முதல் இரு பகுதிகளை படிக்க
இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)
இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)
இது பகுதி - 3
சரிதான்
என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
என்றுதான் நினைத்தேன்..
ஆனால்
என் நம்பிக்கை
வீண்போகவில்ல.
உன் கண்கள்
என்னையே
குறி வைத்தன.
எனக்குள்
ரகசியப் புன்னகை
புரிந்து கொண்டேன்.
சில
வினாடிக்குள்
என் அருகில்
நீ வந்தாய்.
இப்போதாவது
கூறிவிடு
உன் முடிவை என்றேன்.
காதலனை
தவிக்கவிடுவதில்
காதலிக்கு
ஓர் அற்ப சந்தோசம்
என்றாய்.
மனதிற்குள்
மழைத்துளி பெய்தது போல்
இருந்தது எனக்கு.
அன்றுமுதல்
ஏரிக்கரையும், ஆலமரமும்
நம்
மாலை நேர சந்திப்புகளின்
சின்னங்களாயிற்று!!!
ஒருநாள் சந்திப்பில்...
கடற்கரை மணல்வெளி
நதிக்கரை புல்வெளி
எது பிடிக்கும்? என்றாய்.
நான் சொன்னேன்,
மணல்வெளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும்
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும்
என்றேன்.
அப்போது
வெட்கப்பட்டு
சிணுங்கிப் போனாய்.
நாட்கள் நகர்ந்துப் போனது...
அன்றொருநாள்
அவசரமாய் ஓடி வந்து
நீ சொன்ன
செய்திகேட்டு
என் மூச்சு
நின்று போனது
ஒரு நிமிடம் ...!!!?











