Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

9/24/2014

மங்கள்யான் -இந்தியாவின் மகத்தான சாதனை.


கிராவிட்டி படத்திற்கு ஆன செலவைவிட குறைந்த செலவில் ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கே செலுத்தி அதில் வெற்றியும் கண்டு அப்ளாஸ் அள்ளியுள்ளனர் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மட்டுமே கொண்டிருந்த பெருமைகளை முறியடித்து முதல் முயற்சியில் சாதித்த நாடு என்ற புதிய சாதைனையை இந்தியா படைக்கப்போகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை உலக நாடுகள் அனுப்ப முயற்சிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 1960ல் இருந்து சுமார் 40 முயற்சிகள் நடைபெற்று அதில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதற்கு முன் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற 20 நாடுகளை உள்ளடக்கிய  'ஒன்றிணைந்த ஐரோப்பா விண்வெளிக்கழகம்' அனுப்பிய 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' விண்கலம் மட்டுமே முதல் முயற்சியில் வெற்றி கண்டது.

ஆசிய பெருந்தலைகளான இந்தியாவும், சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியை தங்கள் கவுரவப்பிரச்னையாகவே கருதுகின்றனர். ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா பல மடங்கு முன்னேறி இருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சரிக்கு சமமாகவே பதிலடி தந்து வருகிறது. 2011ல் ரஷ்யா உதவியுடன் செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய விண்கலம் தோல்வியில் முடிந்தது. ஜப்பானும் இதேபோல் 1998 ஆம் ஆண்டு முயற்சித்து தோல்வி கண்டது.

இதனிடையே சந்திரயான் விண்கலம் கொடுத்த வெற்றி மங்கள்யான் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. மங்கள்யான் குறித்த அறிவிப்பை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் வெளியிட்டார். அதில் இருந்து சுமார் 15 மாத இடைவேளையில் முழு விண்கலத்தையும் உருவாக்கி கடந்த ஆண்டு  நவம்பர் 5ஆம் தேதி அப்போதைய ஆந்திரப்பிரதேசத்தில் இருந்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உதவியுடன் மங்கள்யான் ஏவப்பட்டது.

மங்கள்யான் திட்டத்தின்  தலைமை அதிகாரி சுப்பையா அருணன்  "சுமார் 15 மாதங்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றியுள்ளேன். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டில் நேரத்தை செலவிட்டேன். என்னை போல  நிறைய பேர் மங்கள்யான் வெற்றிக்காக அயாராது உழைத்துள்ளோம்" என்று  கூறியுள்ளார்.

எப்படி பயணித்தது மங்கள்யான்

கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும் நொடியில் இருந்தே விண்கலம் எந்த நிமிடத்தில் எங்கு இருக்கும்; எந்த நாள் இலக்கை சென்றடையும் என அனைத்திற்கும் நாள் குறிக்கப்படும். ராக்கெட் விண்ணில் பாயத்துவங்கியதும் ஸ்ரீ ஹரிகோட்டா, அந்தமானில் உள்ள போர்ட் ப்ளேர், ப்ருனே, பியாக் போன்ற ஊர்களில் உள்ள நான்கு மையங்களில் இருந்து கண்காணிப்பார்கள். அந்தமான் தாண்டி ராக்கெட் செல்ல துவங்கியதும் 10 நிமிடங்களுக்கு எந்த மையத்துடனும் தொடர்பில் இருக்காது. பின்னர் மேற்கு பசிபிக் பெருங்கடலின் மேல் பாயும்பொழுது அங்கு இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரு கப்பல்கள் ராக்கெட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

ஒரு கட்டத்தில் ராக்கெட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் பிரிந்துசெல்ல மங்கள்யான் தனது சோலார் பேனல்களை வெளியே கொண்டு வரும். பூமியை சுமார் 6 முறை சுற்றியபின் பூமியின் பாதையை விட்டு விலகி செவ்வாயை நோக்கி சீறிப்பாயத் துவங்கியது. இதற்காக விண்கலத்தில் உள்ள ஏ.எல்.எம் மோட்டார் இயக்கப்பட்டது.  விண்கலம் வேகம் எடுத்தவுடன் இந்த மோட்டார் நிறுத்தப்படும்.

சுமார் 10 மாத காலம் ஒரு நொடிக்கு 22.1 கிலோமிட்டர் என்ற வேகத்தில் பயணித்து நேற்று செவ்வாய் கிரகத்தின் அருகில் சென்றடைந்தது. செவ்வாய் கிரகத்தின் புவியிர்ப்பு விசைக்குள் நுழையும் பொழுது இதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். இதை குறைக்க முதலில் 10 மாதங்கள் இயங்காமல் இருந்த  அந்த ஏ.எல்.எம். மோட்டார் இயங்குகிறதா என்று நேற்று மதியம் 2.40 மணியளவில் சோதனை நடைபெற்றது. இந்த திக்திக் சோதனை  சுமார் 4 வினாடிகள்  நீடித்தது. மோட்டார் சரியாக இயங்க துவங்கியதும் இஸ்ரோவிற்கு நாலாபுறமும் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கின. நேற்று நாம் சோதனை நடத்திய அதே வேளையில் நாசாவின் (அமெரிக்கா) மேவன் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் புவீஈர்ப்பு விசைக்குள் நிறுத்தப்பட்டு அதன் ஆராய்ச்சிப் பணிகளை துவங்கியது. ஆனால் அவர்களை விட நாம் குறைந்த செலவில் மங்கள்யானை அனுப்பி புதிய சாதனையை படைத்துள்ளோம்.

