Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label உட‌ல் ந‌லம். Show all posts
Showing posts with label உட‌ல் ந‌லம். Show all posts

1/07/2011

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு



ய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது பெண் குரங்குகள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. உலகை உலுக்கி வரும் எய்ட்ஸ் ஒரு உயிர்க் கொல்லி நோய். இது எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.
 

ற்போது உலகம் முழுவதும் 3 கோடியே 30 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோய்க்கு 2 கோடியே 50 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். எனவே இந்த நோயை குணப்படுத்த பல மருந்து களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆனால் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியவில்லை.

ந்த நிலையில் தற்போது ஒரு புதிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே உள்ள எய்ட்ஸ் மருந்துடன் துத்த நாகம் ரசாயன கலவையுடன் “ஜெல்” உருவாக்கினர். அந்த “ஜெல்” மருந்தை எய்ட்ஸ் நோயை உருவாக்கும் “எச்.ஐ.வி.” வைரஸ் கிருமி பாதித்த விலங்குகளிடம் பரிசோதித்து பார்த்தனர்.

றுதியில் “எச்.ஐ.வி.” வைரஸ் பாதித்த பெண் குரங்கிடம் பரிசோதித்து பார்த்தனர். 2 வாரங்கள் தொடர்ந்து இந்த மருந்தை அவற்றின் உடலில் செலுத்தினர். அதை தொடர்ந்து எச்.ஐ.வி. வைரஸ் கிருமி களின் பாதிப்பு பெருமளவில் குறைந்தது. அதே முறையில் மனித உடலிலும் சோதனை நடத்தி பார்க்கப்பட்டது. எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் பாதித்த பெண்களிடம் பயன்படுத்தப்பட்டது.

2 ஆண்டுகளில் 39 சதவீதம் நோய் குணமானது. இந்த சோதனையை அமெரிக்க விஞ்ஞானி கள் தேசிய புற்று நோய் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது. விலை குறைவானது. எனவே இந்த மருந்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வரபிரசாதமாக கிடைத்துள்ளது என நியூ யார்க் பொதுமக்கள் சபை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

12/20/2010

எடை குறைய எளிய வழிகள்

 எடை குறைய எளிய வழிகள்

              அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.


தண்ணீர் வைத்தியம்:

              தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம்.
  
 தண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுங்கள்.

1. காலை எழுந்து பல் துலக்கியவுடன் பொறுக்கும் சூட்டில் ( டீ/காபி எந்தச் சூட்டில் அருந்துகிறீர்களோ அந்த அளவு சூடு) ஒரு தம்ளர் நீர் அருந்தவும்.


2. காலை உணவுக்கு முன் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.

3. காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் மீண்டும் (குறைந்தது) ஒரு லிட்டர் தண்ணீரும், மதிய உணவிற்கும் மாலை சிற்றுண்டிக்கும் இடையே குறைந்தது அரை லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளுதல் வேண்டும்.

4. மறுபடியும் இரவு உணவுக்குமுன் ஒரு லிட்டரும் இரவு உணவிற்குப் பின் அரை லிட்டரும் நீரருந்த வேண்டும்.
முடிந்த வரை சற்றுச் சூடான நீரையே அருந்துங்கள். அது சீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இந்தத் தண்ணீர் மருத்துவத்தின் மூலம் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

உணவில் செய்யவேண்டிய சின்னச்சின்ன மாற்றங்கள்:

           காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். முடிந்தால், காபி/டீ குடிப்பதற்குப் பதில் ஒரு தம்ளர் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி(spoon) தேன் கலந்து அரை மூடி எலுமிச்சை பிழிந்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்பை இப் பானம் கரைக்கிறது.


அதெல்லாம் முடியாது. எனக்குக் காபி /டீ குடித்தே ஆகவேண்டும் என்கிறவரா நீங்கள்? அப்படியானால், கருப்புக்காபியோ(Black Coffee), கருப்புத் தேனீரோ(Black Tea) அருந்துங்கள். அதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? சரி, சர்க்கரையைத் தவிருங்கள். 

மிகக் கடினமாகத் தோன்றுகிறதா? அழகான, 'சிக்'கென்ற உடம்புடன், உங்களுக்கு மிக விருப்பமான உடையை அணிந்து, சுறுசுறுப்பாக இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். தன்னால், இந்த ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவீர்கள்.

