Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/09/2012

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள் - 3


இன்று தமிழ் ..


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

                                              
அறநூல்கள் - 11
                                              
அகநூல்கள் - 6
                                                      
புறநூல் - 1
அறநூல்கள் - 11

நாலடியார்
சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகை
விளம்பிநாகனார்
இன்னா நாற்பது
கபிலர்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார்
திரிகடுகம்
நல்லாதனார்
ஆசாரக்கோவை
பெருவாயின்முள்ளியார்
பழமொழி
முன்றுரையரையனார்
சிறுபஞ்சமூலம்
காரியாசன்
ஏலாதி
கணிமேதாவியர்
திருக்குறள்
திருவள்ளுவர்
முதுமொழிக்காஞ்சி
கூடலூர் கிழார்

 புறநூல் -1

களவழி நாற்பது
பொய்கையார்

அகநூல் - 6

ஐந்திணை ஐம்பது
மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது
மூவாதையார்
திணைமொழி ஐம்பது
கண்ணன் சேந்தனார்
கார் நாற்பது
கண்ணன் கூத்தனார்
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதாவியார்
ஐந்திணை அறுபது () கைந்நிலை
புல்லங்காடனார்
.
1.அறநூல்கள் விளக்கம்

 1.நாலடியார் 

       
திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.இதுநாலடி நானூறுஎனவும் அழைக்கப்படுகிறது.

      
திருக்குறள் போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூவகை பிரிவுகளுடையது.

அறத்துப்பால் 13.
பொருட்பால் 24.
காமத்துப்பால் 3

            
ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியில் வரும்
நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும்.

செல்வம் சகட கால்போல் வரும்
கல்வி கரையில கற்பவர் நாள்சில
2.நான்மணிக்கடிகை

       
கடிகை என்பதற்குதுண்டுஎனப் பொருள்படும்.

       
நான்கு மணிகளின் துண்டுகள் இணைந்த மாலைபோல ஒவ்வொரு
பாடலிலும் மணி போன்று நான்கு கருத்துகளுடன் பாடப்பெற்றுள்ளதால் இதனைநான்மணிக்கடிகைஎன அழைக்கப்படுகிறது.
3. இன்னா நாற்பது

       
ஒவ்வொரு கருத்து முடிவிலும்இன்னாஎனக் கூறுப்படுவதால்இன்னா
நாற்பதுஎன்றழைக்கப்படுகிறது.

ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா
4. இனியவை நாற்பது

          இனிய பொருட்களை பாடல்களில் தொகுத்துக் கூறியுள்ளமையால்
இப்பெயரைப் பெற்றுள்ளது.

ஊனினைத் தின்று ஊனினைப் பெருக்காமை இனிது
மானம் அறிந்தபின் வாழாமை முன் இனிதே

5.
திரிகடுகம் (திரி + கடுகம்)

       
சுக்கு+மிளகு+திப்பிலி இம்மூன்றினால் செய்யப்பட்ட மருந்துக்குதிரிகடுகம்என்று பெயர்.

காளாளன் என்பவன் கடன்படா வாழ்பவன்
6. ஆசாரக் கோவை

          ஆசாரம் என்பது ஒழுக்கம். கோவை என்பது அடுக்கிக் கூறுதல். ஒழுக்க
நெறிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும்
குறிப்பிடுகிறது.
7. பழமொழி

          பழமை + மொழி.இது  பழமொழி நானூறு என்றழைக்கப்படுகிறது. நீதிக் கருத்தை விளக்கிக் காட்டும் வகையில் அமைக்கப்பட்ட நூல். திருக்குறள், நாலடியார் நூல்களோடு ஒருங்கே வைத்து போற்றத்தக்க பெருமையுடையது.

பாம்பின் கால் பாம்பறியும்
கண்டதைக் கற்க பண்டியதனாவான்
8. சிறுபஞ்ச மூலம்

      
மூலம் என்பது வேர். பஞ்சம் என்பது ஐந்து. சிறுவழுதுணை, நெருஞ்சி,
சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து சிறு வேர்கள் நோயைப் போக்கி உடலுக்கு உறுதி தருவது போல இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

9.
ஏலாதி

      
ஏலாதி என்பது மருத்துவப் பெயர்.ஏலம் + இலவங்கம் + நாககேசரம்
சுக்கு + மிளகு + திப்பிலி ஆகியஆறுவகை மருந்து கலவையேஏலாதிஆகும்.

10.
திருக்குறள்

 
திரு+குறள்.

அரத்துப்பால்-38

பொருட்பால் - 70
காமத்துப்பால் - 25

133
அதிகாரங்கள்

1330
குறள்களையும் 9 இயல்களையும் உடையது.

அறத்துப்பால் (4 இயல்கள்)

பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
பொருட்பால்( 3 இயல்கள்)

அரசியல், அங்கவியல், ஒழிபியல்

காமத்துப்பால் 2 இயல்கள்

களவியல், கற்பியல்
11.முதுமொழிக் காஞ்சி

கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது எனக் கூறுகிறது.

ஆர்கலியுகத்து மக்கட்கெலாம் ஒதலில் சிறந்தன்று இருக்கும்
புறநூல் விளக்கம்

12.களவழி நாற்பது

      ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் பெறுவது களவழி. இந்நூல் முழுவதும் யானைப் போர் பற்றியே அழகிய வீரக்கற்பனைகளைத் தருகிறது.


அகநூல்கள் விளக்கம்

13. கார் நாற்பது

        
அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறிய நூல். கார்
காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.
முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் இதில் சித்தரிக்கப்படுகின்றது. முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.
14. ஐந்திணை ஐம்பது

        ஆசிரியர் பொறையனார். அகத்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம்,
பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள்
இடம்பெற்றுள்ளன. இந்நூன் சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.

ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்
என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.
15. ஐந்திணை எழுபது

       ஆசிரியர் மூவாதியார். ஒவ்வாரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து
திணைக்குமாக 70 அமைந்துள்ளன. இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.
16. திணைமாலை நூற்றைம்பது

         ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார். இவரே எழுதியவர். ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்.கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள்  நூல்களில் இதுவே பெரிய நூல் ஆகும்.

17.
கைந்நிலை(ஐந்திணை அறுபது)

           
ஆசிரியர் புல்லங்காடனார். இதில் 12 முதல் 60 பாடல்கள் இடம் பெற்றுள்ளன..இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.
18. திணைமொழி ஐம்பது.

           ஆசிரியர் கண்ணந் சேந்தனார். அகத்தினை ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது. இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.




ஐம்பெருங்காப்பியங்கள்


      
அறம், பொருள், இன்பம் ,வீடு என நான்கையும் எடுத்துரைப்பது
ஐம்பெருங்காப்பியங்களாகும்.

          நூல் 

        நூலாசிரியர்
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள்
மணிமேகலை
சீத்தலைச்சாத்தனார்
சீவகசிந்தாமணி
திருத்தக்க தேவர்
வளையாபதி
தெரியவில்லை
குண்டலகேசி
நாதகுத்தனார்

1.சிலப்பதிகாரம்

       சிலம்பு + அதிகாரம்.தமிழில் தோன்றிய முதல் காப்பியம் ஐம்பெருங்காப்பியங்களுள் தொன்மையானது. மன்னனை தலைமையாகக் கொள்ளாமல் மக்களை தலைமையாகக் கொண்ட நூல்.

இதன் வேறுபெயர்கள்:

         
புரட்சிகாப்பியம். முதற்காப்பியம். முத்தமிழ்க் காப்பியம். நாடக காப்பி
யம், குடிமக்கள் காப்பியம், மூவேந்தர் காப்பியம், ஒற்றுமை காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக் காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள், சிலம்பு.

சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்:

              1.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
              2.
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
              3.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்என்றார் பாரதியார்.
தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம்என்றார்
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை.
"
சிலப்பதிகாரம் என்பதைவிட சிறப்பு அதிகாரம் என்பதே'' சிறந்தது என்றார்
.வே.சாமிநாத ஐயர்.

இது 3 காண்டங்கள்  30 காதைகளை உடையது.

                  
புகார் காண்டம் - 10 காதைகள்
                  
மதுரைக் காண்டம் - 13 காதைகள்
                  
வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்

 
சேரன் செங்குட்டுவனின் தம்பியே இளங்கோவடிகள்
கண்ணகியின் தந்தை - மாநாய்க்கன்
கோவலனின் தந்தை - மாசாத்துவான்

மூன்று நகரங்களின் கதை என்றும் கூறுவர்.

சிலப்பதிகாரம், மணிமேகலை என இரண்டிலும் இந்திரவிழா
குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திரவிழாவானது 28 நாட்கள் நடைபெறும்.
2. மணிமேகலை

        கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை மணிமேகலையின் துறவு வாழ்க்கை பற்றி கூறும் நூல்.

வேறு பெயர் - மணிமேகலை துறவு.

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெலாம்
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே
ஆசிரியர் குறிப்பு

கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். கடைச்சங்க புலவர்களுள் ஒருவர்.

தண்டமிழ் ஆசான்எனப்படுவார்.

சாத்தான் நன்னூல் புலவன்என
இளங்கோவடிகளால் புகழப்பெற்றவர்.
3.சீவக சிந்தாமணி

     விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம்.

இயற்றியவர்:திருத்தக்கத் தேவர்

வேறு பெயர் : மணநூல்

     
இதில் வரும் சீவகன் எட்டு மகளிரை மணந்தான்.காப்பியம் முழுவதும் திருமணம் பற்றிய செளிணிதிகள் இடம்பெற்றதால்மணநூல்எனப்பட்டது.
4.குண்டலகேசி

     
இதன் ஆசிரியர் நாதகுத்தனார்.இது பௌத்த மத காப்பியம். இதன் கதைதேர்காதைஎன்றபௌத்த நூலில் காணப்படுகிறது.
4.வளையாபதி

    
வளையாபதிகவியழகு நிறைந்த நூல்எனப் பெயர் பெற்றது.இதன் ஆசிரியர் இன்னாரெனத் தெரியவில்லை.




  ஐஞ்சிறுங்காப்பியங்கள்

          நூல் 

        நூலாசிரியர்
சூளாமணி
தோலாமொழித்தேவர்
நீலகேசி
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயணகுமார காவியம்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நாககுமார காவியம்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

சூளாமணி

         இது ஒரு சமண காப்பியம்.இயற்றியவர் தோலாமொழித்தேவர்.எல்லா வகையிலும் பெருங்காப்பியமாகத் திகழும் சிறப்புடைய காப்பியம் ஆகும்.இந்நூலின் மூலக்கதை ஆறுகதை மகாபுராணத்தை தழுவியது.

வேறுபெயர்-சூடாமணி.

நீலகேசி

      
இது ஒரு சமண காப்பியம். குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் நீலகேசியாகும்.

வேறுபெயர் - “நீலகேசி திரட்டு
உதயணகுமார காவியம்

    
இது உதயணன் கதையை கூறும் நூல்.மிகப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் ஆகும்.
நாககுமார காவியம்

    
நூலாசிரியர் சமண மதத்தைச் சார்ந்த துறவியாக இருக்கலாம் என்பதைத் தவிர வேறெதுவும் தகவல் இல்லை..
யசோதர காவியம்

    
உயிர்க்கொலை தீது எனக் கூறும் நூல்.

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"