்புடன்....


இளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கடைசி நாள்


சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சொந்த செலவில் புதிய சீருடை வாங்கிக்கொள்ள வேண்டும்

தமிழக அரசு பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய சீருடைகளை, அவர்கள் சொந்த செலவில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தும்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மும்பைக்கா? ஓர் அலசல்!

ஐ.பி.எல்., தொடரின் 11வது 'சீசன்' இன்று துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, மும்பையை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரு என்பவர் யார் ?


குரு என்பவர் உங்களை உற்சாகப்படுத்த வரவில்லை.

4/06/2018

திருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறீர்கள்?


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மத்திய அரசு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. இதை கண்டித்து, அ.தி.மு.க., உண்ணாவிரதத்தை நடத்தியது.

நீட் தேர்வு மாதிரி வினாத்தாள் - 1 விடைகளுடன் (2018)

நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் அதற்க்கான கேள்வித் தாள்கள் இங்கே தினமும் கொடுக்கப்படும். மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

வாட்ஸ் அப்பில் வந்திருக்கும் புதிய அம்சம் என்ன யூஸ் தெரியுமா?


பில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் கேட்கப்பட்ட ஒரு வாட்ஸ்ஆப் அம்சமானது இன்று வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

4/05/2018

இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு வருமா ?

தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, இரண்டு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த, 2009, ஜூன், 1க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 8,370 + 2,800 = 11,170 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும், 2009, ஜூன், 6க்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 5,200 + 2,800 = 8,000 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும், அரசு வழங்குகிறது.

4/04/2018

மாணவர்களே...டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு !!

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது.

                                            

தமிழக கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான், எம்பிஏ, எம்சிஏ, போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும், ’டான்செட்’ நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். டான்செட் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்..

பிரதமருடன் கவர்னர் பேசியது என்ன ? அரசு டிஸ்மிஸ் செய்யப்படுமா?

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், டில்லியில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன், தமிழக கவர்னர் நடத்திய ஆலோசனையில், மிக முக்கிய விஷயம் இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.

மேலும் தொடர.....



தெரிந்து கொள்வோம் : நாஸ்காம் தேர்வு

இத் தேர்வில் பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) படிப்பில் ஒன்றில் இறுதியாண்டு படிப்பவர் கலந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதம் பெற்றிருப்பது முக்கியம்.

3/28/2018

12 Biology Important Questions Lesson Wise

12 Biology Important Questions Lesson Wise

English Medium

12 th Bio Botany Important One Marks With Answers

12 th Bio Botany Important One Marks With Answers

3/22/2018

தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்

அண்ணா பல்கலைக்கழகம்உட்பட தமிழகத்தை சேர்ந்த9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்வழங்கி மத்திய அரசு
ஆணையிட்டுள்ளது.

3/21/2018

புரிந்து கொள்ளுங்கள் பெண்களே!

ஆங்கிலேயர், இந்தியாவை அடிமைப்படுத்திய பின், தாய்மொழியை இழந்தோம்; ஆடையை இழந்தோம்; பண்பாட்டை மறந்தோம்; கலாசாரத்தை கைவிட்டோம்.'தமிழ்... தமிழ்...' எனக் கூவி, இந்தியை விரட்டினோம்; 

பள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதை கவனிக்கவேண்டும்?



எந்தப் பள்ளியும் பெற்றோர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில்லை. எனவே, இருப்பவற்றில் சிறந்தவற்றை, தங்களுக்கு திருப்தியானவற்றை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

3/20/2018

பெண்களின் பரவலான பிரச்னை

ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்

இன்று பெண்கள் பலர் சந்தித்துவரும் மிகப்பெரிய ஆரோக்கியப் பிரச்னை... ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’ (Rushing Women Syndrome). பெயரே புதிதாக இருக்கிறதா? மெனோபாஸ் கட்டத்தை அடைந்த அல்லது அடையும் நிலையில் இருக்கும் பெண்கள், சதா `வேலை, வேலை’ என்று பரபரவென ஓடிக்கொண்டே இருக்கும் பெண்கள்... இவர்களெல்லாம் உடல் அசதி, சோர்வு, ஸ்ட்ரெஸ் போன்றவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதைத்தான் நவீன மருத்துவ உலகம் ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’ என்கிறது.

சரி, இந்தப் பிரச்னையைக் கண்டறிவது எப்படி? இதற்கான தீர்வுகள் என்னென்ன? இதில் பெண்கள் கவனம்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

3/19/2018

ஒரு ஜான் வயிற்றுக்கு இதுதான் சரி...

‘பசி’ என்ற உணர்வு இல்லையென்றால், உலகில் யாரும் உழைக்க மாட்டார்கள். பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பசியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான 10 தகவல்களை இங்கு பார்க்கலாம்.

தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...


