Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

12/31/2012

ஒரு தாயாய் மக்கள் உணர்வு புரிகிறது... சோனியாவின் கபட நாடகம்?


இப்போது நாட்டு மக்கள் தங்களின் ஒரு சகோதரியை இழந்தது போன்ற துயரத்தில் இருப்பதை ஒரு தாய் என்ற முறையில் நான்  புரிந்து கொண்டுள்ளேன். நாட்டில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுட்டுக் கொள்ளகிறேன் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

12/24/2012

தலைமை ஆசிரியர் !!!வரமா? சாபமா?



இன்றைய மாணவர்களுக்கு மதிப்பெண்களைத் தவிர மற்ற அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு அனைத்து சலுகைகளும்  "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை மேம்படுத்த  நிதிநிலை அறிக்கையிலும்கூட மூன்றில் ஒரு பங்கு கல்வித் துறைக்காக நிதி ஒதுக்கப்படுகிறது.

12/23/2012

சச்சினின் நிறைவேறாத ஆசை.


ஒருநாள் போட்டிகளில் 49 முறை சதமடித்து சாதனை செய்த  சச்சின் தமது 50-வது சதத்தை அடிக்காமலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய  16-வயதில் நம்  இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தொடங்கிய டெண்டுல்கர் 39-வது வயதில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

சச்சின் சாதனைகள் : சச்சின்  மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் 18,426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் எடுத்த ரன்களின் சராசரி என்பது 44.83 ஆகும். 

ஒருநாள் போட்டிகளில் சச்சின் மொத்தம் 49 முறை சதமடித்திருக்கிறார். இது உலக சாதனையாகும். அதேபோல் 96 முறை அரை சதம் அடித்திருக்கிறார். இருப்பினும் ஒருநாள் போட்டியில் சச்சின் 50வது சதமடிப்பதை தாம் எதிர்பார்ப்பதாக அவரது மனைவி சமீபத்தில்  கூறியிருந்தார். ஆனால் அந்த  சதத்தை அடிக்காமலையே  சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளில் 100 அரை சதமும் 50 சதமும் அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எது எப்படியோ கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் இதை யாராலும் மறுக்க முடியாது.

12/21/2012

இப்படியும் சில பெண்கள் ..

பார்க்க, ரசிக்க..




















    நன்றி கூகிள் இமேஜ்

12/20/2012

இவள் விலைமாது அல்ல...



வள் உழைத்த காசில்
தினம்
குடித்துவிட்டு வந்து,
அவளை
அணைக்கும் கணவனை 
பத்தினிமார்,
வரிசையில் 
இடமின்றி போகுமோ?
என, நிதம் 
போறுத்துக்கொள்ளுவாள்!!!

12/19/2012

ஒரு பெண் இப்படியா இருப்பாள்?



ன்புள்ள அப்பாவுக்கு...

நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை 
வேண்டிக்கொள்கிறேன்.

அன்று,



தாமரைக் குளமும் 
பெருமாள் கோயிலும் 
பெரிதாய் இருக்கிறதென்று 
சொன்னீர்கள்...!



வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும் 
சின்ன காய்கறித் தோட்டமும் 
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!



பழைய தஞ்சாவூர் ஓட்டு வீட்டில் 
வாழக் கொடுத்து வைக்க 
வேண்டுமென்று 
வக்கணை பேசினீர்கள்...!



மாமியாரும், நாத்தனாரும்
தங்கக் குணமென்று
பார்த்தவுடன் எடைப் போட்டதாக 
அம்மாவிடம் அங்கலாய்த்தீர்கள்...!



மாப்பிள்ளையின் 
சம்பளம் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசினீர்கள் 
சம்பந்தி வீட்டு பெருமை...!

மாப்பிள்ளை வீடு 
ரொம்ப அழகுதான் 
உறவினர்களின் உபசரிப்புக்கும் 
ஒரு குறையும் இல்லை...!

இங்கு 
நீங்கள் 
பார்க்கத் தவறியது 
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!

இருந்தாலும் பரவாயில்லை ...

