Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

3/05/2011

திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா

திமுகவின் முடிவை வரவேற்பதாகவும், வரும் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.த்திய அரசில் இருந்து திமுக விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.







சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முடிவடைந்த பிறகு, திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் முடிவு கூட்டணியை வலுவிழக்கச் செய்யாது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். நன்றி நக்கீரன்.

முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2. மாணவர்களின் எதிர்காலம்                                                                                3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார்


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

மனதை தொட்ட கவிதைகள்



 1.

ரு
இலக்கணம் தெரிந்து
நான்,
கவிதை எழுதவில்லை
எனினும் எழுதுகிறேன்
நம்புவது,
தமிழை அல்ல
உன்   அழகை...!

**********************************************************************************
 2.

பெண்ணே...
கொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
என்
எதிர்வீட்டுக் குழந்தை
சாப்பிட மறுக்கிறது...!

**********************************************************************************
 3.


ற்செயலாய்
வாசல் வந்து
நீ...
நின்றபோது
உன் அம்மா
“உள்ளேப் போ”
என்று சொன்னது
என் இதயத்திற்குள்
போகத்தானா?

**********************************************************************************
 4.


ன்னுடன்
பேசிவிட்டு வந்த
உரையாடலை,
கலைக்க மனமில்லாமல்
மற்றவர்கள் மத்தியில்
மரமாய்...!

**********************************************************************************
 5.


ப்படி
பாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”...!

**********************************************************************************



முந்தைய பதிவுகள்:  



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

3/04/2011

தேவையா இந்தக் கொண்டாட்டங்கள்....


நீதிமன்றம் கொடுத்த தைரியத்தைத் தொடர்ந்து, "பஸ் டே கொண்டாடும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, காவல் துறை அறிவித்துள்ளது, பாராட்டத்தக்கது.இதுவரை தமிழக மாநகர காவல் துறை, "பஸ் டே' அட்டூழியங்களை அனுமதித்து வந்தது. தற்போது, நீதிமன்றம் தலையிட்டதால், காவல்துறைக்கு தெம்பு வந்து, களத்தில் குதித்துள்ளது. 

மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...இதை ஒரு கவுரவப் பிரச்னையாக்கி, காவல் துறையிடம், "மல்லு' கட்டாமல், தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி, தலைசிறந்த குடிமகன்களாக மாற வேண்டும்."நூறு இளைஞர்களைத் தாருங்கள், வலிமைமிக்க பாரதத்தை உருவாக்கி காட்டுகிறேன்' எனக் கூறினார் விவேகானந்தர். இளைஞர்களின் சக்தி அளப்பரியது. அது, "பஸ் டே' போன்ற அருவெறுக்கத்தக்க விஷயங்களில் செலவாவதை, மக்கள் விரும்பவில்லை.

யுத பூஜை அன்று மக்கள், தம் தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகளை சுத்தம் செய்து, கும்பிட்டு மகிழ்வர். பொங்கலன்று, கலப்பை, உழவு மாடுகளை அலங்கரித்து, மகிழ்வர்.ஆனால், "பஸ் டே' அன்று, பஸ்கள் படும்பாடு, குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதி தான். ஆண்டு முழுவதும் தங்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல உதவும் பஸ்சுக்கு, மாணவர்கள் காட்டும் கைமாறா இது?

ந்தனம் அரசு கல்லூரி, பச்சையப்பன் கல்லூரிகளைத் தொடர்ந்து, விவேகானந்தா கல்லூரி மாணவர்களும், பஸ்தின கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.ஒரு கல்லூரி, கால்பந்து விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றால், நாமும் அது போல் பயிற்சி எடுத்து, பதக்கம் வெல்ல வேண்டும் என துடிப்பதில் அர்த்தம் உண்டு.ஆனால், "அவர்கள் பஸ் தினம் கொண்டாடிவிட்டனர்; நாமும் கொண்டாட வேண்டும்' என, மாணவர்கள் நினைப்பது, அர்த்தமற்ற, அவசியமற்ற, தேவையற்ற, குறிக்கோளற்ற, சிந்தனையற்ற செயல்.
Thanks Dinamalar. 

முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2. மாணவர்களின் எதிர்காலம்                                                                                3 . இந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம்

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

தேர்தல் வருகிறது உஷார் - ஓரு அவலநிலை

ன்றைய இந்திய ஜனநாயகம் ஊழல்வாதிகளிடமும், கிரிமினல் மாஃபியாக்களிடமும், பணமுதலைகளிடமும், பேராசை பிடித்த வாரிசுகளிடம் சிக்கிக்கொண்டு, மனசாட்சியற்ற  மக்களாட்சியாக மாறிவிட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம்,  சில அரசியல்வாதிகள் பெற்ற ஆதாயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும்,  அரசு வழங்கும் மானியங்களையும் முடிச்சுப் போட்டுப் பேசுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.


கூட்டணிக்கட்சி  வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபட்டாலும், தடுக்க முடியாததற்குக் காரணம் கூட்டணி தர்மம் என்று  நா  கூசாமலும், வெட்கம் இல்லாமலும் திருவாய்  மலர்கிறார்.

லகளவில் நடைபெறும், உலகமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் ஒரு  அமைச்சர் பயமே இல்லாமல் ஊழல் செய்கிறார். 

மிக மோசமான நிதி நிர்வாகத்தாலும், அதிக சம்பளச்சுமையாலும்,  இலவசப் போலிக் கவர்ச்சி  திட்டங்களாலும், கரைபுரண்டு ஓடும் ஊழல்களாலும், டாஸ்மார்க் சாராய வருமானத்தையும் மீறி தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்ட நிலையில், எல்லா வகை புதிய திட்டங்களுக்காகவும் வெளிநாட்டு வங்கிகள், உலக வங்கி ஆகியவற்றிடம் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 
 
னால் நிதியமைச்சரோ "தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்று  பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். முதல்வரோ, "ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்'' என்றுகூறி தமிழ்நாட்டை  கேவலப்படுத்துகிறார்.
 
ழல்களில்  ஊறிப்போன,  நாக்கில் நரம்பில்லாமல் பேசும், சொந்தத் தொகுதி பக்கமே தலைகாட்டாமல் இருக்கும், அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்க்கும், குடும்ப உறுப்பினர்களை அரசியலில் களமிரக்கும். Etc.. அரசியல்வாதிகளுக்கு யார் கொடுத்தது இந்த துணிச்சல் . அவர்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது.

ரு ஓட்டிற்கு 1000, 2000 ரூபாய்,  ஒர் ஆப்ஃ பாட்டில், ஒர் குவாட்டர் பிரியாணி கொடுத்தால் சில மட்டி ஜனங்கள் ஓட்டு பொட்டுவிடுவார்கள் என்கிற நினைப்பு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது.

க்களாகிய  நாம்தான் அவா்களுக்கு இந்த துணிச்சலையும், நினைப்பையும்  கொடுத்தோம். நம்முடைய  ஓட்டின் முக்கியத்துவம் தெரியாமல் கண்டகழிசடை நாய்களுக்கு (மன்னிக்கவும்) ஓட்டுப் போட்டு அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்து அழகுபார்த்தோமே நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.
 
தோ வருகிறது இன்னும் ஓரு தோ்தல்..  இந்த தேர்தலாவது பணபலம், ஆள்பலம், இன்னபிற அவலங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, ஓரளவு கண்ணியமாக நடைபெற்றால்தான் தமிழகத்தின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அதற்கு  தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு வேண்டிய உண்மையான முயற்சிகளை எடுக்கத் தேர்தல் ஆணையம் முயற்சி  செய்ய வேண்டும். ஊடகங்களும் இதற்கு துணைபுரிய வேண்டும். நம் பதிவுலகமும் இதற்கு ஆதரவு தரவேண்டும். 


முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2. மாணவர்களின் எதிர்காலம்                                                                                3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார்


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

3/03/2011

மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் தேர்தல் பயங்கரம்

மிழக சட்ட சபைக்கு ஏப்ரல் 13-ந்தேதி தேர்தல்  நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டம் 10-ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுக்கு மும்முரமாக தயாராகும் நேரம் ஆகும்.

மிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு என்னவோ மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி முடிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 13-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ந்தேதியாக இருந்தாலும் அதற்கு ஒரு மாதம் முன்பே மாணவர்கள் தேர்வுக்காக கன்டிப்பாக தயாராவார்கள். 


 ந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். மைக் செட்டுகள் வைத்து தானைத் தலைவர்களின் புராணம் பாடுவார்கள்.  ஓட்டு பிச்சைகளுக்காக விடுவீடாக கையேந்துவார்கள்.  


வீதியெங்கும் சினிமா பாடல்களும், தலைவர்களின் துதிபாடல்களும் கலைகட்டும். இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.  அவர்களின் சிந்தனைகள் சிதறும். இதனால் பல மாணவர்களுடைய எதிர்காலம்  பாழாகும் அபாயம் இருக்கிறது.

மேலும் பல்வேறு பல்கலைக்கழக தேர்வுகளும் ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி மே 2-ந் தேதி முடிகிறது. தேர்தல் ஏப்ரல் 13-ந்தேதி நடத்தப்பட்டால் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வு தேதியை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை முடிவு செய்து இருக்க வேணடும்.

ரசியல்வாதிகளே உங்கள் அரசியல் விளையாட்டுகளை நாளைய சாதனையாளர்கள் மேல் தினிக்காதீர்கள்..  இதிலாவது ஒன்றுபட்டு தேர்தல் தேதியை தள்ளிவைக்க முயற்சி செய்யுங்கள்...
( இந்த படத்திற்கும் ‌ பதிவிற்கும் சம்பந்தம் இல்லைன்னு  சொன்னா நம்பனும்)



 முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                                   2 .  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                 3 . இந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம்

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

3/02/2011

இந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தெரியவில்லை




ட்டு குட்டியை
மடியில்போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்,
மாட்டுக்கு
லாடம்கட்ட
ஆணி அடித்துக் கொண்டிருக்கும்
அப்பாவும்,
படிக்கவில்லை
“ உயிர்களிடத்தில் அன்பு வேணும் ” 
( நன்றி இளம்பிறை)



ம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!



சிறகுகளை இழப்பதா?
அதைவிட எளிது
உயிர் விடுவது...!


 குடிப்பழக்கத்தை
விடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!


முந்தைய பதிவுகள்:     1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
                                                     2.  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                 3. இனி சன்டேன்னா சினிமாதான்...


யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....

3/01/2011

விடுதலைப்புலிகளை தோற்கடித்தது எப்படி - ரோஷன் குணதிலக்க


விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்துக்கு பேரிழப்பாக அமைந்ததாக இலங்கை விமானப்படைத் தளபதி ரோஷன் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

விரைவில் விமானப்படை பதவியில் இருந்து ஓய்வுபெற உள்ள அவர் கடந்த கால அனுபவங்கள் பற்றி பேசுகையில் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலர் நீண்டகாலமாக விமானப்படையால் இலக்கு வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதில் தமிழ்ச்செல்வனும் ஒருவர்.

அவர் கிளிநொச்சியில் தங்கி இருக்கும் இடம் பற்றி 2008 நவம்பரில் புலனாய்வுத் தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து அவரது மறைவிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி கிடைத்தது.

அவரது மறைவால் விடுதலைப் புலிகள் தலைவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அவர்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்தார்கள். அதன் காரணமாக இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது எளிதாக இருந்தது என ரோஷன் குணதிலக்க தெரிவித்ததாக இணையதளச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி தினமணி. 
நாளை +2 தேர்வுகளுக்காக ஆயத்தப்பணிகளில் இருப்பதினால் இன்று இன்ஸ்ட்டென்ட் பதிவுகளே...

முந்தைய பதிவுகள்:     1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
                                                  2.  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                3. இனி சன்டேன்னா சினிமாதான்...