என்ன செய்யப்போகிறது மங்கள்யான்

நாளை முதல் தனது பணிகளை துவங்கும்  மங்கள்யான், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கும். அப்படி மீத்தேன் வாயு இருக்கும் பட்சத்தில் அது உயிர்கள் வாழ்ந்ததால் உருவானதா அல்லது இயற்கை பேரழிவுகளின் விளைவால் உருவானதா என்று ஆராயும். அது மட்டுமின்றி அதனுள்ளே பொருத்தப்பட்டுள்ள கலர் கேமரா தொடர்ந்து படங்களை எடுத்து அனுப்பிகொண்டிருக்கும். இது வருங்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற நடைபெறும் ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக அடுத்து செவ்வாய் கிரகத்தில் வேறு ஒரு விண்கலத்தை இறக்கி ஆய்வுகள் நடத்தப்படும். இறுதியாக சுமார் 2030 ஆம் ஆண்டின்  வாக்கில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்.

சரியாக கழிவறை வசதி கூட இல்லாத நாட்டிற்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்  தேவையா என எதிர்ப்புக்குரல்கள் ஒருபுறம் ஒலிக்க, அமைதியாக 450 கோடி செலவில் புதிய சாதனை படைக்க தயாராகிவிட்டனர் நம் விஞ்ஞானிகள். பல ஆயிரம் பேரின் உழைப்பின் அறுவடை நாளை காலை 7.30 மணியளவில் தெரிந்துவிடும். நிலவில் தண்ணீர் இருப்பதை உலகிற்கே எடுத்துக்காட்டிய நாம், செவ்வாயின் ஆச்சர்யங்களை கூடிய விரைவில் கண்டெடுத்து உலகின் முன் வைப்போம் என்பதில் ஐயமில்லை.

தகவல்கள் விகடன் இதழிலிருந்து...

11/28/2011

இந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.

கூடங்குளம் பற்றி மறுபடியும் ஏதாவது சொல்றாரோ?


  • அத்தியாவசிய தேவையான நல்ல அரிசியின் விலை கிலோ ரூ. 30 லிருந்து ரூ. 40 ரூபாய்.                                                                                                ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது ...!!

8/30/2011

நம் இந்தியா ஜனநாயக நாடா?


"இந்தியா ஒரு ஜனநாயக நாடு!" இன்று வரை, அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் நாம கரணமும் இது தான். ஆனால், இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறதா என்பது கேள்விகுறிதான். 

இப்போது, பண நாயகத்தால், ஜனநாயகத்தை விலை பேசும் மாநிலங்களாக, ஒவ்வொன்றும் மாறி வருகிறது. இதற்கு, மத்திய அரசும் விதி விலக்கல்ல. தற்போது, 65வது சுதந்திர தின கொடியை பறக்கவிட, விண்ணில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. 

7/11/2011

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இதில்தான் முதலிடம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்




சீனாவின் முன்னேற்றத்தை ஒப்பிடும் போது, நாம் இன்னும் பின்தங்கிய நாடாகவே இருக்கிறோம் எனத் தோன்றுகிறது. பல துறைகளிலும், அபரிமிதமாக முன்னேறி வருகிறது சீனா. 

உலக ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சீனா சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால், ஒரு தங்க மெடல் வாங்கவே இந்தியா திணறுகிறது. 

6/20/2011

காந்தி கண்ட ராமராஜ்யம் அமைய ????


ழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்படும் லோக்பால் மசோதாவில், பிரதமரையும், நீதிபதிகளையும் தவிர்த்து, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும்' என்கிறது, ஐக்கிய முன்னணி அரசு!

இது மிகவும் தவறானது.நியாயமாகப் பார்த்தால், ஜனாதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க, இந்த மசோதாவில் வழி வகைகள் செய்ய வேண்டும்.ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகள் எல்லாரும் மனிதர்கள் தான்; தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த உத்தமர்கள் இல்லை

ஊழல் செய்தார் என, இந்திராவுக்கு எதிராக, அலகாபாத் கோர்ட் தீர்ப்பு சொன்னதால் தானே, இந்திரா கொதித்தெழுந்து, நாட்டில் எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணன் குடும்பத்தினர், மகா ஊழல் செய்து, சொத்து சேர்த்த விவரங்கள், பத்திரிகைகளில் வெளிவந்து, நாறிப்போனது தெரியாதா? 

