Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

5/26/2011

10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி அறிவு சாதனை



இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.

அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். 

ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.

தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.


டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.

5/25/2011

முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு வேண்டுகோள்!!!


முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசிடம், நாம்  நிறையவே எதிர்பார்க்கிரோம் .

மணல் கொள்ளை, குவாரி கொள்ளை, கல்லூரி கொள்ளை, கான்ட்ராக்ட் கொள்ளை எல்லாவற்றையும், விஞ்ஞான ரீதியான நெட்-ஒர்க்காக மாற்றிவிட்டது முந்தைய  அரசு. 

இதை எல்லாம் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது; மாற்ற முடியாது என இறுமாந்திருந்தார் முன்னால் முதல்வர் . "எங்களால் மாற்ற முடியும்' என, தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டனர் மக்கள்.

பல பிரச்னைகள் இருந்தாலும், புதிய அரசு, மின் உற்பத்திக்கு முதலிடம் தர வேண்டும். அது, மக்களின் ரத்த ஓட்டம் போன்றது.

இன்று  மின்சாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது . எனவே நல்ல மின்திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 
இல்லை வேறு ஏதேனும்  வழிகளை கண்டறிய வேண்டும். மின் உற்பத்திக்காக, அ.தி. மு.க., அரசு எதை செய்தாலும், மக்கள் நிச்சயம் ஆதரிப்பர். 

செய்வாரா  முதல்வர்?

5/24/2011

ராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சியினர்.(வீடியோ)

ராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சினர். (வீடியோ).
இந்த  வீடியோவை ஒரு நண்பர் எனக்கு கொடுத்தார் . இதை பார்க்கும் போது எனக்கு பதிவிட வேண்டும்  எனத் தோன்றியது.  எனக்கு கிடைத்த அனுபவம் உங்களுக்கும்...



இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.



***********************************************************************************

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!

முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?

உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.

***********************************************************************************


ஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....


தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்?

ஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் :?!?!
***********************************************************************************

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?


அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?
***********************************************************************************

கணவ‌ன் : எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டி எ‌ன்ன ‌தி‌ட்டி‌ட்டாடா...


ந‌ண்ப‌ன் : ஏ‌ன்

கணவ‌ன் : கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்க‌க் கூட வரலை, போய் உங்க அப்பா‌க்‌கி‌ட்ட க‌த்து‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ண்ணு சொ‌ல்‌லி‌ட்டா...
***********************************************************************************

‌கலா : எ‌லி‌க்கு பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்?


மாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.


கலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம். 

 
***********************************************************************************

ஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி!

மற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொ‌ண்ணு‌ கூட ஓடி‌‌ப்‌பிடி‌ச்‌சி ‌விளையாடறது எ‌ல்லா‌ம் ச‌ரி‌யி‌ல்ல..
***********************************************************************************

புதுமனைவி: நீங்கள் பிரெட்டை டோஸ்ட் செய்து காபி போட்டு விட்டீ‌ர்கள் என்றால், மாலை உணவு தயாரா‌கிவிடும்.


கணவன்: அ‌ப்படியா மாலை உணவு என்ன?

புதுமனை‌வி : டோஸ்டும், காபியும்தான்!

 

 ***********************************************************************************



 

5/23/2011

ரஜினிக்கு ஒரு ரசிகனின் கடிதம்..


தலைவா ..

இது நீங்கள் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப தினமும் கோயிலுக்கு போய் பிராதிக்கும் ஒரு சாதாரண ரசிகனின் கடிதம்.

'ராணா' படத்தின் பூஜை முடித்த அன்று மாலையில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உங்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வதந்திகளாக பரவி வருவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது.

மருத்துவர்கள் உங்களைப் பற்றி தினம் ஒரு அறிக்கை கொடுத்தாலும் என் மனம் நீங்கள் ஒரு முறை மருத்துவ மனை ஜன்னலிலிருந்து கை காட்டினால் போடும் என காத்து கிடக்கிறது  .

உங்களது மனைவி "எனது கணவர் நன்றாக இருக்கிறார். அவருக்கு சின்ன பிரச்னை தான்" என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தாலும், தனுஷ் என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னுடைய மனது ஏனோ ஏற்க மறுக்கிறது.

நீங்கள் இனிமேல் நடிக்காவிட்டாலும் நான் கவலைப்பட போவதில்லை. ஒரு ரசிகனாக உங்கள் படம் ரிலீசாகும் போது முதல் காட்சி பார்த்து விசிலடித்து ரசித்தவன் நான்.

நீங்கள் "நான் நன்றாக இருக்கிறேன்" என்று பேசி வீடியோ எடுத்து டி.வி. சேனல்களில் ஒளிப்பரப்பலாமே. உங்களுங்கு உடம்பு சரியில்லாத நாளில் இருந்து தவிக்கும் என்னை மாதிரி கோடான கோடி ரசிகர்களுக்கு அது போதுமானதாக இருக்குமே!

உங்களுக்கு உடம்பு குணமான பின் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தங்கள் மனைவி கூறி இருக்கிறார். அதற்காகவும் காத்து இருக்கிறேன்.