 
அடுத்து, ஒரே தானியத்தை நாள் முழுவதும் சாப்பிடாமல் (அரிசி அல்லது கோதுமை மட்டும் என்றில்லாமல்) விதவிதமான தானியங்களைப் பயன் படுத்துங்கள். காலையில் கோதுமை ரொட்டி, மதியம் அரிசிச் சோறு, இரவு பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி அருந்துங்கள்.

கூடியவரை, எல்லா வேளைகளிலும் பச்சைக்காய்கறிகள்/பழங்களை உட்கொள்ளுங்கள்(வாழைப்பழம், கிழங்குவகைகளைத் தவிர்த்துவிடுங்கள்).


பொரித்த உணவுவகைகளையும், இனிப்பு வகைகளையும் சாப்பிடவேண்டும் என்ற ஆவல் எழும்பொழுது, உங்கள் உடம்பைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிற்றுண்டி(Tiffin) அல்லது சிறு தீனி (Snacks) தின்னும் ஆவல் எழும்பொழுது, அரிசிப்பொரி, நறுக்கிய பழங்கள்/பச்சைக்காய்கறிகளின் கலவை(salad), உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் (dry fruits & nuts)- உலர் திராட்சை,  போன்றவற்றைச் சாப்பிடவும்.


இனிப்பு சாப்பிடும் வேட்கையிருப்பின், சர்க்கரையால் செய்த இனிப்புக்களைத் தவிர்த்து வெல்லத்தால் செய்த இனிப்புகளைச் சிறிதளவு சாப்பிடவும்.

காலையில் அரசனைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிடவேண்டும் என்னும் முதியோர் வாக்கைப் பின்பற்றுங்கள். காலை உணவில் பழங்களையும், மதிய உணவில் பச்சைக்காய்கறிகளையும் (காரட், வெள்ளரி, முட்டைக்கோசு, முள்ளங்கி, வெங்காயம், தக்காளி) அதிக அளவில் உட்கொள்ளவும். இரவு ஏதேனும் ஒரு பழமும் பாலும் மட்டும் சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகு ரொட்டி (1 அல்லது 2) எடுத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், மென்று தின்னக் கூடிய உணவுகளையும் நிறையச் சாப்பிடலாம். மேலும், காற்று ஏற்றப்பட்ட (aerated) குளிர்பானங்களைத் தவிர்த்து எலுமிச்சைச் சாறு, பழரசங்கள் (அதிக சர்க்கரை இல்லாமல்) இளநீர் போன்றவற்றைப் பருகவும்.


எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்கவேண்டாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறு சிறு அளவினதாக ஐந்து, ஆறு முறை (உங்கள் பணி அதற்கு இடம் தருமானால்) சாப்பிடலாம்.


இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லுவதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் முன்னதாக (அதாவது எட்டு - எட்டரை மணியளவில்) முடித்துக்கொள்ளுதல் நலம்.


தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு/அல்லது கணிணியில் பணி புரிந்து கொண்டு (வேறு எங்கோ கவனமாக) சாப்பிடுவதைத் தவிர்க்கவும் ஏனெனில் இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் நம்மையும் அறியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம்.


உணவை சிறு சிறு அளவுகளாகப் பரிமாறிக்கொண்டு, நிதானமாக மென்று, சுவைத்துச் சாப்பிடவும். அவசர அவசரமாகச் சாப்பிடும்பொழுது, நாம் உணவருந்திவிட்ட செய்தி உடனே மூளைக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. அதனால், பசி அடங்காதது போலத் தோன்றுகிறது. இதன் காரணத்தால் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. உணவின் அளவு அதிகரிப்பதால், உடலில் தங்கும் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும்.

இன்றைய வாழ்வில் சத்து இல்லாத சுவையான உணவுகள் ரொம்பவே அதிகம். உதாரணமா மைதா. மைதா உணவுகளான கேக்,பீட்சா,ப்ரெட், பஃப்ஸ் ,அப்புறம் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப் பட்ட உணவுகள்.. குறிப்பா ஹோட்டல் உணவு எல்லாமே அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட தாகத்தான் இருக்கும். 

