Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label பெண்மையை போற்றுவோம். Show all posts
Showing posts with label பெண்மையை போற்றுவோம். Show all posts

3/08/2011

பெண்மையை போற்றுவோம்...

றிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதிலேயே பெரும்பாலானவர்கள் ஈடுபட்டு வரும் இந்த அறிவியல் யுகத்தில் பெண்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காண திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளத் தூண்டும் வகையில் படிப்புகளும் உள்ளன.

2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் மகளிரியலில் எம்.ஏ. பட்டப் படிப்பையும், எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம். மாணவிகளுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் இடமுண்டு. இரண்டு ஆண்டு கால இந்தப் படிப்பில் மொத்தம் 4 பருவத் தேர்வுகள் உள்ளன. இதில், முதல் 3 பருவத் தேர்வுகளிலும் தலா 5 பாடங்கள் உள்ளன. 

வற்றில் திட்ட வரைவும் (ப்ராஜெக்ட்) தயார் செய்ய வேண்டும். இறுதிப் பருவத் தேர்வில் திட்ட வரைவு முழு நேரமாக வைக்கப்பட்டுள்ளது. இளங்கலை பட்ட வகுப்பில் எந்தத் துறையாக இருந்தாலும், அதில், தேர்ச்சி பெற்றிருந்தால் மகளிரியல் முதுகலைப் பட்டப்படிப்பில் சேரலாம். இதேபோல, எம்.பில்., பிஎச்.டி. ஆய்வுகளில் சேர ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சமூகப் பணியில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை மட்டுமே இதில், சேர்க்கப்படுகின்றனர் என்கிறார் இந்த மையத்தின் இயக்குநர்.இது பற்றி அவர் மேலும் கூறியது:"பெண்ணியம் மற்றும் சமூகப் பொருளாதார, கலாச்சார, அரசியல் துறைகளில் பாலின பாகுபாடுகள் சார்ந்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு தீர்வுகளைத் தேடும் கண்ணோட்டத்தோடு இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ந்த ஆய்வுகளின் முடிவுகள் தேசிய மற்றும் மாநில அளவிலான வளர்ச்சித் திட்டங்கள், கொள்கைகள் வகுப்பதற்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன.மகளிர் மேம்பாடு, மகளிர் பிரச்னை, பெண்ணியக் கோட்பாடு, சமூகவியல், பொருளியல் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அதாவது, பெண்களுக்கு எதிரான அநீதிக்குக் குரல் எழுப்ப வைப்பதற்கான பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது. 

மேலும், ஆண்-பெண் பாகுபாட்டைக் களையவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், வளர் இளம் பருவப் பெண்களுக்கு உள்ள பாலியல் ரீதியான பிரச்னைகள், ஊடகத்தின் தாக்கத்தால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், கருக்கலைப்பு, எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படும் பெண்கள், தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள், ஜவுளித் துறையில் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்றவை தொடர்பாக ஆய்வு செய்யப்படுகின்றன.

டனடி வேலைவாய்ப்பு: இப்படிப்பை முடித்தவர்களுக்குத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. குறைந்தபட்சமாக ரூ. 5,000 மாத ஊதியம் கிடைக்கும் அளவுக்கு வேலை கிடைப்பது நிச்சயம். நிறுவனங்களைப் பொருத்து, அதிக அளவிலும் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. Thanks Dinamani.

இந்த மையத்தில் மூன்றாம் பருவத் தேர்வுகள் முடிவதற்கு முன்பாகவே அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து விடுகிறது.வெளிநாடுகளில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் மகளிரியல் -பாலின கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திட்ட வடிவமைப்புப் பணிகள் அனைத்திலும், இந்த மைய மாணவர்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் இந்த மையத்தின் இயக்குநர்.

இன்று   உலகமகளிர் தினம்.    அவா்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவோம்..
பெண்மையை போற்றுவோம்... 

முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                               2.  மனதை தொட்ட கவிதைகள்                                                                                3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார் 
4திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா
 

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

12/22/2010

காதலிக்க கற்றுகொள்ளுங்கள்


பெண்மையை போற்றுவோம்

காலையில் எழுந்த கணம் முதல்... கணவனை எழுப்பி காஃபி கொடுப்பதில் ஆரம்பித்து, பிள்ளைகள் எழுப்பி, அவர்களைக் குளிப்பாட்டி பள்ளிகளுக்கு அனுப்பவும், இங்கும் அங்கும் ஓடியாடி  சமையலை முடித்து, தானும் குளித்துத் தயாராகி குடும்பத்தோடு அமர்ந்து வேக வேகமாக சாப்பிட்டு , மதிய உணவை கட்டிக்கொண்டு அலுவலகத்திற்குப் பறந்துச் சென்று, வேலையில் மூழ்கி புன்னகைத்த முகத்துடன் பணிகளை முடித்து, மாலையில் இல்லம் திரும்பியதும் வேலை.

