Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

4/30/2011

காங்கிரஸ் அரசின் கள்ள மவுனம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.


மிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும் விவகாரமாகட்டும் அல்லது இலங்கை தமிழர்களை சிங்கள இராணுவம் சிதைக்கும் விவகாரமாகட்டும், இப்போது இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமான பின்னராகட்டும், தமிழர்கள் விடயத்தில் எதுவானாலும் கள்ள மவுனம் சாதிப்பதே மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வாடிக்கையாகி விட்டது.

2008
மற்றும் 2009 மே மாதம் வரை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய இறுதிக் கட்டபோரின்போது அப்பாவி பொதுமக்கள் மீதும்,பச்சிளம் குழநதைகள் மீதும் எரிகுண்டுகள் வீசப்பட்டு கொல்லப்படுவதை பார்த்து, போரை நிறுத்தச் சொல்லுமாறு தமிழகம் பதறி துடித்தபோது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மலையாளி எம்.கே. நாராயணனை தமிழகத்திற்கும், கொழும்புக்குமாக அனுப்பி வைத்து போக்கு காட்டியபடியே கடைசி வரை அசைந்து கொடுக்கவில்லை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.

2006
ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து தமிழகம் மற்றும் புதுவையில் 40 க்கும் 40 இடங்களை திமுக-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியபோது, அவர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள் சோனியா காந்தி மனதுக்குள் இப்படி ஒரு பழி தீர்க்கும் உணர்வு பதுங்கி கிடந்திருக்கும் என்று!

கூடவே காங்கிரஸ் கட்சிக்காக வக்காலத்து வாங்கி வாக்கு சேகரித்து கொடுத்த கருணாநிதி இப்படி நெஞ்சத்தை கல்லாக்கிக்கொண்டு 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி இலங்கை தமிழர்களை கொல்ல துணை போவார் என்று நினைத்திருக்க மாட்டார்கள்!


ஆனால் 2006 தேர்தலில் வெற்றிபெற்றதுமே சோனியா தெளிவாகவே தனது மனதுக்குள் பூட்டிவைத்திருந்த பழி தீர்க்கும் படலத்தை அரங்கேற்ற திட்டமிட தொடங்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது விருப்பத்தை நிறைவேற்ற சோனியா வீட்டு பூஜாரிகள் செய்த முதல் காரியம், எங்கோ ஒரு வெளிநாட்டில் செட்டிலாகி இருந்த மலையாளி எம்.கே. நாராயணனை தேடி பிடித்து அழைத்து வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆக்கியதுதான்.
 

இந்த நாராயணன், ஆரம்ப காலம் தொட்டே விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு நபர்.1987- 1990 காலப்பகுதியில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டதற்கு,முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.எம்.கே.நாராயணன் இந்திய உளவுத்துறையான 'ரா'வுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த இவரது தவறான ஆலோசனையின் பேரில்தான், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, புலிகள் மீது வலுக்கட்டாயமாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை திணிக்க காரணமாக இருந்தவர்.
 

அவ்வளவு ஏன்... இவர் ஒரு விடுதலைப் புலி எதிர்ப்பாளர் என்பதை விக்கிலீக்ஸே அம்பலப்படுத்தியுள்ளது.அவருக்கு விடுதலைப் புலிகளைப் பிடிக்காது எனவும்,சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசி என்றும், இலங்கை போரில் ஒரு பக்கச் சார்பாக அவர் நடந்ததோடு,போரில் அவர் நடு நிலை வகிக்கவில்லை என தெற்காசியா விவகாரங்களுக்கான அமெரிக்க அயலுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் ஓ பிளேக், தங்கள் நாட்டு அரசு தலைமைக்கு அனுப்பிய தகவலில் குறிப்பிட்டிருந்ததை கைப்பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. 

இதன் மூலம் நாராயணன் எந்த மாதிரியானவர் என்பதை புரிந்துகொள்ளலாம்.
இப்படி நாராயணன்கள், சிவசங்கர மேனன்களின் துணையோடு,இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை நடத்திய இந்திய காங்கிரஸ் அரசு,இந்திய தமிழர்களுக்காவது உண்மையானதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.அவ்வப்போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொன்று வீசும்போதெல்லாம்,கள்ள மவுனம் கடைபிடிப்பதே வாடிக்கையாகிவிட்டது.
 

அண்மையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இனிமேல் தமிழக மீனவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.
 
ஆனால் அடுத்த சில தினங்களிலேயே உலக கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்றுபோனதை பொறுத்துக் கொள்ள முடியாமல், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை மிகக் கொடூரமாக கொன்று வீசினர் இலங்கை கடற்படையினர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்தபோது அவ்வளவு வீராவேசமாக முழங்கிய சோனியாவிடமும், தற்போது அதே கள்ள மவுனம் - தேர்தல்தான் முடிந்துவிட்டதே!

இதையும் மீறி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று அழுத்தம் அதிகமானால் "இனி இதுபோல் நடக்காது: விசாரணை நடத்துகிறோம், வருத்தமளிக்கிறது, கவலை அளிக்கிறது..." என்றெல்லாம்தான் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகமும், அதன் அமைச்சரும் கூறுவார்களே தவிர, தவறியும் அவர்கள் வாயிலிருந்து கண்டனம் என்ற வார்த்தையோ அல்லது எச்சரிக்கை என்ற வார்த்தையோ வந்துவிடாது.