அதிலும் இந்த வட இந்திய உணவு புல்கா,ரொட்டி,(மைதா உணவு).. அப்புறம் அதற்கான சைட் டிஷ் அப்பப்பா எண்ணெய் மிதக்கும். இதை ஹோட்டலில் சாப்பிடும் போது தெரியாது.. பார்சலாக வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டால் நன்றாக உணரமுடியும்.. இரண்டு டீ ஸ்பூன் அளவு எண்ணெய் தனியாக பிரிந்து நிற்கும். பின் இனிப்பு வகைகள்,எண்ணெஇயில் பொறிக்கப்பட்ட உணவுகள்.. 

இந்த உணவுகளை அடிக்கடியும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மேலும் வயதிற்கு ஏற்ப சாப்பிடவும் பழக வேண்டும்.

 

12/17/2010

டல் எடையைக் குறைப்பதற்கான

ஹெல்த் ஜூஸ்-தயாரித்தல்

 

 கேரட் வெள்ளரி ஜூஸ்

தேவையான பொருட்கள்

கேரட் _ அரை கிலோ, வெள்ளரி _ 100 கிராம், தக்காளி _ 100 கிராம், வெள்ளை மிளகு _ அரை டீஸ்பூன், உப்பு _ 2 சிட்டிகை, கருப்பட்டி_50 கிராம், எலுமிச்சம்பழச்சாறு_10 அல்லது 12 துளிகள்.

செய்முறை

முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக வாஷ்பண்ண வேண்டும். (ஏன்.. தோலை கட் பண்ணக் கூடாதுன்னா தோல்லதான் விட்டமின்_ஏ சத்து அடங்கியிருக்கு) அடியையும் நுனியையும் கட் பண்ணினால் போதும். வெள்ளரியை எப்பவும் போல கட் பண்ணிக்க வேண்டும் தக்காளியை மேலே ரவுண்டா கட்பண்ணி கருப்பட்டி, எலுமிச்சம் பழம், உப்பு எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால்போதும் திக்கான சன் ஷைன் ஜூஸ் ரெடி.

தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும். தோல் சருமத்துக்கு இது ரொம்ப ரொம்ப நல்ல ஜூஸ். பெண்கள் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவும் வெறும் வயித்துல சாப்பிடுவதுதான் பெட்டர். ஆனால் சுகர், பி.பி. உள்ளவர்கள் வெறும் வயித்துல சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சுகர் பேஷண்ட்டுகள் கருப்பட்டிக்கு பதிலாக சுகர்ஃபிரீ, போட்டு சாப்பிடலாம்.

டயட்

கேரட்ல விட்டமின்_ஏ ஜாஸ்தி. இதுல ஃபைட்டோ கெமிக்கல்ஸ் இருக்கிறதால நம்ம உடம்புல உள்ள செல்களுக்கு பாதிப்பு வராமல் பாதுகாத்துக்க முடியும். கருப்பட்டியில் _ அயர்ன் இருக்கிறதால சத்துக்குறைவு (இரத்த சோகை) பிரச்னைகள் வராம பாதுகாத்துக்கலாம். 

வெள்ளரியில தண்ணீர் சத்தும் நார்ச்சத்தும் இருப்பது உடம்புக்கு நல்லது. பொதுவாக எல்லாப் பழவகைகளையும் அப்படியே சாப்பிடுறதுதான் நல்லது. ஆனா கோடை வெயில் இந்த அளவுக்கு சுட்டெரிக்கிறதால நம்ம உடம்புல இருக்கிற நீரும், உப்பும் வெளியாகிறது. அதனாலதான் பழங்களை ஜூஸா சாப்பிடவேண்டியிருக்கு. சர்க்கரையை விட வெல்லம் நல்லது. 
டயாபடீஸ்காரங்க எந்த ஸ்வீட்டும் ஜூஸ்ல கலக்காம பழத்துல இருக்கிற நேச்சுரல் சுவீட்டோட சாப்பிடுறதுதான் நல்லது.

 லெமன் ஜூஸ்

இது ஒரு டயட் ஜூஸ். ப்ளட் ப்ரஷர் கம்மியா இருக்கிறவங்களுக்கு ரொம்பவும் யூஸ் ஃபுல்லான ஜூஸ். வியர்வையை ஏற்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்

பார்லி _ கால்கிலோ, எலுமிச்சம்பழம்_2, மாங்காய் இஞ்சி_50, கிராம், உப்பு_2 சிட்டிகை, சர்க்கரை 100 கிராம் (டயாபடீஸ்காரராக இருந்தால் ஒரு க்ளாஸுக்கு ஒரு டேப்ளட்)

செய்முறை

பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக இருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த மாங்காய் இஞ்சியையும் கலந்து விட வேண்டும். இந்த ஆரோக்கிய ஜூஸை அழகான பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிஜ்ஜில் கூட வைக்கத் தேவையில்லை.