உங்களுக்கு உடம்பு குணமாகி நீங்கள் 'ராணா' படத்தில் நடித்து அது வெளியாகி, அந்த படத்தில் நீங்கள் வரும் முதல் காட்சியை விசிலடித்து வரவேற்க ஆவலாக காத்திருக்கிறேன் தலைவா..!

நீங்கள் யானை அல்ல குதிரை என்பதைஉணர்த்துங்கள் தலைவா...

5/22/2011

நேர்மையிருந்தால் இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா?


ம் முன்னோர் இயற்கையை வழிபட்டதன் காரணமாக, அதன் பயனை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். ஆனால், அரசியல் பின்னணி கொண்ட சிலர், இயற்கை வளங்களை முடிந்த அளவுக்கு அழித்து வருகின்றனர். 

மிழகத்தில், ஆற்று மணல் கொள்ளை மூலம், ஒரு தரப்பினர், கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். வனங்களை அழித்து, மரங்களை கடத்துவது தொடர்கிறது. இதற்கு சான்றாக, மலைகளையொட்டிய மாவட்ட கிராமங்களில், யானைகள், சிறுத்தைகள் ஊடுருவுகின்றன. வன விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. 

சிட்டுக் குருவி இனமே மாயமாகி விட்டது. விவசாய நிலங்கள், விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுகிறது. பாலித்தீன் பயன்பாடு, டயர்களை எரிப்பது போன்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, மக்களின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகி விட்டது.

ற்கனவே ஆட்சியில் இருந்த போது, மழை நீர் சேமிப்பு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த வழி செய்த முதல்வர் ஜெயலலிதா, இம்முறை, இயற்கையை காப்பாற்ற, சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். 

ணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாற்று வழிமுறைகளை கண்டறிந்து, வனங்களை காத்து, விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயர செய்ய வேண்டும். தென்னக நதிகள் இணைப்பு குறித்து ஆராய வேண்டும். இயற்கையை காப்பதன் மூலம், இனத்தை காப்பாற்ற முடியும். செய்வாரா முதல்வர்?

பாராட்டு மழையில் அவன் இவன்



அவன் இவன் பற்றி வரும் துண்டு துண்டான செய்திகள் எப்போது படத்தைப் பார்ப்போம் என்ற ஆவலை‌த் தூண்டுவதாக உள்ளது. இந்த ஆவல் எல்லாம் நமக்குதான். சிலர் அனுபவித்தேவிட்டார்கள்.

பாலுமகேந்திரா, திருமதி பாலுமகேந்திரா இருவருக்கும் பிறகு விஷாலின் குடும்பத்தினர் அவன் இவனை ரசித்திருக்கிறார்கள். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டுதான் சமீபத்திய சர்ப்ரைஸ்.

அவன் இவனில் விஷாலின் நடிப்பைப் பார்த்து வாயடைத்துப் போனேன். விஷாலால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாராட்டியிருக்கிறார். அத்துடன் ஆர்யா, ‌ஜி.எம்.குமார் ஆகியோரும் ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டை பெற்றிருக்கிறார்கள். சிறிய கதை அதனை பாலா நாம் எதிர்பார்க்காத அளவுக்கு சொல்லியிருக்கிறார் என வியப்புடன் பாலாவும் ஸ்ரேயா ரெட்டியால் பாராட்டப்பட்டிருக்கிறார். 

5/21/2011

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா!?



''திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக வெப் துனியா இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூபாய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேலைக்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?

கனிமொழி கைது - கலைஞர் பரபரப்பு பேட்டி



ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பெற்றது தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரரும், தி.மு.க. தலைவர் கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் கருணாநிதி தனது கருத்தை தெரிவிக்க இருப்பதாகவும், ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் உள்ளே வரும்படியும் அழைப்பு வந்தது.

ஆனால் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வீடியோகிராபர்கள், போட்டோகிராபர்கள், நிருபர்கள் என அனைவரும் உள்ளே நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிட நேர கூச்சலுக்கு பின்னர் கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

அது நீதிமன்ற விவகாரம். நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

காங்கிரசுடன் உங்கள் உறவு தற்போது எப்படியிருக்கிறது?

எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது.

இந்த தீர்ப்பின் காரணமாக காங்கிரசுடன் உங்களுக்குள்ள உறவு பாதிக்குமா? என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள், இதற்காக கட்சிக் கூட்டம் நடைபெறுமா?

தி.மு.க. என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவு எடுக்க முடியாது.

செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டப்போகிறீர்கள்?

தேவைப்படும்போது கூட்டுவோம்.

இந்த தீர்ப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறீர்களா?

சட்டவல்லுநர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்ன முடிவு என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

உடனடியாக டெல்லி போகிறீர்களா?

இப்போது நான் போகவில்லை.

தேர்தலிலே உங்களுக்கு கிடைத்த முடிவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்களும் ஓய்வு கொடுத்தால் நல்லது.

உங்கள் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே, அதன் காரணமாக உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?

உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது.

5/20/2011

மழைக்கும் எனக்குமான உறவு...!




ன்மீது உண்டானது 
காதல்தான் என்று 
எனக்கு
முதலில் உணர்த்தியது 
மழை...!

ன்னுள் கரையும் போது 
என்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...!

