Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

4/07/2017

புதிய இந்தியா

ஓர் அரசின் தலைமை செயலாளர், மந்திரிகள், உயர் அதிகாரிகள் என பலர் வருமான வரி சோதனை உள்ளாவது அநேகமாக தமிழகத்தில் தான் என நினைக்கிறேன்.

 ஒரு பக்கம் தமிழக கஜானா காலி, மறுபக்கம் கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விளக்கம் கேட்கிறது வருமானவரி துறை.

 கருப்பு பணம் மற்றும் ஊழல் ஒழிப்பை அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இருந்து தான் துவக்க வேண்டும் மக்களிடம் இருந்து அல்ல என்பதையே இந்த சோதனைகள் உணர்த்துகின்றது.

அரசு டெண்டர்களில் நடக்கும் ஊழல்கள் தான் இவர்களிடம் பணம் புழங்க காரணம்., கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என சாதாரண மக்களை தெருவில் நிற்க வைத்த மத்திய அரசு, நாடெங்கும் மத்திய மாநில அரசுகளின் டெண்டர்களில் நடக்கும் ஊழல்களை தடுக்க வேண்டும். 

லட்சம் கோடி மதிப்புடைய அரசு டெண்டர்களில் நடக்கும் ஊழலை தடுத்தால் மட்டுமே , புதிய இந்தியா உருவாகும்.

3/08/2017

மகளிர் தினம்

"கல்யாண மண்டப ஆர்கெஸ்ட்ரா குழுவில் பாடகியாக வந்த பெண்"

"ஹோட்டலில் எதிர் மேசையில் அமர்ந்து மெனு கார்டை மட்டுமே முப்பது நிமிடம் பார்க்கும் பெண்"

"பீச்சில் கை காட்டு ராசான்னு பக்கத்தில் உட்கார்ந்து குறி சொல்லும் பெண்"

"பப்பில் பீர் பாட்டிலை வாயில் ஓபன் செய்யும்  பெண்"

"ஸ்மோக்கிங் சோனில் லைட்டர் கேட்டு ஸ்டைலா  சிகரெட் பற்ற வைக்கும் பெண்"

"நல்ல மழையில் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிக்கும் பெண்"

"திருவிழாக் கூட்டத்தில் முதல்முறை தாவணி உடுத்தி முந்தானை சரி செய்யும் பெண்."

"ஷேர் ஆட்டோவில் அருகில் அமரும் பெண்"

"அழகு நிலையத்தை ஒரு நமட்டுச் சிரிப்போடு கடந்து செல்லும் பெண்"

"ஒரு பனகல் பார்க் என்று 12 பி பேருந்தில் பத்து ரூபாய் நோட்டு நீட்டும் பெண்"

"அசடு வழிந்துகொண்டே வங்கியில் பேனா கடன் கேட்கும் பெண்"

"கடைசி இரண்டு முழம் மல்லிப்பூ பத்து ரூபாய் வாங்கிக்கோங்க என்று தி.நகர் பஸ்ஸ்டாண்டில் மன்றாடும் பெண்"

"ஒரு கையில் குழந்தையோடு மறுகையில் சிமென்ட் கலவை சுமக்கும் பெண்."

" துப்பட்டா செயின்ல மாட்டிக்க போவுது என்று எச்சரித்து விட்டு சிக்னலில் நிக்கும் போது ரொம்ப நன்றிங்க என்று சினேக பார்வையோடு நன்றியை வீசும் பெண்.."

"துணிக்கடையில் 32 சைஸ் பிரா என்று ராணுவ ரகசியம் போல மிக மெதுவாக கேட்டு விட்டு தான் கேட்டது மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதா? என்று திருதிருன்னு  முழிக்கும் பெண்"

"தான் அழகுனு எந்த இடத்துலயும் காட்டிக்காம ஆணவம் இல்லாம கடந்துபோற பெண் "

"பேருந்து பயணத்தில் புன்னகையை வீசி சென்ற பெண்"

" பாஸ்போர்ட் ஆபீஸில் சந்தித்த பெண்"

"காதலை அளவுக்கு அதிகமாக காட்டிவிட்டு பிரிந்து சென்ற பெண்"

"எத்தனை முறை சண்டை போட்டாலும் தேடிவந்து பேசும் பெண் "

இந்த பெண்கள் அனைவருமே அவ்ளோ அழகு.
அழகு என்றாலே பெண்தான் .

இப்படி

தாயாக, சகோதரியாக, தோழியாக, குழந்தையாக.. எங்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட அனைத்து பெண்களுக்கும் நெஞ்சம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

1/31/2017

வனிதா என்கிற மாணவி


வழக்கம் போல வகுப்பில் முதல் பீரியட், 
அட்டன்டன்ஸ் எடுத்துக்  கொண்டிருந்தேன். 
சாரு.. பிரசன்ட் சார்,
தீபா... பிரசன்ட் சார்,
ஜோதி... பிரசன்ட் சார், 
ரமேஷ்... பிரசன்ட் சார்,
வனிதா....
வனிதா...

சார் வனிதா இன்னைக்கு ஸ்கூல் க்கு ஆப்சென்ட் சார்.

ஒ, அப்படியா? ஜோதி, நீ வனிதாவுக்கு க்ளோஸ் பிரன்ட் தானே, வனிதா ஏன் ஒரு வாரமா ஸ்கூல் க்கு வரல? உன்கிட்ட எதுனா காரணம் சொன்னாளா?
இல்லை சார்.