டயட்

பார்லியில சிறுநீரக பிரச்னைகள் வராம பாதுகாத்துக்கிற வல்லமை இருக்கு. எலுமிச்சம் பழத்துல சி விட்டமின் இருக்கு. டென்ஷனை விரட்டி மனசை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள எலுமிச்சம்பழம் ரொம்பவும் துணைபுரியுறதா தற்போதைய மருத்துவ ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க. ப்ளட் பிரஷர் உள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது. இஞ்சி மருத்துவ குணம் வாய்ந்தது.
  
அஞ்சு பழங்க ஜூஸ்


தேவையான பொருட்கள்

பப்பாளி_100 கிராம், மேங்கோ_100 கிராம், ஆரஞ்சுப்பழம்_100 கிராம், திராட்சை_100 கிராம், எலுமிச்சம்பழம்_பாதியளவு, சோடா (கோலிசோடா அல்லது ஸ்பிரிட்), சுகர்_200 கிராம், வாட்டர் 10 மில்லி, உப்பு _ 1 சிட்டிகை.

செய்முறை

எலுமிச்சம்பழத்தைத் தவிர மீதி நான்கு பழத்தையும் நன்றாக தோல் நீக்கி மிக்ஸியில் ஜூஸாக்கி விட வேண்டும். இல்லையெனில், பழங்களை சின்னச்சின்ன துண்டுகளாக கட் பண்ணிக்கொண்டு சுகரையும், தண்ணீரையும் கலந்து கொதிக்க வைத்து விட்டு, பிறகு எலுமிச்சம் பழத்தையும் சோடாவையும் சேர்த்துவிட்டால் ஃப்ரூட் பஞ்ச் ரெடி. குழந்தைங்க இதை விரும்பிச் சாப்பிடுவாங்க. ஃபிரிஜ்ஜில் வைத்து எல்லோரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகி மகிழலாம்.

டயட்

பப்பாளியில் ஏ விட்டமின் அதிகம். ஆரஞ்சுல_சி விட்டமின், பப்பாளியைத் தவிர மீதி நான்கு பழமும் சிட்ரஸ் ஃபுரூட்ஸ். (சிட்ரஸ் அமிலம் நிறைந்தது)
  
புதினா ஜூஸ்

தேவையான பொருட்கள்

புதினா _கைப்பிடி அளவு, துளசி _ கைப்பிடி அளவு, கற்பூரவள்ளி இலை _கைப்பிடி அளவு, மிளகுத்தூள் _கால் டீஸ்பூன், சுக்குப் பொடி _ கால் டீஸ்பூன், உப்பு _ 1 சிட்டிகை, சர்க்கரை_ 200 கிராம், தண்ணீர் _100 மில்லி எலுமிச்சம் பழம் _ கால் பழம்.

செய்முறை

புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும். சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் மெடிக்கல் ஜூஸ். அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது.

டயட்

பெயரைப் படிச்சதும் ஏதோ நோயாளிகள் சாப்பிடுறதுன்னு நெனைக்க வேணாம். ஏன்னா இந்த ஜூஸ் நோய் வராம பாதுகாக்கும் ஜூஸ். புதினா, துளசி ரெண்டுலேயும் இரும்புச்சத்து அதிகம். சளித்தொல்லையை அடித்து விரட்டக் கூடியது. குழந்தைகளுக்கு வாரத்துக்கொருமுறை கொடுத்தால் போதும். கற்பூரவல்லி இலையை ஜூஸ் செய்தோ அல்லது 3 இலை ஒருநாளைக்கு எனச் சாப்பிட்டு வந்தாலே அப்புறம் சளின்னா என்னன்னு கேட்பாங்க.
  
பைனாப்பிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்

பைனாப்பிள் _ 1, சர்க்கரை _ தேவைக்கு, பைனாப்பிள் எசன்ஸ் _ 1 டீஸ்பூன், சிட்ரிக் ஆஸிட் அல்லது ஒரு எலுமிச்சம்பழம்.

