Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts
3/14/2013
11/10/2011
10/31/2011
6/09/2011
இது ஒரு காதல் க(வி)தை - 3 ( உண்மைச் சம்பவம்)
முதல் இரு பகுதிகளை படிக்க
இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)
இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)
இது பகுதி - 3
சரிதான்
என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
என்றுதான் நினைத்தேன்..
ஆனால்
என் நம்பிக்கை
வீண்போகவில்ல.
உன் கண்கள்
என்னையே
குறி வைத்தன.
எனக்குள்
ரகசியப் புன்னகை
புரிந்து கொண்டேன்.
சில
வினாடிக்குள்
என் அருகில்
நீ வந்தாய்.
இப்போதாவது
கூறிவிடு
உன் முடிவை என்றேன்.
காதலனை
தவிக்கவிடுவதில்
காதலிக்கு
ஓர் அற்ப சந்தோசம்
என்றாய்.
மனதிற்குள்
மழைத்துளி பெய்தது போல்
இருந்தது எனக்கு.
அன்றுமுதல்
ஏரிக்கரையும், ஆலமரமும்
நம்
மாலை நேர சந்திப்புகளின்
சின்னங்களாயிற்று!!!
ஒருநாள் சந்திப்பில்...
கடற்கரை மணல்வெளி
நதிக்கரை புல்வெளி
எது பிடிக்கும்? என்றாய்.
நான் சொன்னேன்,
மணல்வெளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும்
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும்
என்றேன்.
அப்போது
வெட்கப்பட்டு
சிணுங்கிப் போனாய்.
நாட்கள் நகர்ந்துப் போனது...
அன்றொருநாள்
அவசரமாய் ஓடி வந்து
நீ சொன்ன
செய்திகேட்டு
என் மூச்சு
நின்று போனது
ஒரு நிமிடம் ...!!!?
6/08/2011
இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)
இது பகுதி - 2
ஒரு நாள் ...
ஒரு வாரம் ...
ஒரு மாதம் ...
முகம் காட்ட
மறுத்துவிட்டாய் !
மனதிற்குள் கலவரம்
நீ என்னை
வெறுக்கின்றாயா?
விரும்புகிறாயா?
உன்னிடமே
கேட்டு விட தீர்மானம்
நிறைவேற்றிவிட்டேன்.
அன்று
உனக்கு முன்னால்
நீ போகும் பாதையை
நான்
ஆக்கிரமித்துக் கொண்டேன்.
அதோ வருகிறாய்
உன் பெயரை உச்சரித்தவுடன்
திசை மாறி
திரும்பிப் பார்த்தாய்.
அப்போதும் நீ
பேசவில்லை
உன் உதடுகள் தான்
ஒரு புன்னகை
புரிந்துவிட்டு போனது.
அதில்
என்னையே மறந்துப் போனேன்
என் காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?
மீண்டும் கலவரமானேன்!!!
அன்று
இரவு முழுவதும்
விடியலுக்காகவே
விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக
விடிந்தது...!மீண்டும் உன்முன்
உதயமானேன்,
நீ என்னை
உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!
சரிதான்
என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
6/06/2011
இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)
இது ஒரு தொடர்க(வி)தை, கவிதை வடிவில் உள்ள உண்மைக் கதை..
கொஞ்சம் பொறுமை வேண்டும் இதைப் படிப்பதற்கு ....
இரவெல்லாம் விழித்ததில்
பகலில்
சிவந்து போன கண்கள்..!
இளமையில் காதலித்ததால்
முதுமையில்
சிந்திப்போன கண்ணீர் ...!
இரண்டும்
என்காதலை
ஞாபகப்படுத்துகின்றன
என் தன லக்ஷ்மியை...!
புதைந்துப் போன
நினைவுகளை
தோண்டி எடுக்கிறேன்...!
உன்னோடும்
உன் நினைவோடும்
பள்ளியில்
சுற்றித் திரிந்த
என் அகராதியை
புரட்டிப் பார்க்கிறேன்...!
பள்ளியில் படிக்கும்
மாணவர்கள் நாம்
காலை முதல்
மாலை வரை
வகுப்புகளில்
நம் முகங்கள்
சந்தித்துக் கொண்டன ...!
ஒரு நாள்
உன் தவறி விழுந்த
நோட்டுப் புத்தகத்தில்
உன் பெயர் தான்
என்
முதல் கவிதைக்கு
முகவரி தந்தது...!
அன்றுதான்
எனக்குள் என்னை
அறிமுகப் படுத்தியது காதல்...!
அனுபவம் இல்லாத
அனுபவத்திற்கு
என் முனகல்களை எல்லாம்
முடிச்சுப்போட்டு
எழுதினேன் காகிதத்தில்
அது உன் கைகளில்
கடிதமாக...!
மறு நாள்
கண்களில்
காதலைத் தேக்கிக்கொண்டும்,
மனதில் ஆசைகளைச்
சுமந்துக் கொண்டும்,
ஆவலோடு உன் வருகைக்காக
காத்திருந்தேன்...!
ஏமாற்றம்... ஏமாற்றம்...!
- தொடரும் !!!
Subscribe to:
Posts (Atom)