ரு மேகங்கள் சூழ 
ஒரு நாள் மழை தோடு முன் 
என் விரல்களை நீ  பற்றினாய் ...!

ம் முதல் ஸ்பரிசத்தை 
மேலும் மகிழ்த்தியது 
மழையின் பகிர்வு...!

நெற்றியில் விழும் 
ஒற்றை முடி விலக்கி 
மெல்ல இதழ் பதித்தாய்
அதுவும் 
ஒரு மழைநாள் மாலைப் பொழுதில் ...!

பின்னொரு நாள் 
கனத்த இதயத்தையும் 
கண்ணீரையும் சேர்த்து 
என் காதலுக்கு கல்லறை 
எழுப்பினாய்
அன்றும் மழை பெய்தது...!

ந்த  மழை
ன் கண்ணீர் விலக்கவா
தன் சோகம் கரைக்கவா 
என்று தெரியவில்லை ...!

ண்மையில்
உன் பிரிவை விடவும்
என்னை வருத்துவது 
நீ தந்த 
மழைக்கும் எனக்குமான உறவு...!


5/19/2011

தனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது




டெல்லியில் 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.நடிகர் தனுஷ் நடித்த ‘’ஆடுகளம்’’ படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 

ஆடுகள‌‌ம் பட‌த்தில் நடி‌த்த நடிக‌ர்  த‌னு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.
‌சிற‌ந்த நடிகை‌க்கான ‌தே‌சிய விருது தெ‌ன்மே‌ற்கு பருவகா‌ற்று பட‌த்‌தி‌ல் நட‌ந்த சர‌ண்யா பொ‌ன்வ‌ண்ணனு‌க்கு ‌‌கிடை‌த்து‌ள்ளது.

ச‌ன் ‌‌பி‌‌க்ச‌ர்‌ஸ் தயா‌ரி‌‌த்த ஆடுகள‌த்தை பட‌த்தை இய‌க்‌‌கிய இய‌க்குன‌ர் வெ‌ற்‌றிமாற‌ன் ‌சிற‌ந்த இய‌க்குனராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். அவரு‌க்கு த‌ங்க‌த்தாமரை ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.

‌சிற‌ந்த ‌திரை‌க்கதை‌க்கான ‌விருது‌ம் வெ‌ற்‌றிமாற‌ன் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

ஆடுகள‌ம் பட‌த்‌தி‌ன் ‌நடன இய‌க்குனரான ‌தினே‌ஷ்குமாரு‌‌க்கு ‌சிற‌ந்த நடன இய‌க்குனரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.

மைனா பட‌த்தில் பட‌த்‌‌தி‌ல் நட‌ந்த த‌ம்‌பி ராமையா ‌சிற‌ந்த துணை நடிகராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இனிது..இனிது...!


றியாமை இனிது 
அனைத்தும் அறிந்த 
அறிவை அறிவெனத்
தேரா மாந்தர் முன் 
அறியாமை இனிது...!

பேசாமை இனிது 
பேசியும் 
சாமான்யன் பேச்சு என்பதால் 
பேதம் காட்டும்
மனிதர்கள் முன்னே 
பேசாமை இனிது...!

செல்லாமை இனிது 
சென்றால் 
பேச்சால், செயலால்
காமத்தை சீண்டிப் பார்க்கும் 
பித்தர் முன்னே 
வேலைக்குக்  கூட
செல்லாமை இனிது ...!

ழுதாமை இனிது 
எழுத்தினால் 
சாதிக்க பல இருந்தும் 
சாமான்யன் எழுத்து 
என்பதினால் 'பூ' என ஒதுக்கும்
வல்லோர் முன்னே 
எழுதாமை இனிது...!

5/18/2011

2011 தமிழக சட்டசபை தேர்தல் உணர்த்தியிருக்கும் பாடம் என்ன?


டந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மவுனமாகவே இருந்து, ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர் தமிழக மக்கள்.

எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை.

ஒரு ரூபாய் அரிசி,
50 ரூபாய் மளிகைப் பொருட்கள்,
பொங்கல் பை,
இரண்டு ஏக்கர் நிலம்,
மகளிர் சுய உதவிக் குழுக்கள்,
இலவச கான்கீரிட் வீடு,
அவசர சிகிச்சைக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவை,
வாரத்திற்கு ஐந்து முட்டைகள்,
இலவச "டிவி'

போன்ற எதுவுமே, ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சியை கரை சேர்க்கவில்லை.

விலைவாசி உயர்வும், நிரந்தர மின்வெட்டும், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமும், விவசாயிகளின் கண்ணீரும், தேர்தல் என்ற ஒரே சுனாமியில், ஆளும் கட்சி சுழற்றி வீசப்பட்டு விட்டது.

அந்த சுனாமியில், கூட்டணியும், ஜாதி ஆதிக்கமும், பணப்பட்டுவாடாவும், அதிகார துஷ்பிரயோகங்களும், உடன்பிறப்புகளின் அராஜகங்களும், இலவச லேப் டாப்புகளும் கூட காணாமல் போனதென்பது தான் உண்மை.

