Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/11/2018

திருவாசகமும்.... மனைவிகளும்...

_ஒருவர் தினமும் கோவிலுக்கு ""திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.



_*அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது*_.

_அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி_,

_*"அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு"*_......???

_"ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே"_.

_*"டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க" என்று கேட்டார்*_.

அதற்கு அந்த மனிதர்.

" _எனக்கு ஒன்றுமே புரியவில்லை_.

_ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்_.

கோபமடைந்த மனைவி,

_*"முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்*_.

_அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்_.

_*மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது*_.

_மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா_
_""திருவாசகத்துக்குப் போனேன் எங்கறீங்க"_......

_*"என்ன சொன்னாங்கன்னு கேட்டா"*_.....

_"ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க"_.

_*"நீங்க ""திருவாசகம்"" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்"*_..

_"எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்_.

_*அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது*_...

_"நீ சொல்லறது சரிதான்"_

_*"சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்"*_.

_"ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு"_.

_*"அதுபோல,திருவாசக உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்"*_.

_"ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்"_.

*புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்...
                                                      

1 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"