தத்தம் பதவிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவுமே, இவர்கள் அவ்வாறு கூறுகின்றனர் என்பது, நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
வெகு விரைவிலேயே, சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகும் உ.பி.,யில் மட்டும், விவசாயிகளுக்காக, ராகுல் தினமும் போராடுகிறார்.
வயலில் இறங்கி நடக்கிறார்; ஏழைகள் வீட்டில் தேநீர் அருந்துகிறார்; தடையை மீறி ஊர்வலம் செல்கிறார்.
இதைப் பார்க்கும் போது, வேடிக்கையாக இருக்கிறது. ஏன், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் விவசாயிகள் இல்லையா அல்லது அவர்களுக்கு பிரச்னைகள் தான் இல்லையா?
இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?
அப்போது கூறலாம், அவர் இந்தியாவின் எதிர்காலம் என்று!
உண்மைதானே உறவுகளே?