அதுவே ஆஸ்ட்ரேலியாவில் ஒரு வட நாட்டு இந்தியர் தாக்கப்பட்டாலோ, அல்லது அமெரிக்காவில் ஒரு சீக்கியர் அவமதிக்கப்பட்டாலோ சிலிர்த்துக்கொண்டு எழும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், ஒரு சுண்டைக்காய் நாட்டு கடற்படையினரால் கொல்லப்படுவது தமிழன் என்றால் எளக்காரமாகவும், ஏளனமாகவும் நடந்துகொள்ளும்.

இப்படியான ஒரு நிலையில்தான், இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமாகி அதனை ஐ.நா. நிபுணர் குழுவும் ஒப்புக்கொண்டுள்ள சூழ்நிலையில், அது குறித்து இன்னமுமஅதே கள்ள மவுனத்தை கடைபிடித்துக் கொண்டே, சர்வதேசத்திடமிருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கான கமுக்கமான வேலைகளை தொடங்கியுள்ளது காங்கிரஸ் அரசு.
 

இலங்கை மீதான போர்க் குற்றத்திற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமானால், முதலில் அதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க வேண்டும்.ஆனால் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு, ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே உறுதிபடுத்தியுள்ளார்.


ஆனால் இப்போதும் அதே கள்ள மவுனம்தான் இந்திய காங்கிரஸ் அரசிடம். என்ன செய்யப்போகிறது தமிழகம்? 
செய்தி உதவி வெப்துனியா.

இ‌ப்படி‌த்தா‌ன் ‌சில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நிலைமை !!!




கணவ‌ன் : கல்யாணமபண்ணிக்கறதுக்கமுன்னாடி சொர்க்கம், நரகமமேலெல்லாமநம்பிக்கை ‌கிடையாத

மனை‌வி : இப்ப?

கணவ‌ன் : நரகத்தை‌தா‌னபார்த்துட்டே‌்.. சொ‌ர்க‌த்இ‌னிமதா‌னதேடணு‌ம். 

***********************************************************************************

எ‌ன்ன‌ங்ந‌ம்குடு‌ம்ப‌த்து‌க்காநா‌னநாயஉழை‌க்‌கிறே‌ன்‌னஅடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌மஅது‌க்கஎ‌ன்இ‌ப்போ?

இ‌ல்ந‌ம்ம ‌‌வீ‌ட்டவாச‌ல்நா‌யவ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கஅதா‌னகே‌ட்டே‌ன்.

***********************************************************************************

நா‌னசெ‌த்து‌ட்டா ‌எ‌ன்ன‌பப‌ண்ணுவ?

நீ‌ங்செ‌த்த ‌பிறகஎன‌க்கஎ‌ன்ன‌ங்வா‌ழ்‌க்கை.. நானு‌மசெ‌த்து‌பபோ‌ய்டுவே‌ன்.

ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ரசொ‌ன்னதச‌ரியா‌த்தா‌னஇரு‌க்கு.

எ‌‌ன்ன‌ங்சொ‌ன்னாரு?

செ‌த்தாலு‌மச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.

***********************************************************************************


காதல‌ன் : உ‌ன்ன அழகா பட‌ச்ச இறைவ‌ன் அதே சமய‌ம் மு‌ட்டாளாவு‌ம் படை‌ச்‌சி‌ட்டானே...

காத‌லி : ஆமா‌ம்.. ‌நீ‌ங்க சொ‌ல்றது உ‌ண்மைதா‌ன்.

காதல‌ன் : ‌நீயே அத ஒ‌த்து‌க்‌‌ கொ‌ள்‌கிறாயா?

காத‌லி : ஆமா‌ம், நா‌ன் அழகா இரு‌ந்ததால தா‌ன் ‌‌நீ‌ங்க எ‌ன்ன காத‌லி‌ச்‌‌சீ‌ங்க.. நா‌ன் மு‌ட்டாள இரு‌ந்ததாலதா‌ன் உ‌ங்கள நா‌ன் காத‌லி‌ச்சே‌ன். 

***********************************************************************************

திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.

மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?

***********************************************************************************

நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.

நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.

***********************************************************************************

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..
ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

************************************************************************************

4/29/2011

முகம் பார்க்காமல் வளர்ந்த காதல்: சந்திப்புக்கு பின் காதலன் தற்கொலை

 
னிமையான குரலுக்குச் சொந்தமான காதலி, வசீகரமான தோற்றுத்துடன் இல்லாததால் மனமுடைந்து காதலன் தற்கொலை கொண்டார். நிழலுக்கும், நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் சினிமா மோகத்தால் சீரழியும் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். இப்படித்தான் சினிமா பாணியில் கோவையில் முகம் பார்க்காமல், மொபைல் போன் மூலம் காதலை வளர்த்த காதலன், சந்திப்புக்கு பின், திடீரென தற்கொலை செய்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோடு, நேதாஜி நகரில் வசித்தவர் நடராஜன் (24); இப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு, போத்தனூரை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். போனில் பேசிய அவர் வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அவருடன் பேச வேண்டும் என கூறியுள்ளார். எதிர்முனையில் பேசிய நடராஜ் சாரி நீங்கள் தொடர்பு கொண்டது ராங் நம்பர் என்றார். ஆனால் சில நாட்களில் ராங் நம்பர் நபர் நண்பரானார்.
 
இருவரும் தொடர்ந்து போனில் நட்பை வளர்த்தனர். காலப்போக்கில் நட்பு காதலானது. ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதலை வளர்த்துக் கொண்டனர். காதலில் விழுந்த இருவரும் நேரில் பார்க்க வேண்டும் என திட்டம் தீட்டினர். நான்கு நாட்களுக்கு முன், நேரில் சந்திக்கக்கூடிய இடத்தை தேர்வு செய்து சந்தித்தனர். அழகிய குரலில் அசத்திய காதலி அழகில் மயக்குவாள் என்ற எதிர்பார்ப்புடன் குறித்த நேரத்தில் அங்கு வந்தார் நடராஜ். ஆனால் காதலி தான் எதிர்பார்த்தது போல இல்லை என்று நொந்து போன நடராஜ் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்தார்.
 
