Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

9/03/2012

இதற்கு நாம் வெட்கப்பட்டுதானே ஆக வேண்டும்?



சமீபத்தில் மருத்தவமனையில் ஒரு இறந்த குழந்தையை எலிகள் கடித்து குதறிய சம்பவம் உங்களுக்கு தெரியும்.

எப்போதும் கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அரசு இப்போதும் அப்படியே. பிரச்சனைகள் வரும்போதுதான் அதைப் பற்றி நடவடிக்கைகள் இருக்கும்.

இப்போது மருத்துவமனைகள், மக்கள் அதிகம்  கூடும் இடங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள  எலிகளை ஒழிக்க இருளர்களைவைத்து எலிபிடிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது.

சாதிகளை ஒழிப்போம் என கூறிக்கொண்டிருக்கும் நாம் இருளர்கள் என அடையாளப்படுத்துவது சரியா, அவர்களை எலிபிடிப்பவர்கள் என கொச்சைப்படுத்துவது முறையா?

சொல்லுங்கள் உறவுகளே..

8/31/2012

இப்படியும் ஒரு மாணவியா? - பள்ளியில் நடந்த சில உண்மைகள் (Repost)




சீருடை அழுக்கென்று
சினந்தேன் 
அந்த மாணவியை‌...

மறுநாள்
ஈரச் சீருடையோடு வந்தாள்..

உடம்புச் சூட்டில்
உலர்ந்துவிடும் என்று
மாட்டிவிட்டாளாம் அம்மா..

காய்ந்த வயிற்றிலும்
உலரவில்லை
ஈர விழியில் நனைந்த
ஓருடை..


8/30/2012

இவர்களுக்காக என்ன செய்தோம் நாம்?


நம் இந்திய நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் இருக்கும்  விவசாயிகளின் இன்றைய நிலை என்ன?

8/27/2012

சீரழியும் மாணவ சமுதாயம்....



இன்றைய மாணவர்கள் சமுதாயத்தில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவது  அனைத்து பெற்றோர் மத்தியிலும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று சென்னையில் ஒரு மாணவியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக ஒரு ஓட்டலுக்கு சென்ற மாணவர்கள், விழா முடிந்ததும் அங்கு நடனமாடும் நங்கைகளுடன் (போதையுடன்)நடனமாட போட்டி போட்டுகொண்டு சண்டையிட்டதில் பிரச்சனையாகி  போலீசார் தலையிட்டு கைது படலம் வரை சென்றிருக்கிறது.

கடந்த காலங்களில் , ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒரு  ஆசிரியையை கொலை செய்தது மற்றும்  தன்னுடன் படிக்கும் மாணவியை  நான்கு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து  குளிர்பானத்தில் போதை மருந்தை கலக்கி பாலியல் பலாத்காரம் செய்தது. இப்படி எத்தனையோ விசயங்களை நாம் தினசரி செய்திதாளில் படித்திருக்கிறோம்.

நம்முடைய விஞ்ஞானம் எவ்வளவு முன்னேருகிறதோ அவ்வளவும்  மாணவர்கள் செய்யும் குற்றங்களும் முன்னேறி வருகிறது.டிவி, இன்டர்நெட், மொபைல் போன்   போன்றவற்றை, மாணவ, மாணவியர் ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும்  பயன்படுத்துகின்றனரா என்பதை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து, பாக்கெட் மணியும்  அதிகம் கொடுக்கக் கூடாது. 

நீதி கதைகள், யோகா, கவுன்சலிங்  போன்றவை, பள்ளிகளில் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும். மதிப்பெண் பெறுவது மட்டுமே  வாழ்க்கையாக இல்லாமல், அதற்கு மேலே மனிதன் பெற வேண்டிய வேறு சில விஷயங்களையும், அறிவுரைகளும்  ஆசிரியர்கள், மாணவ சமுதாயத்திற்கு  போதிக்க வேண்டும்.

இன்று, கல்வி முற்றிலும்  வியாபாரமாகி, மனிதன் இயந்திரமயமாகி, மாணவ செல்வங்களை மதிப்பெண் பெரும் இயந்திரங்களாக மாற்றி விட்டதால் தான்  இந்த குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை அனைவரும் உணரவேண்டும்  நம்முடைய அரசும்  இதற்கு தகுந்தவாறு  பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்து மாணவ செல்வங்களின் எதிர்காலம் பொற்காலமாக  அமையும்.

8/25/2012

TNTET RESULTS - 2012


தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை 2,88,588 பேரும், இரண்டாம் தாளை 3,88,175 பேரும் எழுதினார்கள்..

இத்தேர்வில் தலா 150 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரம் என  வழங்கப்பட்டிருந்தது. மொத்தமுள்ள மதிப்பெண்ணில் 60% மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட TET தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

TNTET RESULT ஐப் பார்க்க  இங்கே கிளிக்கவும்..

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பதிவர்களே.. நீங்க இன்னும் கிளம்பலையா?


னிய நட்புகளுக்கு வணக்கம். இன்றைய இரவு விடிந்தால்,,, காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கி விடும். இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமிருப்பது விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்ற வேட்கையை அது அதிகரிக்கிறது.


மண்டபத்திற்கு வரும் வழி : சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள்  அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம்.  இதேபோல் செங்கல்பட்டு, தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் 17 என்று எண்ணிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம். இந்த நிறுத்தத்தில் இறங்கி  லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம். தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.

பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும்  பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம். கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.

தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள்  25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம்.

பதிவர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பவை :  1. அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும். 2. மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும். 3. பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும். 4. ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

முக்கிய நிகழ்வுகளாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.


கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.
வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சந்திப்போம்.

8/23/2012

பதிவர்களே.... என்ன வேணும் உங்களுக்கு?


பதிவர்களே நமக்கான சந்திப்பு திருவிழா நெருங்கிவிட்டது.  இன்னும் சில தினங்களே உள்ளது. அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆமா, யாரெல்லாம் வராங்க தெரிஞ்சிப்போமா?

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்தபதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

1. சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
2. சங்கவி,கோயம்புத்தூர்
3. நண்டு@நொரண்டு,ஈரோடு
4. சுரேஷ் (வீடு) கோயம்புத்தூர்
5. பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
6. கோவி(காதல்)கோயம்புத்தூர்
7. ஜீவா(கோவைநேரம்) கோயம்புத்தூர்
8. கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
9. சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
10. பிரகாஷ்(தமிழ்வாசி)மதுரை
11. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
13. சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
14. கருண்(வேடந்தாங்கல்)திருவள்ளூர்
15. ரஹீம்கஸாலி,அரசர்குளம்
16. பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்17. கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
18. ரேகா ராகவன்,சென்னை
19. கேபிள் சங்கர்,சென்னை
20. உண்மைத்தமிழன் ,சென்னை
21. சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை
22. சிவக்குமார்(மெட்ராஸ் பவன்)சென்னை
23. தத்துபித்துவங்கள்(பிரபாகரன்)சென்னை
24. மோகன்குமார்(வீடு திரும்பல்)சென்னை
25. ரிஷ்வன்,சென்னை
26. டி.என்.முரளிதரன்,சென்னை
27. வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
28. சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை
29. இக்பால் செல்வன்,சென்னை
30. ஆரூர் முனா செந்தில் சென்னை31. சிராஜுதீன்(டீக்கடை) சென்னை
32. செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
33. சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
34. புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
35. பால கணேஷ்(மின்னல் வரிகள்)சென்னை
36. சசிகலா(தென்றல்)சென்னை
37. மதுமதி(தூரிகையின் தூறல்)சென்னை
38. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
39. தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை40. அகரன்(பெரியார் தளம்) சென்னை
41. கணக்காயர்,சென்னை
42. ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
43. போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை
44. ராசின்(நதிகள்) சென்னை
45. புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை
46. அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை
47. லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
48. தமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை
49. ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
50. காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை51. மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
52. குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
53. கார்க்கி(சாளரம்) சென்னை
54. விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
55. மென்பொருள்பிரபு,சென்னை
56. அமைதி அப்பா,சென்னை
57. ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
58. சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
59. கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
60. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
61. ராமு,சென்னை
62. ஷீ-நிசி கவிதைகள் சென்னை
63. வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
64. மாடசாமி(வானவில்)சென்னை
65. இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
66. அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
67. சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
68. நிலவு நண்பன்,திருநெல்வேலி
69. மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
70. ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்
71. நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
72. ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
74. ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
75. கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
76. அருணன் கோபால்(கவிவனம்)
77. மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
78. திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல்
79. சரவணன் ஆர்.வி.(குடந்தையூர்)
80. அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
81. மணவை தேவாதிராஜன்,மணப்பாறை
82. சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்
83. ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
84. பலே பிரபு(கற்போம்)பெங்களூரு85. சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
86. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
87. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
88. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
89. சைத அஜீஸ்,துபாய்
90. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
91. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
92. மாலதி
93. பிரேம லதா
94. கௌதம்
95. சத்தியன்
96. ரமேஷ் (சிரிப்பு போலீஸ்) சென்னை.
97. அகிலா (கோயம்புத்தூர்)
98. இரா.தெ.முத்து(திசைச்சொல்)
99. வடிவேலன். ஆர்
100. ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )
101. ஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்102. மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
103. சினேகன்அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
104. கேணக்கிருக்கன் லெனின்( கீரமங்கலம்)
105. "AKKAPORU" Raja
106. Puratchi Mani
107. பாண்டியன்ஜி(வேர்கள்)


மூத்த பதிவர்கள்


1. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
2. ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
3. ரேகாராகவன்,சென்னை
4. வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
5. வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
6. சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
7. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
8. சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
9. புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
10. கணக்காயர்,சென்னை
11. சுப்புரத்தினம்
12. பாண்டியன்ஜி(வேர்கள்)

கவியரங்கில் பங்குபெறுவோர்


1. சசிகலா(தென்றல்)சென்னை
2. மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்3. கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
4. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
5. சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
6. அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
7. மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
8. ரிஷ்வன்,சென்னை9. ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை10. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
11. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
12. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
13. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
14. ஷீ-நிசி கவிதைகள் சென்னை
15. கணக்காயர்,சென்னை
16. மணவை தேவாதிராஜன்


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் குடுக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.


மதுமதி - 9894124021
பாலகனேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301



நன்றி...

8/15/2012

ஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்?! - Repost




வக் குழிக்குள் என்னுடலைச்
வைத்து விட்டீர்களா?

வசரமாய் மண்ணை 
அள்ளிப் போட்டு விடாதீர்கள் 

ப்போதுதான் 
வாழ்வில் முதல் முறையாக 
புத்தம் புதிய ஆடை
அணிந்துள்ளேன்...

வசரப்பட்டு 
அழுக்காக்கி விடாதீர்கள்...!


ஆய கலைகள் அறுபத்தி நாலாமே? இதில் உங்களுக்கு பிடித்த கலை எதுவோ?


1. எழுத்திலக்கணம் (அகரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம்.

நன்றி இணையம்.

8/11/2012

TET result ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி! - தினமணி செய்தி



ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.