கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக இன்று 4-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தினை நிரந்தரமாக மூடக்கோரி இடிந்தகரை அருகே கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள், மீனவர்கள் என பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு நடைபெறும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான போராட்டம்.
அகில இந்திய அளவில் இதை கொண்டுசெல்லவேண்டும். அன்னாஹசாரே போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் எல்லோரும் ஆதரவு தெரிவித்தது போல இதற்கும் அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட கோரியும், இதற்காக நடை பெறும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவர்கள் ஒன்று திரளவேண்டும்.
ஈழ மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோம், மீனவர்கள் பிரச்சனைக்காக ஒன்று கூடினோம், இந்தப் பிரச்சனைக்கு ஏன் ஒதுங்குகிறோம்.
(இந்த உண்ணாவிரதத்தில் நம் பதிவர் சகோதரர் கூடல்பாலா அவர்களும் கலந்து கொண்டுள்ளார்)
(இந்த உண்ணாவிரதத்தில் நம் பதிவர் சகோதரர் கூடல்பாலா அவர்களும் கலந்து கொண்டுள்ளார்)
ஒன்றுபடுவோம் உறவுகளே...
அங்கே நம் சகோதரர்கள் உண்ணாவிரதத்தில் மடியும் முன் நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்.
அங்கே நம் சகோதரர்கள் உண்ணாவிரதத்தில் மடியும் முன் நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்.