அந்தப் பெண்ணின் மீது  நடராஜூக்கு காதல் கசந்தது. போன் அழைப்பை ஏற்க மறுத்தார். தனது சகாக்களிடம் குரலை கேட்டு ஏமாந்து விட்டதாக பலமுறை புலம்பியும் உள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு, பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். நடராஜின் தந்தை சந்திரபோஸ், அரசு மருத்துவமனையில் அடையாளம் காண்பித்து, சடலத்தை பெற்றுச் சென்றார்.
 
சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்ததில், “முகம் பார்க்காமல் காதலித்தோம்; இப்படி ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க...?
 
உதவி கிங்தமில்.

காதல், கல்யாணம், கத்தரிக்காய் ...


ஒரு  நண்பன்  மற்றொரு நண்பனிடம் கேட்டான்  காதல் என்றால் என்னவென்று?

அதற்கு அந்த நண்பன் , உனது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அங்கு சோளம் விளைந்திருக்கும் வயலில் சென்று இருப்பதிலேயே மிகப்பெரிய சோளத்தை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு விதிமுறை உள்ளது.

நீ கடந்து விட்டப் பகுதிக்கு திரும்பி வந்து சோளத்தை எடுக்கக் கூடாது. ஒரு முறை கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். முன்னோக்கிச் செல்லலாமேத் தவிர மீண்டும் பின்னோக்கு வந்து சோளத்தை எடுக்கக் கூடாது.

அதன்படியே அந்த நண்பரும்  சோளம் விளைந்திருக்கும் வயலுக்குச் சென்றான்.

முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான்.

ஆனால் உள்ளே பாதி வயல் வரை தேடிவிட்டான். அவன் கண்ட எந்த சோளமும் முதலில் கண்ட சோளத்தைவிட பெரிதாக இருக்கவில்லை. முதலில் கண்ட சோளம்தான் பெரியது. அதைவிட பெரியது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த அவன் வெறுங்கையுடன்  திரும்பினான்.

அப்போது நண்பர்  கூறினார். காதலும் இதுபோலத்தான். ஒருவரைப் பார்த்ததும் பிடித்து விடும். ஆனால் இதை விடச் சிறந்தவர் கிடைப்பார் என்ற எண்ணத்துடன் நீங்கள் போய்க் கொண்டே இருந்தால் கடைசியாகத்தான் உணர்வீர்கள் உங்களுக்கானவரை ஏற்கனவே நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை.

அந்த நண்பன்  மீண்டும் கேட்டான் கல்யாணம் என்றால் என்ன?

அதற்கு அந்த நண்பர் , இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன் நீ அங்குள்ள கம்பு வயலுக்குச் சென்று அதே போல் பெரிய கம்பு ஒன்று எடுத்துவா. பழைய விதிமுறையே இதற்கும் பொருந்தும். முன்னோக்கி மட்டுமேச் செல்ல வேண்டும்.

அந்த நண்பன்  கம்பு வயலுக்குச் சென்றான். இம்முறை  அதிக கவனத்துடன் நடந்து கொண்டான். கடந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

வயலுக்குச் சென்று அவனுக்கு பெரிது என்று பட்ட ஒரு நடுத்தரமான கம்பை மிகவும் திருப்தியுடன் எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தான்.

இந்த முறை நீ வெற்றியுடன் வந்துள்ளாய். நீ பார்த்த ஒன்றே உனக்கு பெரிதாக தெரிந்தது. இதுவே நமக்கு சரி என்று அதனை தேர்வு செய்து கொண்டு திருப்தியோடு வந்திருக்கிறாய். இதுவே கல்யாணம் என்று நண்பர்  பதிலளித்தார்.

4/28/2011

40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிப்பு: ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இலங்கை மந்திரி திமிர் பேச்சு


இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு அங்கு போர் குற்றம் நடந்ததாகவும், 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் தனது அறிக்கையில் கூறி உள்ளது.

இதனால் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதிகள் சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் ஐ.நா. குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்த அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம் என்றும் இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறினார்.       

ஐ.நா. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். இது சட்டவிரோதமானது. விசாரணை செய்ய அவருக்கு அனுமதி வழங்கியவர் யார்? இலங்கையில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துமாறு அதிகாரப்பூர்வமாக கோரியவர் யார்? இலங்கை ஜனாதிபதியோ, மக்களோ, வேறு நிறுவனங்களோ விசாரணை நடத்துமாறு கோரவில்லை.

தன்னிச்சையாக நடவடிக்கையை எடுப்பதற்கு பான் கீ மூனுக்கு உரிமை இல்லை. இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். ஐ.நா. நிபுணர் குழு என்று இதனைப் பலர் குறிப்பிடுகின்றனர். இது நிபுணர் குழுவல்ல. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு. பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு ஆரம்பம் முதலே அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

இந்த குழுவுடன் நாம் எந்தவொரு நடவடிக்கையையும் ஒரு போதும் மேற்கொள்ள வில்லை.   இவர்கள் இலங்கைக்கு வரவில்லை. சானல் 4 காட்சிகளையும் இலங்கையில் உள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளரான கோர்டன் வைஸ் தெரிவித்த கருத்துக்களையுமே அவர்கள் சாட்சியங்களாக பதிவு செய்துள்ளனர். கோர்டன் வைஸ் இலங்கையில் இருந்தபோது தாம் வடக்குக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாயின் அவரின் சாட்சியங்கள் உண்மையென ஏற்றுக் கொள்வது எப்படி? இவ்வாறான அறிக்கை ஒன்றை நாடொன்று நிராகரித்த பின்னர் சர்வதேச அமைப்புகள் அதாவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, அல்லது மனித உரிமை பேரவை போன்றன விசாரணையில் ஈடுபடாது.

