Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

6/08/2011

அரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன?


"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, புறநானூற்றுப் பாடல் வரி. அதனால் தான் அதை, செம்மொழி மாநாட்டின் மையக் கருத்துப் பாடலின் முதல் வரியாக அமைத்தார். 

அந்த புறநானூற்றுப் பாடலின், இரண்டாவது வரி என்ன தெரியுமா... "தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்பது தான். அவரவர் வினைக்கு, அவரே பொறுப்பு. ஒருவருடைய செயலே, ஒருவரை உச்சியில் கொண்டு வைக்கிறது. அவருடைய செயலே தான், அவரை தலைக்குப்புற கீழே, அதல பாதாளத்திற்கு தள்ளி விடுகிறது

கனிமொழி எம்.பி., ஆனதும், சங்கமம் விழா நடத்தினதும் அப்படித் தான். இப்போது திகார் சிறையில், அறை எண் ஆறில் கைதியாக இருப்பதும் இப்படித்தான். 

அண்ணாதுரை எப்படி புகழ் பெற்றார், கனிமொழி எப்படி புகழ் பெற்றார்? கருணாநிதியின் மகள் என்ற தகுதி இல்லாதிருந்தால், நிரா ராடியா அவருடன் தொலைபேசியில் பேசி, அது பதிவாகி இருக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் சாட்சியம் ஆகி இருக்குமா? 

தேர்தலில் மக்கள் கொடுத்தது ஜனநாயக தண்டனை; சட்டப்படியான தண்டனை அல்ல. அது ஒரு பக்கம் காத்திருக்கிறது. ஸ்டாலின், அழகிரி, அவரின் மனைவி, கருணாநிதி என, குடும்பமே டில்லிக்கு படை எடுத்ததற்கு என்ன காரணம்? 

"ஆட்சித் தலைவனுக்கு, குடும்பமே இருக்கக் கூடாது' என அன்றே சொன்னார் சாக்ரடீஸ்.

இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)


இது  பகுதி - 2

ரு நாள் ...
ஒரு வாரம் ...
ஒரு மாதம் ...
முகம் காட்ட
மறுத்துவிட்டாய் !

னதிற்குள் கலவரம்
நீ என்னை
வெறுக்கின்றாயா?
விரும்புகிறாயா?
உன்னிடமே
கேட்டு விட  தீர்மானம்
நிறைவேற்றிவிட்டேன்.

ன்று
உனக்கு முன்னால்
நீ போகும் பாதையை 
நான் 
ஆக்கிரமித்துக் கொண்டேன்.

தோ வருகிறாய் 
உன் பெயரை உச்சரித்தவுடன்
திசை மாறி 
திரும்பிப் பார்த்தாய்.

ப்போதும் நீ 
பேசவில்லை
உன் உதடுகள்  தான் 
ஒரு புன்னகை 
புரிந்துவிட்டு போனது.

தில் 
என்னையே மறந்துப் போனேன்
என்  காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?

மீண்டும் கலவரமானேன்!!!

ன்று
இரவு முழுவதும் 
விடியலுக்காகவே
விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக 
விடிந்தது...!

மீண்டும் உன்முன் 
உதயமானேன்,
நீ  என்னை 
உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!

ரிதான் 
என் நம்பிக்கை 
மீண்டும் ஒருமுறை 
தோற்றுப் போனது !!?

தொடரும்..

6/07/2011

சுட்டிக்காட்டுங்கள்..., குத்திக்காட்டாதீர்கள்..- சபாஷ் கலெக்டர் .




சேலம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொதுப்பணித்துறை மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட மகரபூஷனம், மேட்டூர் தண்ணீர் அணை திறப்புவிழா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதியம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

வழக்கம் போலவே அதிகாரிகள் சால்வை, மாலை, பூங்கொத்து, எலுமிச்சம்பழம் என்று புதிய மாவட்ட ஆட்சியரை வரவேற்க காத்திருந்தனர். காரிலிருந்து இறங்கிய ஆட்சியர் எல்லோருக்கும் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு அதிகாரிகள் கையில் வைத்திருந்த எதையும் வாங்காமல் தனது அறைக்கு சென்று விட்டார்.