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

தனியார் கல்வி நிறுவன பயங்கரங்கள் - ஓர் அலசல்

மிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டு, இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன என்றாலும், இது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்காமல் தள்ளி வைத்தது.

துபோன்ற பிரச்னைகளைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தும் நேரத்தில் கல்வி நிறுவனங்கள் எழுப்புவதும், அரசும் இந்தப் பிரச்னையை ஏனோதானோ என்று முடித்துவிடவும், ஓரளவு உயர்த்திக்கொள்ள அனுமதிப்பதுமாக இருக்கிறதே தவிர, இதனை ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பாகவே விவாதித்து, முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

இதனால் அரசுக்கோ அல்லது தனியார் கல்லூரிகளுக்கோ பெரிய இழப்பு இல்லை. பொருளிழப்பும் அதே நேரத்தில் மனஉளைச்சலும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்தான் ஏற்படுகின்றன.

ல்விக் கட்டணம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் சுமையாக இருக்கிறது என்பது ஒவ்வொரு குடும்பத்தினரும் உணரக்கூடியதுதான். அது மழலையர் பள்ளி என்றாலும், மருத்துவக் கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்லூரி என்றாலும் அபரிமிதமான கட்டணமாகவே இருக்கின்றன.


ந்தச் சுமையைக் குறைக்க வேண்டியது அரசின் மிகப்பெரும் கடமை. இந்தச் சுமையை இரு வழிகளில் குறைக்க முடியும். ஒன்று, கல்லூரிகளின் கட்டணத்தை அதன் தரத்துக்கு ஏற்ப குறைப்பது. இரண்டாவது, மாணவர்களின் "கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிப்பது.

ற்போது தனியார் கல்லூரிகள் அனைத்திலும் ஒரே விதமான கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. கலந்தாய்வின் கடைசிநாள் வரை இடங்கள் காலியாக இருக்கும் கல்லூரியின் கல்விக் கட்டணமும், முதல் நாளிலேயே இடங்கள் நிரம்பிவிடுகிற கல்லூரிக்கும் ஒரே விதமான கல்விக் கட்டணத்தைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் தீர்மானிக்கும் என்றால், கல்வியின்  தரத்தைப் பற்றி பல்கலைக்கழகம் அல்லது அரசின் கருத்துதான் என்ன?

ற்போது வெறுமனே தேர்ச்சிபெற்றிருந்தாலே போதும் என்கிற அளவுக்குப் பொறியியல் கல்விக்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டு, அனைவரும் தனியார் கல்லூரியில் சேரும் வாய்ப்பை விரிவுபடுத்திக் கொடுத்திருக்கும் தமிழக அரசு, இந்தக் கல்லூரிகளை ஏன் தரப்படுத்தி, கட்டணத்தை வகைப்படுத்தக்கூடாது?

லந்தாய்வு தொடங்கிய 5 நாள்களில் எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்தப் பாடப்பிரிவுகளில் இடம் நிரம்பி விடுகிறதோ அவர்களுக்கு மட்டும் அதிகபட்சக் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கலாம். அடுத்த 5 தினங்களில் இடங்கள் நிரம்பிவிடும் கல்லூரிகள் அல்லது அக் கல்லூரியின் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 20 விழுக்காடு கல்விக் கட்டணத்தைக் குறைக்கலாம்.


தே போன்று பல அடுக்குகளில் கல்விக் கட்டணம் அமைக்கப்படுமேயானால், மாணவர்கள் பயன்பெறுவதுடன், கல்லூரிகளும் தங்கள் பாடப்பிரிவைத் தரமாக மாற்றி மக்கள் மனதில் இடம்பிடிக்க முயற்சிகள் செய்யும். கல்வியின் தரம் தானே உயரும்.

ல்லது மாணவர்களின் "கட்-ஆப்' மதிப்பெண் அடிப்படையில் கல்விக் கட்டணத்தைத் தீர்மானிக்கலாம். ஒரு மாணவர் "கட்-ஆப்' மதிப்பெண் 190 இருந்தும்கூட, அவர் விரும்பிய பாடப்பிரிவு, அரசுக் கல்லூரிகளில் இல்லை என்பதாலேயே தனியார் கல்லூரியைத் தேர்வு செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார். 