அவ்வாறு ஈடுபடும் சம்பிரதாயமும் கிடையாது.   அவ்வாறு அந்த நிறுவனங்கள் கோரும் பட்சத்தில் மாத்திரமே பான் கீ மூனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை கிடப்பிலே போட்டு முடிக்க வேண்டியதுதான் மிச்சம். அரசாங்கம் என்ற ரீதியில் இதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனவே அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது வரும். இவ்வாறு இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறியுள்ளார்.
உதவி   - நக்கீரன். 
 

காதல் தானா... இது காதல் தானா...?


டிஸ்கி: இது ஒரு ஜாலியான பதிவு. 
மொக்கப் பதிவை பிடிக்காதவர்கள்  இப்படியே எஸ்கேப் ஆயிடுங்க...
 
து டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.

காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.

பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம். 

காதல்  பற்றி நீங்களும் சொல்லுங்களேன்...

4/27/2011

இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.


திர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும்போது கடைபிடிக்கும் அதே கள்ளமவுனத்தை கடைபிடித்தபடியே, தற்போது இலங்கையை போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக கமுக்கமாக களமிறங்கி உள்ளது.


இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். 

இலங்கை இராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணைபோன மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தற்போது போர்க் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள ராஜபக்சவை காப்பாற்ற முட்டுக்கொடுக்க தொடங்கி இருப்பது, தமிழர்களுக்கு இழைக்கும் பச்சை துரோகம் என இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தமிழக தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.


அதே சமயம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இங்கே மற்றொன்றையும் குறிப்பிடுகிறார்கள்.

"
போர்க் குற்றத்திற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால்,ஆயுத உதவி மட்டுமல்லாது போர் வியூகம் அமைத்து கொடுத்தது வரையிலான இந்திய அரசு அளித்த உதவியை இலங்கை காட்டிக்கொடுக்கும்.


அது மட்டுமல்லாது,கிளிநொச்சி வீழ்ந்தவுடன் போரை நிறுத்தி புலிகளை நிர்ப்பந்தத்தின் மூலம் சரணடைய செய்யவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு வரவோ செய்யலாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.ஆனாலும் அப்பாவி தமிழர்கள் உயிர் இழந்தாலும் பரவாயில்லை; போரை தொடர்ந்து நடத்தி புலிகளை முற்றாக அழித்தொழிக்குமாறு இந்தியாதான் கூறியது.
 

எனவே போரில் பொதுமக்கள் பலியானதற்கு இந்தியாதான் காரணம் என்று கூறி காட்டிக்கொடுக்கவும் இலங்கை தயங்காது என்பதால்தான், இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

இலங்கையில் இறுதி கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட நம்  இரத்த  சொந்தங்களின் புகைப்படங்கள் தற்போது இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளிவந்துள்ளது. 











இராத்திரி நேர கனவுகளின் இம்சைகள்


னவுகள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங்களுக்கு பிடித்தமானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப் பற்றிய கனவுகள், தம்பதிகளுக்கு தங்களது பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதையெல்லாம் மீறி, உறக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தர‌ப்படு‌கி‌ன்றன.

அதாவது மனிதனின் மூளையில் பதிவாகியிருக்கும் விஷயங்கள்தான் அவ்வப்போது அவனது உறக்கத்தில் வரும் கனவாகிறது என்கிறது அறிவியல்.

ஒ‌வ்வொரு கனவு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பல‌ன் இரு‌க்‌கிறது. அதுவு‌ம் எந்தெந்த நேரத்தில் எந்த மாதிரியான கனவு கண்டாலும் அதற்கான ஒரு பலன் இருக்கிறது என்கிறது சாஸ்திரம்.

நள்ளிரவில் காணும் கனவு ஓராண்டுக்குள் பலிக்கும், விடியல் நேரத்தில் காணும் கனவு உடனே பலிக்கும், பகல் கனவு பலிக்காது என்றெல்லாம் வீட்டில் பெரியவர்கள் கூறிக் கேட்டிருக்கிறோம்.

கனவில் விலங்குகளைப் பார்த்தால், தெய்வங்களைப் பார்த்தால், திருமணம் நடந்தால் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும் என்பதையும் பு‌த்தக‌ங்க‌ளி‌ல் படித்துள்ளோம்.

பொதுவாக கனவுகள் கருப்பு - வெள்ளைகளாகத்தான் இருக்கும்.

கண் பார்வை குறைபாடு இருப்பவர்களின் கனவுகளில் உருவங்கள் இருக்காது. அவர்களது கனவில் பேச்சுக் குரல் மட்டுமே இருக்கும்.

‌ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை.

கடைசியாக தூங்கச் செல்வதற்கு முன்பு நாம் எண்ணும் எண்ணங்கள் தான் பல சமயங்களில் கனவுகளாக வருகின்றன.

நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை மனக் கண்ணில் பார்ப்பதே கனவு எனப்படுகிறது.

நாம் காணும் அனைத்து கனவுகளும் நமது நினைவில் நிற்பதில்லை.

