Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/25/2011

அதிகாலையில் கனவு, நடக்குமா?


புறாக்கள் பார்ப்பது
அரிதாகிவிட்டது...!

புற்களைப் பார்க்க கூட
ஊருக்கு வெளியே
போகவேண்டியிருக்கிறது...!

ப்போதாவது
பயணங்களில் பார்க்கக்
கிடைக்கின்றன
ஆடுகளும்
வெள்ளைக் கொக்குகளைச்
சுமந்த மாடுகளையும்...!

நாற்று நட்டவா்களும்
வேர்கடலை பிடுங்கியவர்களும்
களை எடுத்தவர்களும்
என்ன செய்கிறார்களோ
ஜீவனத்திற்கு...!

னிதர்கள் பெயரில்
பதிவாகாத மண்
எந்த கண்டத்தில் உள்ளதோ?

ஷியன்” வண்ணப்பூச்சுடன்
உயர்ந்து நிற்கும்
கோபுரம் மட்டும் இன்னும்
ஊரைச் சுமந்து கொண்டிருக்கிறது...!

தூசிபடியாத நவீன விட்டில்
வாழ்க்கை பழகிக் கொண்டது...!

ன்றாவது
அதிகாலையில் கனவு வருகிறது
காட்டுச் செடிகளுக்கிடையில்
கலாப்பழம் தேடிப்போவது  போல்...!

முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!

   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

37 comments:

  1. ///மனிதர்கள் பெயரில்
    பதிவாகாத மண்
    எந்த கண்டத்தில் உள்ளதோ?///

    பூமி மட்டுமில்லாமல் வேறு கண்டங்களையும் நம்மாளுக விட்டு வைக்கல...

    ReplyDelete
  2. மாப்ள கனவே பொழப்பா போச்சியா!

    ReplyDelete
  3. அருமை...தொடர்ந்து கவிதையா கலக்குறீங்க...

    ReplyDelete
  4. >>காட்டுச் செடிகளுக்கிடையில்
    கலாப்பழம் தேடிப்போவது போல்...!

    அதென்ன கலாப்பழம்? பலாப்பழம் தெரியும், கிலாக்காய், கிலாப்பழம் தெரியும்.. இது புதுசா இருக்கே..

    ReplyDelete
  5. எல்லாவற்றையும் அழித்துவிட்டு, எதை வைத்து வாழ போகிறோம். நல்ல கவிதை.

    ReplyDelete
  6. மன்னிக்கவும் உங்கள் கனவு பலிப்பது கஷ்டம்தான்.

    ReplyDelete
  7. மனிதர்கள் பெயரில்
    பதிவாகாத மண்
    எந்த கண்டத்தில் உள்ளதோ?


    ......ம்ம்ம்ம்...... கூகிள் எதற்கு இருக்கிறது? தேடி கண்டு பிடிச்சிருவோம்! :-))))

    ReplyDelete
  8. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    பூமி மட்டுமில்லாமல் வேறு கண்டங்களையும் நம்மாளுக விட்டு வைக்கல... --- அப்படியா?

    ReplyDelete
  9. FOOD சொன்னது…

    வந்துட்டேன், வாசிச்சிட்டு வருகிறேன். --- ஓகோ..

    ReplyDelete
  10. FOOD சொன்னது…

    என்ன ஆசிரியரே! நீங்களுமா? பதிலே இல்ல! -- பதிவு போட்டுட்டு டியூஷன் எடுக்க போய்ட்டேன்... மன்னிக்கவும்..

    ReplyDelete
  11. @FOOD சொன்னது… --வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  12. விக்கி உலகம் சொன்னது…

    மாப்ள கனவே பொழப்பா போச்சியா!
    --- மாப்ள வேர என்ன பன்னசொல்ர..

    ReplyDelete
  13. டக்கால்டி சொன்னது…

    அருமை...தொடர்ந்து கவிதையா கலக்குறீங்க...
    --------------அப்ப எதைத்தான் எழுதுவது?

    ReplyDelete
  14. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    அதென்ன கலாப்பழம்? பலாப்பழம் தெரியும், கிலாக்காய், கிலாப்பழம் தெரியும்.. இது புதுசா இருக்கே..- அது கருப்பா சின்னதா இருக்கும்..

