Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label ஆதங்கம். Show all posts
Showing posts with label ஆதங்கம். Show all posts

11/23/2011

விலைவாசி உயர்வா? அடப் போங்கப்பா...


"2020ல், நம் இந்தியா வல்லரசு நாடாக உயர வேண்டும்” என, பல அறிஞர்களும், பெரியோர்களும் , இளைய தலைமுறையும் கனவு கண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பது உண்மையே..

10/31/2011

நமக்கு இது வரமா/ சாபமா?


இன்றைய தேதியில் உலக மக்கள் தொகை 700 கோடி என்ற அளவை நெருங்கி விட்டது. அந்த 700 கோடியாவது குழந்தை இன்று நம் இந்தியாவில் பிறக்கப் போவதாக ஐக்கியநாடுகள் அமைப்பின் பாப்புலேசன் ஃபண்ட் பிரிவு தெரிவித்துள்ளது. 

10/27/2011

நாம் எப்போதும் அடிமைகள் தான் உறவுகளே...


தீவிரவாதத்தை ஒழிக்கிறோம், அந்நாட்டுக்கு உதவுகிறோம் என்ற பெயரில், எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து, அந்நாட்டின் வளங்களையெல்லாம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டிக் கொண்டிருக்கிறது சர்வாதிகார அமெரிக்கா.

7/23/2011

குடி குடியைக் கெடுக்குமா? TASMAC



இரண்டு போலீஸ் அதிகாரிகள், குடித்துவிட்டு, வீதியில் சண்டை போட்டுள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரி, குடிபோதையில் ஒரு பெண்ணை கடத்தினார். போதையில் இருந்த ஒரு தந்தை, தன் மகளை கெடுத்துள்ளார். இன்னும், இதுபோன்ற எத்தனையோ விஷயங்கள் நடந்து வருகின்றன. 

இதையெல்லாம் படிக்கும்போது, நமக்கு அருவருப்பாக உள்ளது. ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டிய காவல் துறையினரும், தெய்வமாக மதிக்கப்படக்கூடிய தந்தை குலமும், இப்படி கேவலமாக நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது யார்? 

7/21/2011

கறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி !



ந்தியத் திருநாட்டில், நவீன இந்தியாவில் ஆண்டுதோறும் கறுப்புப் பணம் பறிமுதல்தான் எத்தனை கோடிகள்...

- லஞ்சப் பணமாக சிக்குவது கோடிகளில்...

- திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கோடிகள், தங்க ஆபரணங்கள் கணக்கில் கொள்ளா இருப்பு...

- மருத்துவ பல்கலைக்கழக தணிக்கை அதிகாரி வீட்டில் கணக்கில் வராத லஞ்சப் பணமும் கோடிகளில்...

- கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கவும் கோடிகள்...

- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புரளுவதும் கோடிகள்...


6/20/2011

காந்தி கண்ட ராமராஜ்யம் அமைய ????


ழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்படும் லோக்பால் மசோதாவில், பிரதமரையும், நீதிபதிகளையும் தவிர்த்து, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும்' என்கிறது, ஐக்கிய முன்னணி அரசு!

இது மிகவும் தவறானது.நியாயமாகப் பார்த்தால், ஜனாதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க, இந்த மசோதாவில் வழி வகைகள் செய்ய வேண்டும்.ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகள் எல்லாரும் மனிதர்கள் தான்; தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த உத்தமர்கள் இல்லை

ஊழல் செய்தார் என, இந்திராவுக்கு எதிராக, அலகாபாத் கோர்ட் தீர்ப்பு சொன்னதால் தானே, இந்திரா கொதித்தெழுந்து, நாட்டில் எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணன் குடும்பத்தினர், மகா ஊழல் செய்து, சொத்து சேர்த்த விவரங்கள், பத்திரிகைகளில் வெளிவந்து, நாறிப்போனது தெரியாதா? 

வி.வி.கிரி ஜனாதிபதியாக இருந்தபோது, வழக்கு விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டது மறந்து விட்டதா?பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தானே, பெரிய அளவில் ஊழல் செய்கின்றனர். இந்த லட்சணத்தில், பிரதமரையும், நீதிபதிகளையும் விலக்கு அளிக்கச் சொல்வது, எந்த வகையில் நியாயம்? 

மன்மோகன் சிங் கடுமையாக நடந்து கொண்டிருந்தால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் அரங்கேறியிருக்க முடியாதே!ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அந்த ஆண்டவனைக் கூட விசாரணைக்கு அழைக்க வேண்டும். சாதாரணக் குடிமகன், சீதை மீது குற்றம் சொன்னதால், ராமன் அவளைக் காட்டுக்கு அனுப்பினானே!காந்தி கண்ட ராமராஜ்யம் அமைய வேண்டுமானால், யாருக்கும் கருணை காட்டக்கூடாது. 

5/02/2011

திரும்ப வருமோ அந்த நாட்கள்...!