பணத்தைக் கொட்டி, காலேஜ் சீட்டோ, அரசு வேலையோ வேண்டுமானால் வாங்கிவிடலாம்; ஆனால், ஆட்சி அமைக்கும் உரிமையை வாங்கி விட முடியாது என்பதை, அரசியல் கட்சிகள் இனிமேலாவது உணர்ந்து செயல்பட்டால், அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, 2011 தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

5/17/2011

டாப் கியரில் பஸ் ஓட்டும் அட்ராசக்க சிபி செந்தில் குமார்.



கூகிள்  பஸ்ஸில் நம்ம சென்னிமலை சி.பி. செந்தில் குமார்  இன்னைக்கு ஒரு மார்கமா பதிவு போட்டு இருந்தார். அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு..

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
தனது மெயில் ஐ டி பாஸ்வோர்டை கவலையே இல்லாமல் மனைவியிடம் தருபவனுக்கு பர்சனல் மெயில் ஐ டி இன்னொன்று கண்டிப்பாக இருக்கும் #ஜெண்ட்ஸாலஜி

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வரும்.டீச்சர்,அப்போ ஃபிகர்களை ஈஸியா கணக்கு பண்ண வெண்டைக்காய் சாப்பிட்டா போதுமா? #டவுட்டு

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
ஆஃபீஸுக்கு டக் இன் சர்ட் பண்ணி வரும் ஆண்கள் ரிசப்ஷனிஸ்ட்டின் லோ ஹிப் சேலை பார்த்ததும் சர்ட்டை எடுத்து வெளியில் விடுவதேன் #ஆஃபீஸாலஜி

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
குழந்தையுடன் பஸ்ஸில் ஏறும் பெண்ணை கவர நினைக்கும் ஆண் குழந்தை மேல் பாசம் உள்ளவன் போல் நடிக்கிறான் #பஸ்ஸாலஜி

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
ஒரு பெண்ணின் கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பதை அருகில் இருந்து பார்க்கும் பேறு பெற்றவன் இன்சிடெண்ட் கவிஞன் ஆகிறான் #ஜெண்ட்ஸ்ஸாலஜி


சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
16 வயசில் சூப்பர் ஃபிகர்களை காண நேரும் 30 வயசு ஆண் தான் அவசரப்பட்டு பிறந்துட்டமோ என வருத்தப்படுகிறான் #ஜெண்ட்ஸ்ஸாலஜி

கோடைக்கு சுற்றுலா போகலாம் வாங்க ...


ருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்திற்கு வெளியேயும் பல சிறந்த அருவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று திருநெல்வேலி அருகில் பாபநாசம் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள அகத்தியர் அருவி.

மலைகள் சூழ்ந்திருக்க ஒரு அருமையான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த அருவி சிறியதாக இருந்தாலும், குற்றாலத்தைப் போல இந்த அருவியில் விழும் தண்ணிரும் உடல் நலத்திற்கு வலிமை சேர்ப்பதாகும்.

இதனை குடும்ப அருவி என்று கூட அழைக்கலாம். அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர் இதமாக விழுவதால், சிறுவர்களைக் கூட அழைத்துச் சென்று ஆனந்தமாகக் குளிக்கலாம்.




இந்த அருவியின் ஒரு பகுதி நீர் வந்து நிரம்பும் குளம் ஒன்று அருகில் உள்ளது. இதில் மிகவும் வளர்ந்த மீன்கள் நீந்தி விளையாடுவதை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

மாலையில் சென்று பொழுதைக் கழிக்க ஏற்ற இடமிது. அருவியில் சுகமாக நீராட விரும்புவோர் அதிகாலை நேரத்தில் இங்கு சென்று நீராடலாம்.
அகத்தியர் அருவி இருக்குமிடமும் களக்காடு - முண்டன்துறை புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதி என்பதால் இருட்டுவதற்கு முன்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிடுவது பாதுகாப்பானதாகும்.

இந்த அருமையான இடத்தை, ஒரு நடை குடும்பத்தோடு போய் பாத்துவிட்டுதான் வாருங்களேன்..

5/16/2011

முதல்வர் அவர்களுக்கு ஆனந்தி எழுதும் கடிதம் !!



புதிய  முதல்வர் அவர்களே..

நான்  ஆனந்தி ,நலமா ? 
நான் போன முதல்வர் அவர்களுக்கு நிறைய கடிதம் எழுதி  இருக்கிறேன் .. முதன் முதலாக உங்களுக்கு கடிதம் எழுதிகிறேன்.
 
மிழக மக்கள் அளித்த தீர்க்கமான முடிவால் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதாவின் புதிய ஆட்சியில், பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஐந்து விஷயங்களில், இந்த அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அவை: 

1.ஊழலை ஒழித்தல், 
2.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், 
3.நிர்வாகச் சீர்கேடுகளை ஒழுங்குபடுத்துதல், 
4.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல். 
5.அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துதல்.


கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், 
சென்னை மெட்ரோ ரயில் திட்டம், 
சர்வதேசத் தர நூலகம், 
சாலைகள், 
பூங்காக்கள்,
பாலங்களுக்கான திட்டங்கள், கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. 

ரு ரூபாய்க்கு அரிசி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. ஆனால், சென்னையில் 10 தொகுதிகளில் ஒன்றை மட்டுமே வென்று, ஒன்பதை தி.மு.க., இழந்ததைப் பார்க்கும்போது, இவற்றையெல்லாம் மக்கள், அரசின் சாதனைகளாகக் கருதவில்லை. ஓர் அரசின் கடமையாகவே பார்த்தனர் என்பது தெரிகிறது.

