Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/19/2013

அரசியல்வாதிகளே - இது நியாயமா?



இந்தி மொழியை எதிர்க்கிறோம் என்று, மாணவர்களை தூண்டி விட்டு, ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள்  இன்று, ஆங்கில வழி கல்வியையும் எதிர்க்கிறார்கள்.
ஆங்கிலம் என்பது, உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்ட, பொது மொழி.அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி இல்லாததால் தான் ஏழை மாணவர்கள் கூட  தனியார் பள்ளிகளில் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். 

இன்று எத்தனையோ ஏழைப் பெற்றோர்கள் தம்முடைய குழந்தைகளை ஆங்கில  வழியில் படிக்க வைக்க முடியவில்லையே என வருத்தப் படுகிறார்கள்.

அரசு பள்ளியில், ஆங்கில வழி கல்வி ஆரம்பித்தால், தமிழ் எப்படி அழிந்து விடும்? என் குழந்தைகள் எது படிக்க வேண்டும் என்று, நான் தான் முடிவெடுக்க வேண்டும் என்று, பெற்றோர் நினைப்பதில் தவறில்லையே? 

தனியார் பள்ளிகளில், லட்சக்கணக்காக ரூபாய் செலவழித்து, குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், அரசு பள்ளியில் சேர்த்தால், அவர்களின் பணம் மிச்சமாகும்.

இதைப் பற்றியெல்லாம், அரசியல்வாதிகளுக்கு  கவலையில்லை. தன் குடும்பத்துப் பிள்ளைகள், இந்தி படிக்கலாம்; ஆங்கிலம் படிக்கலாம்; பெரிய பதவியில் இருக்கலாம்... மற்றவர்கள் யாரும் படித்துவிடக் கூடாது. இது தான் இன்றைய அரசியல்வாதிகளின் கனவு.


10 comments:

  1. Ivinga pannura arasiyalukku namma palikeda aakkapadurom. Enga namma padichittu IAS aagi ivangala Ulla thokki vanchuruvom-nu ninaikiranga devidiyava pethu (athaiye) pottavingA.

    ReplyDelete
  2. அனைத்து அரசியல்வாதிகளும் அப்பட்டமான சுயநலவாதிகளே.

    ReplyDelete
  3. அரசியல்வாதிகளுக்கு இவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்க நேரம் ஏது...?

    ReplyDelete
  4. தமிழ் வழிக் கல்வியை இந்த நிலைக்கு தள்ளியதில் திமுகவுக்கு சம பங்கு உள்ளது. ஆனால் தமிழ் வழிக் கல்வியை இல்லாமல் செய்வதால் தமிழுக்குப் பாதகம் வருமா என்று நீங்கள் கேப்பது குழந்தைத் தனமாக உள்ளது. தமிழில் அறிவு வளர்வதைத் தடுக்கும். ஒரு சடங்கு மொழியாக ஆக்கும். அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கும்.

    ஆங்கில வழிக் கல்வி இல்லாத யப்பான், சீனா, பிரான்சு, யேர்மனி, உருசியா, இசுரேல் எல்லாம் சிறப்பாக இல்லையா. இந்த நகர்வு ஒட்டு மொத்தமாக அரசின் இயாலாமைத் தன்மையால் முன்னெடுக்கப்படும் ஒன்றுதான். தாய் வழிக் கல்வியில் தரமான கல்வியையும், ஆங்கில அறிவையும் வழங்கக் கூடியதாக இருந்தால் இந்த நிலைமை வந்திராது. இது முடியும். இலங்கையின் தலை சிறந்த கல்லூரிகளில் பெரும்பான்மையானவை (95%) தாய் வழிக் கல்வியில் தான் கல்வியை வழங்குகின்றன.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. மொழி அறியாத தேசத்தில் போயி முளிக்கிரவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டால் அரசியல்வியாதிகளை காரி துப்பி விடுவார்கள்.

    ReplyDelete
  7. தாங்கள் கூறிய கருத்துக்களை தமிழகத்தில் புரிந்துகொள்ள வேண்டியவா்கள் இன்னும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.
    அதுவரை அரசியல்வாதிகள் இப்படிச் சொல்லிக்கொண்டே ஏமாற்றுவார்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  8. மக்கள் எக்கேடு கெட்டால் என்ன!தம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்!

    ReplyDelete
  9. ஊருக்கு உபதேசிகள்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"