ரசு போதுமான அளவு கல்லூரிகளை உருவாக்காத குற்றத்துக்காக, தனியார் கல்லூரிகளை அனுமதித்திருக்கிறது என்பதற்காக, நன்றாகப் படித்த ஒரு மாணவரும் அதிகபட்சக் கல்விக் கட்டணத்தைச்  செலுத்த வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

துபற்றிய முடிவுகளை, மாணவர் சேர்க்கை தொடங்கிய பின்னர் அவசர அவசரமாகக்  கூட்டம் நடத்தித் தீர்மானிப்பதைக் காட்டிலும், இப்போதே இந்தப் பிரச்னையைப் பேசி, மக்களுக்கும் மாணவர்களும் பயன்படும் வகையில் கட்டணத்தைத் தீர்மானிப்பது அரசின் கடமையல்லவா?


நன்றி தினமணி.
 

முந்தைய பதிவுகள்:     1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
                                                  2.  இந்திய வெளியுறவுத் துறை                                                                                                3. இனி சன்டேன்னா சினிமாதான்...

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

2/28/2011

சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?


மக்கு தெரியாமலே
நாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!

***********************************************************************************


னம் வளர்க்கும்
தற்கொலை படைகள்
இலைகள்...!

***********************************************************************************


பாலின் மேலாடை
பார்த்துக் கொண்டே இருந்தாள்
கிழிந்த சேலையோடு
அம்மா...!

***********************************************************************************


டுத்த வீட்டு அண்ணன்
மாலை போட்டு இருக்கிறார்...
பத்து வயதுக்கு மேலேயும்
அறுபது வயதுக்கு கீழேயும்
சாமிக்கு பிடிக்காதுன்னு
சொல்றா அக்கா
ஏம்மா?

***********************************************************************************

 
ந்த வகையிலாவது
எவரையாவது
சமாதானப்படுத்திக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
தினம் தினம்
யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!

***********************************************************************************

முந்தைய பதிவுகள்: 1. அறிவியலும், சில காதல் கவிதைகளும்...                                                                      2. இந்திய வெளியுறவுத் துறை                                                
                                             3. இனி சன்டேன்னா சினிமாதான்...


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

2/26/2011

விலைவாசி உயர்வு விபரீதம் - பகீர் ரிப்போர்ட்


கைப்பேசி வைத்துள்ள பலருக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கும்.  பலருக்கும் இந்த  மீன்கதை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கதையை மேலும் மெருகூட்டிப் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடையில் கூட்டத்துக்குப் பஞ்சமே இருக்காது. இறைச்சி விலை தாறுமாறாக ஏறிவிட்டதால் இப்போது கூட்டம் குறைந்துவிட்டது. 

நண்பர் விலை கேட்டார். கிலோ ரூ. 300-க்கு செம்மறிஆடுதான். ரூ. 400 இருந்தால் வெள்ளாட்டுக்கறி. இப்போது ஐயப்பர் சபரிமலை சீசன் முடிந்துவிட்ட நிலையிலும் விலை இறங்கவில்லை என்கிறார் இறைச்சிக் கடைக்காரர். மீன் விலை கேட்டார். கட்லா ரூ. 200 என்றதும்  மயங்கிவிட்டார். நாட்டுக்கோழியும் கிலோ ரூ. 300 கூடுதல் விலை. வெள்ளைக்கோழி விலை நூறுதான். இந்த சீக்குக் கோழியை உண்பதைவிட சும்மா இருக்கலாம் என்று அலுத்துப்போன நண்பர், ஒரு தூண்டில் தயார் செய்து குளத்தில் மீன்பிடிக்கப் போனார். 

