Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts

7/20/2011

மாணவர்கள் தற்கொலை ஏன்?



ஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தோல்வி, மாணவர் தற்கொலை, பிளஸ் 2 தேர்வில் தோல்வி, மாணவி மாயம் என, ஒவ்வொரு வருடமும், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, இதுபோன்ற செய்திகள் வெளியாகத் தவறுவதில்லை. 


ஏன் இந்த அவலம்?


கல்வி என்பதை, போட்டிக் களமாக மட்டுமே பார்க்கும் நம்மவர்களின் மனோபாவமே, இதற்கு முழுக்காரணம். எந்த ஒரு துறையிலும், போட்டி என்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும், போட்டி பிரதானம் ஆகிவிடும்போது, இதுபோல் அவலத்தில் தான் முடியும். 


இந்த போட்டி கலாசாரத்தால், கல்வி என்பது விலை பொருளாக மாறுவதை, இனி வரும் காலங்களில் யாராலும் தடுக்க முடியாது.பணம் கொழிக்கும் தொழிலாக கல்வி மாறிவிட்டதால், தனியார் நிறுவனங்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன


ஒரு குழந்தையின் தொடக்கக் கல்விக்கே, லட்சக்கணக்கில் பணம் கேட்கும் கல்வி நிறுவனங்கள், அன்றாடம் முளைத்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள், போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே முன்னிறுத்தி, மாணவர்களை தயார்படுத்துகின்றன.


தேர்வில் மாணவர்களை நல்ல மதிப்பெண் பெறச் செய்வதும், வளாக நேர்காணலில், முன்னணி நிறுவனங்களில் வேலை தேடித் தருவது மட்டுமே இவர்களின் இலக்கு. 


இதற்கு, அவர்கள் செய்யும் விளம்பரங்களே சாட்சி. எதிர்காலத்தில், சினேகாவையும், த்ரிஷாவையும், "சேர்ந்துக்கோ சேர்ந்துக்கோ' என்று விளம்பரங்களில் ஆட விட்டு, தங்கள் கல்லூரிக்கும், பள்ளிக்கும் ஆட்கள் சேர்த்தாலும் சேர்க்கலாம்.


அன்றாட வாழ்வில் ஏற்படும் சில தோல்விகளையும், சவால்களையும், மனவலிமையுடன் சந்திக்கும் பக்குவத்தையும், ஒரு நல்ல சமூகத்தையும் இவர்களால் எப்படி ஏற்படுத்த முடியும்?


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்ற வள்ளுவரின் கூற்றுப்படி உள்ள கல்வியே, ஒரு நல்ல சமூகத்தை அமைக்க உதவும்; அதுவே, இன்றைய தேவையும் கூட.


உண்மைதானே உறவுகளே...