வி.வி.கிரி ஜனாதிபதியாக இருந்தபோது, வழக்கு விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டது மறந்து விட்டதா?பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தானே, பெரிய அளவில் ஊழல் செய்கின்றனர். இந்த லட்சணத்தில், பிரதமரையும், நீதிபதிகளையும் விலக்கு அளிக்கச் சொல்வது, எந்த வகையில் நியாயம்? 

மன்மோகன் சிங் கடுமையாக நடந்து கொண்டிருந்தால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் அரங்கேறியிருக்க முடியாதே!ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அந்த ஆண்டவனைக் கூட விசாரணைக்கு அழைக்க வேண்டும். சாதாரணக் குடிமகன், சீதை மீது குற்றம் சொன்னதால், ராமன் அவளைக் காட்டுக்கு அனுப்பினானே!காந்தி கண்ட ராமராஜ்யம் அமைய வேண்டுமானால், யாருக்கும் கருணை காட்டக்கூடாது. 

6/03/2011

அரசியல்வாதிகளே விவசாயிகளை வாழவிடுங்கள்!?


உ.பி.,யில் அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும்(ஆட்டையை போடப்படும்) விளை நிலங்களுக்கு, இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளதென்றும், மேலும் நிலங்களை கையகப்படுத்தாமல் இருக்கவும், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்து, விவசாயிகள் தரப்பிலும், காவல் துறையில் சிலரும் உயிரிழந்துள்ளனர். போராட்டம் மேலும் தீவிரமடைந்து, உ.பி.,யின் இதர பகுதிகளுக்கும் பரவியது. 

பொதுவாக, இந்தியாவின் உணவுத் தேவை, கிராமப்புறங்களையும், அங்குள்ள பரந்த விளைநிலங்களையும் நம்பியுள்ளது. மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகளும், மத்திய அரசும்,பொருளாதார மண்டலங்களுக்காகவும், விமான நிலையங்கள், குடியிருப்பு விரிவாக்கம், தொழிற்பேட்டைகளை அமைக்கவும், சகட்டு மேனிக்கு விவசாய நிலங்களில் கை வைக்கும் அவலம் தொடர் கதையாக உள்ளது. 

மேலும், தண்ணீர் வசதி, வடிகால் வசதி பற்றாக்குறை காரணங்களால், கிராமப்புற நிலங்கள் வெகுவாக, பிளாட் போடப்பட்டு வீடுகளாய் மாறுகின்றன. விவசாயிகளுக்கு தேவைப்படும் நுகர்பொருட்களான, நேர்த்தியான விதைகள், உரங்கள், களைக் கொல்லிகள், பூச்சி மருந்துகள், போதிய அளவு கிடைக்காத காரணங்களாலும், அவர்கள் பெறும் கடன்களை அடைக்க முடியாமல், மன உளைச்சல் ஏற்பட்டு, தற்கொலைக்கு தள்ளப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. 

இதனால், விவசாயம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விதத்தில் நிர்ணயம் செய்யப்படாததும், நவீன விவசாய அறிவியல் முன்னேற்றங்கள், விரைவாக விவசாயிகளை சென்று அடையாததும், அவர்கள் மத்தியில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. 

விவசாயத்திற்காக வழங்கப்படும் இலவச மின்சாரம், உரிய நேரத்தில் வழங்கப்படாததும், ஒரு முக்கியமான காரணம். இத்தகைய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய விவசாயிகளுக்கு, தங்கள் நிலங்களில் பயிரிடுவதையே பெரிய பாரமாய் கருதும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய வேலைக்கு சரியான கூலி ஆட்கள் கிடைப்பது இல்லை. 

இந்நிலையில், வாழ்வாதாரமான விளை நிலங்களை, அரசு பெருமளவில் திட்டங்களுக்கு கையகப்படுத்துவதும், அப்படி கையகப்படுத்தும் போது, அவர்களுக்கு உரிய தொகையை தர மறுப்பது, அவர்களது வாழ்க்கையோடு, அரசு விளையாடும் செயல். கிராமங்களையும், அங்குள்ள விவசாயிகளையும் உருக்குலைக்கும் அரசு திட்டங்கள், "இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்ற அற்புதமான சொற்றொடரை பொய்யாக்கி விட்டன. நம் விவசாய பெருங்குடியினரை முடக்கி விடும் அபாயம் உருவாகி வருவதையே, உ.பி., கலவரங்கள் காட்டுகின்றன.

6/02/2011

ஆம் யார் இந்த பாபா ராம்தேவ் ?



ழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக, டில்லியில் நாளை மறுதினம் துவங்கும் தன் உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்,'' என, பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று அறிவித்தார்.
 
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தவர், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை, முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார். 

ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 4ம் தேதியில் இருந்து, டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். 

ஆம்  யார் இந்த பாபா ராம்தேவ் .,

சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ், ஓர் இந்திய இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். 

இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.