இந்தக் கடிதத்தை 
அம்மாவிடம் 
படித்துக் காட்டும்போது 
அவரோடு நான் 
சந்தோஷமாகவே இருப்பதாக 
அவசியம் சொல்லவும்...!

ஓவியம் - இளையராஜா -நன்றி. மீள் பதிவு.

12/17/2012

ஞாபக சக்தி அதிகம் பெற வேண்டுமா?



உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? கவலையே விடுங்க கிழே உள்ள குறிப்புகளை படிங்கள் 

சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.

மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும். அரையாண்டு தேர்வில் தங்கள் பிள்ளைகள் அதிக நினைவுத் திறனுடன் தேர்வெழுதி அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன். நன்றி.. 
- முகநூல்.

12/16/2012

ஒ.. இந்த பிளாக் என்னுடையது தானா? அப்ப கொஞ்சம் சிரிப்போம்..





நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!





பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?





இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது.




டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.



படித்ததில் பிடித்தது...

9/03/2012

இதற்கு நாம் வெட்கப்பட்டுதானே ஆக வேண்டும்?



சமீபத்தில் மருத்தவமனையில் ஒரு இறந்த குழந்தையை எலிகள் கடித்து குதறிய சம்பவம் உங்களுக்கு தெரியும்.

எப்போதும் கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அரசு இப்போதும் அப்படியே. பிரச்சனைகள் வரும்போதுதான் அதைப் பற்றி நடவடிக்கைகள் இருக்கும்.

இப்போது மருத்துவமனைகள், மக்கள் அதிகம்  கூடும் இடங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள  எலிகளை ஒழிக்க இருளர்களைவைத்து எலிபிடிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது.

சாதிகளை ஒழிப்போம் என கூறிக்கொண்டிருக்கும் நாம் இருளர்கள் என அடையாளப்படுத்துவது சரியா, அவர்களை எலிபிடிப்பவர்கள் என கொச்சைப்படுத்துவது முறையா?

சொல்லுங்கள் உறவுகளே..

8/31/2012

இப்படியும் ஒரு மாணவியா? - பள்ளியில் நடந்த சில உண்மைகள் (Repost)




சீருடை அழுக்கென்று
சினந்தேன் 
அந்த மாணவியை‌...

மறுநாள்
ஈரச் சீருடையோடு வந்தாள்..

உடம்புச் சூட்டில்
உலர்ந்துவிடும் என்று
மாட்டிவிட்டாளாம் அம்மா..

காய்ந்த வயிற்றிலும்
உலரவில்லை
ஈர விழியில் நனைந்த
ஓருடை..


8/30/2012

இவர்களுக்காக என்ன செய்தோம் நாம்?


நம் இந்திய நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் இருக்கும்  விவசாயிகளின் இன்றைய நிலை என்ன?

8/27/2012

சீரழியும் மாணவ சமுதாயம்....



இன்றைய மாணவர்கள் சமுதாயத்தில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவது  அனைத்து பெற்றோர் மத்தியிலும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று சென்னையில் ஒரு மாணவியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக ஒரு ஓட்டலுக்கு சென்ற மாணவர்கள், விழா முடிந்ததும் அங்கு நடனமாடும் நங்கைகளுடன் (போதையுடன்)நடனமாட போட்டி போட்டுகொண்டு சண்டையிட்டதில் பிரச்சனையாகி  போலீசார் தலையிட்டு கைது படலம் வரை சென்றிருக்கிறது.

கடந்த காலங்களில் , ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒரு  ஆசிரியையை கொலை செய்தது மற்றும்  தன்னுடன் படிக்கும் மாணவியை  நான்கு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து  குளிர்பானத்தில் போதை மருந்தை கலக்கி பாலியல் பலாத்காரம் செய்தது. இப்படி எத்தனையோ விசயங்களை நாம் தினசரி செய்திதாளில் படித்திருக்கிறோம்.

