Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/11/2013

ஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா?




அவசரமாய்
கதவைத் தள்ளி 
உள் நுழைகையில்,
ஜாக்கெட்டோ?
புடவையோ?
மாற்றிக் கொண்டிருக்கும் 
அம்மாவையோ?
அக்காவையோ?
பார்த்துவிட்டால்,

பதற்றமாகி
கூசி, கூணிப் போகிற
மனசு,

நின்று இரசிக்கிறது...

பாதி,
ஆடைகளற்ற
நடிகையின் 
சுவரொட்டியை...!

14 comments:

  1. நடிகை வெட்கமின்றி காட்டும்போது பார்ப்பவனுக்கு ஏன் வெட்கம் வரப் போகிறது ?

    ReplyDelete
  2. ammavo akkavo antha mathiri pose koduthu posterila pottukkonu solvangala ?

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  4. வக்கிரம் நிறைந்த மனசு...
    கவிதை அருமை.

    ReplyDelete
  5. எல்லாவற்றிற்கும் காரணம் மனது தான்!
    அம்மா, தங்கை, சகோதரி--மகள்-- இப்படி-யாரை இந்த கோணத்தில் பார்த்தாலும் நம் மனது பதற்றமாகி கூசி, கூணிப் போகிறதென்னவோ உண்மை தான்! அது நியாமும் கூட....

    அதே சமயம்..பாதி, ஆடைகளற்ற நடிகையின் சுவரொட்டியை ஓட்டுவதே ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே! சுவரொட்டியைப் பார்த்து கோவிலில் பஜகோவிந்தம் பாட அல்ல!

    சுவரொட்டியை ஒட்டினவனை விட்டு...
    எய்தவனை விட்டு...வேடிக்கை பார்த்தவனை நோவதேன்!

    ரசிக்கும் ஆண்கள் கெட்டவர்கள் என்றால்...மனைவியின் எல்லா ஆடைகளையும் (பாதி ஆடைகள் அல்ல), முழு அடைகளையும் கழட்டி அணு அணுவாக ரசிக்கும் கணவர்கள் என்ன -- மேன் மக்களா?

    தம்பிகளா, இப்படி நம் அப்பாக்கள் நம் அம்மாக்களை ரசிக்கவில்ல என்றால்...இன்று நீங்களும் இல்லை நானும் இல்லை---தமிழ்மணமும் இல்லை!

    இந்த உண்மையை நான் எழுதினால் ஆபாசம்! ஒகே வர்ட்டா!

    ஆனால், இது தான் இயற்கை!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"