Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/04/2013

இதுவரை யாரும் எழுதாத கவிதை இது..






காலையிலிருந்தே
மூளையில் அரித்தது
கவிதை எழுதி
ரொம்ப நாளாச்சே என்று...!

வ்வப்போது
வந்துபோகும்
சிந்தனைச் சிதறல்களை
வாக்கியங்களாக
பதிவு செய்யவேண்டும்
என பேனாவும் தாளும்
எடுத்து   அமர்ந்தேன்...!

ழைய நண்பா்
மொபைலில் அழைத்தார்
பத்து நிமிடமாச்சு
அவருடன் பேசி முடிக்க...!

ந்த பின்
அந்தத் தாளைப் பார்த்தால்
இரண்டு வயது
நிரம்பாத என்மகள்
அந்தப் பக்கம் முழுக்க
கிறுக்கி வைத்திருந்தால்...!

பார்க்கும்போதே
பரவசமானேன்
இதுவரை யாரும் 
எழுதாத கவிதை!!!

படம் உதவி கூகிள்.
மீள்பதிவு .

3 comments:

  1. அ(இ)தை விட சிறந்த கவிதை ஏது...? வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்கள் கூற்று உண்மைதான்! அது ஈடில்லாக் கவிதையே!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"