விர, அரசு சாதனைகளாகக் கூறிய விஷயத்தின் மறுபக்கத்தையும், மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். (உபயம் - இலவச கலர் "டிவி') எவ்வளவு கோடி ஊழல் நடந்தது. குடும்ப சாதனைகளாகக் கருதவில்லை. ஓர் அரசின் கடமையாகவே பார்த்தனர் என்பது தெரிகிறது.


சாதாரண சைக்கிளில் சென்ற கவுன்சிலர்கள் கூட ஒயிட் சுமோவிலும், ஸ்கார்பியோவிலும் ஆடம்பரமாக செல்லும் வசதி திடீரென எப்படி ஏற்பட்டது. எந்த திட்டங்களில் அவர்கள் பயன் அடைந்தனர் என்று நினைத்தனரே தவிர, அவற்றையெல்லாம் அரசின் சாதனைகளாகக் கருதவில்லை.

புதிதாத முதல்வர் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா, ஊழலை முழுமையாக ஒழிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்காக முந்தைய ஆட்சியில் இருந்தவர்களை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் என்பதில்லை. எத்தனை சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் உடனடியாக தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது என்பது நாம் அறிந்ததே. ஆகவே, அதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இனி தமிழகத்தை எப்படி முதலிடத்தில் கொண்டு வரலாம் என்பதில் கவனம் செலுத்துவதே சிறந்தது.


டந்த ஆட்சியில், ஓய்வு பெற்ற பின்னரும் உயர் அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் இருந்தனர். அவர்களை முழுமையாக இந்த அரசு ஒதுக்கிவிட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நேர்மையான, துடிப்பு மிகுந்த இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும்.

வெள்ளைக்காரர்கள் வகுத்த நிர்வாக நடைமுறையின்படி, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதவியில்லாமல், எந்த அரசியல்வாதியும் பணம் எடுக்க முடியாது. இன்றும் இதுதான் நிலை. உயர் அதிகாரிகள் மட்டத்தில் பொறுப்புணர்வும், கடமையைச் செய்ய வேண்டும் என்ற உணர்வும், தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமும் இருந்தால்தான், திட்டங்கள் சரியாக நடக்கும்.


சுயநலம் பார்க்காத, திறமை உள்ள அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுவர் என்ற நம்பிக்கையும், எதிர்ப்பு வந்தால் அரசால் பாதுகாக்கப்படுவோம் என்ற தைரியமும் இருந்தால், தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் முன்வருவர் என்பதை புதிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.எந்த வேலை என்றாலும், அரசு அதிகாரிகளை பார்த்தால்தான் முடியும் என்ற நிலை தான் ஊழல் அதிகரிக்க காரணம். இந்நிலை மாற வேண்டும். நிர்வாக சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அமல் செய்ய வேண்டும். 

ரு தனி அதிகாரி கையில் அதிகாரங்கள் குவிந்திருக்கக் கூடாது. அனுமதி, அங்கீகாரம் வழங்கும் முறைகள், ஒற்றைச் சாளர முறையில் நடக்க வேண்டும்.நாடு வளர்ச்சி அடைய, அரசு நிர்வாகம் செய்ய வேண்டுமே தவிர, தனியாரிடம் போட்டிப் போட்டுக் கொண்டு அரசு தொழில் செய்யக் கூடாது என்ற எண்ணம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும். 

50 ஆண்டுகளுக்கு முன், தனியார் முதலீடு இல்லாத காலத்தில், அரசே எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இன்று, தனியார்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றனர். அனைத்து தொழில்களுக்குமான அடிப்படைத் திட்டங்களுக்கும் தனியார் முதலீடு செய்யலாமே தவிர, இதையும் அரசே நடத்தலாம் என்ற நிலையை முதலில் நிறுத்த வேண்டும். தற்போது இருக்கும் பல அரசுத் துறைகளில் படிப்படியாக தனியாரின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்.


நேர்மையான, அரசின் தலையீடு இல்லாத திட்டங்களை வகுத்துக் கொடுத்தால், அனைத்துத் துறைகளிலும் தனியார்கள் முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றனர். 20 ஆண்டுக்களுக்கு முன், தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள். இன்று, இத்துறைகளின் அபார வளர்ச்சியையும் எண்ணிப் பாருங்கள். இந்த வளர்ச்சிக்கு அரசு எடுத்த தாராளமயமாக்கல் கொள்கைதானே. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்' போன்றுதான் பல அரசு அமைப்புகள், தொழில்களை கண்காணிக்கும் ஏஜன்சிகளாக செயல்பட வேண்டும். பஸ் நடத்துவது, டூரிஸ்ட் லாட்ஜ் நடத்துவது அரசின் வேலையல்ல.


தி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே தவிர, அரசு நிர்வாக சீர்கேட்டை மாற்ற முயற்சி செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் அரசு அதிகாரிகளை சந்திக்கும் வகையில்தான் தி.மு.க., அரசின் திட்டங்கள் செயல்பட்டன. ஏதாவது ஒரு வகையில், அரசு அதிகாரிகள் வருமானம் பெற்றால், அவர்கள் தி.மு.க., அரசின் மீது விசுவாசமாக இருப்பார்கள் என்று எண்ணினரே தவிர, நிர்வாக சீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கவில்லை. 