வேலமுள் காற்றாடிகள்,
ணங்காயில் வண்டிசெய்தும்,
தைரியமாய் 'தும்பி' பிடித்தும்,
ன ஓலையில் ஃபேன் செய்து ஓடவிட்டும்,
த்தை ஓடு திறந்து நகர்வதைச்
சத்தம் இல்லாமல் உற்று நோக்கியும் , 
ஞ்சாங்கால், ஏழாங்கால்  பல்லாங்குழிகளை 
ஐம்பது வயது பாட்டிகளோடு விளையாடியும்,
நாவல்  பழங்களை ஏறிப்பறித்தும்,
புளிய மரம் உலுக்கி விளையாடியும், 
மீன் பிடிக்க சட்டை  கழற்றி 
வெள்ளத்தில் விட்டுவிட்டு 
வீடு சேர வேட்கிப் போனதுமான
என் மழலை நாட்கள்...

ன்று
என் மகளோ
கணினி  இயக்கியும்,
படப்புத்தகமும்,
கரடி போம்மையுமாய்....!

2/24/2011

இந்திய வெளியுறவுத் துறை ஜீரனிக்கமுடியாத உண்மை


மெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் போனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம் தோற்றுப் போவோம் என்று எச்சரித்துள்ளார்.

திலிருந்து தெரிவது என்ன? அமெரிக்கப் பேரரசு எப்போதும் வல்லரசு என்னும் மதிப்பீட்டைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறது. உலகில் தன் தலைமையிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கிறது; அதிலிருந்து தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவலைப்படுகிறது. ஆனால் இந்தியாவின் நிலை என்ன?

ந்தியாவின் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது, நமது ஆட்சியாளர்கள், "இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று கூறிக்கூறி அகமகிழ்ந்து போகின்றனர்; நமக்கும் ஆனந்தமாகத்தான் இருக்கிறது; இருக்காதா?

ந்திய அரசாங்கம் அமெரிக்காவின் உறவுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதை இடதுசாரிக் கட்சிகளும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிர்ப்பது தெரிந்தும், அதனால் தனது ஆட்சியே கவிழ்ந்து போகலாம் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோகன் சிங் விடாப்பிடியாக இருந்தார். ஆட்சி நிலைப்பதற்காகப் பணத்துக்கு ஆள்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; அவர் கவலைப்படவில்லை.

மெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு காணாத வரவேற்பு. இந்தியப் பாதுகாப்பின்மேல் நம்பிக்கையில்லாமல் அவரது பாதுகாப்புப் படையினரே இந்தியாவுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்; அவர் மும்பைக்குச் சென்றபோது பொதுமக்கள் கூட வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை.

னால் இந்தியாவை அமெரிக்கா மதிக்கிறதா? தோழமை நாடாக ஏற்றுக் கொள்கிறதா? வளர்ந்து வரும் நாட்டுக்கு வளர்ந்த நாடு தரும் மரியாதை இதுதானா? தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதைப் பற்றி இந்தியா கவலைப்படுகிறதா?( அமெரிக்கா செய்த அவமானங்கள் அனைவரும் அறிந்ததே, அதை சேர்த்தால் பதிவு பெரிதாகிவிடும்)

ப்படிப்பட்ட வெளியுறவுத் துறை எந்த நாட்டிலாவது இருக்கிறதா? 

ளர்ச்சி பெற்று வரும் நாடு தம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? ஒரு சின்னஞ்சிறு நாடான இலங்கையைத் திருப்தி செய்வதற்காக தம் நாட்டு மீனவர்களையே பலியிடுகிறது.

லங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த சில நாள்களில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மீனவ மக்களிடையே கோபத்தையும், கொந்தளிப்பையும் தூண்டி விடுகிறது. எத்தனை காலம்தான் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதுவரை 400க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.

னால், இலங்கைக்கு ஆயுத உதவியும், ஆலோசனைகளும் அளித்து அங்கு நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தியா, நிதி உதவிகளையும் வாரி வழங்குகிறது. இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு "வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல' இந்திய மீனவர்களையே பதம் பார்க்கின்றனர்.

ங்கே தமிழர்களுக்கென ஓர் அரசு இருக்கிறது; தமிழகத்தைச் சேர்ந்தவரே உள்துறை அமைச்சராக இருக்கிறார். இன்னும் சிலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவை ஆளும் கூட்டு அமைச்சரவையில் தமிழகக் கட்சியும் பங்கு பெற்றுள்ளது. இவ்வளவு இருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இயலவில்லையென்றால் நம்ப முடிகிறதா?

லங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிறது; அலட்சியம் காட்டுகிறது; அதனால்தான் தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டிப் போவதால்தான் இப்படி நடக்கிறது என்று சமாதானம் கூறுகின்றனர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்னும் ஒருபடி மேலே போய், ""கடல் எல்லையைத் தாண்டி போகிறவர்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தர முடியாது...'' என்று நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கிறார்.

