Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/25/2013

இதைக் கேட்டால் நீங்களும் பெரியமனுசனே...!


மன்னிப்பு என்ற வார்த்தை சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதற்கும் கொடுப்பதற்கும் இரு பரந்த மனசு வேண்டும்.பெரிய பெரிய பிரச்சனையைக் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டுவரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு.

தெரியாமல் தவறு செய்யும்போது  மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொள்வது.

மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்- என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். இன்றைய சூழலில் அப்படிப்பட்ட சூழல் காணக்கிடைப்பது அரிது. ஈகோ, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பல விஷயங்களால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது.

பலருக்கு தான் செய்தது தவறென்று தெரிந்தும் அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம் கொடுப்பதில்லை. என்னதான் நண்பனாக, சொந்தக்காரனாக, , கணவன,மனைவியாக இருந்தாலும் வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, அதை ஏற்றுக்கொள்வதிலோ இருப்பதில்லை.

உதாரணமாக, வகுப்பில் ஒரு மாணவன் எதையாவது பொய் சொல்லிவிட்டு விட்டு அதை அவன் உணர்ந்து மன்னிப்பு கேட்கும்போது  இனி இப்படி செய்யக்கூடாதென்று அறிவுறுத்தி அதை மன்னித்து விட்டுவிட வேண்டும்.

அதைவிடுத்து அன்றிலிருந்து அவன் என்ன சொன்னாலும் பொய்யாக இருக்கும் என்று சந்தேக கண்ணோடு பார்க்கக் கூடாது. இந்த நோக்கு அவனை மீண்டும் பொய் சொல்ல தூண்டுமே தவிர ஒருபோதும் திருத்தாது.

நம்மில் பலர் இந்தத் தவறினை செய்கிறோம். கேட்கப்படும் மன்னிப்பை தற்காலிகமாக வழங்கிவிட்டு, மனதில்  அவர் செய்த தவறினை நினைத்துக்கொண்டே இருக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் அதை சொல்லிக்காட்டி குத்திக்கொண்டே இருப்பது இதுபோன்றவர்களின் வழக்கம். 

இது வெளியாட்களுக்கிடையே நடக்கும்போது ஏற்படும் பாதிப்பை விட, நேசிப்பவர்களுக்கிடையே நடக்கும் சந்தர்ப்பங்களில், அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே ஒரு முறை மன்னித்த தவறை அடுத்து நாம் மறந்துவிட வேண்டும்.

அதையே ஒவ்வொருமுறையும் நினைவுபடுத்தி தன்னையும் வருத்தி, சம்மந்தப்பட்டவரையும் வருத்தப் பட வைக்க வேண்டாம்.

எனவே, மறப்போம் மன்னிப்போம்...

9 comments:

  1. ஒரு முறை மன்னித்த தவறை அடுத்து நாம் மறந்துவிட வேண்டும்.//உண்மைதான்

    ReplyDelete
  2. /// ஒரு முறை மன்னித்த தவறை அடுத்து நாம் மறந்துவிட வேண்டும்...///

    √√√

    ReplyDelete
  3. தப்பு செய்வது என் பிறப்புரிமை ..மன்னிப்பதும் ,மன்னிக்காததும் பிறர் உரிமை !அதில் நான் தலையிடுவதும் இல்லை ...இதுதான் என் கோமா பாலிசி !

    ReplyDelete
  4. மிக்க நன்றி கருன். மிக அருமையான ஆக்கம் ஒன்றைத் தந்தமைக்காக, உங்களுக்கு பாராட்டுக்கள்! எவ்வளவுதான் கோபம் சண்டை வந்தாலும் அதையெலாம் ஏன் மனசில் வைச்சிருக்கணும்??

    சரிதான்.., இன்னொரு விஷயம் கருன், நாம் மன்னிப்புக் கேட்கும் போது அதை அலட்சியம்ம் செய்து, மன்னிப்புக் கேட்டதை மதிக்காமல் விடும் போது நமக்கு மன்னிப்புக் கேட்கும் மனநிலையே மாறிவிடுகிறது...!!

    ஆனால் நீங்கள் சொல்வது போல, ஈகோ பார்க்காமல் மன்னிப்புக் கேட்ட்டுவிட்டால், எல்லோரும் நம் நண்பர்களே!!

    மிக அருமையான ஆக்கம்!!!

    ReplyDelete
  5. அருமையா சொல்லியிருக்கீங்க...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. "மறப்போம் மன்னிப்போம்."

    ReplyDelete
  7. மன்னிப்பு பகையை குறைக்கும் நட்பை மலர வைக்கும். ஒரு சில வேளைகளில் மன்னிப்பை சாதகமாக எடுத்து கொண்டும் மீண்டும் அதே தவறுகளை தொடர்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது போன்றவர்களை விலக்கினால் போதும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"