சிக்கின சில கெண்டைகள். வீட்டுக்கு வந்த நண்பர் மனைவியை அழைத்து மீன்குழம்பு வைக்கச் சொன்னார். அதற்கு அந்த அம்மணி, "" சாமி நான் கடையிலே சாமான் வாங்கப் போனேன். வெங்காயம் கிலோ ரூ. 100, பூண்டு கிலோ ரூ. 600, கசகசா கிலோ ரூ. 300, தேங்காய்1 ரூ. 10, சீரகம் கிலோ ரூ. 400, ரூ. 150-க்குக் குறைவாக எந்தச் சமையல் எண்ணெயும் இல்லை. துவரம்பருப்பு வாங்கப் போனேன், எந்தப் பருப்பு வாங்கினாலும் கிலோ 100 ரூபாயாம். விறகு கிலோ ரூ. 10 -  கேஸ் இல்லை. மண்ணெண்ணெய் இல்லை. எப்படி சாமி சமைப்பது?''

"சரி, அம்மணி இந்த மீனை என்ன செய்ய?''

" நீங்க குளத்திலேயே விட்டுடுங்க சாமி''

அந்த நண்பர் மீண்டும் குளத்துக்குச் சென்று கெண்டை மீன்களைக் குளத்தில்விட்டார். அப்போது அம்மீன்கள் பேசினவாம்:

 ""கலைஞரின் உயிர்காக்கும் திட்டம் வாழ்க''

இந்தியாவில் உணவுப் பொருள் விலை ஏற்றத்துக்கு இரண்டு, மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, பணவீக்கம். அதாவது, இன்ஃப்ளேஷன். இரண்டாவது, பற்றாக்குறை. மூன்றாவது காரணமும் உண்டு. போக்குவரத்துச் செலவு.

 பணவீக்கம் மொத்தவிலைக் குறியீட்டெண்ணால்தான் அளவிடப்படுகிறது. கடந்த ஓராண்டில் மொத்த விலைக்குறியீட்டெண் - ஹோல் சேல்ஸ் பிரைஸ் இண்டக்ஸ் - 10 சதவீதம் உயர்ந்துள்ளது. உண்மையில் சில்லறை விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கவனித்தால் பணவீக்கம் 30 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்குக் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதங்கள் எழுதுவதுபோல் நமது பிரதமரும், ""இன்னும் ஒரே மாதத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம். விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம்'' என்று கி.பி. 2009-லிருந்து மாதம் ஓர் அறிக்கை விடுகிறார். பத்திரிகை நிருபர்களுக்குச் செய்திகள் வழங்கியவண்ணம் உள்ளார்.

இப்படி புதுதில்லியில் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு தாகம் ஏற்பட்டால் பெப்சி வழங்கும் மினரல் வாட்டரைக் குடித்தவண்ணம் அடிக்கடி ஒன்றுகூடி அமைச்சர்களும் அரசுச் செயலர்களும் கோப்புகளைப் பார்த்து என்ன பயன்?

 உணவு உற்பத்தி உயர விவசாயம் செய்கிறார்களா? விவசாயம் செய்யப் போதிய நிலம் உள்ளதா? உற்பத்தி குறைவது ஏன்? மண்வளம் இழப்பது ஏன்? மண்ணை வளப்படுத்தி வளம்குன்றா விவசாயம் செய்ய என்ன செய்யலாம்? விவசாயிகளின் பிரச்னைகள் என்ன? வேலைக்கு ஆள்கள் கிடைக்காதது ஏன்? நிலம் இருந்தாலும் போதிய பாசன நீர் உள்ளதா? மேல்மட்டக் கிணறு, ஏரி, குளங்களை நிரப்புவது எப்படி? என்று பல கேள்விகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் பொறுப்புடன் பதில்களை வழங்க அவர்கள் களத்தில் இறங்கவேண்டும். நேரடியாகப் பல கிராமங்களுக்குச் சென்று கிராமங்களில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

வாரம் ஒருநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளைச் சந்தித்துப் பேசுவது போதாது. விவசாயிகளைத் தேடி ஆட்சியாளர்கள் வந்து நேரில் பார்த்தால்தான் பிரச்னைகள் புரியும். நமது மத்திய விவசாய அமைச்சரைப் பொருத்தவரை விளைநிலங்கள் கிரிக்கெட் மைதானங்களாக மாறவேண்டும். விமானநிலையங்களாக வேண்டும். எண்வழிச் சாலைகளாக வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று நிலம் வாங்கி பருப்பு, புஞ்சை தானியங்களைச் சாகுபடி செய்யலாம் என்று அற்புத யோசனைகளைக் கூறுகிறாரே தவிர, உள்ளூரில் உற்பத்தி உயர வழி செய்வது இல்லை.