தொலைத்தொடர்பு, போக்குவரத்துத் தொழில் போல், மின் உற்பத்தித் திட்டங்களுக்கும் தனியாரை ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அனல் மின் நிலையமாக இருந்தாலும் சரி, மரபுசாரா மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, தனியாரை ஊக்குவிக்கும் தனித் திட்டங்களை புதிய அரசு வகுக்க வேண்டியது அவசியம்.


சில அமைச்சர்கள் அரசியல் ரீதியாக திறமையானவர்களாக இருந்தாலும் - நிர்வாக ரீதியாக அனுபவம் இல்லை.கடந்த 30 ஆண்டுகளில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த அமைச்சரும் இருக்கவில்லை.

மிழகத்தில் திறமையான அமைச்சர் யார் எனக் கேட்டால் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் என்று தான் கூறுகின்றனரே தவிர, நெடுஞ்செழியனோ, ஆற்காடு வீராசாமியோ, அன்பழகனோ என்று சொல்வதில்லை.செய்திகள்  உதவி தினமலர்.


ந்நிலை மாற, தொழிலில் சாதித்தவர்களின் திறமையை இந்த அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி., ஆனால் தான் அமைச்சராக முடியும் என்ற நிலை இருப்பதால், அமைச்சருடன் நிர்வாகத் திறமை உள்ள நிபுணர் குழுவை அமைத்து, திட்டங்கள் வகுக்க வேண்டும். சட்ட ரீதியாக பொறுப்பும், அதிகாரமும் இக்குழுவிற்கு வழங்க வேண்டும். அப்போதுதான் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கமிட்டியில் அமைக்கும் பாணி முடிவுக்கு வரும். பதவி வகித்த 25 ஆண்டுகளில் சாதிக்காத அதிகாரி - ஓய்வு பெற்ற பின் பெரிதாக சாதிக்கப் போவதில்லை.


நிபுணத்துவம் உள்ளவர்கள் கமிட்டியில் இடம்பெற்றால், நிர்வாகம் சீர்படும். தற்போது, தேசிய அடையாள அட்டைத் திட்டத் தலைவராக இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் நந்தன் நிலேகனியை மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டது. 

துபோல், இந்த அரசும் பயன்படுத்த வேண்டும். அது ஆட்சிக்கு நற்பெயரை வாங்கித்தரும்.அரசு நிர்வாகம் வெளிப்படையாக செயல்படுவதற்கான முயற்சி, திறமைவாய்ந்த இளம் அதிகாரிகளுக்கு முக்கியப் பொறுப்பு மற்றும் தொழில் துறையினரின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்வது ஆகியனவே, தமிழகத்திலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான முதல் நடவடிக்கையாக அமையும். புதிய அரசு சிந்திக்குமா... ஜே செய்வாரா?

5/15/2011

நான் நினைத்தது தான் நடந்தது விஜய் உற்சாகப் பேட்டி


சன்டேன்னா  வேடந்தாங்கலில் சினிமா செய்திதானே .. இன்றைய செய்தி ..
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.   இந்த தேர்தல் முடிவுகள் விஜய் ரசிகர்களையும் அவரையும் அதிகமான உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தேன். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தேன் என் ரசிகர்களும் என் முடிவை ஏற்றுக்கொண்டனர்.  

வாக்குப்பதிவு அன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்ததும்,  ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்.   அவர்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் என பேட்டி அளித்தேன்.

நான் நினைத்ததையே மக்களும் நினைத்தார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.   நான் நினைத்தது நடந்துவிட்டது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து விஜய் நடித்து வரும் வேலாயுதம் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இதில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்துகொள்வார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 

ஜெயம் ராஜா இயக்கி இருக்கும் வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஜெனிலியா நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் டிரெய்லர் ஜெயா டி.வி.யில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.
செய்தி உதவி நக்கீரன்.

வலைச்சரத்தில்  இன்று :  என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்

5/14/2011

முதல்வர் ஜே போடும் முதல் கையெழுத்து


பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி தலைவர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியில் அமர்ந்தவுடன், அவர் போடும் முதல் கையெழுத்து, மிகவும் எதிர்பார்ப்பு வாய்ந்ததாக இருக்கும்.

தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன், "இனி ஆட்சியில் அமர்ந்தால், நீங்கள் இடும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்' என நிருபர்கள் கேட்டதற்கு, "அது எதுவாயினும், ஏழை எளியவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே இருக்கும்' என, கருணாநிதி கூறியிருந்தார்.

விலையில் விண்ணைத் தொட்ட அத்தியாவசியப் பொருட்கள், வெள்ளைக் குதிரையின் விலை போல் கூறப்பட்ட காய்கறிகள், இதுவரை தமிழகம் சந்திக்காத மின் பற்றாக்குறை போன்றவற்றால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள், தங்கள் தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்கு விழி பிதுங்கி நின்ற போது, அவர்களின் துயர் போக்க, அரசின் சார்பில் முன்னாள் முதல்வர்  எடுத்த நடவடிக்கை என்னவென்று அவரால் கூற முடியுமா?

