Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/05/2013

நியூட்டனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா?



நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம். அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே 
தெரியும் ...! புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு.

ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார் 

தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார் மிக நீண்ட தூர பயணம் .. இடம் நெருங்கி வந்த போது 

நியூட்டன் சாரதியிடம் சொன்னார் நான் கார் ஓடுகிறேன் நீ பின்னுக்கு இரு ..சாரதி தயங்கினாலும் இறுதியில் சம்மத்தித்து இருந்தார் 

பல்கலைக்கழகம் வந்தது ..நியூட்டன் சாரதிக்கு சொன்னார் ஒன்றும் சத்தம் போடாமல் நடப்பதை எல்லாம் நீயே செய் என்றார் .. 

விழாஒருங்க்கிணைப்பாளர் கார் கதவை திறந்து சாரதியை நியூட்டன் என கருதி ராஜ மரியாதை கொடுத்து மேடையில் அமரவைக்க .. நியூட்டன் 
மேடைமுன் உள்ள முதல் வரிசையில் பார்வையாளர் இருக்கையில் இருந்தார் ... 

மேடையில் இருக்கும் நியூட்டனிடம் (சாரதி) விஞ்ஞான சந்தேக கேள்விகள் தொடங்கின முதலாவது வினாவை மாணவர் ஒருவர் கேட்டார் .... 
அப்போது மேடையில் இருந்த நியூட்டன் (சாரதி) சொன்னார் இந்த சின்ன கேள்விக்கு எல்லாம் எனது -சாரதி பதில் சொல்வார் என்று கூறி மேடையை விட்டு இறங்க்கிச்சென்றார்.

பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதைதான் இதுவே ...

முகப்புத்தகம்.

6 comments:

  1. நல்ல நகைச்சுவை ..

    ReplyDelete
  2. ஐன்ஸ்டீனையும் அவர் டிரைவரையும் வைத்து இப்படி ஒரு கதை படித்தேன்.இதென்ன புதுசா? தகவலுக்குரிய லிங்க் இணைத்தால் நன்று

    ReplyDelete
  3. ஐன்ஸ்டீனை மையமாக வைத்துத்தான் இந்தக் கதையை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அதை ஓராண்டுக்கு முன் பதிவில் எழுதி இருக்கிறேன்.
    எப்படி இருந்தாலும் இது போன்றவை கற்பனையாகவே இருக்கக் கூடும். என்றாலும் சுவாரசியம்தான்.

    ReplyDelete

  4. வணக்கம்!

    உள்ளம் உவக்கும் உயா்ந்த நிகழ்வினை
    அள்ளி அணைத்தேன் அகத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"