Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/14/2013

பெண்கள் மட்டும் சளைச்சவங்களா என்ன?


திருமணமான புதியதில்..

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.


4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.


சிறிது ஆண்டுகள் கழித்து..

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?

3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.


பல ஆண்டுகள் கழித்து..

1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்.

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.

4. ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.


ரசித்தது... (  அப்பாடா நம்ம பிளாக் பாஸ்வேர்ட் ஞாபகம் இருக்கு)

7 comments:

  1. ஆம்பிள்ளைகள்லாம் ரொம்ப யோக்கியம்பா!!

    ReplyDelete
  2. கடைசி பகுதியில சொன்னதுதான் சரியா பொருந்துது. சூப்பர். ஆனா ராஜி சொல்லியிருக்கா மாதிரி பெண்கள் பார்வையில் ஆண்கள் எப்படின்னும் எழுதுங்களேன்.

    ReplyDelete
  3. நல்ல கற்பனை!

    ReplyDelete
  4. இதேபோல் மின்னஞ்சலில் வந்து படித்தது போல் ஞாபகம்...
    அருமை... அழகான கற்பனை.

    ReplyDelete
  5. எங்கள் வீட்டில் நடப்பது தங்களுக்கு எப்படித் தெரியும்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தெவதாஸ்

    ReplyDelete
  6. ம்ம்ம்..... சரி சரி.... இதையெல்லாம் வெளியில சொல்லக்கூடாது! :)

    ReplyDelete
  7. எல்லோருக்கும் இது எப்படி பொருந்துதோ ?கற்பனை அல்ல நிஜம் !
    த.ம 8

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"