“மாணவர்களே... தேர்வு மட்டுமே உங்கள் திறனை நிர்ணயிக்காது”
இன்று எல்லோருக்கும் மாதத்தின் முதல் நாள். ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கோ தேர்வு நாள். இதுவரையிலும் கொஞ்சம் சுமாராகவே படித்து வந்திருக்கும் மாணவர்கள் 'இன்னும் ஒரு மாதம் இருக்கே அப்போ படிச்சிக்கலாம், அதான் இன்னும் ஒரு வாரம் இருக்குல்ல அப்ப பாத்துக்கலாம், இன்னும் மூணு நாள் இருக்கு பாஸ். முட்டி மோதினாக்கூட படிச்சிட முடியுமே' என்று சொன்னவர்கள் மட்டுமல்லாமல், பதினொன்றாம் வகுப்பிலிருந்தே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காகத் தயாராகி வரும் மாணவர்கள்கூட இந்நேரம் உச்சகட்ட பரபரப்பில் இருப்பார்கள்.











