முன்னாள் முதல்வரான கருணாநிதிக்கும், இந்நாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கும், ஒரே ஒரு விஷயத்தில், மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. அது, ஒருவர் தமிழக முதல்வராக இருக்கும் போது, மற்றவர், சட்டசபைக்குச் சென்று பணியாற்றுவதை புறக்கணிப்பது தான்.
எனவே, இம்முறை சட்டசபையை புறக்கணிக்கும் அச்சுழற்சி, கருணாநிதிக்கு உரியது.திருவாரூர் சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வென்ற கருணாநிதி, தன் தொகுதிக்கும், தொகுதி மக்களுக்காகவும் பணியாற்ற, சட்டசபைக்கும் தவறாமல் செல்ல முன்வர வேண்டும்.
செய்வாரா முன்னாள் முதல்வர்?











