Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/06/2014

ஜோக் சொன்னா சிரிக்கணும்.. அதை விட்டுட்டு ..




ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்
வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய
அவரோட வேலை பாத்தவங்க
சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும்
தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன
உடனே பசங்க எல்லாம்
எழுந்திருச்சு நின்னாங்க.

சரி எதாவது கேள்வி கேக்க
வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி........ ...
"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா"
அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர்
சொல்லு"
"மாரி"
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" "பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு.
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க
அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப்
பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச்
சொல்லு...."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல...

2 comments:

  1. வாய் விட்டு சிரிச்சிட்டேன் சகோதரரே.
    இந்த ஜோக்கை படிக்கும் போது இன்னொன்றும் ஞாபகத்தில் வருகிறது .
    ஏண்டா எங்க அண்ணன் கைய வெட்டுன ?
    என்னது உங்க அண்ணன் கைய நான் வெட்டுனனா?
    யாருடா உங்க அண்ணன் ?
    அதான்பா .... ஸ்ரீநிவாசன் தம்பி செபாஸ்டியன் !!!!
    என்னது ஸ்ரீநிவாசன் தம்பி செபாஸ்டியனா ?
    குடும்பத்துல கொழப்பமா இருக்கும் போல !!!

    ReplyDelete
  2. #பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல#
    காரணம் என்னான்னா ,ஆய்வு செய்த ஆய்வாளர் தற்கொலை செய்து கிட்டது தானாம் )
    த ம 8

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"