Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/03/2012

இதற்கு நாம் வெட்கப்பட்டுதானே ஆக வேண்டும்?



சமீபத்தில் மருத்தவமனையில் ஒரு இறந்த குழந்தையை எலிகள் கடித்து குதறிய சம்பவம் உங்களுக்கு தெரியும்.

எப்போதும் கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அரசு இப்போதும் அப்படியே. பிரச்சனைகள் வரும்போதுதான் அதைப் பற்றி நடவடிக்கைகள் இருக்கும்.

இப்போது மருத்துவமனைகள், மக்கள் அதிகம்  கூடும் இடங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள  எலிகளை ஒழிக்க இருளர்களைவைத்து எலிபிடிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது.

சாதிகளை ஒழிப்போம் என கூறிக்கொண்டிருக்கும் நாம் இருளர்கள் என அடையாளப்படுத்துவது சரியா, அவர்களை எலிபிடிப்பவர்கள் என கொச்சைப்படுத்துவது முறையா?

சொல்லுங்கள் உறவுகளே..

18 comments:

  1. சரியில்லை தான்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பிலேயே ஜாதிவாரியாக கணக்கெடுத்த ஆட்கள் தானே நாம்! (எடுத்தாங்க தானே?)

    ReplyDelete
  2. சாதியை ஒழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விட புகுத்தும் அரசாங்கம் தான் அதிகம் உள்ளது அண்ணே ..
    என்ன செய்ய

    ReplyDelete
  3. சரியில்லைதான்.
    சாதி வாரியாக கணக்கெடுத்தார்களே... அப்போதும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம். சாதி வாரியாக சலுகைகள் கிடைக்கும் போது நாம் வேண்டாம் என்றா சொல்கிறோம். அப்போ மட்டும் என் சாதியையும் MBC யில சேரு, sc, bc யில சேருன்னு குதிக்கத்தானே செய்யிறோம்.
    சாதி ஒழியனுமின்னு நாம என்ன செஞ்சிருக்கோம். சொல்லுங்க...

    ReplyDelete
  4. நியாயமில்லை நண்பா. நிச்சயம் வெட்கப்பட வேண்டிய விஷயம்தான்.

    ReplyDelete
  5. ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்லும் நாம் அதற்க்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை

    ReplyDelete
  6. சாதி வாரி கணக்கெடுப்பே சில சந்தேகங்களை உண்டாக்கத்தான் செய்கிறது.. இவர்களின் வறுமையைப் போக்க கணக்கெடுக்கிறார்களா? அல்லது அடுத்த தேர்தலில் எந்தெந்த சாதியில் எத்தனை எத்தனை ஓட்டுகள் இருக்கிறது என எண்ணி, அதற்கேற்ற மாதிரி பணம் கொடுத்து ஓட்டுக்களை அள்ளி குவிக்கு அது உதவும் என எண்ணத் தோன்றுகிறது. செய்யும் செயல் என்னவோ நல்லதைச் சொல்லிதான்.. ஆனால் இப்படியும் சில அரசியல் பிழைகள் இருக்கத்தான் செய்கிறது.. என்ன செய்வது கருண். இது ஜனநாயக நாடு.. நாட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம்.. !

    பதிவின் இறுதியில் கேட்ட கேள்வி "நறுக்"!

    நற்குணம் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வின் வலி புரியும்...

    உணர்வற்ற சாதிவெறிப் பிடித்த பித்தர்களுக்கு இது புரியாது.. பகிர்வுக்கு மிக்க நன்றி கருண்.!

    ReplyDelete
  7. “ஜாதிகள் இல்லையடி பாப்பா“ என்று சொல்லித்தரும் பள்ளிகளிலேயே ஜாதியை ஒழிக்க முடிவதில்லை..

    இந்நிலைமை என்றுதான் மாறுமோ?

    ReplyDelete
  8. வெட்கமில்லை,வெட்கமில்லை,இங்கு யாருக்கும் வெட்கமில்லை!

    ReplyDelete
  9. pallikalil muthalil jaathiyai patri kaetkaamal avargalai palliyil saerkka mudiyumaa?athuvarai intha nilaithaan annae..

    ReplyDelete
  10. //இதற்கு நாம் வெட்கப்பட்டுதானே ஆக வேண்டும்? // ...ஆம் ...

    ReplyDelete
  11. என்ன செய்வது இருண்ட காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்! நல்ல பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    ReplyDelete
  12. வேதனைதான் மிஞ்சும்!

    ReplyDelete
  13. அரசியலும் ஜாதிகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்!

    ReplyDelete


  14. வெட்கக்கேடு!

    ReplyDelete
  15. உண்மையில் சாதிகள் ஒழிய யாரும் விரும்புவதில்லை.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"