தன் குடும்பத்தினரின் தேவைகளை முடித்து - தன்னைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லாமல் - படுக்கைக்குத் திரும்பும்போதும்... அந்த முகத்தில் காலையில் மலர்ந்த புன்னகை மட்டும் மாறுவதில்லை.

இதுதான் இன்றைய மங்கையின் அன்றாட நாட்குறிப்பு. ஒருபக்கம் அலுவலகமும் சமூகமும், மறுபக்கம் குடும்பம், குழந்தைகள், பண்டிகைகள். எல்லாவற்றையும் தனக்கே உரித்தான சாதுரியத்துடனும், தெளிவுடனும் செய்து முடிப்பவள். இன்றைய நவீன சமூகத்தில் அவளுக்குறிய இடம் இதுதான்.
 காலத்தின் போக்கிலும், நாகரீகத்தின் ஏற்றத்திலும் மிகவும் மாறியவர்கள். இந்திய நாட்டின் முன்னேற்றப் பாதையே படித்துத் தகுதி பெற்ற பெண்கள்தான் என்று கூறுமளவிற்கு தகுதிபெற்றவர்கள். ஆண்களுக்கு நிகரான தகுதியிடனும், திறனுடனும் அவர்கள் உழைக்கின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, கலை என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உயர்நிலைகளில் அவர்களும் உள்ளனர்.

இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.

பெண்கள் பலவீனமானவர்கள் என்று காலம் காலமாக கூறி வருகின்றனர். அதையே காரணமாக்கி எல்லாத் துறைகளிலிருந்தும் அவளை ஒதுக்கிவைத்தனர். இதனை கணினி யுகம் மாற்றிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவள் நிலை உயர்ந்துள்ளது. ஒடுங்கிக்கிடந்த உள் உலகத்திலிருந்து அவள் வெளியுலகத்திற்கு வந்துள்ளாள்.

மற்றவர்களைப் போல என்னாலும் எதையும் செய்ய முடியும், சாதிக்க முடியும், அதற்கான மனோபலமும், ஆற்றலும் என்னிடம் உள்ளது என்று கூறும் அளவிற்கு அவள் நிலையும், மனமும் உயர்ந்துள்ளது. நவீன யுகத்தில் தன்னம்பிக்கையுடன் அவள் பணியாற்றி வருகிறாள்.

பெண்களே, ‘பலவீனமானவள் நான்’ என்று நீங்களே உங்களை நினைக்காதீர்கள். சமூகத்தில் நமக்கு உறுதியான இடம் கிடைத்துள்ளது. நம்மிடம் பலமும், திறனும் உள்ளது, எந்தத் துறையிலும் செயலாற்றும் திறன் நம்மிடம் உள்ளது. அதனை உறுதியாக உலகிற்கு எடுத்துரைப்போம்.

நம் இரத்ததோடு கலந்து, நம்மையும் , நம் சந்ததியையும் வளர்க்கும்  பெண்மையை போற்றுவோம்.
 அவர்களின் அன்பை வேண்டி காதலிப்போம்.

12/13/2010

பெண்மையை போற்றுவோம் - இந்தியா

பெண்மையை போற்றுவோம்:
  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
இந்திரா காந்தி
  • இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்
சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்)
  • இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்
சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)
  • இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி
பாத்திமா பீவி
  • இந்தியாவின் முதல் பெண் மாநில ‌தலைமை செயலர்
லட்சுமி பிரானேஷ்
  • இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்
விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49)
  • இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்
ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்தூறை 1957 வரை)
  • இந்தியாவின் முதல் பெண் ‌வழக்கறிஞர்
ரெஜினா குகா (1922)
  • இந்தியாவின் முதல் பெண் ‌மருத்துவர்
ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்)
  • இந்தியாவின் முதல் பெண் பொறியாலர்
லலிதா (சிவில் 1950)
  • இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)

  • இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி
கிரண்பேடி
  • இந்தியாவின் முதல் பெண் நீதிபதி
அன்னா சாண்டி
  • இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்
சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை)
  • இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டி
காப்டன் துர்கா பானர்ஜி
  • இந்தியாவின் முதல் பெண் மேயர்
தாரா செரியன்
  • இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்
அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்)
  • இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்
வசந்த குமாரி (தமிழ்நாடு)
  • இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மனி
கல்பனா சாவ்லா
  • இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்
சுரோகா யாதவ்
  • இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)
இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா
  • இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்
புனிதா அரோரா
  • இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்
பத்மாவதி பந்தோபாத்யாயா

11/30/2010

பெண்மையை போற்றுவோம் - அன்னை தெரேசா


அன்னை தெரேசா
பிறப்பு : ஆகஸ்டு 26 - 1910. அஸ்கப், ஓட்டோமான் பேரரசு (இன்றைய ஸ்கோப்ஜி,   மாக்கடோனியக் குடியரசு)
இறப்பு: செப்டம்பர் 5 1997 (அகவை 87). கொல்கத்தா, இந்தியா
தேசியம் :  அல்பேனியன் / இந்தியன்
அறியப்படுவது :  பிறர் அன்பின் பணியாளர் சபையின் நிறுவுனர்.
தொழில்:  ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, மனித நேய ஆர்வளர்

அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் -ன் சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட் என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980-ல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவும் பெற்றார். 

அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை விரிந்து கொண்டே சென்று, அவரது மரணத்தின் போது 123 நாடுகளின் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ்,தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்தரத்துக்கான அதிபரின் பதக்கத்தை 1985 ல் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் இவரை புகழ்ந்து வந்திருக்கின்றன. எனினும் பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்துள்ளார்.இத்தகைய விமர்சனங்கள் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டச்சர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் அவரது உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டினையும், மதமாற்றத்தைக்குறிக்கோளாகக் கொண்ட அவரது யுத்திகளாகக் கருதி எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளாகும். பல மருத்துவப் பத்திரிகைகள், அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிய வண்ணமும் இருந்தன.

1979 ல், அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

மரணத்திற்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்ற பட்டம் சூட்டப்பட்டார்.

அன்னை தெரெசாவுக்கு பலதரப்பட்ட விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் மூலமாகவும், பல்வேறு சபைகளின் காவல் புனிதராக நியமிக்கப்பட்டதன் மூலமாகவும், விதவிதமான கட்டுமான அமைப்புகள் மற்றும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதின் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றின் ஆசிரியரான நவீன் சாவ்லா வால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

Stamp-honoring :


11/28/2010

சாதனை பெண்கள் - தமிழ் நாடு

 சாதனை பெண்கள் - தமிழ் நாடு

சங்க இலக்கியம்

சங்கத் தமிழ் பெண் புலவர்கள்
  • ஔவையார்
  • ஒக்கூர் மாசாத்தியார்
  • பொன்முடியார்
  • காக்கை பாடினியார் - பெண் புலவர் - காக்கை பாடினியம்
  • 33 சங்கப் பெண் புலவர்கள்

நாயன்மார்கள்

  • காரைக்கால் அம்மையார்
  • இசைஞானியார் நாயனார்
  • மங்கையர்க்கரசியார் நாயனார்

ஆழ்வார்

  • ஆண்டாள்

இந்திய விடுதலைப் போராட்டம்

  • வேலு நாச்சியார்
  • கேப்டன் லட்சுமி
  • வை. மு. கோதை நாயகி அம்மாள்
  • கி. சாவித்திரி அம்மாள்
  • கரினி
  • ச. அம்புஜம்மாள்
  • குமுதினி
  • தில்லையாடி வள்ளியம்மை
  • ருக்மணி லட்சுமிபதி

தமிழீழ விடுதலைப் போராட்டம்

  • மேஜர் சோதியா
  • மாலதி
  • தமிழ்க்கவி
  • அன்னை பூபதி

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம்

  • தில்லையாடி வள்ளியம்மை
  • அம்மா நாயுடு
  • சரோஜினி நாயுடு

கல்வி

  • அக்கா சுபலட்சுமி

மருத்துவம்

  • முத்து லட்சுமி ரெட்டி - முதல் இந்திய பெண் மருத்துவர்
  • சா. தருமாம்பாள்
  • வி. சாந்தா  - சிறந்த மருத்துவர், உலக சுகாதார அமைப்பு ஆலோசகர்