செய்முறை 

பைனாப்பிள் (அன்னாசிப்பழம்) மேல் தோலை எடுக்க வேண்டாம். அப்படியே நான்கு துண்டாக கட் பண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு அதை கேரட் துருவுவது போல் துருவி விட்டு ஒரு மெல்லிய துணியில் பிழிந்து ஜூஸாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஜூஸானது 200 கிராம் அளவு இருந்தால், அதே அளவு (200 கிராம்) தண்ணீரில் கலந்து அதோடு இரண்டு மடங்கு (400 கிராம்) சர்க்கரையும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட வேண்டும்.

இதை அப்படியே குடிக்கக் கூடாது. கால் பங்கு ஜூஸுடன் முக்கால் பங்கு தண்ணீர் கலந்து சாப்பிடுவதுதான் நல்லது. வெயில் காலத்தில் ஏற்படும் ஸ்கின் அலர்ஜிகளைத் தவிர்க்கலாம். டயட் விட்டமின்_ஏ சத்து அடங்கியது. மினரல், பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் சத்துகள் அடங்கியது. சிட்ரிக் அமிலத்துக்கு பதில் எலுமிச்சம் பழம்தான் பெஸ்ட்&சி விட்டமின்  டயாபட்டீஸ் அன்பர்கள் உஷார்.
  
வெஜிடபிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்

கேரட் _100 கிராம், பீட்ரூட்_ 50 கிராம், கோஸ் _50 கிராம், தண்ணீர்_ 2 டம்ளர், இஞ்சி_ 1, புதினா _ கைப்பிடி அளவு.

செய்முறை
 
கேரட்டை சுடுதண்ணீரில் கழுவிக் கொள்ளவும், பிறகு பீட்ரூட்டை வேகவைத்துக் (சீக்கிரம் வேகாது) கொண்டு, கோஸையும் வேகவைத்து விட்டு சீக்கிரம் மூன்றையும் ஒன்றாகவே மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இதோடு 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய ஜூஸில், தனியாக இஞ்சி, புதினா அரைத்து மேலே தூவ வேண்டும். ஒரு கட்டி வெல்லத்தை அப்படியே போட வேண்டும். குடிச்சுப் பாருங்க மிக்ஸ்டு வெஜிடபுள் ஜூஸ். ஆரோக்கியம் தானா வரும்.
தேவையான பொருட்கள் கேரட்_ஏ சத்து நிறைந்தது. பீட்ரூட் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது.

 ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .

12/15/2010

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

FAT BURNING TIPS -உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்


அதிகமான உடல் பருமன் அல்லது பெருத்த உடல் மருத்துவ இயல், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு ஆங்கிலத்தில் Bariatrics என்று பெயர். 
உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது.

அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காக சிறுகுடலின் ஒருபகுதி, அல்லது வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. சிறுகுடலை மாற்றி அமைப்பதன்மூலம் உடல் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சாதாரணமாக ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு அதிகமானால் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் உடல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பருமனாக இருந்து மது (ஆல்கஹால்) உபயோகிக்காதவராக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யலாம். மேலும் அவரது மனநலம் திருப்திகரமாகவும் வயது 18 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உடல் பருமன் BMI (Body Mass Indx) என்னும் குறியீட்டால் கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட (1) உடல் எடையை கிலோகிராமில் கண்டறிந்து கொள்ளவேண்டும் மேலும் (2) உடலின் உயரத்தை மீட்டரில் அளந்து அதன் வர்க்கத்தை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். (1) ஐ (2) ஆல் வகுத்து வரும் எண்தான் BMI.

BMI ன் மதிப்பு 20 க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர் என தீர்மானிக்கலாம். 20 முதல் 25 வரை இருந்தால் சராசரி எடை எனவும், 25 முதல் 30 வரை இருந்தால் அதிக எடை எனவும், 30 முதல் 40 வரை இருந்தால் உடல் பருமனானவர் எனவும் 40 க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர் எனவும் வகைப்படுத்தலாம்.

உடல் எடையைக் குறைப்பதற்கான  வழிமுறைகள்

  • ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒரு போதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப்பசியெடுத்து, அடுத்தவேளை உணவை ஒரு பிடிபிடிக்க நேரிடும்.  