புதிதாக நாம் செல்லும் ஓரிடத்தை ஏற்கனவே பார்த்ததுபோன்ற ஒரு எண்ணம் தோன்றும். அது கனவி‌ல் க‌ண்ட இடமாகவு‌ம் இருக்கலாம்.

ஒருவர் இறந்துப்போவது போன்று கனவு கண்டால் அவருக்கு ஆயுள் கெட்டி என்று எண்ணிக் கொள்ளலாம்.

உறங்கச் செல்வதற்கு முன்பு இனிமையான நிகழ்வுகளை அசைபோட்டபடி கடவுளை வணங்கிவிட்டு உறங்கச் செல்வதன் மூலம் இனிமையான கனவுகளை காணலாம்.

மன‌தி‌ற்கு‌ப் ‌பிடி‌த்தமான மெ‌ன்மையான பாட‌ல்களை‌க் கே‌ட்டபடியு‌ம் உற‌ங்க‌ச் செ‌ல்லலா‌ம். ந‌ல்ல உ‌ற‌க்கமு‌ம் வரு‌ம். அ‌தி‌ல் அருமையான கனவுகளு‌ம் வரு‌ம்.

இதுபோன்று கனவைப் பற்றி சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் நீங்கள் படித்துமுடித்து உறங்கிவிட்டால் யார் பொறுப்பு. அதற்காக இத்துடன் முடித்து விடுகிறேன்.

கனவுகள் பற்றி நீங்கள் அறிந்த தகவல்களை அளிக்கலாம்.

4/26/2011

உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..

ல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாணவர்கள் தேர்வுப் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி படித்திருந்தாலும், எந்த மாணவருக்கும் தோல்வி ஏற்படுவது சகஜம்தான். ஒரு சில மாணவர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட போய்விடுவதுண்டு. இதற்கு மாணவர்களது பெற்றோரும் கூட ஒரு காரணமாக அமைந்துவிடுவார்கள்.


ஆனால், எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல.. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்பதை எடுத்துக் கூற பல வரலாறுகள் உள்ளன.


இந்தியாவின் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தி, வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றிருந்தால், ஒரு பத்து பேருக்கு தெரிந்த வழக்கறிஞராக மட்டுமே இருந்திருப்பார். ஆனால், வெள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கைப் பயணம் தடம் மாறியது. அதனால் அவர் அடைந்தது மகாத்மா என்ற பெருமையை.



இதேப்போல, எத்தனையோ பேர், தாங்கள் அடைந்த சிறு தோல்வியால் பயணம் மாறி பெரிய லட்சியங்களை அடைந்துள்ளனர்.


ஸ்பெயினைச் சேர்ந்த ஜுலியோ என்ற இளைஞன் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அதீத பயிற்சியில் ஈடுபட்டு, ரியல் மேட்ரிட் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் அணியின் சிறந்த கோல் கீப்பராக வருவார் என்று எல்லோரும் எண்ணினார்.


ஒரு நாள் கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜுலியோவிற்கு நடப்பதே கடினமானது. 18 மாத மருத்துவமனை வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த ஜுலியோ, தனது வாழ்க்கைப் பயணம் இப்படி இருண்டு விட்டதே என்று எண்ணி கண்ணீர் விட்டார். கண்ணீரை பேனாவில் மையாக ஊற்றி பாடல்கள் எழுதினார். இதனை கிட்டாரில் தானே வாசித்து பாடவும் செய்தார்.


பின்னாளில், இசை வரலாற்றில் ஜுலியோ இக்லேசியஸ், சிறந்த பத்து பாடகர்களில் ஒருவராக இடம்பெற்றார். 300 ஆல்பங்களை வெளியிட்டு, ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.


அந்த கார் விபத்து அவருக்கு நேரிட்டிருக்காவிடில், ஜுலியோ இக்லேசியஸ் வெறும் 100 பேருக்கு தெரிந்த ஒரு கோல் கீப்பராக இருந்திருப்பார். ஆனால் தற்போது உலகமே அறிந்த பாடகராக இருக்கிறார்.


நமக்கு ஒரு கதவு மூடப்பட்டால், நம்மருகே மற்றொரு கதவு திறந்திருக்கிறது என்று அர்த்தம். ஆனால், பலரும், மூடியே கதவருகே அமர்ந்து அழத்தான் செய்கிறார்களேத் தவிர, திறந்திருக்கும் கதவை கவனிப்பதே இல்லை.


ஒரு தோல்வி தந்த அனுபவத்தைக் கொண்டு, நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நாம் அதிகம் விரும்பும் ஒன்றை நாம் இழப்பதற்குக் காரணம், நம்மை அதிகம் விரும்பும் ஒன்று நமக்காக காத்திருக்கிறது என்பதால்தான்.


தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள். தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது. உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும்.


உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும்.


பாலிடெக்னில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்தான் ஐன்ஸ்டீன். அவர் விஞ்ஞானியாகவில்லையா. தோல்வி அடைந்துவிட்டோம். நமக்கு எதுவும் தெரியாது என்று அவர் நினைத்திருந்தால் நமக்கு ஐன்ஸ்டீன் என்ற ஒரு நபர் தெரியாமலேப் போய் இருப்பார் அல்லவா?


கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார் ஒரு இளைஞர். ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததன் மூலமாக அந்த கனவு தகர்ந்தது.


