Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/30/2013

இது சந்தியாவின் முத்தம்



பூர்வமான
ஒரு தனிமையில்
உட்கார்ந்து  கொண்டிருந்தோம்.

வார்த்தைகளின்
இடைவெளிகளை நிரப்பிய
நெகிழ்வான மௌனங்கள்
கரைத்துக் கொண்டிருந்தன
நாம் பேச இயலாத
சஞ்சலங்களை.

ந்த அடர்ந்த வனத்தின்
ஒற்றைப் பட்டாம்பூச்சியைப் பின்
தொடர்ந்துக்கொண்டிருக்கிறது
உன் மனம்.

ந்த நீர்க்குமிழிக் கணத்தின்
எதோவொரு இழையில்
மீண்டும் பலப்படுகிறது
நம் நட்பு .

நெகிழ்வுகள் நீங்கிய
வேறொரு தருணத்தில்
பிரித்துக் காட்டுவேன்
அதற்கு
நான் தந்த விலையை...!



மறுபதிவு .,
படங்கள் உதவி கூகிள்.

5 comments:

  1. அருமை...

    என் காதல் மனைவி என்னுள்... இதுவும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சொல்லுங்க அருமை...

    ReplyDelete
  3. அதற்கு
    நான் தந்த விலையை...!
    >>
    விலையை வெளியே சொல்லக் கூடாது சகோ! அப்படி சொல்லிட்டா அதுக்கு மருவாதி இல்ல

    ReplyDelete
  4. படக்கவிதை அழகுங்க.

    ReplyDelete
  5. இரண்டுமே அழகு!!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"