அவரது ஆட்சியின் போது தான் மின்சாரத்துறை, மின்வெட்டுத்துறை என மாற்றமடைந்து, அது நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்று, மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன் உள்ள காலம் எவ்வாறு இருந்திருக்கும் என உணரச் செய்தது.கடந்த, 2008, ஜூலையில் துவங்கிய மின்வெட்டு, தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, தற்போது பகலில், சென்னையில் ஒரு மணி நேரம், மற்ற மாவட்டங்களில் மூன்று மணி நேரம் இருக்கும் என்ற நிலையில் உள்ளது.

எனவே, நம் அவசிய தேவையான மின்சாரம் பெருக, அதில் தமிழகம் தன்னிறைவு அடைய, அத்துறையில் நிர்வாக குளறுபடிகள் நீங்க, இது நாள் வரை தமிழக முதல்வர் செய்யத் தவறியதை, இனி ஆட்சிக் கட்டிலில் அமரப் போகும் ஜெ., மாற்றி, மக்களை மின்வெட்டிலிருந்து விடுவிக்க, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தன் முதல் கையெழுத்தை இட வேண்டும்!

5/12/2011

உங்க உடம்ப பத்திரமாக பாத்துக்கோங்க?

இன்று வலைச்சரத்தில்,


நம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ புதன்

படித்து பயனடையுங்கள்.. 

நன்றி  ....

5/11/2011

மழையை ரசிக்காமல் யாரிருப்பார்?




ன்னுடைய
அறியா வயதில்
அழியா நினைவுகள் இவை...!!!

மேகம் கறுக்கையில்
அம்மாவின் முகமும் கறுக்கும்
மழை தொடங்கிய பின்னோ
வீடே நீர்காடாகும் ...!

சோறு வடிக்க
உதவாத பாத்திரங்கள்
சொட்டும் நீரை
பிடிக்க உதவும் ...!

நீர் ஒழுகாத இடத்தில்
ஒன்டிக்கொள்ள
உடன்பிறப்புகளுடன்
அடிதடி சண்டை ...!

கிடைக்கும் ஒரு வேலை
சோற்றுக்கும்
மண்ணள்ளிப் போடும்
நனைந்த விறகும் அடுப்பும் ...!

ழை வலுக்க
கழிவு நீரும்
மழை நீருடன் சங்கமமாகி
அழையா விருந்தாளியாக
குடிசைக்குள் நுழையும்
அவை விட்டு சென்ற
வியாதிகள் உதவியுடன்
உலகை விட்டுச் சென்ற
தங்கை ஒன்று ...!

வ்வொரு மழையும்
விட்டுசெல்லும் ஞாபங்கள்
மறையும் முன்னே
அடுத்த மழை...!!!

இன்று கண்ணில் பட்டது
ஒரு வரி
"மழையை  ரசிக்காமல் யாரிருப்பார்  ?"

5/10/2011

இது இலவச மருத்துவமனை !!!?

***********************************************************************************
அங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு
ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா?
ஊஹும் ஜெயில்ல.

***********************************************************************************


எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு, கிளார்க் இருக்காங்க
இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

***********************************************************************************

நல்ல காலம் பொறக்குது இந்த வூட்டு அய்யாவுக்கு வேலைல பதவி உயர்வு கிடைக்கப்போவுது... பிள்ளைங்கள்லாம் நல்லா படிக்கப் போவுது...
இந்தாப்பா குடுகுடுப்பாண்டி இந்த அய்யா கிய்யாவெல்லாம் விட்டுத் தள்ளு! கோலங்கள்ல அபியோட பிரச்சனை எப்ப தீரும், ஆனந்தம்ல அந்த கடங்காரன் அபிராமியோட அப்பனுக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா? கஸ்தூரில டெல்லி கணேஷ் குடும்பத்துக்கு என்ன ஆகும்? இதெல்லாம் சொல்லு உனக்கு வேண்டியதைத் தரேன். 

***********************************************************************************

அதோ அங்கப் போறாரே அவர் சஸ்பென்ஸ் கதை எழுதருதல கில்லாடி!
அப்டியா?
ஆமாம்! முதல் வரி என்ன எழுதப்போறாருன்னு அவருக்கே தெரியாதுன்னா பாத்துக்கயேன்.

***********************************************************************************
என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா?
அதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன் கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான். 


***********************************************************************************

5/06/2011

வளைகுடாவில் தமிழன்...!




நாங்கள் ,
திரவியம் தேடி ஓடி வந்தோம்...!
இடையில் முகவரி மறந்தோம்..!

ல்லோன்று வாங்கிட 
இளமையை விற்றோம்...!

காதலைத் துறந்து 
வீடு மனை வாங்கினோம்...!

வாலிபத்தை கரைத்து
வங்கி கணக்கை ஏற்றினோம்...!

ளநரை பெற்றோம்,
இளைமையைத் தொலைத்தோம்,
பணம் பண்ணும்
இயந்திரங்கள் ஆனோம்...!


காற்றில்லா ஆடி,
கொலுவில்லா  புரட்டாசி,
பொரியில்லா கார்த்திகை,
கோலமில்லா மார்கழி ,
கும்மியில்லாப் பொங்கல் ,
எம்  பிள்ளைகள் 
இழந்தவை தான் எத்தனை...!