    ReplyDelete
  15. தமிழ் உதயம் சொன்னது…

    எல்லாவற்றையும் அழித்துவிட்டு, எதை வைத்து வாழ போகிறோம்.------ உண்மைதாங்க...

    ReplyDelete
  16. பாலா சொன்னது…

    மன்னிக்கவும் உங்கள் கனவு பலிப்பது கஷ்டம்தான். -- கனவுதானே..

    ReplyDelete
  17. Chitra சொன்னது…
    ......ம்ம்ம்ம்...... கூகிள் எதற்கு இருக்கிறது? தேடி கண்டு பிடிச்சிருவோம்! :-)))) - சீக்கிரம் கண்டுபிடிங்க..

    ReplyDelete
  18. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    அசத்தல் கவிதை... -- நன்றி..

    ReplyDelete
  19. FOOD சொன்னது…
    கனவு காணுங்கள். அது உங்களை உயர்த்தும். நன்றி.

    ReplyDelete
  20. காலையில் கண்டாலும் இக்கனவு வெறும் கனவுதான் கருன்!

    ReplyDelete
  21. Nagasubramanian சொன்னது…

    fantastic // Thanks 4 ur comments..

    ReplyDelete
  22. கனவுகாணூங்கள், அது உங்களை உயர்த்தும்னு சொன்னவங்க, காலைக்கனவா, இரவு கனவான்னு சொல்லவே இல்ல்யே?

    ReplyDelete
  23. //“ஏஷியன்” வண்ணப்பூச்சுடன்
    உயர்ந்து நிற்கும்
    கோபுரம் மட்டும் இன்னும்
    ஊரைச் சுமந்து கொண்டிருக்கிறது...!//

    வெகுவாக ரசித்தேன் இந்த சிந்தனையை

    சிறப்பான ஆக்கம்..!

    ReplyDelete
  24. சுகமான கவிதை சாறல்

    ReplyDelete
  25. மனிதர்கள் பெயரில்
    பதிவாகாத மண்
    எந்த கண்டத்தில் உள்ளதோ//
    செவ்வாய் கிரகத்துல?

    ReplyDelete
  26. சென்னை பித்தன் சொன்னது…

    காலையில் கண்டாலும் இக்கனவு வெறும் கனவுதான் கருன்!
    ---ஆம் தோழரே...

    ReplyDelete
  27. ராஜ நடராஜன் சொன்னது…

    அழகோ அழகு! - எதுப்பா?

    ReplyDelete
  28. Lakshmi சொன்னது…

    கனவுகாணூங்கள், அது உங்களை உயர்த்தும்னு சொன்னவங்க, காலைக்கனவா, இரவு கனவான்னு சொல்லவே இல்ல்யே?-- ஆமாம்மா..

    ReplyDelete
  29. ப்ரியமுடன் வசந்த் சொன்னது…
    சிறப்பான ஆக்கம்..! -- Thanks 4 ur comments..

    ReplyDelete
  30. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    சுகமான கவிதை சாறல் --அப்படியா?

    ReplyDelete
  31. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    மனிதர்கள் பெயரில்
    பதிவாகாத மண்
    எந்த கண்டத்தில் உள்ளதோ//
    செவ்வாய் கிரகத்துல? -- நிஜமாகவா?

    ReplyDelete
  32. செங்கோவி சொன்னது…

    நல்ல சிந்தனை.--- நன்றி...

    ReplyDelete
  33. யதார்தாமான, நிதர்சனமான உண்மை. நெஞ்சை தொட்ட வரிகள்
    \\என்றாவது
    அதிகாலையில் கனவு வருகிறது
    காட்டுச் செடிகளுக்கிடையில்
    கலாப்பழம் தேடிப்போவது போல்...\\

    ReplyDelete
  34. உங்களின் எல்லா ஆதங்கமுமே வார்த்தைகளில்.எது அழகு எது தப்பென்றே சொல்லமுடியவில்லை கருன்.இனி அந்தக் காலங்கள் கனவில்தான்.இன்றைய சந்ததியினருக்கு அந்தக் கனவும் இல்லை !

    ReplyDelete
  35. கனவும்,படமும் அழகு.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"