Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/24/2018

நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற,நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்:-

எல்லா மாணவ,மாணவிகளும் நல்லமதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டிவாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலதுகையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சைமென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும்வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும்அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலதுமூக்குத் துவாரத்தை அடைத்து இடதுமூக்குத் துவாரம் வழியாக உள்ளிருக்கும்பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே(இடது) மூக்குத் துவாரம் வழியாக மூச்சைஉள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடதுமூக்குத் துவாரத்தை அடைத்து வலது மூக்குவழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின்அதே (வலது) மூக்குத் துவாரம் வழியாகமூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் ஒரு தடவை (சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரைசெய்யலாம்.இதைக் காலை,மதியம்உணவுக்கு முன்,மாலையிலும் செய்து வரநல்ல நினைவாற்றல் ,மன ஒருமைப்பாடு ஏற்படும்.

பிராணாயாமம்:-


இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும்மெதுவாக,ஆழமாக மூச்சை உள்ளிழுத்துபின்னர் இரண்டு மூக்குத் துவாரத்தின்வழியாகவும் மெதுவாக மூச்சைவெளியிடவும். இதைக் குறைந்தது 10முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்திசெய்வதுடன்,சுவாசப்பைகளைப் பெரிதாக்கிசுவாசம் நன்றாகநடைபெற உதவுகிறது.மூளைக்குநிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபகசக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும்முன் இதைச் சில தடவைகள் செய்து பின்படிக்க நன்கு மனதில் பதியும்.தேர்வுக்கு முன்,நேர்முகத் தேர்வுக்குக் காத்திருக்கும் போதுசில தடவைகள் செய்யப் பதற்றம்தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்துமுடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாகஎடுக்க உதவும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி எனப்பொருள்.

பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிதுமடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சைஉள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்குவழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15தடவைகள் செய்யலாம்.

இரவில் முறையாக உறங்காமல் அதிக நேரம்கண்விழித்துப் படித்தால் கண்எரிச்சல்,உடற்சூடு,தலைசுற்றல் உண்டாகும்.தவிர்க்க முடியாத சூழல்களில்இந்தப் பயிற்சியை இடையிடையே செய்துபடிக்க உறக்கம் வராது அதோடு நல்லசுறுசுறுப்பும் சக்தியும் உண்டாகும்.

இந்தப் பயிற்சியை மழை மற்றும் பனிக்காலங்களில் அதிகம் செய்யவேண்டாம்.

தேர்வுக்கு முன் தேர்வு அறையில் செய்யவேண்டிய பயிற்சி:-

தேர்வு தொடங்கும் முன் வினாத்தாள்கொடுத்ததும் கீழ்வரும் பயிற்சியைச் செய்யமனதில் பயம்,பதற்றம் நீங்கி தெளிவுஉண்டாகும் அதன் பின் விடைத்தாளில் பதில்எழுத ஆரம்பியுங்கள்.

பயிற்சி:-

மெல்ல மூச்சை உள்ளிழுத்து அடக்காமல்உடனே மெல்ல மூச்சை வெளிவிட்டு பின் 3முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கிபின்னர் உள்மூச்சு இழுக்கவேண்டும்.இவ்வாறு ஒரு வெளிமூச்கிக்கும்உள்மூச்சுக்கும் இடையே 3 முதல் 6செகண்டுகள் மூச்சை அடக்கி பின்உள்ளிழுக்கும் இந்த பயிற்சியை குறைந்தது10 தடவை செய்து வர மனம்அமைதியாகும்.ஏதேனும் ஒரு கேள்விக்குபதில் தெரிந்தும் நினைவுக்கு வராதசமயத்திலும் இதை குறைந்தது 3லிருந்து 5தடவை செய்து பின் யோசிக்க விடைமனதில் உதிக்கும்.

முக்கிய குறிப்பு :-

நம் சரீரத்தில் சுவாசம் எப்பொழுதும்இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வலதுபக்கம் ,இடது பக்கம் என மாறி மாறிஏதேனும் ஒரு மூக்குத் துவாரம்வழியாக இயங்கும்.

வலது பக்கம் சுவாசம் ஓடும் போதுகடினமான கணிதம்(MATHS) , அறிவியல்(SCIENCE),புள்ளியியல்(STATISTICS) போன்றபாடங்களைப் படிக்க எளிதில்விளங்கும்,மனதில் பதியும். வலதுபக்கம்சுவாசம் ஓடாத நேரங்களில் வலது கால்இடது கால் இருக்கும் படி போட்டுகொண்டுதரையில் அமர்ந்தோ,சேரில் அமர்ந்தோபடித்தாலும் அதே பலன் உண்டாகும்.

வல்லாரை லேகியம் சிறிதளவு தினமும்சாப்பிட்டு வர நல்ல நினைவாற்றல்உண்டாகும்.

ரெய்கி மற்றும் சில தியான முறைகள் நினைவாற்றல் பெருக பேரளவில் உதவும்.அவற்றை விளக்கினால்பதிவின் நீளம் கூடும் என்பதால் இத்துடன்நிறைவு செய்கிறேன்.

நன்றி.

1 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"