Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/24/2018

எட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்...

எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், 'எட்டாம் வகுப்புக்கான தமிழக அரசின் சமச்சீர் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'உணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை பெண்கள் உடுத்த வேண்டாம்' என்ற வரிகள் நீக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாடப் புத்தகம் அச்சிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்கள் அனைத்தும் மீண்டும் மறுசீராய்வுக்கு அனுப்பப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"