பிரபல பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனமான Peugeot Citroen (உச்சரிப்பு – பேர்ஜோ சித்ரோ), இந்தியாவில் தமது தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுத்ததே தமிழகத்தைத் தான்.
தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க ஸ்ரீபெரும்புதூர் வரை அவர்களது ஆய்வுக் குழு வந்து பார்வையிட்டுச் சென்றது. அதையடுத்து ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, கார் தயாரிப்பு நிறுவனத்தின் குழுவினர் சந்தித்துப் பேசியிருந்தனர்.