1987-ம் ஆண்டு இலங்கைக் கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கியதும் இந்தக் கடற்படை வீரன்தான். இலங்கை அரசு என்ன செய்தது? மன்னித்து விடுதலை செய்தது.(நன்றி தினமணி)

பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப் படுகொலை செய்த ஒரு கொடிய அரசுக்குத் துணை போகலாமா? காந்தியின் தேசம் என்று போற்றப்படும் இந்தியாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா வல்லரசாக வளர்ச்சி பெறுவது இதற்குத்தானா? அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.

முந்தைய பதிவுகள்: 1. ஒரு மனசாட்சியின் மரணம்
                                              2. சித்தாள் வாழ்ந்த இடம்
                                              3.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

2/22/2011

பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்


ருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

ணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. 

ள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

னியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.

பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது

கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். 

ளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம்.

புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.
 
முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.( நன்றி  தினமலர் ).

சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும்



 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


முந்தைய பதிவுகள்: 1.சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்டகவிதைகள்                                               2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                              3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..


2/19/2011

உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஓர் விபரீதம்


ரு காலத்தில் திரைப்படங்கள் மீது மக்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதை விட அதிகமான ஈர்ப்பு இப்போது தொலைக்காட்சி தொடர்கள் மீது உள்ளது என்றே நினைக்கிறேன்..

னியார் தொலைக்காட்சிகளில் காலையில் தொடங்கி இரவு 11 மணி வரைக்கும் இடைவிடாது தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு பெண்களும் இந்தத் தொடர்களில் மெய் மறந்து மூழ்கிவிடுகின்றனர்.ஏன் அதற்குள்ளே ஐக்கியமாகி விடுகின்றனர்.

பெரும்பாலான தொடர்களில் ஒரு பெண், மற்றொரு பெண்ணால் (மாமியார், மருமகள், நாத்தனார் உறவுக்குள்) கொடுமைப்படுத்தப்படுவது, தவறான உறவுமுறை ஆகிய கலாசார சீரழிவு மிக்க காட்சிகள் அதிகரித்து வருகின்றன.


பெண் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள சின்னத்திரையில் இது போன்ற காட்சிகளைத் தவிர்க்கலாம். பல குடும்பங்களில் இத் தொடர்களை மையமாக வைத்து சண்டைகள்  நடப்பதாக செய்திதாள்களில் பார்க்கிறோம்.

சில நேரங்களில் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இது போன்ற காட்சிகளை அரைமணி நேரம் ஒளிபரப்புவதன் மூலம் எபிசோட்டின் எண்ணிக்கையைக் கூட்டுவது அவசியம்தானா?



ன்றுக்கும் பயனளிக்காத, நேரத்தையும், மின்சாரத்தையும் விரயமாக்கும் இத்தகைய தொடர்களில் பெண்கள் மூழ்கிப் போவதன் காரணம் என்னவாக இருக்கும்?  இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கருத்து கூறுங்கள்..

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. மரத்தில் பணம் காய்க்குமா ?
                                         2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                         3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

2/12/2011

மனிதர்கள் என்றால் யோசிக்கவேண்டும்


ந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். இவர்கள் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற ஒரே எண்ணத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு போராடினார்கள், வெற்றிபெற்றார்கள். அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.

னால் இப்போது நிலைமையே வேறு. காரணம் அதன்பிறகு ஏற்பட்ட குழப்பங்கள். அதனால் மேலோர், கீழோர் என பேதம் பார்க்கத் தொடங்கினர். நாளடைவில் மதப் பிரச்னை உருவானது. அன்று தொடங்கிய பிரச்னை இன்றும் தலைவிரித்தாடுகிறது. தேசிய அளவிலான இப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயத்தில் பிராந்திய அளவில் இன்னும் தொடர்கிறது.

மிழகத்தில் அண்மைக்காலமாக ஜாதிய அமைப்புகள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. இதற்குக் காரணம் முழுக்கமுழுக்க சுயநலமும், தனிப்பட்ட விருப்பு,வெறுப்பும்தான் என்பதில் ஐயமில்லை  - நன்றி எஸ்.ரவீந்திரன்.

 விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூலைக்குள் முடங்கிக் கிடந்த ஜாதித் தலைவர்கள் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வலம் வரத் தொடங்கிவிட்டனர். 5 ஆண்டு நாடகம் முடிந்துவிட்டது. மீண்டும் கச்சேரியைத் தொடரலாம் என இவர்கள் புறப்பட்டுவிட்டனர்.

 னி இவர்களின் குரல்களை அடிக்கடி கேட்கலாம். கண்ணுக்குத் தெரியாத ஜாதிகள் பற்றிய புள்ளிவிவரங்களுடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளைத் தேடி அலைவதுதான் இவர்கள் லட்சியம். தங்களுக்கு இத்தனை சதவிகிதம் வாக்குகள் உள்ளன என்று பீடிகையைத் தொடங்கி, பல லகரங்களை கறப்பது மட்டுமே நோக்கம் எனலாம். இதற்காக எதையும் செய்வார்கள் இவர்கள்.