பின்னர் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்சியில் ஆட்சியர் கலந்து கொண்டபோது, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஆக்ஸ்போர்டு ராமநாதன் ஒரு சால்வையுடன் ஆட்சியருக்கு பக்கத்தில் போக, அவருக்கு பின்னாலேயே போன சில பத்திரிகை புகைப்படக்காரர்களும் ராமநாதன் சால்வைபோடும் காட்சியை படமெடுக்க தயாராக இருந்ததை பார்த்து விட்ட ஆட்சியர் மகரபூசனம், சால்வையுடன் வந்த ராமநாதனை கையைகாட்டி சற்று தூரத்திலேய நிறுத்திவிட்டு, பொதுமக்கள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்துக்கு இவரை யார் உள்ள விட்டது என்று பக்கத்தில் இருந்த அதிகாரிகளுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கி விட்டார். அவசர அவசரமாக ஆக்ஸ் போர்டை வெளியேற்றினார்கள் அதிகாரிகள்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது என் நிர்வாகத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்ததால் சுட்டிக்காட்டுங்கள்... சரிசெய்து கொள்கிறேன், தயவு செய்து குத்திக்காட்டதீர்கள் என்றார். 

சபாஷ்  கலெக்டர்.

என்ன இருந்தாலும் முதல்வர் ஜே இப்படி செய்திருக்கக் கூடாது!!?


ஜே, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைய, தன் நாக்கை துண்டித்து காணிக்கை செலுத்திய பெண்மணிக்கு, அரசு வேலை மற்றும் பண உதவி செய்த ஜெயலலிதாவின் செயல், தவறான அணுகு முறை என்றே எனக்கு தோன்றுகிறது.

அரசு வேலை , பண உதவிகள் அளிப்பது போன்ற விஷயங்கள் இது போன்ற தவறான செயல்களை மற்றவர்கள் செய்ய ஊக்குவிப்பதாகும்.

அப்பெண்மணியை, மன நல மருத்துவ மனையில் சேர்த்து ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருந்தால் அது சரியாக இருக்கும். இது மற்றவர்கள் இது போல செய்யாமல் தடுக்கும்.

இன்றைய அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் அரசியல் வாழ்வு சரியும்போது , பல தொண்டர்கள் உயிர் விடுவதை , தங்கள் செல்வாக்கின் அளவு கோலாக காட்டிக் கொ(ல்)ள்வது மிகவும் வருந்தத்தக்கது.

இனியும் இதுபோல செயல்களை அரசியல்வாதிகள் ஊக்குவிக்காமல் இருப்பார்களா?

6/06/2011

காதல் செய்கிற நிலையிலா இருக்கிறேன்? சீமான் ஆவேசம்


இயக்குனர் சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மட்டும் இல்லாது சினிமா வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை விஜயலட்சுமி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோச‌டி, கற்பழிப்பு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வலசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சீமானின் அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக இந்த சதியை நடத்துகிறார்கள் என்றும் உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது என்றும் சீமான் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது குறித்து சீமான் நேரில் விளக்கம் அளித்தால் தெளிவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இதனை அடுத்து ஒரு பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்திருக்கும் சீமான், காதல் செய்கிற நிலையிலா நான் இருக்கிறேன்? ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த எனக்கு ஈழ விவகாரங்களுக்கு போராடவும் ஈழப் படுகொலைகளை செய்தவர்களுக்கு எதிராக பரப்புரை செய்யவுமே நேரம் இல்லை.

படிக்கவும் தூங்கவும் நேரம் இல்லாத எனக்கு கண்டவர்களோடு டூயட் பாடுவது தான் வேலையா? ஏற்கெனவே இலங்கைப் புள்ளிகள் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையே சட்டை செய்யாத நான் இந்த மாதிரி சின்னத்தனமான அவதூறுகளையா பொருட்படுத்துவேன்? யுத்தக் களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்... என்று சீறுகிறார் சீமான்.

இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)



இது  ஒரு தொடர்க(வி)தை,  கவிதை வடிவில் உள்ள உண்மைக்  கதை..
கொஞ்சம் பொறுமை வேண்டும் இதைப் படிப்பதற்கு ....

ரவெல்லாம் விழித்ததில் 
பகலில்
சிவந்து போன கண்கள்..!

ளமையில் காதலித்ததால் 
முதுமையில்
சிந்திப்போன கண்ணீர் ...!

ரண்டும் 
என்காதலை
ஞாபகப்படுத்துகின்றன
என் தன லக்ஷ்மியை...!

புதைந்துப் போன 
நினைவுகளை
தோண்டி எடுக்கிறேன்...!