தோல்வியில் துவளாமல், அடுத்து எம்.எஸ்சி., முதுநிலை முடித்து ஐடி துறையில் சேர்ந்தார். ஐடி துறையில் தனது திறமையின் மூலம் மிக உயரிய இடத்தை அடைந்தார். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்போசிஸ் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்தான். ஒருவேளை கிரிஸ், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடையாமல் போயிருந்தால், தற்போது கேரளாவின் ஒரு குக் கிராமத்தில், மூக்கொழுகும் குழந்தைக்கு மருந்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார். தோல்வியின் காரணமாக உலகமறிந்த சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவராகியுள்ளார். (உதவி  தினமலர்)


எனவே, மாணவர்களே, தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற பழமொழி பொய்யல்ல. ஒரு வெற்றியை பெற்றவர்கள், அந்த படிகட்டிலேயே அமர்ந்துவிடுவார்கள். தோல்வியினால், அடுத்தடுத்த படிகட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள்தான் அதிகமாக ஜெயிக்கிறார்கள்.


எந்த தோல்வியும், நிரந்தரமல்ல. ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள். நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும்.


தோல்வியைக் கண்டு துவளாதீர்கள்.

4/24/2011

தமிழக மீனவர் உயிரை விட சிறிலங்க அரசின் நட்பு பெரியது - இந்திய அரசு !


இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், “மீனவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.


4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல் யாழ்ப்பாணத்தில் (நெடுந்தீவில்) கரை ஒதுங்கியுள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவிற்காக காத்திருக்கிறோம். இதுவரை போதிய தகவல்கள் கிடைக்கவில்லை, மேற்கொண்டு தகவல்கள் கிடைக்குமா என்பதை அறிய தமிழக அரசின் தலைமை செயலருடன் பேசியுள்ளேன். அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றும் நிருபமா ராவ் கூறியுள்ளார்.


நிருபமா ராவின் வார்த்தைகளை தொலைக்காட்சியில் பார்த்தவர்களும், நாளிதழ்களில் படிப்பவர்களும் அவர் மிக அக்கறையுடன் பேசுகிறார் என்றே முடிவு செய்வார்கள். ஆனால், அவருடைய வார்த்தைகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே, எவ்வளவு லாவகமாக அவர் பிரச்சனையை இழுத்தடிக்கும் உத்தியை கையாள்கிறார் என்பது புரியும்.


இராமேஸ்வரம் மீனவர்கள் காணாமல் போனது குறித்து புகார் செய்யப்பட்டபோது, அவர்களைத் தேட மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை. அவர்களில் ஒரு மீனவர் உடல் 4 நாட்ளுக்குப் பிறகு இலங்கையை அடுத்த நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த உடலில் வெளியிலும் உட்பகுதியிலும் காயங்கள் இருந்தன. விக்டர்ஸ் என்ற அந்த மீனவர் சித்தரவதை செய்து கொல்லப்பட்டார் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது. 

அதன் பிறகு கரை ஒதுங்கிய மீனவர்கள் உடல்களிலும் காயங்கள் இருந்தன. ஒரு மீனவரின் ஒரு கை துண்டிக்கப்பட்டிருந்தது. ஆக, அவர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அப்படமாக தெரிகிறது. ஆனால், நிருபமா என்ன கூறுகிறார் என்று பாருங்கள்; “4 மீனவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்ல” என்று கூறுகிறார். 

டெட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார், கில்ட் என்றே சொல்லியிருக்க வேண்டும். அதற்கான ஐயத்திடகிடமற்ற ஆதாரங்கள் கரை ஒதுங்கிய உடல்களில் இருந்தது. ஆனால், டெட் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். டெட் என்றால்தான் துரதிருஷ்டவசமானது என்ற வார்த்தை பொருந்தும், சித்தரவதை என்றால் அந்த வார்த்தை பொருந்ததாது அல்லவா? 


இது ஒரு துருதிருஷ்டவசமான சம்பவம் அல்ல, மாறாக, திட்டமிட்ட படுகொலை. இதையே ஒப்புக்கொள்ளாமல் வார்த்தைகளால் மறைக்கிறது டெல்லி!


இந்த மீனவர்கள் 4 பேரும் கொல்லப்பட்டது இலங்கை கடற்பகுதியில் என்பது மீனவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சிறிலங்க அரசிடம் விளக்கம் கேட்போம் என்று... 

அந்நாட்டரசை பொறுப்பாக்க நிருபமா முன்வரவில்லை. மாறாக, தமிழக அரசிடமிருந்து அறிக்கை வரட்டும் என்கிறார்.


இப்படித்தான் ஒவ்வொரு முறையும் செய்கிறார்கள். சிறிலங்க கடற்படை சுட்டுக்கொன்றது என்று மீனவர்கள் கூறினால், அந்தப் பகுதியில் அந்த நேரத்தில் சிறிலங்க கடற்படை படகுகளோ அல்லது கப்பல்களோ செல்லவில்லை என்றுதான் ஒவ்வொரு முறையும் சிறிலங்க அரசு கூறுகிறது. பிறகு, அந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து புலனாய்வு செய்யப்படும் என்று சிறிலங்க அரசு இந்தியாவிற்குத் தெரிவிக்கும். அதை இந்தியாவும் ஏற்றுக்கொள்ளும். அத்தோடு முடிந்தது. அதற்குப் பிறகு மற்றொரு மீனவர் கொல்லப்படுவார், அதற்கு இதே வியாக்யானம் சொல்லப்படும். இந்த அரசின் அயலுறவுச் செயலரும் புன்னகை பூத்த முகத்துடன் அதனை ஏற்றுக்கொள்வார்.


கழுத்தில் சுறுக்குப்போட்டு, கடல் நீரில் இழுத்து ஜெயக்குமார் என்ற மீனவரை சிறிலங்க கடற்படையினர் கொன்றார்களே, அதற்கு இதுநாள்வரை சிறிலங்க அரசு விளக்கம் ஏதும் தந்துள்ளதா? அதற்கு முன்னர் வீரபாண்டியன் என்ற மீனவர் கொல்லப்பட்டாரே அதற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்துக் கூறினார்களா?


