Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label கனிமொழி. Show all posts
Showing posts with label கனிமொழி. Show all posts

6/24/2013

கனிமொழிக்கு ஆதரவு ஜெயலலிதா முடிவு !


6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் மோதுகின்றனர். திமுக வேட்பாளருக்கு மொத்தம் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. 

5/28/2013

பாமக விடம் கையேந்துகிறதா திமுக ?


வரும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு சட்டசபையில் 23 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் தேமுதிகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இம்முறை கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு தேமுதிக ஆதரவளித்தார்ல் அடுத்த ஆண்டு விஜயகாந்தின் மச்சான் சதீஷுக்கு திமுக ஆதரவளிக்கும் என்பதுதான் பேரம். ஆனால் விஜயகாந்தோ இம்முறை சுதீஷ் என்பதில் உறுதியாக இருந்தார். 

இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தற்போதைய நிலையில் 18 எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் பேசாமல் தேர்தலையே புறக்கணித்துவிட்டால் என்ன? என்ற யோசனையில் இருக்கிறதாம் தேமுதிக.. 

இதை உணர்ந்து கொண்ட திமுக, தங்களுக்குத் தேவையான 11 எம்.எல்.ஏ.க்களை எப்படிப் பெறுவது என்று போட்டுப்பார்த்த கணக்கில் உதயமானது பாமக, காங்கிரஸ், புதிய தமிழகத்தை இணைத்துக் கொள்வது என்பதுதான் அது. 

காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள், பாமகவுக்கு 3 எம்.எல்.ஏக்கள், புதிய தமிழகத்திடம் 2 எம்.எல்.ஏக்கள் என 10 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். என்னதான் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினாலும் கருணாநிதி கேட்டுக் கொண்டால் காங்கிரஸ் மேலிடம் ஆதரிக்கக் கூடும் என்று திமுக நம்புகிறது. 

ரொம்ப தூரம் விலகிப் போய்க் கொண்டிருந்த பாமகவை மரக்காணம் கலவரத்தை முன்வைத்து எட்டிப் பிடிக்க முயற்சித்தது திமுக. இப்போது ராமதாஸ் மருத்துவமனையில் இருக்க இன்னும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது. 

பாமக கை கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

4/28/2013

"2ஜி" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீதா?


இந்திய அரசியலில், வரலாறு காணாத மிகப் பெரிய ஊழலாக கருதப்படுவதில்  "2ஜி" ஸ்பெக்ட்ரம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் திகழ்கிறது என்று சொன்னால், அது பொருத்தமாக இருக்கும்.தமிழகத்தையும், தமிழக அரசியல்வாதிகளையும், தமிழன் ஒவ்வொருவரையும் தலைகுனிய வைத்த மெகா ஊழல் இந்த   "2ஜி" ஸ்பெக்ட்ரம் ஊழல்.

12/02/2011

வாருங்கள் திருக்குவளை இளவரசியை வரவேற்போம்



2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி ஜாமீன் கிடைத்ததால் நவம்பர் முப்பதாம் தேதி இரவு விடுதலை செய்யப்பட்டார். இதை அடுத்து அவர் நேரடியாக சென்னைக்கு வராமல் தன்னுடைய  அண்ணன் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வீட்டில் டெல்லிலேயே தங்கி இருந்தார். 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் கனிமொழி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

11/22/2011

கனிமொழி செய்தது ஊழலா? திருட்டா ?



ஒரு சராசரி குடிமகன், அடுத்தவருடைய  பொருளை, அவருக்கு தெரியாமல் அபகரித்தால், அதை திருட்டு என்கிறோம். 

10/07/2011

திகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா ?


சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பார்களே அதைப்போல் போல்,  சிறைச்சாலைகளில்(?) அடைக்கப்பட்ட குற்றவாளிகளும், சமமாகவே நடத்தப்படவேண்டும் அல்லவா? 

9/04/2011

2ஜி பிரச்சனையில் ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்திய அரசு?


2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று "டிராய்" ஒருபுறம் ஆ.ராசாவுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ள நிலையில், மறுபுறம் சிபிஐ-யும் நேற்று முன்தினம் தாக்கல் செய்த அறிக்கையில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று கைவிரித்துள்ளதால், காட்டிக்கொடுப்பு பயத்தில் மத்திய அரசு 2ஜி வழக்கின் போக்கை மாற்றுகிறதா என்ற கேள்வி பலமாக எழுகிறது..

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் போனதால், அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

7/01/2011

ராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலையா ? கொலையாளி யார் ? பரபரப்பு தகவல்


மாஜி மத்திய அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திற்கு சி.பி.ஐ.,நெருங்கி இருப்பதாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

சமீப காலமாக பாட்சா தற்கொலை செய்து கொண்டார் என்ற நிலையில் இருந்து இப்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பார் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் டில்லியில் இருந்து ஒரு மருத்துவக்குழுவை சென்னைக்கு அனுப்பி வைக்க சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளன. இந்த குழுவின் அறிக்கையின்படி பாட்சாவின் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலை தொடர்பு துறையில் அமைச்சராக இருந்து 2 ஜி ஸ்பெகட்ரம் ஊழலில் சிக்கி தற்போது சிறையில் இருக்கிறார் ராஜா. இவரது நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா. சாதாரண நிலையில் இருந்த இவர் ராஜாவின் கண்பார்வையால் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பல கோடிகளுக்கு அதிபதியானார். ராஜாவின் சொந்த பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் முக்கிய இடங்களை விலைக்கு வாங்குவது , விற்று லாபம் சம்பாதிப்பது என தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார். 

இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். 

ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த சாவு குறித்து துளைத்தெடுத்து வரும் சி.பி.ஐ., விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கொலையாக இருக்குமோ என்ற யூகத்திற்கு சிறிய தடயம் சிக்கியிருப்பதாகவும், இவரது மருத்துவ ரிப்போர்ட்டை ஆய்வு செய்ய டில்லி அகில இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் ஆய்வு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.இவர்களது அறிக்கைக்கு பின்னர் பாட்சாவின் மரணம் குறித்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வழக்கில் திருப்பம் ஏற்படும் பட்சத்தில் , பாட்சாவை கொன்றது யார், கொலைக்கு யார் காரணம், சதிச்செயல்களில் ஈடுபட்டது யார் என்ற கேள்விகள் எழும். இதனையடுத்து ஸ்பெக்டரம் வழக்கில் திடுக் திருப்புமுனைகள் ஏற்படும். பாட்சாவை பொறுத்தவரை ராஜாவிற்கு நெருக்கமானவராக இருந்ததால் இவர் சி.பி.ஐ.,யிடம் அப்ரூவராகி உண்மைகளை சொல்லி விடுவாரோ என்ற அச்சம் சிலருக்கு இருந்ததது இந்த காரணமும் பாட்சாவின் சாவுக்கு ஒரு கருவியாக இருந்திருக்கலாம் என்று டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. நன்றி தினமலர்.

6/08/2011

அரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன?


"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, புறநானூற்றுப் பாடல் வரி. அதனால் தான் அதை, செம்மொழி மாநாட்டின் மையக் கருத்துப் பாடலின் முதல் வரியாக அமைத்தார். 

அந்த புறநானூற்றுப் பாடலின், இரண்டாவது வரி என்ன தெரியுமா... "தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்பது தான். அவரவர் வினைக்கு, அவரே பொறுப்பு. ஒருவருடைய செயலே, ஒருவரை உச்சியில் கொண்டு வைக்கிறது. அவருடைய செயலே தான், அவரை தலைக்குப்புற கீழே, அதல பாதாளத்திற்கு தள்ளி விடுகிறது

கனிமொழி எம்.பி., ஆனதும், சங்கமம் விழா நடத்தினதும் அப்படித் தான். இப்போது திகார் சிறையில், அறை எண் ஆறில் கைதியாக இருப்பதும் இப்படித்தான். 

அண்ணாதுரை எப்படி புகழ் பெற்றார், கனிமொழி எப்படி புகழ் பெற்றார்? கருணாநிதியின் மகள் என்ற தகுதி இல்லாதிருந்தால், நிரா ராடியா அவருடன் தொலைபேசியில் பேசி, அது பதிவாகி இருக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் சாட்சியம் ஆகி இருக்குமா? 

தேர்தலில் மக்கள் கொடுத்தது ஜனநாயக தண்டனை; சட்டப்படியான தண்டனை அல்ல. அது ஒரு பக்கம் காத்திருக்கிறது. ஸ்டாலின், அழகிரி, அவரின் மனைவி, கருணாநிதி என, குடும்பமே டில்லிக்கு படை எடுத்ததற்கு என்ன காரணம்? 

"ஆட்சித் தலைவனுக்கு, குடும்பமே இருக்கக் கூடாது' என அன்றே சொன்னார் சாக்ரடீஸ்.

5/22/2011

நேர்மையிருந்தால் இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா?


ம் முன்னோர் இயற்கையை வழிபட்டதன் காரணமாக, அதன் பயனை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். ஆனால், அரசியல் பின்னணி கொண்ட சிலர், இயற்கை வளங்களை முடிந்த அளவுக்கு அழித்து வருகின்றனர். 

மிழகத்தில், ஆற்று மணல் கொள்ளை மூலம், ஒரு தரப்பினர், கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். வனங்களை அழித்து, மரங்களை கடத்துவது தொடர்கிறது. இதற்கு சான்றாக, மலைகளையொட்டிய மாவட்ட கிராமங்களில், யானைகள், சிறுத்தைகள் ஊடுருவுகின்றன. வன விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. 

சிட்டுக் குருவி இனமே மாயமாகி விட்டது. விவசாய நிலங்கள், விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுகிறது. பாலித்தீன் பயன்பாடு, டயர்களை எரிப்பது போன்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, மக்களின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகி விட்டது.

ற்கனவே ஆட்சியில் இருந்த போது, மழை நீர் சேமிப்பு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த வழி செய்த முதல்வர் ஜெயலலிதா, இம்முறை, இயற்கையை காப்பாற்ற, சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். 

ணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாற்று வழிமுறைகளை கண்டறிந்து, வனங்களை காத்து, விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயர செய்ய வேண்டும். தென்னக நதிகள் இணைப்பு குறித்து ஆராய வேண்டும். இயற்கையை காப்பதன் மூலம், இனத்தை காப்பாற்ற முடியும். செய்வாரா முதல்வர்?