நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் கூறும் பாடம் இதுதான்...
அங்கொருவர், இங்கொருவர் விரும்பலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தின் மனப்போக்கும், இலவசங்களுக்கு எதிரானது. இலவசங்கள், தரமானதாக இருக்கவே இருக்காது. முதல்வர் ஜே - வும் இலவசங்களை கூறித்தான் ஆட்சிக்கு வந்தார்கள் என எதிர் கேள்வி கேட்கவேண்டாம். இந்த இலவச கலாசாரத்தை அறிமுகப் படுத்தியவர்கள் யார் என்று சிந்தியுங்கள் நண்பர்களே..
இலவசமாக, ஜரிகைக் கறைப் போட்ட பட்டுப்புடவை, பட்டு வேட்டியா வழங்குகின்றனர்?
நான் சாப்பிடப் போகும் நேரத்தில், நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். "வாங்க, சாப்பிடலாம்' என அழைத்தேன். அவரோ, "இப்பதான் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்தேன்' எனக் கூறிவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, அவர் மனைவி வந்தார். "என் கணவர் இங்கே வந்தாரா? சாப்பிடாமல் வந்துட்டாருங்க' என, பரிதாபமாக கூறினார்.
மனிதர்களுக்கு பசியை விட, ரோஷம் அதிகம். அது, மனைவி மேலும் வரலாம், ஆட்சி மீதும் வரலாம்.
ஆட்சியாளர்களிடம், நல்ல நடத்தையை மக்கள் எதிர்பார்க்கின்றனர், இலவசங்களை அல்ல.
அதனால்தான், 'நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே, மலர்தலை உலகம்' என, புறநானூறு கூறுகிறது. அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, எக்காலத்திலும் சரி, மக்கள் இயல்பு ஒன்று தான்.
நல்லாட்சி புரியாமல் ஜே- வும் இந்த தவறை செய்தால் அவர்களுக்கும் அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட தயங்க மாட்டார்கள்.