 ன்றுபட்டுக் கிடப்பவர்களை உசுப்பிவிட்டு பிரிவினைக்கு வழிவகுப்பார்கள். நமது இனத்தாருக்கு சீட் தரவேண்டும் என கூச்சலிடுவார்கள். வேறு வழியின்றி பிரதானக் கட்சிகள் இவர்களையும் தங்களுடைய கூட்டணி எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வார்கள்.

தில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
வாக்காளர்கள் ஆகிய நாம் இன வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து சிறந்த வேட்பாளர்கள் யார் என்பதைத் தேர்வு செய்து மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1.போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..
                                       

1/29/2011

தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா!?

நான் தமிழன் என்றும், அதே சமயம் இந்தியன் என்றும் சொல்லி கொள்வதை பெருமையாகவே நினைக்கிறேன். ஆனால், இனி அதற்காக வெட்கப்பட வேண்டும் போலிருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், மத்திய அரசின் சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவை சுற்றிய அனைத்து அண்டை நாடுகளும் நம்மிடம் கருத்து வேறுபாடு கொண்டிருக்க, யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலைமை.ஒரு எதிரியை உருவாக்குவது பிரச்னை இல்லை. ஆனால், அந்த எதிரியும் நம் இன்னொரு எதிரியும் கூட்டு சேர்ந்தால், அவர்களின் பலம் அதிகரிக்கும். இதை உணர்ந்து தான், நடைமுறை வாழ்க்கையில் கூட, நாம் அவசரப்பட்டு யாரையும் பகைத்துக் கொள்வதில்லை. 

எனவே, இலங்கை விஷயத்தில், இந்தியா கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது.ஆனால், ஒரு இந்திய பிரஜையை, இன்னொரு நாட்டு ராணுவம் சுட்டு கொன்றால், இங்கே இந்தியா அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் இல்லையே. இது, இந்தியாவின் பலவீனத்தை அல்லவா காட்டுகிறது. 

இதுபோன்ற அத்துமீறல்களை, இந்தியா பொறுத்துக்கொள்ள வேண்டுமா?விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை வேண்டாமா? இங்கே மத்திய அரசும், சொரணையற்ற அரசாக தெரிந்தாலும், அவர்களுக்கு, பல மாநில பிரச்னைகளில், இதுவும் ஒன்று. 

எனவே, தமிழக அரசு தான், தமிழர்களின் மரியாதையை காப்பாற்ற, மத்திய அரசை கடுமையாக எச்சரித்து, தேவையான, உறுதியான நடவடிக்கையை எடுக்க வைக்க வேண்டும்.


ஆனால், தி.மு.க., ஆட்சியின் இதுநாள் வரையிலான வரலாறை பார்த்தால், பதவியைத் தவிர, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் இவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக அதிமுக இரண்டு பேருக்கும் இதில் அதிக பொறுப்பு இருக்கின்றது. 
மத்திய அரசு ஒரு வடநாட்டுகாரனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு தென்னிந்தியனுக்கு முக்கியமாக தமிழனுக்கு எப்போதுமே கொடுப்பதில்லை.


ஒருவன் தவறு செய்தால், அதற்கான தண்டனையை அவன் அனுபவித்தால் தான் திருந்துவான். எனவே, சுயநலத்துக்காக தமிழனின் மானத்தை காற்றில் பறக்கவிடும் இந்த அரசியல்வாதிகளை, மக்கள் தேர்தலில் தண்டிக்காத வரையில், அவர்களும் திருந்தப் போவதில்லை; நாமும் தலை நிமிர்ந்து நடக்க முடியாது.(நன்றி  சிவா -  தினமலர்)

இன்றைய  நிலையைப் பார்த்து மனவருத்தத்துடன் தலைப்பை வைத்தேன். மன்னிக்கவும் .
சி.பி.செந்தில் சார்  மற்றும் பிரபல பதிவர்கள்  இதைகுறித்து  உங்கள் பிளாகில் கண்டனங்களை தெரிவியுங்கள். உலகலவில் இப்பிரச்சனையின் தீவிரத்தை தெரியபடுத்துவோம்.


முக்கிய அறிவிப்பு
ட்விட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் #tnfisherman என்பதை ட்வீட்களில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

பெட்டிசன் ஆன்லைனில உங்களை கையொப்பங்களைப் பதிவு செய்யுங்கள்:  http://www.petitiononline.com/TNfisher/

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....

1/28/2011

"மிஸ்டர் கிளீன்' - உண்மையா ? Mr., பிரதமர்.

 "மிஸ்டர் கிளீன்' -ன்னு உங்களை சொல்றாங்க அது உண்மையா ?
Mr., பிரதமர்
ஜெர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும், வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கறுப்புப்பணம் அல்ல... இந்திய நாட்டைக் கொள்ளையடித்து, தேசத்துரோகம் செய்திருக்கும் சொத்துக்கள்.