    •  தினமும்  நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடை பயிற்சியும் யோகாவும் ஒன்று

    •  தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடிபோன்ற சிட்ரஸ் வகைப்பழமாக இருக்கட்டும்
    •  அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலிப்ளவர், முருங்கைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்றகாய்கறிகளில் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டுகப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து  விடுங்கள்

    •  வாரத்தில்மூன்றுநாட்கள்கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்புசுண்டல்கடலை, கொள்ளுப்பயறு போன்றபயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ளகைக்குத்தல் அரிசி, கைக்குத்தல்அவல், முழுகோதுமை, கோதுமைரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
    •  அதிககொழுப்பில்லாதபாலில் (அதாவது 3% அளவேகொழுப்புசத்துள்ளடோன்டுபாலில்) தயாரித்தகாபி, டீ, தயிர்சாப்பிடுங்கள்.
    •  நல்லெண்ணெய், கடலைஎண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும் .
    •  அசைவத்தில் மீன், தோல்நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக்கரு வேகவைத்துசாப்பிடலாம். கிரேவிவேண்டாம்
    • தினமும் இரண்டிலிருந்து மூன்றுலிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்

    தவிர்க்க வேண்டியவை

    • இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு. 
    • இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை. 
    •  வனஸ்பதி மூலம் செய்யப்படும் உணவுகள்.
    More weight loss tips

    Tip 1: Drink Herbal Tea
    When urges for sweets and snacks arrive, try drinking herbal teas such as apple-cinnamon, almond, or orange. The preparation of tea alone actually helps to take your mind off of junk food. The heat from the tea fills you up, and the aroma helps to satisfy your cravings.

    Tip 2: Limit High Carbohydrate Foods
    To maximize the fat-burning process, it’s best to gradually eliminate carbohydrates toward the end of the day. This minimizes your chances of storing fat late at night.

    Tip 3: Don’t Drink Alcohol
    Alcohol contains too many empty calories which ultimately produce nothing but fat.

    Tip 4: Motivate Yourself
    Try to find an incentive for getting in shape and burning fat. Write down your goal and put it in a location you see everyday, such as your refrigerator. Motivation really keeps you going!

    Tip 5: Use Low-Calorie Food Alternatives
    Try to save as many calories as you can. Substitute water for soda, baked chicken for fried chicken, sub sandwiches for pizza, etc.

    Tip 6: Don’t Starve Yourself
    Starving only promotes a bigger “rebound” effect because your body likes to hold on from what it is deprived of. Instead, fuel the body every 2 to 3 hours with small meals.

    Tip 7: Drink 1 or More Glasses of Water Before Meals
    This is to help fill the stomach and give you a full feeling. It works!

    Tip 8: Be Consistent
    No weight loss tips will work if you don’t give them a chance. It may take a while to see results. Hang in there! Consistency is the key to effectiveness.

    Tip 9: Don’t Use the Scale
    Scales can be misleading. For example, if you’re losing bodyfat and bodyweight but gaining muscle, the scale won’t necessarily reflect the difference between the two. Instead, monitor the inches you lose. Inches never lie!

    Healthy Eating: 7 Tips To Help You

    1. Since there are now more and more low-fat products anywhere, as much as your powers can, stay away from excessive fats. You will still be able to enjoy those little luxuries, like ice cream, milk, cheese, and the others, only consume those that are fat-free.
    2. Buy and take only those products that are low in sodium and salt. It is always safe and wise to check the information on nutrition that are always found at the back of packages and labels so you will see the sodium content of the food you are buying. Salt should also be avoided and replaced by natural herbs that can add spices and flavor.
    3. Do not use and take up additives too. There are chicken, fish, and even meat that do not contain additives. There are also stores that sell out organic food products.
    4. It will also do you good if you will starch. Starch coming from foods like grain products, grain, corn, and potatoes that are produced through digestion can be converted into sugar, which in turn will supply our body the needed energy so that we can perform our daily tasks and rituals.
    5. Try to consume different kinds of foods in amounts that are moderately done for your body. Eat everything in moderate amounts only. This will surely give you a variety of flavors to savor and at the same time it will also be a good practice and habit for you not to eat too much.
    6. In order that you will avoid weight gain, stay away from sweetened foods. Like juices and soft drinks, artificial sweeteners are really doubted whether they really help in regulating our body weight. No matter what other women are claiming about these sweeteners, one can never be sure if they are really beneficial or not.
    7. And you have to stick to a high-fiber and low-cholesterol dishes so that you will stay healthy always. It would also be wise to eat a raw food with the cooked one. This is because the enzymes that are present in the raw food that you will eat can help in the digestion of the cooked ones. This complete and proper digestion will aid you in having a healthy body.
      

