Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/20/2013

இது இலவச மருத்துவமனை ( Free Hospital) - நகைச்சுவை கதம்பம்.


சிரிக்க மட்டும் :-

1) தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...

மகன்: ஃபெயிலாயிட்டா..?

தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!

2) ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?
மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?

3) ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?

சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!

4) நண்பர் 1: அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''

நண்பர் 2: எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...'

5) ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!

மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?

6) ஆண்: என்னோட மனைவியைக் காணோம்..ஒரு அஞ்சு நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?

பெண்: எதுக்கு?

ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம் பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!

7) நோயாளி: டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே

டாக்டர்: நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.

8) நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...

நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!

9) மனைவி : 'உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட,அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”.

கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.

10) மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்கணவன் : ரொமப தேங்ஸ்.

மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடு வன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்.

ரசித்தமைக்கு நன்றி.


7 comments:

  1. பாம்பு சட்டை உரிக்குற ஜோக் நல்லா இருக்கு

    ReplyDelete
  2. ஹா...ஹா... நல்லதொரு நகைச்சுவை கதம்பம்...!

    ReplyDelete
  3. பத்தாவது நகைச்சுவை எங்கே நிகழ்ந்தது சகோ ?...:))))))
    மிகவும் ரசிக்க வைத்த நகைச்சுவைப் பகிர்வுக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  4. நல்ல வேளை ,பாம்பு பனியனைக் கழற்றதோட விட்டுச்சே !

    ReplyDelete
  5. இப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது. அதற்கு பிறகு நடப்பது வேற! நல்ல நகைச்சுவை !

    ReplyDelete
  6. இப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது. அதற்கு பிறகு நடப்பது வேற!நல்ல நகைச்சுவை!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"