 இதை வெளியிட மத்திய அரசு ஏன் தயக்கம் காட்ட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கும் சாட்டையடி, "சுளீர்' என இருந்திருக்கும்.

நம் அரசியல்வாதிகள் எத்தனை பேர் யோக்கியர்களாக இருக்கின்றனர் என்பதை, இந்தக் கறுப்புப்பணம் நிச்சயம் காட்டிக்கொடுத்துவிடும்.

இந்த நாட்டை ஆண்ட வெள்ளையர்கள் கூட, இப்படி கொள்ளையடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அரசியல் நாகரிகம், தபால் - தந்தி, ரயில் போக்குவரத்து, பார்லிமென்ட் நடைமுறைகள் என, எத்தனையோ நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் செய்து கொடுத்தனர். ( நன்றி நண்பர் வளவன்).

நாகரிகமாக உடை உடுத்தக் கற்றுக் கொடுத்தவர்கள், வெள்ளையர்கள் தான்.ஆனால், சுதந்திரத்திற்குப் பின் நம் நாடு, மொழியாலும், மதத்தாலும், ஜாதியாலும் பிளவுபட்டு, ரத்த ஆறு தான் ஓடிக் கொண்டிருக்கிறது. 

குடிக்கத் தண்ணீர் தர மறுக்கின்றனர் பக்கத்து மாநில மக்கள்.கறுப்புப் பணம் பட்டியலை வெளியிட்டால், நம் அரசியல்வாதிகளின் வண்டவாளங்கள், நிச்சயம் தண்டவாளத்தில் ஏறிவிடும். ஏழைப்பங்காளர்கள் என்று வேஷம் போடும் தலைவர்களின் முகத்திரைகள் கிழிந்துவிடும். 

அதனால்தான், "மிஸ்டர் கிளீன்' என போற்றப்படும் பிரதமர் மன்மோகன் சிங், யோசிக்கிறாரோ, என்னவோ!?

நீங்க என்ன  யோசிக்கிரீங்க?

இந்த பதிவு  பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

1/26/2011

சலுகையா அல்லது சமாதியா?

ஆடைகளுக்குப் போட்டியாக தினம் ஒரு மாடலில் கைகளை அலங்கரிக்கும் அந்தஸ்தை செல்போன்கள் பெற்றுவிட்டன. மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.

 மனிதர்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளின் விலையும் ஏறுவரிசையில் இருக்கும் நிலையில், தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் மட்டுமே இறங்கு வரிசைக்கு இடம்பெயர்ந்துள்ளன.

 பொதுவாக செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் தங்கள் நிறுவனங்களைச் சேர்ந்த பிற வாடிக்கையாளர்களுடன் குறைந்த கட்டணத்தில் பேசி மகிழ பல்வேறு விதமான பூஸ்டர்  கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை உபயோகப்படுத்தி தமிழகத்தின் எந்த மூலையில் இருப்பவருக்கும் 1 நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில்கூட பேச முடிகிறது. செல்போன் சேவையை அதிகம் பயன்படுத்துவோர் இந்தச் சலுகைத் திட்டங்களில் உடனடியாக இணைந்து கொள்கின்றனர்.  

சில சாமானியர்கள் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மட்டுமே "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்களின் தயவை நாட வேண்டிய சூழல் உள்ளது.  ஏனெனில், குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேரும் பண்டிகை காலத்தில், செல்போன் பேச்சுக்கு தற்போது பஞ்சமிருப்பதில்லை.  

 குடும்பத்தாரின் மகிழ்ச்சியைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தினாலும், அதே நேரத்தில் பொருளாதாரச் சிக்கனம் கருதியும் குறிப்பிட்ட பணம் செலுத்தி சலுகைத் திட்டங்களில் சேர்பவர்கள் பலர்.  

ஆனால், செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் திட்டமிடுதலைத் தகர்க்கும் வகையில் பண்டிகைக்கு முந்தைய நாளில் சிறப்புக் குறுஞ்செய்தியை அனுப்புகின்றன.  அந்தக் குறுஞ்செய்தியில், வரும் இரண்டு நாள்களுக்கு மட்டும் நீங்கள் உபயோகப்படுத்திவரும் சலுகைக் கட்டணங்கள் நிறுத்தப்படுகிறது. மாறாக, தாங்கள் பயன்படுத்தும் சிம் கார்டின் அடிப்படைத் திட்டக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை தெரிவிக்கிறார்கள்.  

இதனால் நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில் பேசியவர்கள் கூட, அந்த இரு நாள்களும் நிமிஷத்துக்கு ரூ. 1 வரை செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் என்பவை உண்மையான சலுகையா? அல்லது வாடிக்கையாளர்களை வீழ்த்தும் மூளைச்சலவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ( நன்றி தினமணி)

லட்சங்களில் புரளும் தொழிலதிபர்களுக்கும், கோடிகளில் திளைக்கும் செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் சலுகை காட்டும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், ஏழைகள் மிகுந்த தமது வாடிக்கையாளர் வட்டத்தைப் புறக்கணிப்பது சரியல்ல.

