10/12/2014
10/11/2014
10/10/2014
காசு கொட்டும் காஸ்ட் அக்கவுன்டிங் - தெரிஞ்சுக்கலாம் வாங்க..
கல்லூரியில் நீங்கள் எந்தப் படிப்பு படிக்கிறவராக இருந்தாலும்... அந்தப் படிப்பை படிக்கிற அதேநேரத்தில் இன்னொரு படிப்பையும் நீங்கள் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அந்தப் படிப்பு உங்களுக்கு கைநிறைய சம்பளமும் தருவதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா?
உங்கள் ஆசையை நிஜமாக்குகிற மாதிரி இருக்கிறது ஒரு படிப்பு. அதுதான், காஸ்ட் அக்கவுன்டிங். இந்தப் படிப்பில் யாரெல்லாம் சேர்ந்து பயிற்சி பெற முடியும், எவ்வளவு கட்டணம் என்பது பற்றி இந்திய செலவினக் கணக்கு கட்டுப்பாடு நிறுவனத்தின் (The Institute of Cost Accountants of India) தென்மண்டலத் தலைவர் பி.ராஜு ஜயரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
10/06/2014
10/03/2014
9/24/2014
மங்கள்யான் -இந்தியாவின் மகத்தான சாதனை.
Wednesday, September 24, 2014
இந்தியா, சமூகம், சாதனை, சிறுகதை, செயற்கைக்கோள்., மங்கல்யான்
5 comments
கிராவிட்டி படத்திற்கு ஆன செலவைவிட குறைந்த செலவில் ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கே செலுத்தி அதில் வெற்றியும் கண்டு அப்ளாஸ் அள்ளியுள்ளனர் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மட்டுமே கொண்டிருந்த பெருமைகளை முறியடித்து முதல் முயற்சியில் சாதித்த நாடு என்ற புதிய சாதைனையை இந்தியா படைக்கப்போகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை உலக நாடுகள் அனுப்ப முயற்சிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 1960ல் இருந்து சுமார் 40 முயற்சிகள் நடைபெற்று அதில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதற்கு முன் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற 20 நாடுகளை உள்ளடக்கிய 'ஒன்றிணைந்த ஐரோப்பா விண்வெளிக்கழகம்' அனுப்பிய 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' விண்கலம் மட்டுமே முதல் முயற்சியில் வெற்றி கண்டது.
ஆசிய பெருந்தலைகளான இந்தியாவும், சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியை தங்கள் கவுரவப்பிரச்னையாகவே கருதுகின்றனர். ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா பல மடங்கு முன்னேறி இருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சரிக்கு சமமாகவே பதிலடி தந்து வருகிறது. 2011ல் ரஷ்யா உதவியுடன் செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய விண்கலம் தோல்வியில் முடிந்தது. ஜப்பானும் இதேபோல் 1998 ஆம் ஆண்டு முயற்சித்து தோல்வி கண்டது.
இதனிடையே சந்திரயான் விண்கலம் கொடுத்த வெற்றி மங்கள்யான் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. மங்கள்யான் குறித்த அறிவிப்பை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் வெளியிட்டார். அதில் இருந்து சுமார் 15 மாத இடைவேளையில் முழு விண்கலத்தையும் உருவாக்கி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அப்போதைய ஆந்திரப்பிரதேசத்தில் இருந்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உதவியுடன் மங்கள்யான் ஏவப்பட்டது.
மங்கள்யான் திட்டத்தின் தலைமை அதிகாரி சுப்பையா அருணன் "சுமார் 15 மாதங்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றியுள்ளேன். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டில் நேரத்தை செலவிட்டேன். என்னை போல நிறைய பேர் மங்கள்யான் வெற்றிக்காக அயாராது உழைத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
எப்படி பயணித்தது மங்கள்யான்
கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும் நொடியில் இருந்தே விண்கலம் எந்த நிமிடத்தில் எங்கு இருக்கும்; எந்த நாள் இலக்கை சென்றடையும் என அனைத்திற்கும் நாள் குறிக்கப்படும். ராக்கெட் விண்ணில் பாயத்துவங்கியதும் ஸ்ரீ ஹரிகோட்டா, அந்தமானில் உள்ள போர்ட் ப்ளேர், ப்ருனே, பியாக் போன்ற ஊர்களில் உள்ள நான்கு மையங்களில் இருந்து கண்காணிப்பார்கள். அந்தமான் தாண்டி ராக்கெட் செல்ல துவங்கியதும் 10 நிமிடங்களுக்கு எந்த மையத்துடனும் தொடர்பில் இருக்காது. பின்னர் மேற்கு பசிபிக் பெருங்கடலின் மேல் பாயும்பொழுது அங்கு இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரு கப்பல்கள் ராக்கெட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்.