ணல் வீடு கட்ட 
ஆற்று மணலில்லை ,
கட்டிய வீட்டைக் கலைக்க 
அத்தை, மாமன்
மக்களுமில்லை...!

ழைக்கு முன் வீசும் 
மண்வாசம் நுகர்ந்ததில்லை ,
மழை பெய்த ஈரமண்ணை 
வெறும் பாதம் தொட்டதில்லை...!

ம்..ம்...
நாங்கள்,
திரவியம் தேடி ஓடி வந்தோம்,
டாலர் நாடி 
ஓடிக்கொண்டிருக்கிறோம்...!


5/05/2011

என்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில் !?





நீளப்  போர்வையாய்ப்
போர்த்திக்கொண்டேன் 
என் மௌனத்தை ...!

ன்னில் தேங்கிக் கிடந்த 
மகிழ்ச்சியை
சுரண்டிக் குளிர் காய்ந்த 
கோரமுகத்திற்குப்
பதிலடியாய் 
கை நீட்டும் என் மௌனம்...!

னது வசவுகளும் 
கோபங்களும்
பொங்கிப் பாய்கையில் 
இலாவகத்தொடு 
உள்ளடைக்கும் என் மௌனம் ...!

சுற்றிலுமான
விமர்சனங்களுக்கும்
நான் புன்னகையோடு 
பரிமாறினேன் மௌனத்தை ...!

வரவர் முகத்தை
அவர்களுக்கே காட்டும் 
கண்ணாடி 
என் மௌனம் ...!


5/04/2011

எடையைக் குறைக்க 7 வழிகள் !


நான் மூன்று மாதங்களுக்கு முன் அறுபத்தி நான்கு கிலோ எடை இருந்தேன் . இந்த மாதம் எடையை சரிபார்க்கும் போது ஐந்து கிலோ கூடியிருந்தேன். இந்த எடையை எப்படி குறைப்பது என்று இணையத்தில் தேடும்போது வெப் துனியாவில் ஒரு கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1.
உடற்பயிற்சி:
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2.
பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:
"
அப்படித்தான் செய்கிறேன்" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!

3.
எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:
"
நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4.
தண்ணீர் தண்ணீர்:
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5.
உட்கொள்ளும் அளவு:
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6.
ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.

7. "
நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.
இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!  

5/03/2011

வாழ்க்கையில் நாம் தவறவிட்ட தருணங்கள் !?




முடித்தே காட்ட வேண்டுமெனப்
பிடிக்க முயல்கிறேன் தருணங்களை

ப்பிக்க கற்ற இதனிடம் 
அவ்வப்போது என்  தோல்விகள் 
தீவிரப்படுகையில் கை நழுவும்

விட்டு விலகியவை மீண்டும்
சிந்தனைக்குள் ஒளிர்கையில் 

ண்ணெதிரே
மாற்று திறனாளிகளின்
அணிவகுப்பு...!


5/02/2011

கட்டி இழுத்துச்செல்லப்பட்ட ராஜபக்சே!


இந்த  செய்தி நக்கீரனில் வந்துள்ள செய்தியாகும்.. இதை  என் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கு தெரியப்படுத்தவே இப்பதிவு...

நார்வே தலைநகர் ஓசிலோவில், நடந்த மே தின ஊர்வலத்தில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். இவர்கள் ராஜபக்சேவின் உருவச்சிலையை கூண்டில் ஏற்றி அதனைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல நார்வே நாட்டவர்கள் இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, இலங்கை நிலவரத்தைக் கேட்டும் அறிந்துள்ளனர். பலர் இதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.


பெருந்திரளாக நார்வே மக்கள் கலந்துகொண்டு மே தின ஊர்வலத்தில் ராஜபக்சேவின் இவ்வுருவ பொம்மை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ராஜபக்சேவை, கூண்டில் ஏற்றவேண்டும் என்பதில் நார்வேத் தமிழர்கள் உறுதியோடு இருக்கிறார்கள் என்பதை இந்த ஊர்வலம் காட்டுகிறது.



திரும்ப வருமோ அந்த நாட்கள்...!


வேலமுள் காற்றாடிகள்,
ணங்காயில் வண்டிசெய்தும்,
தைரியமாய் 'தும்பி' பிடித்தும்,
ன ஓலையில் ஃபேன் செய்து ஓடவிட்டும்,
த்தை ஓடு திறந்து நகர்வதைச்
சத்தம் இல்லாமல் உற்று நோக்கியும் , 
ஞ்சாங்கால், ஏழாங்கால்  பல்லாங்குழிகளை 
ஐம்பது வயது பாட்டிகளோடு விளையாடியும்,
நாவல்  பழங்களை ஏறிப்பறித்தும்,
புளிய மரம் உலுக்கி விளையாடியும், 
மீன் பிடிக்க சட்டை  கழற்றி 
வெள்ளத்தில் விட்டுவிட்டு 
வீடு சேர வேட்கிப் போனதுமான
என் மழலை நாட்கள்...

ன்று
என் மகளோ
கணினி  இயக்கியும்,
படப்புத்தகமும்,
கரடி போம்மையுமாய்....!