 விழாக்கால "சலுகை ஏமாற்றம்' அளிக்கும் செயல்களில் மட்டும் முன்னணியில் இருக்காமல்,   இனிவரும் பண்டிகைக் காலங்களிலாவது சலுகைக் கட்டணத்தில் வாடிக்கையாளர்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்பதே லட்சக்கணக்கான இல்லையில்லை கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.   

இதற்கு நீங்களும் குரல்கொடுக்க கருத்துரையிடுங்கள்.

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
 

1/25/2011

என்னதது, சின்னபுள்ளதனமா இருக்கே!!!

"2020ல், இந்தியா வல்லரசு நாடாக உயர வேண்டும்” என, அறிஞர்களும், ஆன்றோர்களும், இளைய தலைமுறையும் கனவு கண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.

அதற்கு முன்பே, 2010ல் நம் அரசியல்வாதிகளும், அரசுத்துறை மேல் அதிகாரிகளும், தொழிலதிபர்களும், இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர்

இந்திய மக்கள் தொகையில், 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள இவர்கள், 120 கோடி மக்களின் தரத்தை, உலகளவில் அதலபாதாளத்திற்கு இறக்கி விட்டனர். உயர்மட்ட குழுக்கள் கூடி, நாள் கணக்காக விலைவாசி ஏற்றத்தை விவாதிக்கின்றனர்

பள்ளியில் படிக்கும் மாணவனுக்குக் கூட தெரியும், விவசாய உற்பத்தியை உயர்த்தினால், விலையேற்றம் தானாக குறையும் என்று.

இன்று கார்கள், குளிர்சாதன பெட்டி, இரு சக்கர வாகனங்கள், தொலைபேசி, "டிவி ” ஆகியவை, முன்பு இருந்த விலையைவிட குறைந்த விலையில் கிடைக்கக் காரணம், அதிகமான உற்பத்தியே!

விவசாயிகளுக்கு பல சலுகைகளை மத்திய அரசு அளித்தாலும், அவை முழு அளவில், உரிய நேரத்தில் சேராததாலேயே, உற்பத்தி குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவே விலையேற்றம்.

இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன் அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.

உங்களுக்கும் ஏதாவது ஐடியா தோன்றினால் பின்னூட்டம் இடவும்...

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

1/24/2011

நீதிமன்றமா ? கட்ட பஞ்சாயத்தா ? வெட்கக்கேடு

நீதிமன்றங்களின், குறிப்பாகக் கூறவேண்டுமானால் நீதித்துறையுடன் தொடர்புடையவர்களின் கருத்துகள் விவாதப் பொருளாகி வருவது வேதனைக்குரிய ஒன்று.

நீதிபதிகளே இப்படியா, நீதித்துறையே இப்படித்தானா என்று சராசரி இந்தியன் நம்பிக்கை இழந்துவிட்டால் அதன் விளைவுகள் இந்திய சுதந்திரத்தின், மக்களாட்சி அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம்காண வைத்துவிடுமே என்பதுதான் நமது அச்சத்துக்குக் காரணம்.

டந்த மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவும், நீதிபதி கியான் சுதா மிஸ்ராவும் தெரிவித்த கருத்து நீதித்துறையையே ஒரு வினாடி அதிர வைத்தது.

"அலகாபாத் உயர் நீதிமன்றத்தைப் பற்றிப் பல புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அந்த நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகள் சிலரின் வாரிசுகளும் உறவினர்களும் பட்டம் பெற்று அந்த நீதிமன்றங்களில் பணிபுரியத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சொகுசுக் கார்களும், பிரம்மாண்டமான பங்களாக்களும், வங்கிகளில் பெரும் சேமிப்புகளுமாகக் கோடீஸ்வரர்களாய் வளையவரத் தொடங்கி விடுகிறார்கள்.

ல்லோரும் அப்படி என்று நாங்கள் குற்றம்சாட்டவில்லை. சிலர் தங்கள்மீது களங்கத்தின் நிழல்கூடப் படிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், பலர் தங்களது உறவு முறைகளைப் பயன்படுத்திக் கொண்டு செல்வத்தில் கொழிக்கிறார்கள்'' என்பதுதான் அந்த நீதிபதிகள் தெரிவித்த அதிர வைக்கும் கருத்து.

