Ads 468x60px

5/26/2013

கமல்ஹாசன் - கவுதமி இவர்களுக்குள் என்னதான் இருக்கிறது? விஜய் டிவி ரகளை


நம் கலாசார சீரழிவுக்கு முக்கிய காரணமாக, சினிமா திகழ்கிறது என்பது வெளிப்படை. சினிமாவால் தான் அரசியல், பொது வாழ்வு, குடும்ப கலாசாரம் சீரழிக்கப்பட்டு வருகிறது.இன்று, முன்னணி சினிமா கதாநாயகர்கள், கதாநாயகிகள் பலர், நம் கலாசாரத்திற்கு எதிரான வாழ்க்கை முறையை கடைபிடித்து வருவதும், அதை பின்பற்றி, நமது இளைய சமுதாயத்தினர், தங்களின் வாழ்க்கையை தொலைத்து வருவதையும் பார்க்கிறோம்.

அந்த வகையில், விஜய் "டிவி' நிகழ்ச்சி ஒன்றில், ஒரு குடும்பப் பெண் கமலை கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்துள்ளதும், கமல்ஹாசன் - கவுதமியுடன் பார்ட்னராக இருப்பதாகவும், உடலுறவு போன்ற விஷயங்களும் உண்டு என்று சொல்லியுள்ளது, படு அதிர்ச்சி அளிக்கிறது.

ஏனெனில், இதுவெல்லாம் மேலை நாடுகளில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால், நம் பண்பாட்டையும், கலாசாரத்தையும் சீரழிப்பதற்கு மட்டுமே, இந்த ஒழுக்கம் உதவும்.நடிகர் கமல்ஹாசன் - கவுதமியின் நட்பு, கள்ளக் காதலை நியாயப்படுத்துவதாக உள்ளது. 

கமல்ஹாசன், கவுதமியை சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வாழ, எந்த தடையும் இல்லை. ஒரு நல்ல இந்திய குடிமகனாக, உலக நாயகன் இருக்க வேண்டும் என்றால், தன் தவறை திருத்தி, ஒழுக்கத்துடன் வாழலாமே?ஒவ்வொரு ஒழுக்கமான குடிமகன்களும், ரசிகர்களும் இதைப் பார்த்த பின், வெட்கி தலைகுனிந்தனர்.எது எதற்கோ போர்க்கொடி தூக்கும் மகளிர் அமைப்புகள், ஏன் இம்மாதிரி தகவல்களுக்கு எதிராக, குரல் கொடுக்கவில்லை என்று புரியவில்லை.

5/25/2013

டி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்


பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார். மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

சிங்கம் II - பின்வாங்கினாரா தலைவா விஜய்!



தமிழில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ஒரே வாரத்திலோ அல்லது ஒரே நாளிலோ திரைக்கு வந்தால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அப்படித்தான் விஜய்யின் தலைவாவும், சூர்யாவின் சிங்கம்-2வும் அடுத்த மாதம் ஒரே நாளில் திரைக்கு வருவதாக கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் பரபரப்பு தீயை பற்றிக்கொண்டு எரிந்தது. 

ஆனால், இப்போது கொளுந்து விட்டு எரிந்த தீயில் மழை கொட்டியது போல் அந்த செய்தி புஷ் ஆகி விட்டது.

அதாவது, ஒரே நேரத்தில் வெளியாக இருந்த அப்படங்களில் விஜய்யின் தலைவா ஜூலை மாதத்துககு தள்ளிப்போய் உள்ளது காரணம், விஜய், அமலாபால் நடித்த காட்சிகள் முடிந்து விட்டபோதும, சிலர் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னமும் படமாக வேண்டியுள்ளதாம். 

அதனால் ஜூன் மாதம் என்று கூறிவந்தவர்கள் இப்போது தேதியை மாற்றி அறிவித்து விட்டனர். ஆக, அடுத்த மாதம் சூர்யாவின் சிங்கம்-2 மட்டும் சீறிப்பாய வருகிறதாம். வாழ்த்துக்கள்.


நன்றி இணையம், கூகிள்.