ஒரு கட்டத்தில் ராக்கெட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் பிரிந்துசெல்ல மங்கள்யான் தனது சோலார் பேனல்களை வெளியே கொண்டு வரும். பூமியை சுமார் 6 முறை சுற்றியபின் பூமியின் பாதையை விட்டு விலகி செவ்வாயை நோக்கி சீறிப்பாயத் துவங்கியது. இதற்காக விண்கலத்தில் உள்ள ஏ.எல்.எம் மோட்டார் இயக்கப்பட்டது. விண்கலம் வேகம் எடுத்தவுடன் இந்த மோட்டார் நிறுத்தப்படும்.
சுமார் 10 மாத காலம் ஒரு நொடிக்கு 22.1 கிலோமிட்டர் என்ற வேகத்தில் பயணித்து நேற்று செவ்வாய் கிரகத்தின் அருகில் சென்றடைந்தது. செவ்வாய் கிரகத்தின் புவியிர்ப்பு விசைக்குள் நுழையும் பொழுது இதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். இதை குறைக்க முதலில் 10 மாதங்கள் இயங்காமல் இருந்த அந்த ஏ.எல்.எம். மோட்டார் இயங்குகிறதா என்று நேற்று மதியம் 2.40 மணியளவில் சோதனை நடைபெற்றது. இந்த திக்திக் சோதனை சுமார் 4 வினாடிகள் நீடித்தது. மோட்டார் சரியாக இயங்க துவங்கியதும் இஸ்ரோவிற்கு நாலாபுறமும் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கின. நேற்று நாம் சோதனை நடத்திய அதே வேளையில் நாசாவின் (அமெரிக்கா) மேவன் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் புவீஈர்ப்பு விசைக்குள் நிறுத்தப்பட்டு அதன் ஆராய்ச்சிப் பணிகளை துவங்கியது. ஆனால் அவர்களை விட நாம் குறைந்த செலவில் மங்கள்யானை அனுப்பி புதிய சாதனையை படைத்துள்ளோம்.
என்ன செய்யப்போகிறது மங்கள்யான்
நாளை முதல் தனது பணிகளை துவங்கும் மங்கள்யான், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கும். அப்படி மீத்தேன் வாயு இருக்கும் பட்சத்தில் அது உயிர்கள் வாழ்ந்ததால் உருவானதா அல்லது இயற்கை பேரழிவுகளின் விளைவால் உருவானதா என்று ஆராயும். அது மட்டுமின்றி அதனுள்ளே பொருத்தப்பட்டுள்ள கலர் கேமரா தொடர்ந்து படங்களை எடுத்து அனுப்பிகொண்டிருக்கும். இது வருங்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற நடைபெறும் ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக அடுத்து செவ்வாய் கிரகத்தில் வேறு ஒரு விண்கலத்தை இறக்கி ஆய்வுகள் நடத்தப்படும். இறுதியாக சுமார் 2030 ஆம் ஆண்டின் வாக்கில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்.
சரியாக கழிவறை வசதி கூட இல்லாத நாட்டிற்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா என எதிர்ப்புக்குரல்கள் ஒருபுறம் ஒலிக்க, அமைதியாக 450 கோடி செலவில் புதிய சாதனை படைக்க தயாராகிவிட்டனர் நம் விஞ்ஞானிகள். பல ஆயிரம் பேரின் உழைப்பின் அறுவடை நாளை காலை 7.30 மணியளவில் தெரிந்துவிடும். நிலவில் தண்ணீர் இருப்பதை உலகிற்கே எடுத்துக்காட்டிய நாம், செவ்வாயின் ஆச்சர்யங்களை கூடிய விரைவில் கண்டெடுத்து உலகின் முன் வைப்போம் என்பதில் ஐயமில்லை.
தகவல்கள் விகடன் இதழிலிருந்து...
8/14/2014
செல்ஃபி விபரீதங்கள்.....!?
Thursday, August 14, 2014
அசசியல், அனுபவம், சமூகம், செய்திகள், செல்ஃபி, நிகவுகள், புனைவுகள்.
6 comments
செல்ஃபி இன்றைய உலகின் தவிர்க்க முடியாத வார்த்தையாக மாறியுள்ளது. டீக்கடையில் டீ குடிப்பது துவங்கி கல்யாண வீட்டில் மணமக்களோடு ஒன்றாக நின்று எடுக்கும் புகைப்படம் வரை எல்லாமே செல்ஃபி மயம் தான்!! எங்கிருந்து வந்தது இந்த செல்ஃபி யார் அறிமுகப்படுத்தினார்கள் என்றால் இது இன்று ஆரம்பித்த விஷயமல்ல 1839ம் ஆண்டு அமெரிக்க புகைப்படக்காரர் ஒருவர் தன் லென்ஸை சரிசெய்யும் போது பதிவான புகைப்படம் தான் செல்ஃபியின் ஆதி என்கிறது வரலாறு. ஆனால் இன்று சினிமா பிரபலங்கள் படம் எடுக்கிறார்களோ இல்லையோ செல்ஃபி எடுக்க தவறுவதில்லை. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் என எங்கு பார்த்தாலும் செல்ஃபி எடுப்பவர்களை தான் பார்க்கிறோம்.