      12/14/2010

      சர்க்கரை நோய் (Diabetes )


      நீரிழிவு நோய்

      எமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல் (யவாநசழளஉடநசழளளை) இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய்  மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.

      நீரிழிவில் மூன்று வகைகள்

      முதலாவதுவகை

      முதலாவதுவகை (Type I Diabetes) நீரிழிவானது குழந்தைகள் சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. 10% வீதமான நீரிழிவு நோயாளிகள் வகை 1 இனால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

      இரண்டாவது வகை

      இரண்டாவது வகை நீரிழிவு (Type II) இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காதாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை (Resistance) ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரழிவை நிறைகுறைவதாலும் சாப்பாட்டுக கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.

      மூன்றாவது வகை

      மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவானது 2 சதவீதம் முதல 4 சதவீதமான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப் பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.

      குருதியில் உள்ள வெல்லம் கலன்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?

      பல காரணங்களால் இது நிகழலாம்.
      • தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
      • இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல்.
      போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

      நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படும்?

      யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள் எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

      நீரிழிவு நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?

      பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
      • அடிக்கடி சிறுநீர் கழிப்பது
      • அடிக்கடி தாகம்
      • அதிக பசி
      • மிக வேகமாக எடை குறைதல்
      • அதிகமாக சோர்வடைவது
      • கண்பார்வை மங்குதல்
      • வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
      • திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

      நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

      இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை.
      • பார்வை இழப்பு
      • மாரடைப்பு
      • சிறுநீரகக் கோளாறு
      • பக்கவாதம்
      • கால்களை இழத்தல்
      • கோமா மற்றும் இறப்பு.
      நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்

      சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
       
      உடல் நன்றாக இயங்க தேவையான சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம் உண்ணும் உணவுதான் செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது. கணையத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன் ”இன்சுலின்”  தான் செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல அத்தியாவசியமாகும்.  தேவையான இன்சுலின் கணைத்தில் இருந்து சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சேர்ந்து விடும் போது ஏற்படும் விளைவு தான் சர்க்கரை நோய் ஆகும்.


      சர்க்கரை உடலில் கூடினால் மட்டுமல்ல, குறைந்தாலும் பாதிப்பு ஏற்படும். மரபு ரீதியாகவும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ் செரித்து ரத்தத்தில் சேருமாதலால், சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரம் கழித்தே சர்ககரை நோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரண நபருக்கு 110 mg/dl அளவிலிருந்து 140 mg/dl வரை இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது 126 mg/dl விட அதிக அளவிலிருந்து 200 mg/dl விட அதிகளவில் இருக்கும். சர்க்கரை அளவு ரத்தத்தில் 90 mg/dl விட குறைந்தால் அது தாழ்நிலை சர்க்கரை நோயாகும்.


      சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள்
       
         கடுமையான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி, ஆறாத புண், தொடர்ந்த களைப்பு, அதிகமான பசி, மங்கலான பார்வை, கால் மறத்து போதல், தலை சுற்றி மயக்கம் வருதல்.

      சர்க்கரை நோயால் என்ன விளைவுகள் ஏற்படும்
       
      சர்க்கரை நோய் வந்தால் செல்கள், ரத்தம் என இரண்டும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் தனியாக வருவதில்லை. சரியாக கவனிக்க படவில்லை என்றால் உடல் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் என அனைத்தையும் பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம், பார்வை மங்குதல் அல்லது பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, சிறிய காயம் கூட புண் ஆவது, பாதங்கள் மறத்து போதல் அல்லது புண் ஏற்படுவது, களைப்பு போன்றவை ஏற்படலாம்.