லக்னௌ மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த நிலைமையை மாற்றத் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் நீதிபதிகளை இடம் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என்றும்கூட அந்த நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். உத்தரப் பிரதேச நீதித்துறை கொதித்து எழுந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து தங்களது உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தரக் களங்கம் கற்பித்துவிடும் என்றும் அதை நீதிமன்றக் குறிப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

ப்படி ஒரு கருத்தைத் தெரிவிக்க நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு உரிமையும் தகுதியும் உண்டு. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தாத்தா டாக்டர் கே.என். கட்ஜு, மோதிலால் நேருவுக்கு நிகரான வழக்குரைஞர் மட்டுமல்ல, ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியும்கூட. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தந்தை எஸ்.என். கட்ஜு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். மாமா பி.என். கட்ஜு அதே அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவே இருந்தவர். 1991-ல் மார்க்கண்டேய கட்ஜு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்கும்வரை, தனது தந்தையோ, மாமாவோ நீதிபதிகளாக அமர்ந்திருக்கும் நீதிமன்றங்களில் வழக்காடுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருந்தவர்.

அப்படி ஒரு பின்னணியுடைய நீதிபதிக்கு, சில நீதிபதிகளும் அவர்களது வாரிசுகளும் நீதித்துறையைக் கேவலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சகித்துக் கொள்ள முடியாதுதான். ஆனால், இப்படி ஒரு கருத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்ட பிறகும், உண்மை வெளிக்கொணரப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட்டால்தானே மக்களுக்கு நீதித்துறைமீதும், ஆட்சிமுறை மீதும் நம்பிக்கை தொடர முடியும்?

ல்லா உயர் நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் இதேபோன்ற நிலைமைதான் தொடர்கிறதா? அப்படியானால், அதைத் தீர விசாரித்து நீதித்துறையின் கௌரவத்தையும், சாமானியனுக்குக் கிடைக்க வேண்டிய நீதியையும் நிலைநாட்ட வேண்டாமா? பணம் கொடுத்துத் தீர்ப்பை வாங்குவது என்று வந்துவிட்டால் நீதித்துறையும் ஒரு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அல்லது தலைமைச் செயலகம்போல ஆகிவிடுமே, அதை நாம் அனுமதிக்கலாமா?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைச் சந்தித்து மத்திய அமைச்சர் பேசுகிறார் என்று தொலைபேசியைக் கொடுக்க வழக்குரைஞர் துணிந்தது எதனால், எதற்காக என்பதெல்லாம் இப்போது இரண்டாம் பட்சமாகிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியே உண்மையை மறைக்கப் பார்த்திருக்கிறாரோ என்கிற ஐயப்பாடல்லவா மேலோங்கி இருக்கிறது.

டைசிவரை தன்னிடம் யார் தொடர்புகொண்டு தனது நண்பர்களுக்காக சிபாரிசு செய்தது என்பதை நீதிபதி ரகுபதி தெரிவிக்கவே இல்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகஇருக்கும் ஹெச்.எல். கோகலே, அமைச்சர் ஆ. ராசாவின் பெயரை நீதிபதி ரகுபதி குறிப்பிட்டிருந்ததை உறுதிப்படுத்தி, அந்தக் கடிதத்தை அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை இருப்பதாகக் கூறியிருப்பது அதிர்ச்சி அலைகளை எழுப்பாமல் என்ன செய்யும்?( நன்றி தினமணி).

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருந்தார், உண்மையை மறைத்தார் என்றால், அவர் வகித்த பதவிக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தப் பிரச்னையில் எது உண்மை? உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியே உண்மையை உறைபோட்டு மூடப் பார்த்தாரா என்பது வெளிப்படுத்தப்பட்டே தீரவேண்டும்.

ச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளில் பலர் ஊழல் பேர்வழிகள் என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய மூத்த வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷணையும் அவரது தந்தை சாந்திபூஷணையும் நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டிக்கக்கூட முடியாத நிலையில் உச்ச நீதிமன்றம் தத்தளிக்கும் நிலைமை அதைவிடக் கொடுமை. இந்த நிலைமையும்  தொடரக்கூடாது.

நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும். எது நிஜம்? என்று கண்டறியத்தான் நீதித்துறை. அதனால், நீதித்துறை சுய பரிசோதனைக்குத் தயாராகியே தீரவேண்டும்!

1/22/2011

பிளஸ் 2 படிக்கும் மாணவி

பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்திருப்பது, நம் இளைய தலைமுறை சீரழிந்து வருவதற்கு, ஒரு சிறிய எடுத்துக்காட்டு.



இன்று, தவறான செக்ஸ் கலாசாரம், இந்த அளவுக்கு சிறுவர்களிடம் பரவியுள்ளதற்கு முக்கியக் காரணம், 

சமீபகாலங்களாக தமிழகத்தில் வெளிவரும் திரைப்படங்களும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் காட்சிகளும் தான்.பள்ளிக் குழந்தைகளே காதலிப்பது போன்ற காட்சிகள் வருவதும், காதலர்களுக்கு தூது போக, பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதும் இவைகளில் வழக்கமாகிவிட்டது. 

