Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/11/2014

இந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா? - மீள்



இடைவேளை நேரத்தில்
எல்லோரும் தின்கிறார்கள்
எனக்கும் ஏதாவது கொடுத்தனுப்பு ..

பள்ளி செல்லும்போதேல்லாம்
அடம் பிடிப்பான் என் மகன் ..

மனசு கேட்காமல்
வாங்கிக் கொடுத்தனுப்பிய பிறகு

மனசே சரியில்லை ..

என்மகன்
தின்கையில்
பக்கத்துச் சிறுவனிடம்
ஏதேனும் இருக்குமோ இருக்காதோ!!!



3 comments:

  1. அவனுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு தின்னச் சொல்லுங்கள் ,கருண் )
    நிம்மதி கிடைக்கும் !
    த ம 2

    ReplyDelete
  2. உண்மைதான்... பகுத்துண்டு சாப்பிட்டால் போச்சு...
    அருமை.

    ReplyDelete
  3. பகிர்ந்துண்டு சாப்பிட சொல்லுங்கள்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"