Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/10/2011

இப்படியும் ஒரு சிறுவன் - பள்ளியில் நடந்த உண்மைகள் - 7



பொறுக்கிய காகிதங்களையும் 
சேகரித்த பிற
குப்பைகளையும்,
விற்ற பணத்தில் 
(நோட்டு) புத்தகங்கள் 
மூன்று தான் 
வாங்க முடிந்தது...!


நான்காவதான 
கணக்குப் புத்தகத்தை 
நாளை வாங்காது போனால் 
கையில் பிரம்படி 
விழுமே..


மீண்டும் 
கோணியுடன் செல்கிறான் 
அந்த சிறுவன் 
குப்பை மேடுகளைத் தேடி..!

39 comments:

  1. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

    Hot tamil actresses

    ReplyDelete
  2. கற்பதற்கு குப்பையை சுமக்கும் சிறுவன்.. கற்பனை அருமை சார்

    ReplyDelete
  3. நெஞ்சை தோட்ட வரிகள் (சிறுவன் )
    பகிர்ந்த
    ஆசிரியர் பெருந்தொகைக்கு நன்றி

    ReplyDelete
  4. மனதை உருக்கும் கவிதை பாஸ்..ஆனால் அந்த சிறுவனின் தன்நம்பிக்கைக்கு ஒரு சலூட்.

    ReplyDelete
  5. நெஞ்சை தொட்ட கவிதை

    ReplyDelete
  6. வறுமையையும் தன்னம்பிக்கையையும் சொல்லும் வரிகள் நல்லாய் இருக்கு பாஸ் ..

    ReplyDelete
  7. கல்விக்கு முக்கியம் தரவேண்டும் என்று உணர்த்தும் கவிதை!

    ReplyDelete
  8. வறுமையிலும் தன்னம்பிக்கை... அருமை

    ReplyDelete
  9. super .... nice feelings .. thanks for ur post dear friend :)

    ReplyDelete
  10. அருமை நண்பா உண்மையக இருந்தது
    நீ எழுதிய வ்ரிகள் ஒவ்வொன்றும் மனதிற்குள் அழுகை வந்துவிலட்டது

    ReplyDelete
  11. வறுமை தருவது தன்னம்பிக்கை

    ReplyDelete
  12. காகித பட்டம் கிடைக்க காகிதம் சுமக்கும் அவலம்!

    ReplyDelete
  13. வாழ்வின் யதார்த்தத்தை நச்சென சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. இந்தியா ஒளிர்கிறது குப்பைகளால்...!!!

    ReplyDelete
  15. உண்மையில் இப்படியும் நடக்கிறது

    ReplyDelete
  16. குப்பையிலும்
    பணத்தை கண்டிருக்கிறது
    அவனது பார்வை.

    வென்றுவிடுவான்
    நாளைய வாழ்வை.!

    ReplyDelete
  17. தனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் நிகப்போகும் கல்வி அறிவை பெற மற்றவருடைய உதவியை நாடாமல் தானே முயன்று கல்விகற்க முயலும் அவனும் வருங்கால பெறும் புள்ளிகளில் ஒருவன்

    ReplyDelete
  18. எந்த சூழ்நிலை வந்தாலும் படிக்க முயல்பவன் நல்ல படிப்பாளியாக வருவான்..

    ReplyDelete
  19. வலிக்குது கருண்! அருமையான கவிதை! இந்த நிலை என்று மாறும்??

    ReplyDelete
  20. வலிக்குது கருண்! அருமையான கவிதை! இந்த நிலை என்று மாறும்??

    ReplyDelete
  21. மெய்யாலுமே சோகமாகீதுபா

    ReplyDelete
  22. வேதனையான கவிதை.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  23. கொடிது கொடிது இளமையில் வறுமை.

    ReplyDelete
  24. இளமையில் வறுமை :-(

    ReplyDelete
  25. அருமையான கவிதை ஆனால் மனம் வலிக்குது

    ReplyDelete
  26. அவன் செல்வது குப்பை மேடுகளை நோக்கி அல்ல!

    வாழ்க்கையில் அவன் எதிர் கொள்ள வேண்டிய தடை எனும் மேடுகளை உடைக்க!

    ReplyDelete
  27. சற்று உற்றுப் பார்த்தால், தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பு இந்த கவிதை.

    ReplyDelete
  28. நிஜத்தை பிரதிபலிக்கும் கவிதை....

    ReplyDelete
  29. குப்பைமேடுகளை தேடிச்செல்கிற அவலம் நிறைந்த வாழ்க்கையாய்/நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. வறுமையில் கல்வி....நிறைய மாணவர்களின் நிலை இதுதான்...நான் படிக்கும் போது
    ஆனால் இப்பொழுது எல்லாமே இலவசமாக கிடைப்பதாக சொல்கின்றார்களே உண்மையா?

    ReplyDelete
  31. சமூகத்தின் குப்பைகள்;
    மாணிக்கங்களை,
    குப்பைகளை தேட வைத்திருப்பது;
    தனி மனித உடமை கோட்பாட்டின் அவலம்..

    ReplyDelete
  32. நச்சென்று நாலு வார்த்தை திருக்குறளைப்போல்
    ஓர் அழகிய கவிதை .வாழ்த்துக்கள் சகோ .......நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  33. வணக்கம் சகோ இடம் மாறி என் கருத்து விழுந்துவிட்டது .இருந்தாலும்
    பொருந்தும் .வறுமையையும் சிறுவனின் முயற்சியையும் மிக உருக்கமான
    உணர்வு ததும்ப தாங்கள் படைத்த கவிதை தரும் பொருள் அருமை!.......
    கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது ...மிக்க நன்றி பகிர்வுக்கு ...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"