சாரலாய்க் கொட்டும்
பனிக்காலங்களின்
வைகைறைகளில்
சாணம் தெளித்து
வாசல் கூட்டி
நடுங்கும் கரங்களால்
மாக்கோலம் தீட்டி
பரங்கிப் பூச்சூட்டிய
அலங்கார அழகை
ஊரே ரசிக்க
மகிழ்ந்துபோவாள் அம்மா
விடியலில்
மௌனமாய்க் கரையும்
எறும்புகளின் பசி...
பனிக்காலங்களின்
வைகைறைகளில்
சாணம் தெளித்து
வாசல் கூட்டி
நடுங்கும் கரங்களால்
மாக்கோலம் தீட்டி
பரங்கிப் பூச்சூட்டிய
அலங்கார அழகை
ஊரே ரசிக்க
மகிழ்ந்துபோவாள் அம்மா
விடியலில்
மௌனமாய்க் கரையும்
எறும்புகளின் பசி...
2.
நீங்கள்உங்களையே தேடி
செல்கையில்
உள்மனதில்
அடி ஆழத்தில்
கேட்குமே ஒரு குரல்..
உண்மையான குரல்...
கேட்டதுண்டா எப்போதாவது?
3.
நிஜமாய் இருக்கிறேன் நான் முரனானவன் என்று
எல்லோரும்
முகம் சுழிக்கிறார்கள் ...