பொறியியல்

  • சிறீலட்சுமி பிரியா - முதல் தமிழ்ப் பெண் கப்பல் பொறியியலாளர்

இணையம்

  • மதி கந்தசாமி - தமிழ் வலைப்பதிவு முன்னோடி,
  • சந்திரவதனா செல்வகுமாரன் - இணைய எழுத்தாளர்

மனித உரிமைகள்

  • ராஜினி
  • நவநீதம் பிள்ளை

சமூக சேவை

  • தங்கம்மா அப்பாக்குட்டி
  • சவுத்திரம் இராமச்சந்திரன்

தமிழறிஞர்கள்

  • நீலாம்பிகை அம்மையார்
  • அசலாம்பிகை அம்மை

கவிதை

  • குட்டி ரேவதி
  • மாலதி மைத்திரி
  • உமா மகேஸ்வரி
  • சுகிர்த ராணி
  • சல்மா
  • இறம்பறை
  • வெண்ணிலா

இசை

  • பி. சுசீலா
  • மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
  • தமள் கிருட்ணசுவாமி பட்டம்மாள்
  • மேட்ராசு லலிதாங்கி வஸன்தகுமாரீ
  • கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
  • டி. கே. பட்டம்மாள்

ஆட்டம்

  • குமார் மாலா
  • ருக்மணிதேவி அருண்டேல்

இயங்குபடம்

  • வனிதா - ஆசுகர் விருது பெற்றவர்

விளையாட்டு

  • இளவழகி - கரம் உலக வெற்றிவீரர்
  • சாந்தி சுந்தராஜன் - ஆசிய விளையாட்டுப் போட்டி, 800 மீ ஓட்டம் வெள்ளி பதக்கம்
  • உத்ரா - சதுரங்கம்
  • சந்தியா - சிலம்பாட்டம்
  • ரேவதி (விளையாட்டு வீரர்)
  • யோகலட்சுமி - மலையேறுதல்

பேச்சாளர்கள்

  • பர்வின் சுல்தானா
  • வாசுகி கண்ணதாசன்

நகைச்சுவை

  • டி ஏ மதுரம்
  • டி பி முத்துலட்சுமி
  • மனோரமா
  • ஈ வி சரோஜா
  • சச்சு
  • காந்திமதி
  • ஊர்வசி
  • கோவை சரளா
  • கல்பனா
  • ஆர்த்தி

எதிர்ப்புப் போராட்டம்/சமூகப் போராளிகள்

  • மணலூர் மணியம்மை
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
  • நீலாவதி இராம. சுப்பிரமணியம்
  • மணியம்மை
  • கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் - நில மீட்புப் போராளி
  • ரூத் மனோரமா - தாழ்த்தப்பட்ட மக்களுக்கான, பெண்களுக்கான சமூகப் போராளி

அரசிகள்

  • இராணி முத்திருவாய் நாச்சியார்
  • ஈழத்துப் பனங்காமத்து அரசி வன்னி நாச்சியார்
  • இராணி மங்கம்மாள்
  • பாண்டிய அரசி தேவி மீனாட்சி

இந்தியா

  • மரகதம் சந்திரசேகர்
  • கனிமொழி
  • ஜானகி இராமச்சந்திரன்
  • ஜெ. ஜெயலலிதா

பெண்மையை போற்றுவோம் - ஆங் சான் சுய் ( Aung San Suu Kyi )

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: ஜூன் 19, 1945 மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்.

இவரது தந்தை ஆங் சான் அன்றைய பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தவர். 1947 இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். சூ கீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாகரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார். 

1992 இல் இந்திய அரசின் ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார். 1990இல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொண்டது. ஆனாலும் இவர் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை.
1945 ஆனி 19 இல் பிறந்த ஆங்சான் சூகிக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆடி 19 இல் அவரது தந்தை ஜெனரல் ஆங் சான் (Aung San) படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 தை 04ம் தேதி பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையாகிறது. 

தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூச்சி 1972 தை 01இல் பிரித்தானியரான மைக்கேல் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். 1988இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 புரட்டாதி 24இல் உருவாக்கப்பட்ட NDL (National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 தை 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூச்சி தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். 

அதைத் தொடர்ந்து 1989 ஆடி 20இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 82% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சி பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்சான் சூச்சி வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும் ஆங்சான் சூச்சி பெற்றுக்கொண்டார்.

11/25/2010

மகுடம் சூடிய பெண்கள்

நோபல் பரிசு பெற்ற பெண்களின் பட்டியல்

வேதியியல்

இயற்பியல்

மருத்துவம் (Physiology)

இலக்கியம்

அமைதி

பொருளாதாரம்