நம் கலாசார சீரழிவுக்கு முக்கிய காரணமாக, சினிமா திகழ்கிறது என்பது வெளிப்படை. சினிமாவால் தான் அரசியல், பொது வாழ்வு, குடும்ப கலாசாரம் சீரழிக்கப்பட்டு வருகிறது.இன்று, முன்னணி சினிமா கதாநாயகர்கள், கதாநாயகிகள் பலர், நம் கலாசாரத்திற்கு எதிரான வாழ்க்கை முறையை கடைபிடித்து வருவதும், அதை பின்பற்றி, நமது இளைய சமுதாயத்தினர், தங்களின் வாழ்க்கையை தொலைத்து வருவதையும் பார்க்கிறோம்.
அந்த வகையில், விஜய் "டிவி' நிகழ்ச்சி ஒன்றில், ஒரு குடும்பப் பெண் கமலை கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்துள்ளதும், கமல்ஹாசன் - கவுதமியுடன் பார்ட்னராக இருப்பதாகவும், உடலுறவு போன்ற விஷயங்களும் உண்டு என்று சொல்லியுள்ளது, படு அதிர்ச்சி அளிக்கிறது.
ஏனெனில், இதுவெல்லாம் மேலை நாடுகளில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால், நம் பண்பாட்டையும், கலாசாரத்தையும் சீரழிப்பதற்கு மட்டுமே, இந்த ஒழுக்கம் உதவும்.நடிகர் கமல்ஹாசன் - கவுதமியின் நட்பு, கள்ளக் காதலை நியாயப்படுத்துவதாக உள்ளது.
கமல்ஹாசன், கவுதமியை சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வாழ, எந்த தடையும் இல்லை. ஒரு நல்ல இந்திய குடிமகனாக, உலக நாயகன் இருக்க வேண்டும் என்றால், தன் தவறை திருத்தி, ஒழுக்கத்துடன் வாழலாமே?ஒவ்வொரு ஒழுக்கமான குடிமகன்களும், ரசிகர்களும் இதைப் பார்த்த பின், வெட்கி தலைகுனிந்தனர்.எது எதற்கோ போர்க்கொடி தூக்கும் மகளிர் அமைப்புகள், ஏன் இம்மாதிரி தகவல்களுக்கு எதிராக, குரல் கொடுக்கவில்லை என்று புரியவில்லை.














