Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/06/2013

சில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது ?






ன்மீது உண்டானது 
காதல்தான் என்று 
எனக்கு
முதலில் உணர்த்தியது 
மழை...!

ன்னுள் கரையும் போது 
என்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...!

ரு மேகங்கள் சூழ 
ஒரு நாள் மழை தோடு முன் 
என் விரல்களை நீ  பற்றினாய் ...!

ம் முதல் ஸ்பரிசத்தை 
மேலும் மகிழ்த்தியது 
மழையின் பகிர்வு...!

நெற்றியில் விழும் 
ஒற்றை முடி விலக்கி 
மெல்ல இதழ் பதித்தாய்
அதுவும் 
ஒரு மழைநாள் மாலைப் பொழுதில் ...!

பின்னொரு நாள் 
கனத்த இதயத்தையும் 
கண்ணீரையும் சேர்த்து 
என் காதலுக்கு கல்லறை 
எழுப்பினாய்
அன்றும் மழை பெய்தது...!

ந்த  மழை
என் கண்ணீர் விலக்கவா
தன் சோகம் கரைக்கவா 
என்று தெரியவில்லை ...!

ண்மையில்
உன் பிரிவை விடவும்
என்னை வருத்துவது 
நீ தந்த 
மழைக்கும் எனக்குமான உறவு...!
- மறுபதிவு 

5 comments:

  1. /// அந்த மழை
    என் கண்ணீர் விலக்கவா
    தன் சோகம் கரைக்கவா
    என்று தெரியவில்லை...! ///

    ReplyDelete
  2. என்னவெல்லாம் செய்கிறது இந்தக்காதல்!

    ReplyDelete
  3. அவள் உங்களை தொட்டிருக்கிறாள், இதழ் பதித்திருக்கிறாள், அதனால் தான் வந்தது பிரச்சினையே. எனவே காதல் துயர் தாக்காமல் escape ஆக வேண்டுமென்றால் கல்யாணம் ஆகும் வரை தொட அனுமதிக்கக் கூடாது. எப்பூடி......!!

    ReplyDelete

  4. நெற்றியில் விழும்
    ஒற்றை முடி விலக்கி
    மெல்ல இதழ் பதித்தாய்//
    அதுதான் உங்களை மேலும் குழப்பமடைய வைக்கிறதோ?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"