தேர்வுக்கு கொடுக்கப்படும் பலவிதமான ஆலோசனைகளையும், அடுக்கடுக்கான அறிவுரைகளையும் பார்க்கும்போது சிலருக்கு எரிச்சல் வரலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகளைக் கண்டறிவது எப்படி?

children's kidney disease symptoms:



``சிறுநீரகப் பாதிப்புகள் மற்ற நோய் பாதிப்புகளைப்போலன்றி, அறிகுறிகள் இல்லாமலேயே ஏற்படக்கூடியவை. வேறு ஏதேனும் பரிசோதனை அல்லது சிகிச்சைக்காகச் செல்லும்போதுதான் பெரும்பாலானோருக்கு பாதிப்பு இருப்பதே தெரியவரும். அதிலும் குழந்தைகள் என்றால் அதிக அக்கறை தேவை”.

3/18/2018

ஆசிரியர்களே(சிலர்) நீங்களே இப்படி இருந்தா எப்படி?

சென்னையில் உள்ள  பெருங்குடியில், 12 வயதே நிரம்பிய ஒரு  சிறுமிக்கு, தலைமையாசிரியரான பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தார்' என்ற செய்தி, நாளிதழில் வெளியானது; அதை படிக்கும் போது, நெஞ்சு பதறியது.

3/17/2018

சிறுநீரகம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் - போட்டிதேர்வுகளுக்கும் உதவும்

 “சிறுநீரகத்தை உடலின் கழிவுத் தொழிற்சாலை அல்லது இயற்கைச் சுத்திகரிப்பு நிலையம் என்று சொல்லலாம். உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதில் சிறுநீரகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. நீர் சேமிப்பு, கழிவுகள் வெளியேற்றம், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குதல் எனப் பலவிதமான பணிகளுக்குச் சிறுநீரகமே பொறுப்பு. உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவு சிறிய உறுப்பான சிறுநீரகத்தின் பணி உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது.

காவிரிக்காக அல்ல!!! கல்விக்காவது விழிக்குமா அரசு?


'விருதுநகர் மாவட்டதில் உள்ள பெருமாள்தேவன்பட்டி என்கிற ஊரில் உள்ள  அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும்  ஆசிரியர்களின் அலட்சியத்தால், அந்தப் பள்ளியின் கல்வித் தரம் குறைந்து விட்டது என, ஒரு நாளிதழில் செய்தி வெளியானது.

3/16/2018

உடல் எடை குறைக்கும் கொள்ளு ரசம்


தேவையானவை: கொள்ளு - ஒரு கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.

3/15/2018

மார்க்கெட்டிங் நண்பர்களே.. கொஞ்சம் இதை படிங்க...


வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது மிக கவனமாக இருக்கவும்..

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம்


நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 11.50 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநர் டாக்டர்சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ மூலம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், பல மாணவர்கள் விண்ணப்பங்களில் தவறான விவரங்களை அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தவறான விவரங்கள் அளிப்பதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, 100 சதவீதம் சரியான விவரங்களை உறுதி செய்து கொள்ளும் வகையில், விண்ணப்பங்களில் ஒருமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இணைதயளத்திலேயே திருத்தங்களை மேற்கொள்ளலாம். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றொரு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது.

திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, மாணவர்கள் அந்தத் திருத்தத்துக்கான விவரங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றோர் கவனமாகப் படித்து, தங்கள் பிள்ளைகள் திருத்தங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும். 

3/14/2018

எல்கேஜி, யூகேஜி.. இனி அரசுப் பள்ளிகளில்...


தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் வரும் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்படுவது குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை? ஏன் ?


நேரடி மக்களாட்சி முறை தான், இந்தியாவிற்கு தேவை; மக்கள் சொல்வதும், நினைப்பதும் நடக்க வேண்டும்.

3/13/2018

காய்கறிகளின் சத்து முழுமையாக கிடைக்கனுமா ? இப்படி சாப்பிடுங்கள்


பொதுவாக காய்கறிகளை சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என படித்திருப்போம்.

இந்த பெண்ணால் மட்டும் எப்படி முடிந்தது?


 
ந்தியாவின் முதல் பெண் ஆசிரியை:
 
பெண்கள் கல்வி அறிவு பெற்ற சமூகம் முன்னேறும்.  அங்கே ஆண் – பெண் சமத்துவம் உண்டாகும். வறுமை குறையும். கலாசார மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். ஆனால் நம் சமுதாயத்தில் கடந்த காலங்களில் பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களில் சில பிரிவினருக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது.

வீடு பெண்ணுக்கென்றும் வெளி உலகு ஆணுக்கென்றும் தீர்மானிக்கப்பட்ட ஆதி வேலைப் பிரிவினையிலேயே பெண் கல்விக்கான தடை ஆரம்பித்துவிட்டது. அது இன்றும் பெண்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அதை மாற்றியது ஒரு பெண்.
                                                                   
ந்த பெண் பள்ளிக்குச் செல்லும்போது இரண்டு புடவைகளை எடுத்துச் சென்றார்  ஏன் தெரியுமா?

ந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக் கொண்டு தனது பணிக்குக் கிளம்புவாள். ஏனெனில்,அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும் சில ஆண்கள் சாணத்தையும் சேற்றையும் மண்ணையும் வாரி வாரி அவள் மீது வீசுவார்கள். அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக்கொள்வாள்.

அவள் செய்த குற்றம்தான் என்ன?