நம்முடைய விஞ்ஞானம் எவ்வளவு முன்னேருகிறதோ அவ்வளவும்  மாணவர்கள் செய்யும் குற்றங்களும் முன்னேறி வருகிறது.டிவி, இன்டர்நெட், மொபைல் போன்   போன்றவற்றை, மாணவ, மாணவியர் ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும்  பயன்படுத்துகின்றனரா என்பதை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து, பாக்கெட் மணியும்  அதிகம் கொடுக்கக் கூடாது. 

நீதி கதைகள், யோகா, கவுன்சலிங்  போன்றவை, பள்ளிகளில் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும். மதிப்பெண் பெறுவது மட்டுமே  வாழ்க்கையாக இல்லாமல், அதற்கு மேலே மனிதன் பெற வேண்டிய வேறு சில விஷயங்களையும், அறிவுரைகளும்  ஆசிரியர்கள், மாணவ சமுதாயத்திற்கு  போதிக்க வேண்டும்.

இன்று, கல்வி முற்றிலும்  வியாபாரமாகி, மனிதன் இயந்திரமயமாகி, மாணவ செல்வங்களை மதிப்பெண் பெரும் இயந்திரங்களாக மாற்றி விட்டதால் தான்  இந்த குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை அனைவரும் உணரவேண்டும்  நம்முடைய அரசும்  இதற்கு தகுந்தவாறு  பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்து மாணவ செல்வங்களின் எதிர்காலம் பொற்காலமாக  அமையும்.

8/25/2012

TNTET RESULTS - 2012


தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை 2,88,588 பேரும், இரண்டாம் தாளை 3,88,175 பேரும் எழுதினார்கள்..

இத்தேர்வில் தலா 150 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரம் என  வழங்கப்பட்டிருந்தது. மொத்தமுள்ள மதிப்பெண்ணில் 60% மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட TET தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

TNTET RESULT ஐப் பார்க்க  இங்கே கிளிக்கவும்..

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பதிவர்களே.. நீங்க இன்னும் கிளம்பலையா?


னிய நட்புகளுக்கு வணக்கம். இன்றைய இரவு விடிந்தால்,,, காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கி விடும். இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமிருப்பது விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்ற வேட்கையை அது அதிகரிக்கிறது.


மண்டபத்திற்கு வரும் வழி : சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள்  அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம்.  இதேபோல் செங்கல்பட்டு, தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் 17 என்று எண்ணிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம். இந்த நிறுத்தத்தில் இறங்கி  லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம். தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.

பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும்  பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம். கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.

தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள்  25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம்.

பதிவர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பவை :  1. அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும். 2. மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும். 3. பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும். 4. ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

முக்கிய நிகழ்வுகளாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.


கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.
வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சந்திப்போம்.

8/23/2012

பதிவர்களே.... என்ன வேணும் உங்களுக்கு?


பதிவர்களே நமக்கான சந்திப்பு திருவிழா நெருங்கிவிட்டது.  இன்னும் சில தினங்களே உள்ளது. அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆமா, யாரெல்லாம் வராங்க தெரிஞ்சிப்போமா?

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்தபதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

1. சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
2. சங்கவி,கோயம்புத்தூர்
3. நண்டு@நொரண்டு,ஈரோடு
4. சுரேஷ் (வீடு) கோயம்புத்தூர்
5. பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
6. கோவி(காதல்)கோயம்புத்தூர்
7. ஜீவா(கோவைநேரம்) கோயம்புத்தூர்
8. கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
9. சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
10. பிரகாஷ்(தமிழ்வாசி)மதுரை
11. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
13. சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
14. கருண்(வேடந்தாங்கல்)திருவள்ளூர்
15. ரஹீம்கஸாலி,அரசர்குளம்
16. பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்17. கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
18. ரேகா ராகவன்,சென்னை
19. கேபிள் சங்கர்,சென்னை
20. உண்மைத்தமிழன் ,சென்னை
21. சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை
22. சிவக்குமார்(மெட்ராஸ் பவன்)சென்னை
23. தத்துபித்துவங்கள்(பிரபாகரன்)சென்னை
24. மோகன்குமார்(வீடு திரும்பல்)சென்னை
25. ரிஷ்வன்,சென்னை
26. டி.என்.முரளிதரன்,சென்னை
27. வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
28. சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை
29. இக்பால் செல்வன்,சென்னை
30. ஆரூர் முனா செந்தில் சென்னை31. சிராஜுதீன்(டீக்கடை) சென்னை
32. செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
33. சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
34. புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
35. பால கணேஷ்(மின்னல் வரிகள்)சென்னை
36. சசிகலா(தென்றல்)சென்னை
37. மதுமதி(தூரிகையின் தூறல்)சென்னை
38. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
39. தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை40. அகரன்(பெரியார் தளம்) சென்னை
41. கணக்காயர்,சென்னை
42. ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
43. போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை
44. ராசின்(நதிகள்) சென்னை
45. புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை
46. அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை
47. லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
48. தமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை
49. ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
50. காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை51. மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
52. குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
53. கார்க்கி(சாளரம்) சென்னை
54. விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
55. மென்பொருள்பிரபு,சென்னை
56. அமைதி அப்பா,சென்னை
57. ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
58. சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
59. கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
60. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
61. ராமு,சென்னை
62. ஷீ-நிசி கவிதைகள் சென்னை
63. வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
64. மாடசாமி(வானவில்)சென்னை
65. இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
66. அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
67. சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
68. நிலவு நண்பன்,திருநெல்வேலி
69. மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
70. ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்
71. நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
72. ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
74. ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
75. கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
76. அருணன் கோபால்(கவிவனம்)
77. மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
78. திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல்
79. சரவணன் ஆர்.வி.(குடந்தையூர்)
80. அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
81. மணவை தேவாதிராஜன்,மணப்பாறை
82. சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்
83. ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
84. பலே பிரபு(கற்போம்)பெங்களூரு85. சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
86. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
87. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
88. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
89. சைத அஜீஸ்,துபாய்
90. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
91. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
92. மாலதி
93. பிரேம லதா
94. கௌதம்
95. சத்தியன்
96. ரமேஷ் (சிரிப்பு போலீஸ்) சென்னை.
97. அகிலா (கோயம்புத்தூர்)
98. இரா.தெ.முத்து(திசைச்சொல்)
99. வடிவேலன். ஆர்
100. ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )
101. ஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்102. மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
103. சினேகன்அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
104. கேணக்கிருக்கன் லெனின்( கீரமங்கலம்)
105. "AKKAPORU" Raja
106. Puratchi Mani
107. பாண்டியன்ஜி(வேர்கள்)


மூத்த பதிவர்கள்


1. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
2. ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
3. ரேகாராகவன்,சென்னை
4. வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
5. வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
6. சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
7. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
8. சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
9. புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
10. கணக்காயர்,சென்னை
11. சுப்புரத்தினம்
12. பாண்டியன்ஜி(வேர்கள்)

கவியரங்கில் பங்குபெறுவோர்


1. சசிகலா(தென்றல்)சென்னை
2. மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்3. கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
4. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
5. சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
6. அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
7. மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
8. ரிஷ்வன்,சென்னை9. ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை10. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
11. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
12. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
13. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
14. ஷீ-நிசி கவிதைகள் சென்னை
15. கணக்காயர்,சென்னை
16. மணவை தேவாதிராஜன்


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் குடுக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.


மதுமதி - 9894124021
பாலகனேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301



நன்றி...

8/15/2012

ஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்?! - Repost




வக் குழிக்குள் என்னுடலைச்
வைத்து விட்டீர்களா?

வசரமாய் மண்ணை 
அள்ளிப் போட்டு விடாதீர்கள் 

ப்போதுதான் 
வாழ்வில் முதல் முறையாக 
புத்தம் புதிய ஆடை
அணிந்துள்ளேன்...

வசரப்பட்டு 
அழுக்காக்கி விடாதீர்கள்...!