எந்த விளக்கமும் தரப்படவில்லை. ஒருமுறை கூட, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சிறிலங்க அரசு பொறுப்பேற்கவில்லை. இந்திய அரசும் அதனை ஏன் என்று கேட்கவில்லை. ஜெயக்குமார் 

கொல்லப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பினால் கொழும்பு சென்ற நிருபமா, அந்நாட்டு அயலுறவு செயலருடன் இணைந்து விடுத்த கூட்டறிக்கையில் கூட ‘அது குறித்து விசாரிக்கப்படும்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே ஒருபோதும் சிறிலங்க அரசு பொறுப்பேற்கவில்லை. இந்தியாவும் வற்புறுத்தவில்லை. அதனால்தான் மீனவர்கள் படுகொலை தொடர்கதையாகிறது. 


தங்கள் கண் முன்னால் சக மீனவர்கள் சுடப்படுவதை பார்த்துவிட்டு, கரை திரும்பிய மீனவர்கள் புகார் மனு அளித்தபோதே கண்டுகொள்ளாத டெல்லி, ஒரு படகில் சென்ற 4 மீனவர்களும் சாட்சிகளின்றி கொல்லப்பட்டதற்கா விளக்கம் கேட்கப்போகிறது?


செத்த மீனவரின் குடும்பத்திற்கு ‘உடனடியா’ ரூ.5 இலட்சம் கொடுத்து தனது மனிதாபிமானப் பணியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் முடித்துக்கொள்கிறார். அந்தச் ‘சம்பவம்’ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று சொல்வதுடன் மத்திய அரசின் பொறுப்பு முடிந்துவிடுகிறது. மீனவர் படுகொலை மட்டும் தொடர்கதையாகத் தொடர்கிறது. 


ஏனென்றால், தமிழ் மீனவனின் உயிரை விட இந்திய அரசுக்கு சிறிலங்க அரசின் நட்பு பெரியது. 

4/23/2011

ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!



புருஷன்: டாக்டர்...என் பொண்டாட்டி அவசரத்துல "பெப்சி"ன்னு நினைச்சிட்டு "பெப்சி" பாட்டில்ல இருந்த "பெட்ரோல" குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர்?

டாக்டர்: ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போய்டும்..


புருஷன்: ?????????????????

****************************************
டீச்சர்: டாய். நான் இங்க நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், கடைசி பென்ச்ல உக்காந்து இருந்த மனோ எங்கடா காணோம்?
மாணவன்: உங்களுக்கு தான் பொறை பிஸ்கட் வாங்க போயிருக்கான் டீச்சர்..
டீச்சர்: ????????????

*****************************************
அப்பா அழுது கொண்டிருக்கும் மகனிடம் கேட்கிறார்..
அப்பா: ஏன்டா அழுதுட்டு இருக்கே?மகன்: அம்மா அடிசிட்டாங்கப்பா...


அப்பா: அதுக்கு போய்யா அழுவற...
மகன்: போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..
அப்பா: ????????????

****************************************
பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...

****************************************
எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...
எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...
"ஒங்கையால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?"

***************************************
பள்ளிகூடத்துல வாத்தியாரும் குறும்புக்கார மாணவனும்...

வாத்தியார்: ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்: 4
வாத்தியார்: Total?
மாணவன்: 5
வாத்தியார்: Stupid
மாணவன்: 6
வாத்தியார்: What
மாணவன்: 4வாத்தியார்: Nonsense
மாணவன்: 8

வாத்தியார்: ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்: அது..

********************************************
ஆர்யா: 24 மணி நேரமும் நான் டிவி பார்க்கணும், வருஷம் முழுக்க பாக்கணும், ஒரு நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்..

சந்தானம்: அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்..

********************************************
பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலை புரியவைக்கலாம், உதாரணமாக...

நியுட்டன் தன்னோட மூன்று
 விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
"An object continue to moves, unless it's stopped"

நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..

"F = M A"

சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது. உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..

"Every action has equal and opposite reaction"

*************************************************
தத்துவம்:

தேங்காய்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு..

அதுக்காக தேங்காயில போர் போட முடியாது..


பூமியில ஸ்ட்ரா போட முடியாது...

****************************************************
என்ன மக்கா! நம்ம காமெடி பஜார்ல சரக்கு எப்படி? இங்க மொத்த விலையிலும், சில்லறை விலையிலும் காமெடி கிடைக்கும். ஹி...ஹி...ஹி...

4/22/2011

வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?

 
இ‌வ்வளவு ‌மோசமான உட‌ல்‌நிலை‌யில நகைகளை நிறைய போட்டிருக்கிற மாதிரி உன்ன படம் வரைஞ்சு பெரிசா மாட்டி வச்சிருக்கியே, ஏன்?

எப்படியும் நான் செத்தப்புறம் என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார். அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்க இருக்குன்னு பைத்தியம் கே‌ட்டு எ‌ன் புருஷனா இ‌ம்சை ப‌ண்ணு‌ம்ல! அதுக்குத்தான்!!

 ***********************************************************************************

ஆசிரியர் : உன் பேர் என்ன?
மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார்
ஆசிரியர் : சரி, உன் அ‌ப்பா பேர் என்ன?
மாணவன் : அதான் சொன்னேனே எ‌ன் பே‌ர் தா‌ன் எ‌‌ங்க அ‌ப்பா பேரு‌ம்.