ஒரு ஒழுக்கமான மாணவி, கிளாஸ் பஸ்ட் எடுக்குற பொண்ணு, தேவை இல்லாமல் லீவ் எடுக்காத பொண்ணு, இப்படி எக்ஸாம் நேரத்துல எதுக்கு லீவ் போடுறா? 
இப்படியான கேள்விகள் மனதுக்குள் நிழலாடியது. 

சரி இன்னைக்கு ஈவ்னிங் அவ வீட்டுக்கு போய் காரணம் என்னன்னு தெரிஞ்சிட்டு வரணும் ன்னு முடிவுபன்னி அன்றைய வகுப்பில் பிசியாகிப் போனேன்.

ஆனால் அன்று ஈவ்னிங் வனிதா வீட்டிற்கு வேறு வேலைகள் காரணமாக போகவில்லை. இல்லை மறந்துவிட்டேன்.

மறுநாள் வழக்கம் போல வகுப்புக்கு போனேன்.

இன்று வனிதா வந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் மனதுக்கு நிம்மது ஆயிற்று. 
ஆனால் வழக்கமான வனிதா அங்கே மிஸ்ஸிங்.

ஒருவித பொலிவுடனும், சிரிப்பு முகத்துடன் காணப்படும் வனிதா, அன்று சோகமாக காணப்பட்டாள். காரணம் அறிய அவளை அழைத்து பேசினேன்.

வனிதா, ஏன் சோகமா இருக்க? ஒரு வாரம் லீவ் வேற போட்டுருக்க, உடம்பு ஏதாவது சரி இல்லையா? சொல்லுமா, என்ன ஆச்சு உனக்கு? 
நான் வேற நம்ம எச் எம் கிட்டேயும், மற்ற ஆசிரியர்கள் கிட்டேயும், என்னுடைய வகுப்பு பொண்ணு வனிதா தான், இந்த வருடம் ஸ்கூல் பஸ்ட் வருவா ன்னு சபதம் வேற போட்டிருக்கேன். நீ வேற இப்ப அடிக்கடி லீவ் போடற, என்னை அசிங்கப் படுத்திடுவே போல இருக்கே? என்றவுடன், உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

சார் வீட்ல பிரச்சனை சார், அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை சார் என்றாள். ஐயோ வனிதா எல்லார் வீட்டிலையும் பிரச்சனைகள் இருக்கு அதை ஏன் பெரிதுபடுத்துகிறாய் என்றேன்.

அந்த அழுகையும், விசும்பளும் அதிகம் ஆயிற்று. சார் எங்க அப்பாவைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும். பயங்கர சந்தேகப்பிராணி சார் அவர், 

சாப்பாடு உப்பு கம்மியா இருந்தா அடி, ருசியா இல்லையா உதை, 
எங்கம்மா அழகு, அதற்கேற்றமாதிரி டிரஸ் பண்ணா , என்னடி இது தெவிடியா மாதிரி அலங்காரம் ன்னு, வயதுக்கு வந்த பொண்ணு இருக்கேனேன்னு கூட பாக்காம என் முன்னாடியே திட்டுவார். 

சும்மா வெளிய வேடிக்கை பார்த்தா கூட , யாரை எதிபார்த்து நிக்கற ன்னு அசிங்கமா கேட்பாரு. இப்படிப்பட்ட அப்பா சார் எனக்கு, இருந்தாலும் எங்க அம்மாவிக்காக இதை எல்லாம் பொறுத்துக்கொண்டு நான் படிப்பில் கவனம் செலுத்துவேன். அது உங்களுக்கு தெரியும், என்று சொல்லி சில நிமிடம் பேச்சை நிறுத்தினாள், நான் உடைந்து போயிருந்தேன்.

ஆனால் போன வாரம் பிரச்சனை பெருசாயிடுச்சி, அதனால்தான் என்னால ஸ்கூல் க்கு வரமுடியல என்று மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

சரி, போன வாரம் என்னதான் ஆச்சு சொல்லு என்றேன்.

போன வாரம் ஞாயிறு காலையில கறி சமைச்சு வெக்கல ன்னு எங்கப்பா அம்மாட்ட சண்டை போட்டு இருந்தாரு நானும் வழக்கமான சண்டை தானேன்னு, ரூம்குள்ள போய் படிச்சிட்டு இருந்தேன். அப்பா கொஞ்சநேரம் சண்டை போட்டுட்டு வெளியில எங்கோ கிளம்பி போயிட்டாரு. அன்னைக்கு மதியமும் வீட்டுக்கு வரல, நைட்டும் ஒன்பது மணி வரைக்கும் வரல, சரி நாங்க ரெண்டு பேரும் சாப்ட்டு படுத்துடோம்.

காலையில எழுந்து பார்த்தா எங்கம்மா முக்காடு போட்டுட்டு அழுதுட்டு இருந்தாங்க. என்னம்மா, என்னாச்சு நைட்டு, ஏம்மா அழறன்னு, கேட்டவுடன், அம்மா அந்த முக்காடு எடுத்தாங்க, பார்த்தவுடன் நான் மயங்கி விழுந்துட்டேன் சார் என்றாள்.

எனக்கு ஒன்னும் புரியல, என்னாச்சு என்றேன். 
சார் எங்கப்பா அன்னைக்கு குடிச்சிட்டு வந்து, எங்கம்மா கூந்தல் முடியை வெட்டிட்டாரு. அன்னைக்கு அரைகுறை முடியோக எங்கம்மா அழுத அழுகை இப்போ நினைச்சாலும் எனக்கு கண்ணீருக்கு பதிலா ரத்தம் வருது என்று மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

கண்ணீர் வழித்தொடியது வனிதாவிற்கு... 
கலங்கிப்போய் நின்றிருந்தேன் நான்...