ஆய கலைகள் அறுபத்தி நாலாமே? இதில் உங்களுக்கு பிடித்த கலை எதுவோ?


1. எழுத்திலக்கணம் (அகரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம்.

நன்றி இணையம்.

8/11/2012

TET result ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி! - தினமணி செய்தி



ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.

8/10/2012

குரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் பெற முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?


டி.என்.பி.எஸ்.சி  குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை (Download) பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள்  டி.என்.பி.எஸ்.சி  அலுவலகத்தையும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களையும் அணுகி தாற்காலிகமாக  ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இதுதொடர்பாக,  டி.என்.பி.எஸ்.சி  வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒருங்கிணைந்த சார்நிலைப் பணி-1 மற்றும் இதரப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெறுகிறது. 

இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் (Website) இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் (Download) செய்ய தங்களது பதிவு குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். தேர்வர்களின் வசதி கருதி அவர்கள் தேர்வு எழுதும் மையத்தின் முழு முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், தொலைபேசி எண் ஆகியவை ஹால் டிக்கெட்டில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகக் கேட்டுத் தெளிவு பெறலாம். 

ஹால் டிக்கெட்டை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) வரை பதிவிறக்கம் செய்ய இயலாத சென்னை விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய அலுவலகத்தையும், இதர மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வு மைய விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் நேரில் அணுகலாம்.

தாங்கள் விண்ணப்பிப்பதற்கான சான்றுகளாக, விண்ணப்பப் படிவம் நகல், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான சான்று , தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றின் நகல்களைச் சமர்ப்பித்து தாற்காலிக ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்ததற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே தாற்காலிக ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினமணி.


TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள்-4


அன்பு நண்பர்களே வணக்கம் ... இந்த பதிவு தமிழ் நாடு அரசு நடத்தும் குருப் தேர்வுகளுக்குப் பயன்படும் குறிப்புகள் ஆகும் , நான் படித்த மற்றும் இணையத்தில் கிடைத்த குறிப்புகளை இங்கே பகிர்கிறேன்.

தொடர்ச்சி: 

11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது

அ. கேபிள்
ஆ. ரேடியோ அலைகள்
இ. மைக்ரோ அலைகள்
ஈ. ஆப்டிகல் பைபர்

12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்?

அ. ஸ்டீபன்ஸன்
ஆ. ஜேம்ஸ்வாட்
இ. மெக்ஆடம்
ஈ. ராவ்லண்ட் ஹில்ஸ்

13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்

அ. பெட்ரோலியம்
ஆ. நிலக்கரி
இ. இயற்கை வாயு
ஈ. சூரியன்

14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்

அ. சுழற்சி இயக்கம்
ஆ. வேக இயக்கம்
இ. நேர்கோட்டு இயக்கம்
ஈ. அலை இயக்கம்

15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்

அ. எடை அதிகமான பொருள் முதலில் விழும்
ஆ. அவை ஒரே நேரத்தில் விழும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு

16. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்

அ. மார்ஷல் டாப்ளர்
ஆ. ஸ்டீபன் டாப்ளர்
இ. ஐசக் டாப்ளர்
ஈ. கிறிஸ்டியன் டாப்ளர்

17. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது

அ. இரும்பு ஆக்ஸைடு
ஆ. குரோமியம் டை ஆக்ஸைடு
இ. இரண்டும் இருக்கும்
ஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று

18. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய

அ. 150 கி.மீ
ஆ. 200 கி.மீ
இ. 250 கி.மீ
ஈ. 300 கி.மீ

19. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்


அ. காலங்களின் விதி
ஆ. பரப்புகளின் விதி
இ. சுற்றுப்பாதைகளின் விதி
ஈ. தொலைவுகளின் விதி

20. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்

அ. உட்கவரும்
ஆ. எதிரொளிக்கும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு 

விடை: 11. ஈ 12. ஆ 13. ஈ 14. இ 15. ஆ 16. ஈ 17. ஈ 18. ஆ 19. இ 20. அ.