கடந்த ஞாயிற்றுகிழமையன்று போர்ச்சுக்கலை சேர்ந்த ஒரு கணவன் - மனைவி சுற்றுலாவிற்காக மேற்கு ஐரோப்பாவில் உள்ள கபோ டி ரோகாவில் உள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மலை உச்சியின் ஓரத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்கலாமே என்று தோன்ற மலை உச்சியின் நுனியில் நின்றவர்கள் க்ளிக் செய்யும் போது கால் தடுக்கி கீழே விழுந்து இறந்து போனார்கள். இதுபோன்ற செய்திகள் ஏராளம் ரயில்வே ஸ்டேஷனில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து இறந்தவர். தன்னை தானே சுட்டுக்கொள்வது போல செல்ஃபி எடுக்க நினைத்தவர் உணமையிலேயே இறந்த சம்பவம், பேஸ்பால் போட்டியை காண சென்றவர் செல்ஃபி எடுக்கும் போது அடிபட்ட சம்பவம் என செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இதெல்லாம் ஜாக்கிரதையாய் இல்லாதவர்களுக்கு தான் என்கிறார்கள் சிலர் அவர்களுக்கு இருக்கிறது சில ஆபத்தான செய்திகள். உத்திர பிரதேசத்தில் இளைஞர்கள் நான்கு பேர் மது அருந்துவதை செல்ஃபி எடுத்துள்ளனர். அவர்கள் கை சும்மா இல்லாமல் அதனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ய மற்ற நண்பர்களில் ஒருவரது உறவினர் அதனை பார்த்து வீட்டில் சொல்ல மானம் போய் இருக்கிறது அந்த இளைஞருக்கு. இதே போன்ற ஒரு சம்பவத்தில் தன் காதலனுடன் எடுத்து கொண்ட செல்ஃபி வெளிவர அந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் அந்த பையனை திட்டி சண்டை, போலீஸ் ஸ்டேஷன் என் சென்றிருக்கிறது அந்த செல்ஃபி கேஸ்.
இவையெல்லாம் சட்ட ரீதியான பிரச்னை என்றால், மன ரீதியான சில பிரச்னைகளும் எழுகின்றனவாம். எங்கு சென்றாலும் செல்ஃபி எடுத்தே தீருவேன் என அடம் பிடிக்கும் செல்ஃபிமேனியா! அதனை சமூக வலை தளங்களில் பகிர்ந்தே தீருவேன் என்ற மனநிலை இப்படியான பாதிப்புகளும், காலையில் நாம் பல் துலக்குவது தொடங்கி இரவு கொசுவர்த்தி கொளுத்துவது வரை என அனைத்து விஷயங்களையும் செல்ஃபியாக பதிவு செய்வதை வழக்கமாக்கி கொள்ளும்போது எந்த வித கஷ்டமும் இன்றி நம்மை அனைவரும் பின் தொடர முடியும் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த சினிமா பிரபலங்களின் அட்ராசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம் அதை பார்த்து தான் நானே செல்ஃபி எடுக்க கற்றுக்கொண்டேன் என்கிறது ஒரு கூட்டம். ஆயிரம் போட்டோகிராபர்கள் உள்ள ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரபலங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து செல்ஃபியாம். வீட்டில் சண்டே ரிலாக்ஸாக முன்னனி நடிகர் ஒருவர் மற்றோருவரை சந்தித்தது ஒரு செய்தியா என்ற கேள்விக்கு முன்னரே செல்ஃபி வித் என டேக் செய்கிறார் மற்றோரு நடிகர். ஒரு நடிகை ஒருபடி மேலே சென்று தனது தேனிலவு போட்டோக்களை செல்ஃபியாக ட்விட்டி இருக்கிறார். என்று தனியும் இந்த செல்ஃபி மோகம் எனும் அள்விற்கு கூடிவிட்டன செல்ஃபியாளர்களின் அளப்பறை!
இதையெல்லாம் படிச்சுட்டு ஐ எம் ரீடிங் விகடன் செல்ஃபி ஆர்ட்டிகள்னு ஸ்டேட்டஸ் போடுறவங்களும் இருக்கதான் செய்யுறாங்க...செல்ஃபி எடுப்பவர்கள் நீங்கள் ஜாலிக்கு தான் எடுக்கிறீர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் ஆனால் நீங்கள் செல்ஃபி எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் அழகான மற்றும் பாதுகாப்பான இடத்தில் செல்ஃபி எடுங்கள்... நடு ரோட்டில் நின்று கொண்டு செல்ஃபி அட் நடுரோடு என்று டேக் செய்யாதீர்கள்...
பாஸ்வேட் மறக்காம இருக்க ஒரு பதிவு தேத்தியாச்சு.
1/01/2014
Subscribe to:
Posts (Atom)



