ல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கும் கல்வி கற்பித்தாள். விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்குப் புதுப்பாதை காட்டினாள். அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப் பிடித்தாள். 

வளே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சாவித்ரிபாய்  புலே. மராட்டிய மாநிலத்தில் 1831-ம் ஆண்டு பிறந்த சாவித்ரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவி ஆனார்.

வர் கணவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ். பாரார் கல்வி நிலையத்திலும், பிறகு புனேவில் உள்ள மிஸ். மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்ரியைப் படிக்கவைத்தனர்.1848-ம் ஆண்டு தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். அவர்களுக்கென 1863-ம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர்.

ல்வி பணியோடு நில்லாமல் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர்.

சிறுவயதில் கணவனை இழந்தப் பெண்களுக்கும் சிறுவயதிலே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்தனர். அதற்கென தனியாக இல்லம் ஒன்றைத் தொடங்கினர். பெண் குழந்தைகளை சிசுக் கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். சாதியின் பெயர் சொல்லித் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி அளித்தனர். விதவை மறுமணம், சாதிக் கலப்புத் திருமணம் என அனைத்து சமுதாயத் சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர்.

ந்தப் புனித செயலுக்கு அவர்களுக்குக் கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல. சமுதாயம் புறக்கணித்தது. அவர்கள் உறவினர்களால் வீட்டைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள். கேட்க இயலாத வசைச் சொற்களை வீசினர். எங்கும் கல்வீச்சு அவர்களை வரவேற்றது. அதற்கெல்லாம் சாவித்ரிபாய் புலே புன்னகையை மட்டுமே தந்தார். 

ல்வி என்னும் புனிதத்தை உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன' என்றார்.தொடர்ந்தது சமுதாயப் பணியாற்றினார் சாவித்திரி புலே.

"ல்வி என்பது இது சரி இது தவறு என்று ஆராயும் திறனைத் தரவேண்டும். அது மெய்யும் பொய்யும் உணரவைக்க வேண்டும்" என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்குப் பரிந்துரைத்தார்.

திருமணங்களின்போது பெண்ணை படிக்கவைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதிமொழி எடுக்கவைத்தார்.

வர் எழுதிய நூல்களும் கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன. 1897-ல் இந்தியாவில் பிளேக் பரவிய காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தார். இதனால் அந்தநோய் சாவித்ரியையும் தொற்றிக்கொண்டது. மார்ச்- 10 1897-ம் ஆண்டு பிரியா விடை பெற்றார்.

பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதி சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர்.

ர் சமுதாயத்தின் பிழையைத் திருத்தும் போராளியான இவர், வாள் இல்லா வீராங்கனை. ஆசிரியராகப் பலரது தலை எழுத்தை மாற்றியவர்.
குரு, மாதா, பிதா என்று பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
இத்தகைய திடப் பேராண்மைகொண்ட ஆசானை, வழிகாட்டியை, விடிவெள்ளியை மறந்தது காலத்தின் கொடுமை.

பெண் உருவில் அவர் அற்புதத்தை நிகழ்த்தவில்லை;
ற்புதமே பெண் உருவானது.
 
 





3/12/2018

Exam நேரத்தில் செய்யக்கூடாதவைகள் என்னென்ன?


தேர்வு நெருங்கும் சமயத்தில், நமது உடல்நலனை நல்லபடியாக பராமரித்துக் கொள்வது மிக முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

3/09/2018

ரயில்வே எக்ஸாம் (RRB ALP EXAM) மாதிரி கேள்வி தாள்கள்


RRB ALP Exam Previous Questions Papers

RRB APL, we have given the Previous Papers in PDF Format.
The aspirants can download previous papers PDF from this page.
After downloading the model papers the candidates have to start their preparation.

3/08/2018

TN POLICE EXAM 2018 MODEL QUESTION PAPERS

POLICE EXAM MODEL QUESTION PAPERS
தமிழ்நாடு சீறுடை பணியாளர் தேர்வு மாதிரி வினாத்தாள்

3/07/2018

How to get centum in 12th Botany



உயிரியல் பாடத்தில் சென்டம்... பெறுவது எப்படி ..?
1. தாவரவியல் பாடத்தில் சென்டம் வாங்குவது எப்படி என இந்தப் பதிவில் காண்போம்.

பிட்சாட்-2018 விண்ணப்பித்து விட்டீர்களா? BITSAT-2018


பிலானி, கோவா மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான, ‘பிட்சாட்‘ எனும் நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

How to get centum in 12th Maths


12 ஆம் வகுப்பு கணித பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெறுவது எப்படி?

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? பதிவு நாளை மறுநாள் முடிகிறது


மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நாளை மறுநாள் முடிகிறது. 

3/06/2018

பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. 

NEET தேர்வு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள...


NEET தேர்வு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழே உள்ள லின்க்கை பயன்படுத்துங்கள்.

10 ம் வகுப்பு Maths அனைத்து பொதுத் தேர்வு வினாக்கள் PDF வடிவில்


பத்தாம் வகுப்பு கணிதம் அனைத்து பொது தேர்வுகளுக்கான  கேள்விதாள்கள்  இங்கே  PDF வடிவில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.