அதற்கு உதாரணமாக, சென்ற ஆண்டு வெற்றிகரமாக ஓடிய, "ரேணிகுண்டா' என்ற படத்தின் காட்சிகள் இருந்தன.இன்று, தமிழ் சினிமா காட்சிகள், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் இல்லை. தமிழ் சினிமாக்களில், காதல் மட்டுமே வாழ்க்கையில் முதன்மையானது என்று சித்தரித்துக் காட்டப்படுவதும் இதற்கு முழு காரணம்.இலவச, "டிவி'க்கள் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் உட்புகுந்து, ஒன்றும் அறியாத இளம் பள்ளி மாணவ, மாணவியரின் மனதில் நஞ்சைக் கலந்து, அதுவே, பள்ளி மாணவியர் திருமணத்திற்கு முன்பாகவே தங்கள் கற்பை இழக்க வைத்து விடுகிறது.
( போட்டோவிற்கும், பதிவிற்கும்  சம்பந்தம் இல்லை)



இந்த பதிவிற்கு நீங்க என்ன சொல்லபோறீங்க?

1/20/2011

திரு சிதம்பரத்திற்கு ஒரு கேள்வி?


பொது வாழ்வில் ஈடுபட்ட அன்றைய தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோரை நினைத்து பார்க்கும்போது, இன்றைய பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தங்கள் தகுதிக்கு மேல், மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர்




ன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர். அதனால்தான், அவர்களால் மக்களுக்கு தூய ஆட்சியை தர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் சேவையை செய்தனர். அதனால், இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்."தூய ஆட்சி, எளிமை யுள்ள தலைவரை முதல்வராகக் கொண்ட ஆட்சி தேவை' என, ஆதங்கப்படுகிறார் சிதம்பரம். ( நன்றி தினமலர்  )

னால் அவர், காமராஜரை போன்று சாமானியன் அல்லவே; கோடீஸ்வரர் தானே. அவர் ஆதங்கம் உண்மையாக இருப்பின், கோடீஸ்வரரான அவர், சாமானியர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; 

னால், "போதும்... இனி நான் மத்திய அமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, இளைய சமுதாயத்திற்கு வழி விடும் செயலை செய்து, முன் உதாரணமாக காட்சி தரலாமே!அவருக்கும் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் இல்லை என்று சொல்ல முடியுமா? தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற அடிப்படையில் தானே, நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பதிவு பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு !!!

மிழன் தன்மானம் இழந்து பல ஆண்டுகளாகி விட்டது. எதை இலவசமாக கொடுத்தாலும், அதை கூச்சமின்றி வாங்க பழக்கப்பட்டு விட்டான்.


தனால் தான், தொழிலுக்காக வாங்கிய வங்கி கடனையும், வட்டியுடன் தள்ளுபடி செய்யும் அரசுக்கு ஓட்டளித்தான்.

இலவச வேட்டி - சேலைகள், சாப்பாட்டிற்கு உகந்ததோ, இல்லையோ, இலவச ஒரு ரூபாய் அரிசி; அதை பொங்கி சாப்பிட இலவச சிலிண்டர், காஸ் அடுப்பு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் பார்த்து மகிழ, இலவச கலர், "டிவி...' வேறு, என்ன வேண்டும் தமிழனுக்கு?

"உழைத்து, உடம்பை பாழாக்கி கொள்ளாதே. உன்னை போன்றவர்கள் நலமாக, சுகமாக வாழத்தான், நாங்கள் இலவசங்களை அள்ளி தருகிறோம். ( ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற அறிவிப்பு வேறு ) நீ ஒப்புக்கு சம்பாதிக்கும் பணத்தை மட்டும், உன் மகிழ்ச்சிக்காக திறந்திருக்கும், “ டாஸ்மாக் “  கடையை மட்டும் மறந்து விடாதே, அங்குபோய் செலவழீ தமிழா என்கிறது அரசு.

உலகில் எவ்வளவோ வல்லரசு நாடுகள் உள்ளன; தமிழகத்தை போல், அந்த நாடுகளில் திட்டம் உண்டா? 

ஆமாம்...  அரசு ஏன் ஒவ்வொருவராக தேடி அலைந்து, இலவசங்களை வழங்க வேண்டும்? எல்லாருக்கும் கையில் பிச்சை எடுக்கும் ஓட்டை கொடுத்து, தங்குவதற்கு சத்திரத்தையும், ஒவ்வொரு தெருவிலும் கட்டி தந்தால், இன்னும் நலமாக இருக்குமே! 

இதை படிக்கும்  உங்களுக்கு தெரிகிறதா ?   
நான் சொல்வது உண்மையென்று ?  
நீங்கள் என்ன செய்யபோகீர்கள்?   


பதிவு பிடித்திருந்தால்  ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

1/19/2011

2010 ஊழல் ஆண்டு - 2011 தண்டனை ஆண்டு

முடிந்துபோன 2010-ம் ஆண்டுக்கு இந்திய ஊடகங்கள் வைத்த பொதுப்பெயர் "ஊழல்' ஆண்டு.


இந்தியாவில் எந்த ஆண்டில்தான் ஊழல் இல்லாமல் இருந்தது?