      சர்க்கரை நோயை எவ்வாறு சமாளிப்பது
       
      சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் அதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். திடீரென்று ஏற்படும் தாழ்நிலை சர்க்கரை நோய்க்கு இனிப்பான பதர்த்தம்(சாக்லெட்) சாப்பிடலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். உயர்நிலை சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்ட பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, சரியான நேரத்தில் நல்ல உணவுமுறை பழக்கம், சர்க்கரையின் அளவை தவறாமல் கண்காணித்தல், உடற்பயிற்சி, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், பாதங்களை பராமரித்தல், தேவையான இன்சுலின் எடுத்து கொள்ளுதல் போன்றவைகளை செய்தால் சர்க்கரை நோயை பற்றி கவலைபட தேவையில்லை.

      சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

      கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த கோதுமை, அரிசி, கேழ்வரகு போன்ற உணவுகளை உண்ணலாம்.

      1) பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர், சுரைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், பீரக்கங்காய், வாழைப்பூ, புதினா, வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ், அவரை, கொத்தமல்லி, வெண்டைக்காய், வாழைத்தண்டு, கருவேப்பிலை, அனைத்துக் கீரை வகைகள் போன்ற பச்சை காய்கறிகளை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.


      2) பானங்களில் சோடா, நீர்மோர், பால்குறைவான சர்க்கரை போடாத காபி, டீ, சூப், சர்க்கரை போடாத தக்காளி மற்றும எலுமிச்சை பழ ஜுஸ்.
       
      3) பழங்களில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: வாழைப்பழம் (சிறியது)-1, வாழைப்பழம்(பெரியது) அல்லது மலைவாழை - பாதி, ஆரஞ்ச் - 2, ஆப்பிள் - 2, கொய்யா (சிறியது)-2, தர்பூசணி அல்லது கிர்ணிப்பழம் - 200 கிராம், பப்பாளி - 150 கிராம், பேரிக்காய் (சிறியது) - 2, அன்னாசிப்பழம் - கால்பாகம், சாத்துக்குடி - 1, திராட்சை - 25, தக்காளி - 6.

      4) எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரீபைண்ட் எண்ணெய்

      5) அசைவ உணவுகளில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: முட்டையின் வெள்ளைக்கரு மட்டும், மீன் - 2 துண்டுகள், கோழிக்கறி - 100 கிராம், ஆட்டுக்கறி - 100 கிராம்.

      சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

       வாழைக்காய், அனைத்து கிழங்கு வகைகள், இனிப்பு பதார்த்தம், சர்க்கரை, வெல்லம், கல்கண்டு, தேன், குளுக்கோஸ், கருப்பட்டி, கேக், சாக்லெட், ஐஸ்க்ரீம், ஜாம், இனிப்பு நிறைந்த பிஸ்கெட், பால்கோவா,  ஜெல்லி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா, பாட்டில்களில் வைத்து விற்கப்படும் அனைத்து பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள், வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில், எண்ணெய் அதிகளவில் சேர்க்கப்பட்ட ஊறுகாய், வறுத்த மற்றும் பொரித்த உணவு வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா, மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

      மது, சிகரெட், புகையிலை, பொடி போடுதல் ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும், 20 நிமிட நடைபயிற்சியும் செய்யலாம். ஆனால் காலி வயிற்றிலோ, உணவு உண்டவுடனேவோ உடற்பயிற்சி செய்யக் கூடாது.
       
      * உங்கள் சிறுநீரை அடிக்கடி(குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக் கொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.

      * வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காக "One touch", "Gluco meter" போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவு உண்டபின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வெண்டும்.

      * HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாதத்திற்கொருமுறை செய்து கொள்ள வேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சராசரியைக் காட்டும். அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். 5.6% க்குக் கீழே - நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது, 5.6% to 7% - சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள், 7% to 8% - ஒரளவு கட்டுப்பாடு, 8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை, 10% க்கு மேல் கட்டுப்பாடு மிக மோசம்.
       
       
      * உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் சர்க்கரை அளவு குறையலாம். அப்போது அது கை கொடுக்கும்.

      * உங்களுடன் இருப்பர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு சர்க்கரை திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.

      * உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பு காலை நெருக்காத அளவுக்கு தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று அவதானியுங்கள்.

      * கையிலோ அல்லது காலிலோ சூடு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

      * இரத்த அழுத்தத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.

      * வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள். எல்லவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள். உங்கள் உடம்பை நீங்கள் ஆள கற்றுக் கொள்ளுங்கள்; இனிமையான வாழ்வை எதிர் கொள்வீர்கள்!