உடற்பயிற்சி செய்யாமல் தொப்பை குறைய?


தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போம். 

ஓட்ஸ் ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.

முட்டை முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.

ஆப்பிள் ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.

மிளகாய் மிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.

பூண்டு பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.

மீன் மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

தேன் தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.

க்ரீன் டீ க்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கேரட் கேரட் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.

குளிர்ச்சியான நீர் தினமும் குறைந்தது 2 லிட்டர் குளிர்ச்சியான நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

5/24/2013

குட்டிப்புலி படத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்



1. குட்டிப்புலி படத்தில் முதன் முறையாக கம்பு சுற்றும் விளையாட்டு வீரராகக் களமிறங்குகிறார் சசிகுமார். இதற்காக ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல சிலம்பு வீரரிடம் இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்திருக்கிறார் சசிகுமார். விழுப்புண்களுக்கும் குறைவு இல்லையாம்.

2. இத்தனை காலம் நடனம் ஆடுவதில் பெரிய அளவில் அக்கறை காட்டாமல் இருந்த சசிகுமார், இந்தப் படத்தில் செம ஸ்பீடு டான்ஸ் போட்டு வியக்க வைத்திருக்கிறார். ரீமிக்ஸ் பாடல் ஒன்றை இதற்காகவே படத்தில் இணைத்திருக்கிறார்கள்.

3. படத்தில் லெட்சுமிமேனனோடு சகஜமாகப் பேசும் காட்சிகள் இல்லையாம். அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சசிகுமார் உர்ரெனவே இருந்தாராம். நெருங்கிப் பேச முயன்ற லெட்சுமிமேனனுக்கு செம திட்டு விழுந்ததாம்.

4. சுந்தரபாண்டியன் படத்துக்குப் பிறகு சசிகுமாரின் சம்பளம் சகட்டுமேனிக்கு ஏறிவிட்டது. ஆனாலும், தனக்கு முதல் முதலாக சம்பளம் நிர்ணயித்த மனிதர் என்பதற்காக ‘வாகை சூடவா’ முருகானந்தம் கொடுத்த தொகையை மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டாராம் சசி!

5. குட்டிப்புலி என்பவர் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒரு மனிதர். அவருடைய உண்மையான கதையைத் தழுவியே குட்டிப்புலி பாத்திரத்தை செதுக்கி இருக்கிறார்கள்.

6. ஒவ்வொரு படத்திலும் பஞ்ச் டயலாக்குக்குப் பதிலாக யதார்த்த வசனம் பேசும் சசிகுமார், இந்தப் படத்தில் பேசும் வசனம் என்ன தெரியுமா… ‘வொய்புதான்டா லைஃப்’

7. படத்தை முடித்த பிறகு ஒரே ஒரு மனிதருக்கு மட்டுமே தன் சார்பில் போட்டுக் காட்டி இருக்கிறார் சசிகுமார். அவர் இயக்குநர் பாலா. ‘உண்மையான நடிகன்னு நிரூபிச்சிட்டடா’ என கண்கலங்கி பாராட்டி இருக்கிறார் பாலா.


8. குட்டிப்புலி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வேறு எந்த ஹீரோக்களுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். சரண்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அந்தக் காட்சியைப் பார்த்து சசிகுமார் கண்கலங்கி விட்டாராம். ‘சசி என்னோட உண்மையான புள்ளை” என நெகிழ்ந்திருக்கிறார் சரண்யா.

9. இரு கைகளையும் தூக்கியபடி சைக்கிளில் ஹாயாக வருகிற காட்சிதான் ஓபனிங் காட்சி. ஒரே டேக்கில் அசத்தி இருக்கிறாராம் சசிகுமார்.

10. படம் முழுக்க வேட்டி, கைலியில் வரும் சசிகுமார், ஒரே ஒரு காட்சியில் மட்டும் பேன்ட் சர்டில் வருகிறார். தியேட்டரே சிரிப்பொலியில் நனைகிற காட்சியாம் அது.

படத்தின் ட்ரைலர்:



நன்றி - இணையம்