 இந்தியாவில் இப்போது அந்நியச் செலாவணி கணிசமாக உள்ளது என்பதால் என்ன பிரச்னை வந்தாலும், உணவு விலை சிகரத்தைத் தொட்டாலும் இறக்குமதி செய்து சரிசெய்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டதால் வரும் வினைகள் இவை. வெங்காயம் பாகிஸ்தானில் விளைகிறது. தக்காளி அமெரிக்காவில் விளைகிறது. துவரை கென்யாவிலும் தான்சேனியாவிலும் விளைகிறது. 

உளுந்து பர்மாவில் உண்டு. கபூலி சென்னா (வெள்ளைக்கடலை) காபூலில், ஆஸ்திரேலியாவில், துருக்கியில் விளைகிறது. (கருப்புக்கடலை இந்தியாவில்தான் விளைகிறது) பட்டாணிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் கோதுமை, தாய்லாந்தில் அரிசி, பிலிப்பைன்ஸில் தேங்காய், பிரேசிலில் வேர்க்கடலை, சீனத்தில் எள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சூரியகாந்தி கோப்புகளில் உள்ள விவரங்கள் இப்படித்தான் பேசும்.( நன்றி  தினமணி)

 எந்த நாட்டிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்யலாம்? என்று படித்துவிட்டு அமைச்சர்கள் யோசிக்கிறார்கள். நிலைமை முன்பு மாதிரி இல்லை. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம் உணவு உற்பத்தியைப் பாதித்துவிட்டது. அந்தந்த நாடுகளிலும் போதிய வழங்கல் இல்லை.

கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலைக்காப்புறுதித்திட்டம் - நூறு நாள் வேலைவாய்ப்புக்காக பணம் புழங்குகிறது. இரண்டாவதாக, மகளிர் சுயஉதவிக்குழு மூலம் உறுப்பினர்களுக்கு 1 வட்டிக்கடன் வழங்குவதன் மூலம் பணப்புழக்கம் உள்ளது. உண்மையில், இப் பணப்புழக்கத்தால் விவசாயத்தில் உற்பத்தி உயர வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் உண்மையில் விவசாயத்துக்கு வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்திவிட்டது. வேலை செய்யாமலேயே நூறுநாள் சம்பளம் கிடைத்துவிடுகிறது.

 ஒரு மணிநேரம் உருப்படியாக வேலை செய்தால் பெரிய விஷயம். இந்த வேடிக்கையை தினம் பார்க்கிறேன். மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு வழங்கப்படும் "மைக்ரோ ஃபைனான்ஸ்'' கிராமங்களில் சிலர் மட்டுமே கந்துவட்டி செய்த காலம் போய், கந்துவட்டி பெரிய அளவில் பெண்களின் தொழிலாக மாறிவிட்டது. யாரும் விவசாயத்துக்கோ, வேறு தொழில் உற்பத்திக்கோ சுய உதவிக்குழுவின் பணம் முதலீடுகளாக மாறிப் பயன் தராமல், உபயோகமற்ற செலவுகளுக்கே உதவுகிறது. கந்துவட்டிப் பெண்களிடம் மாட்டுபவர்களுக்கு வேறு நரகம் வேண்டாம்.

 மேற்படி விஷயத்தை இங்கு நான் கூறுவதற்கு வேறு காரணமும் உண்டு. நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஏழைகள் பணக்காரர்களாகி அவர்கள் தேவை உயர்ந்துவிட்டதால் விலை உயர்ந்துவிட்டதாம். விலை ஏற்றத்துக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்துக்கும் நிபுணர்கள் இப்படி முடிச்சுப் போடுகின்றனர்.

