Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/13/2013

முதலீடு இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி?


முதலீடு இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி என்று மறைமுகமாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவை நக்கலடித்தார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இதனால் பாராளுமன்ற அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது கூறப்படும் நிலமோசடி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் இறங்கினர். இந்தப் பிரச்சனையுடன் ஜம்மு கலவரம், கேரள மாநிலத்தில் சோலார் பேனல் ஊழல் விவகாரமும் சேர்ந்து கொண்டதை தொடர்ந்து இரு அவையும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல பிரச்சனைகள் குறித்து பேச தொடங்கினர்.

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது கூறப்படும் நில மோசடிகள் குறித்து, பாஜகவை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா பேசினார். "பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை சொல்லி கொடுக்க பல்வேறு பிசினஸ் ஸ்கூல்கள் உள்ளன. இந்த கல்லூரிகள் எதிலும் படிக்காமல் முதலீடு இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி என்பதை உயர்ந்த இடத்துடன் தொடர்பு உள்ள ஒருவர் நமக்கு கற்று கொடுத்திருக்கிறார்" என மறைமுகமாக ராபர்ட் வதேரா குறித்து பேசினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்பி சஞ்சய் நிருபம் அவையின் மைய பகுதிக்கு சென்று பாஜக குற்றச்சாற்றுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத், இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பீகார் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும் லாலு கட்சி உறுப்பினர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் குற்றம்சாற்றினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர். சோலார் பேனல் மோசடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இடதுசாரி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது.

இதை தொடர்ந்து அவையை பகல் 12 மணி வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடிய போதும் இதே நிலை நீடித்ததால் பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. ராபர்ட் வதேதரா, தெலங்கானா, கேரளா சோலார் பேனல், ஜம்மு கலவரம் என பல்வேறு பிரச்சனைகளுக்காக மாநிலங்களவையும் முதலில் 12 மணி வரையும் பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. தகவல் வெப்துனியா 

3 comments:

  1. கிண்டலடித்து என்னவாகப் போகிறது...

    எத்தனையோ வழக்குகளை எல்லாம் தூளாகிக்கிய காங்கிரஸ் மருமகனை மட்டும் என்ன தூக்கிலா போடப்போகுது...

    விட்டுத்தள்ளுங்க... கேடுகெட்ட ஆட்சியாளர்கள் இருப்பதால்தான் பாகிஸ்தான்காரன் பந்து போட்டுப் பார்க்கிறான்... இவனுகளும் காட்ச் பிடிக்கமாட்டோம்ன்னு கோட்டைவிட்டுட்டு அறிக்கை விடுறாய்ங்க...

    ReplyDelete
  2. காங்கிரஸும் ஊழலும்
    பிரிக்கமுடியாததாகி பல காலம் ஆகிவிட்டது
    தேர்தல் வரை காத்திருப்பதைத் தவிர
    வேறு வழியில்லை.எனன செய்வது ?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"