எதிர் கருத்தை
வெளிப்படுத்தினால்
மண்டைக்கனம்...
சரியானவற்றை
ஆமோதித்தால்
ஜால்ரா...
சும்மா இருப்பதே
சுகமென்றிருப்பின்
கழுவிய மீன்களில்
நழுவிய மீன்...
தனித்துவமாய்
பேசினால்
தம்பட்டம்...
எதிராளியின்
முகம் பார்த்து
அகம் ஆய்ந்து
பேசக் கற்பதற்குள்
முடிந்து போகிறது
முக்கால்வாசி
ஆயுள்..