அன்புள்ள அப்பாவுக்கு...
நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை
வேண்டிக்கொள்கிறேன்.
அன்று,
தாமரைக் குளமும்
பெருமாள் கோயிலும்
பெரிதாய் இருக்கிறதென்று
சொன்னீர்கள்...!
வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும்
சின்ன காய்கறித் தோட்டமும்
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!