 ***********************************************************************************

ஜக்கு : என்ன உங்க அப்பா உன்னை காலையில போட்டு அடிச்சாரு போலிருக்கே?
மக்கு : ஆமாம், கோழிக்கு தண்ணிவச்சேன்
ஜக்கு : அதுக்கு போயா அடிச்சாரு?
மக்கு : சுடுதண்ணி வைடா, அப்பதான் அது முட்டை போடும்போது அவுச்ச முட்டையா போடும்னு எ‌தி‌ர் ‌வீ‌ட்டு கோபு சொன்னத நம்பி கொ‌தி‌க்க கொ‌தி‌க்க த‌ண்‌‌ணி வ‌ச்சுத்தொலைச்சேன். 

 **********************************************************************************

எ‌ன்னடா சோகமா இரு‌க்க?
இன்னிக்கு என்னோட அதிர்ஷ்டமான எ‌ண் 7‌ன்னு சொ‌ன்னா‌ங்க. அதா‌ன் பேங்க்ல போய் 7,000 ரூபா எடுத்து ரேசுக்கு போனேன். அங்கேயும் 7‌ம் ந‌ம்ப‌ர் குதிரை மேல க‌ட்டின.
எ‌ன்ன ஜெ‌யிச்சுதா?
நீ வேற 7 ஆவதா வந்துச்சு.

 ***********************************************************************************

என் மாப்பிள்ளை, ஆனாலும் ரொம்ப மோசம்
ஏன்?
அவர் மட்டும் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறது போதாதுன்னு அவரோட அப்பாவையும் வீட்டோட சம்பந்தியா கூட்டிக்கிட்டு வந்துட்டாரு.

***********************************************************************************
    

4/21/2011

உனக்குள்ளேயே நீ விலகி நில் - அன்னை



ங்களில் மிகப் பெரும்பாலோர் உங்களுடைய ஜீவனின் மேற்பரப்பிலேயே வாழ்கிறீர்கள். அதனால் புறச் செல்வாக்குகள் உங்களைத் தீண்டுவதற்கு இடமளிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலுக்கு வெளியே வாழ்வதுபோல் அவ்வளவு வெளிப்புறத்தில் வாழ்கிறீர்கள். அவ்வாறு புறத்தில் வாழும் விரும்பத்தகாத இன்னொரு ஜீவனைச் சந்திக்கும்போது கலவரமடைகிறீர்கள். 

 
நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே விலகி நிற்க வேண்டும். உன்னுள்ளேயே ஆழ்ந்து செல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விலகி நின்றாயானால், நீ பத்திரமாயிருப்பாய். வெளி உலகில் இயங்கிக் கொணடிருக்கும் மேலெழுந்தவாரியான சக்திகள் உன்னைப் பயன்படுத்த இடம் கொடாதே. அவசரத்தில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதிருக்கும் போது கூட சிறிது நேரம் விலகி நின்றால் எவ்வளவு குறைந்த நேரத்திலும் அதிக வெற்றிகரமாகவும் உங்களுடைய வேலையைச் செய்ய முடியும் என்பதைக்கண்டு ஆச்சரியப்படுவாய். 


யாராவது உன் மீது கோபப்பட்டால் அவனுடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நில். எந்த ஆதரவோ பதிலோ கிடைக்காததால் அவனுடைய கோபம் மறைந்து போகும், எப்பொழுதும் அமைதியுடன் இரு. அமைதி இழக்கும்படியான சோதனைகளையெல்லாம் எதிர்த்து நில். விலகி நிற்காமல் எதையும் முடிவு செய்யாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் ஒரு வார்த்தையும் பேசாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் செயலில் குதிக்காதே. 

 
சாதாரண உலகைச் சேர்ந்த எல்லாமே நிலையற்றவை, சொற்ப காலத்திற்கே இருப்பவை, ஆகவே கலவரப்படும்படியாக அதில் ஒன்றுமே இல்லை. எது நிலைத்து நிற்பதோ, எது நித்தியமானதோ, எது அமரத்தன்மை கொண்டதோ, எது அனந்தமானதோ அதுவே வென்று பெறுவதற்கு, உடைமையாக்கிக் கொள்வதற்கு, தகுதியுடையதாகும்.


இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருந்து  தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும்.

வாழ்க  வளமுடன்...

4/20/2011

விஜய் - அடங்க மறுக்கும் வதந்திகள்


சட்டப்படி குற்றம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பெரும் அரசியல் நிகழ்வாக மாற்ற எஸ்.ஏ.சந்திரசேகரன் எடுத்த முயற்சிகள் பெரும் தோல்வியில் முடிந்தது. குறிப்பாக ஜெயலலிதாவை விழாவுக்கு அழைக்க வேண்டும் என்ற அவரது ஆசை முற்றிலுமாக நிராக‌ரிக்கப்பட்டது.


இந்த அக்கப்போரை சிலர் விடுவதாயில்லை. ஜெயலலிதா விஜய்யின் வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என இப்போதே கரடிவிட ஆரம்பித்துள்ளனர்.


வேலாயுதம் படத்தை தயா‌ரித்திருக்கும் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் அரசியலின் நிழல்கூட தன் மீது படக்கூடாது என்பதில் கண்டிப்பானவர். அப்படியிருக்க விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என எப்படி இவர்களால் புரளி கிளப்ப முடிகிறது என்பதுதான் ஆச்ச‌ரியமான கேள்வி. 

டிஸ்கி:  எப்ப எல்லாம் ப்ளாக் நோண்டியடிக்குதோ அப்ப எல்லாம் நம்ம டாக்குடர்  கை கொடுப்பார்னு ராமசாமி சொல்லியிருக்காருல்ல !!!