 உண்மையில் அப்படிப் பெற்ற பணம் கந்துவட்டிக்குப் போகிறதே தவிர, வெள்ளைப்பூண்டும், வெங்காயமும், தக்காளிப் பழத்தையும் அப்போதும் வாங்கினார்கள். இப்போதும் வாங்குகிறார்கள்.

 பணம் எங்குதான் புழங்கவில்லை? திட்டமிடப்பட்ட பல செலவுகளுக்கும்தான் பணம் புழங்குகிறது. கருப்புப்பணம் எங்கெல்லாமோ புழங்குகிறது. பணப்புழக்கத்தால் பணமதிப்பு குறைந்து பொருள்விலை கூடுவது இயல்பு. அமைப்புரீதியான தொழிலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் சம்பளம், டி.ஏ. உயர்வு காரணமாகவும் பணம் புழங்கி வீக்கமடையவில்லையா?

 ஆனால், அடிப்படையான விஷயம் தேவைக்கு ஏற்ப ஒரு பொருளின் வழங்கல் இல்லாததுவே. அதாவது பொருளின் பற்றாக்குறை. பொருளின் பற்றாக்குறையுடன் பணவீக்கமும் சேர்ந்து எட்டமுடியாதபடி விலைஉயர்வு விண்ணை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.

பணவீக்கத்துக்கு நிகராகப் பொருள் உற்பத்தி உயர்ந்தால் விலை ஏறுவது கட்டுப்படும். உணவுப்பொருள் விஷயத்தில் அரிசி, கோதுமைபோல் மக்காச்சோளத்துக்கு விலைக்கட்டுப்பாடு இல்லை. மக்காச்சோளம் ஏற்றுமதியும் ஆகிறது. ஆனால், மக்காச்சோளத்தின் விலை ஏற்றம் குறைவு. 

சில்லறை விலை ரூ. 13 அல்லது ரூ. 14 தான். கடந்த ஆண்டு வரையில் ரூ. 12 தான். மக்காச்சோளத்தின் முக்கியத்தேவை கோழி - மாட்டுத்தீவனம். பின் மனிதத்தேவை. மக்காச்சோளம் உற்பத்தி பெருகியதைப்போல் வெள்ளைச்சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, உளுந்து, துவரை, கடலை, பாசிப்பயறு, மசூர், பட்டாணி உற்பத்திகள் ஏன் உயரவில்லை?

 பணவீக்கம் விலை ஏற்றத்துக்குரிய காரணம் என்றால் நோட்டு அச்சடிப்பதையும், கருப்புப்பணத்தையும் நிறுத்தினால் போதுமே. அமைப்புரீதியான பணக்காரத் தொழிலாளர்களாயினும், அமைப்புரீதியற்ற ஏழைத் தொழிலாளர்களும் சரி, வரக்கூடிய வருமானம் அனைத்தையும் உணவு வாங்கச் செலவழிப்பதில்லை. ஒருசாரார் டாஸ்மாக் கடைகளில் சாராயத்துக்குச் செலவழிக்கிறார்கள். ஒருசாரார் மருத்துவத்துக்குச் செலவழிக்கிறார்கள். மருத்துவத் தேவை, குடித்தேவை மற்றும் வேலை வாங்க லஞ்சம் கொடுக்கும் புதிய தேவைகளுக்காக ஒருசாரார் கந்துவட்டிக்குப் பணம் வழங்குகிறார்கள். சிலர் கல்வித் தேவைக்கும் கந்துவட்டிக்குப் பணம் வாங்கலாம்.

பணவீக்கத்தில் பணத்தின் தேவைதான் அதிகமாகிப் பணமே ஒரு பொருளானதே தவிர, உண்மையான வேளாண் உற்பத்தி உயரவில்லை. வேளாண் உற்பத்திக்குரிய வழிமுறைகளை நன்கு திட்டமிட வேண்டும். அதேசமயம், மண்வளத்தையும் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் வழங்கல் பெருகி விலைவாசி குறையும்.

முந்தைய பதிவுகள்: 1. அறிவியலும், சில காதல் கவிதைகளும்...                                                                      2. இந்திய வெளியுறவுத் துறை
                                              3.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....