அதிக குதிரை சக்தி கொண்ட, இரு சக்கர வாகனங்களில் வீதி உலா வரும் இளைஞர்கள், வாகனங்களை சாலைகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர்.தேவையே இல்லாமல், அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி, அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், தாங்களும் விபத்தில் சிக்கி, மற்றவர்களையும் விபத்துக்கு உள்ளாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.