ன்னோடும் 
உன் நினைவோடும் 
பள்ளியில்
சுற்றித் திரிந்த 
என் அகராதியை 
புரட்டிப் பார்க்கிறேன்...!

ள்ளியில்  படிக்கும்
மாணவர்கள் நாம்
காலை முதல் 
மாலை வரை
வகுப்புகளில்
நம் முகங்கள் 
சந்தித்துக் கொண்டன ...!

ரு நாள் 
உன் தவறி விழுந்த
நோட்டுப் புத்தகத்தில் 
உன் பெயர் தான்
என்
முதல் கவிதைக்கு
முகவரி தந்தது...!

ன்றுதான் 
எனக்குள் என்னை 
அறிமுகப் படுத்தியது காதல்...!

னுபவம் இல்லாத 
அனுபவத்திற்கு 
என் முனகல்களை எல்லாம் 
முடிச்சுப்போட்டு 
எழுதினேன் காகிதத்தில் 
அது உன் கைகளில் 
கடிதமாக...!

று நாள்
கண்களில்
காதலைத் தேக்கிக்கொண்டும்,
மனதில் ஆசைகளைச் 
சுமந்துக் கொண்டும்,
ஆவலோடு உன் வருகைக்காக 
காத்திருந்தேன்...!

மாற்றம்... மாற்றம்...!

- தொடரும் !!!

6/04/2011

நடிகர் சிரஞ்சீவியை காணவில்லை!? போலீசில் பரபரப்பு புகார்?




 
நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த தேர்தலில் அவர் திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

6 மாதங்களுக்கு முன்பு அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக அறிவித்தார். இதன் பிறகு சிரஞ்சீவி கடந்த 3 மாதங்களாக திருப்பதி தொகுதிக்கு வரவில்லை. இந்நிலையில் திருப்பதி கால்நடை மருத்துவ கல்லுரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான சிரஞ்சீவியை சந்தித்து தங்கள் கோரிக்கை பற்றி மனு கொடுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர் கடந்த 3 மாதங்களாக தொகுதி பக்கமே வராததால் ஆவேசம் அடைந்தனர்

இதையடுத்து அவர்கள் திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகர் சிரஞ்சீவியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை. அவரை கண்டு பிடித்து தாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதைப் பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவர்களிடம், உங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மாணவர்கள் திருப்பதி நகரம் முழுவதிலும், திருப்பதி எம்.எல்.ஏ. சிரஞ்சீவியை காணவில்லை. அவரை கண்டு பிடித்து கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச்  செய்தியை படித்தபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது ஏன் எனில் இதே நம்ம ஊர் என்றால் இதுவரை எத்தனை புகார்கள் சேர்ந்திருக்கும் என நினைக்கும் போது  வேறு என்ன வரும் சொல்லுங்கள் நண்பர்களே?



6/03/2011

புதிய அரசின் திட்டங்கள் ஏமாற்றம் அளிக்கிறது வைகோ


முக்கிய பிரச்னைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள அ.தி.மு.க. அரசின் எதிர்காலத் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆளுநர் உரையில் இலவச அரிசி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களுக்கான உதவித் தொகை உயர்த்தி வழங்குதல், சட்டம் ஒழுங்கு சீரமைப்பு, அரசு கேபிள் திட்டம் மற்றும் மாநில நதிகள் இணைப்பு ஆகிய வரவேற்கத் தக்க அம்சங்கள் இருந்தபோதிலும் முக்கியமான பிரச்சினைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.


முந்தைய அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அறவே பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல.


சமச்சீர்க் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்படும் ஆய்வுக் குழுவுக்குக் கால நிர்ணயம் செய்யாமல் கண் துடைப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முழுமையாகவே ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.


சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடை முறைப் படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டு புதிதாக மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு ஆரோக்கியமானதல்ல.

 

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ, மின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவோ ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இடம்பெறவில்லை.

இலங்கைக் கடற்படையின் கொடூரமான தாக்குதலால் தமிழக மீனவர்கள் பலியாகி வரும் நிலையில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவோ, இந்திய அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டவோ, எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படும் நிலைக்கு உத்திரவாதம் தரும் வகையிலோ இல்லை என்பதை ஆளுநர் உரை காட்டுகிறது.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபட்சவுக்கு எதிராக ஐ.நா. மன்ற விசாரணைக் குழு அறிக்கை வெளியிடப்பட்டு, ராஜபட்ச போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கோரி வருகின்றன. 


தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக மக்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் எதிர் பார்த்திருக்கும்  வேளையில் ராஜபட்சவைக் கண்டித்தோ, இனப் படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தோ அ.தி.மு.க. அரசின் கருத்து ஆளுநர் உரையில் இடம் பெறாதது தமிழகத்திலுள்ள மக்களுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
 
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அரசியல்வாதிகளே விவசாயிகளை வாழவிடுங்கள்!?


உ.பி.,யில் அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும்(ஆட்டையை போடப்படும்) விளை நிலங்களுக்கு, இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளதென்றும், மேலும் நிலங்களை கையகப்படுத்தாமல் இருக்கவும், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்து, விவசாயிகள் தரப்பிலும், காவல் துறையில் சிலரும் உயிரிழந்துள்ளனர். போராட்டம் மேலும் தீவிரமடைந்து, உ.பி.,யின் இதர பகுதிகளுக்கும் பரவியது. 

பொதுவாக, இந்தியாவின் உணவுத் தேவை, கிராமப்புறங்களையும், அங்குள்ள பரந்த விளைநிலங்களையும் நம்பியுள்ளது. மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகளும், மத்திய அரசும்,பொருளாதார மண்டலங்களுக்காகவும், விமான நிலையங்கள், குடியிருப்பு விரிவாக்கம், தொழிற்பேட்டைகளை அமைக்கவும், சகட்டு மேனிக்கு விவசாய நிலங்களில் கை வைக்கும் அவலம் தொடர் கதையாக உள்ளது. 

மேலும், தண்ணீர் வசதி, வடிகால் வசதி பற்றாக்குறை காரணங்களால், கிராமப்புற நிலங்கள் வெகுவாக, பிளாட் போடப்பட்டு வீடுகளாய் மாறுகின்றன. விவசாயிகளுக்கு தேவைப்படும் நுகர்பொருட்களான, நேர்த்தியான விதைகள், உரங்கள், களைக் கொல்லிகள், பூச்சி மருந்துகள், போதிய அளவு கிடைக்காத காரணங்களாலும், அவர்கள் பெறும் கடன்களை அடைக்க முடியாமல், மன உளைச்சல் ஏற்பட்டு, தற்கொலைக்கு தள்ளப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. 

இதனால், விவசாயம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விதத்தில் நிர்ணயம் செய்யப்படாததும், நவீன விவசாய அறிவியல் முன்னேற்றங்கள், விரைவாக விவசாயிகளை சென்று அடையாததும், அவர்கள் மத்தியில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. 

விவசாயத்திற்காக வழங்கப்படும் இலவச மின்சாரம், உரிய நேரத்தில் வழங்கப்படாததும், ஒரு முக்கியமான காரணம். இத்தகைய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய விவசாயிகளுக்கு, தங்கள் நிலங்களில் பயிரிடுவதையே பெரிய பாரமாய் கருதும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய வேலைக்கு சரியான கூலி ஆட்கள் கிடைப்பது இல்லை. 

இந்நிலையில், வாழ்வாதாரமான விளை நிலங்களை, அரசு பெருமளவில் திட்டங்களுக்கு கையகப்படுத்துவதும், அப்படி கையகப்படுத்தும் போது, அவர்களுக்கு உரிய தொகையை தர மறுப்பது, அவர்களது வாழ்க்கையோடு, அரசு விளையாடும் செயல். கிராமங்களையும், அங்குள்ள விவசாயிகளையும் உருக்குலைக்கும் அரசு திட்டங்கள், "இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்ற அற்புதமான சொற்றொடரை பொய்யாக்கி விட்டன. நம் விவசாய பெருங்குடியினரை முடக்கி விடும் அபாயம் உருவாகி வருவதையே, உ.பி., கலவரங்கள் காட்டுகின்றன.

6/02/2011

ஆம் யார் இந்த பாபா ராம்தேவ் ?



ழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக, டில்லியில் நாளை மறுதினம் துவங்கும் தன் உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்,'' என, பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று அறிவித்தார்.
 
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தவர், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை, முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார். 

ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 4ம் தேதியில் இருந்து, டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். 

ஆம்  யார் இந்த பாபா ராம்தேவ் .,

சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ், ஓர் இந்திய இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். 

இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.