Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/03/2011

இப்படியே இருந்தால் என்ன ஆகும்?





ங்கே
குழந்தைகளுக்கும்
சோம்பேறிகளுக்கும் 
மட்டுமே
நிம்மதி...!


முதலாளிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும் 
மட்டுமே
பாதுகாப்பு...!

டாதிபதிகளுக்கும்
சாமியார்களுக்கும்
மட்டுமே
செல்வாக்கு...!

மாற்றுபவர்களுக்கும்
சினிமாகாரர்களுக்கும்
மட்டுமே
சுகமான வாழ்க்கை...!

ன்னும்
நிறைய சொல்வேன்
என்னசெய்ய?

ராசரி
இந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
ன் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!

Repost

17 comments:

  1. முதலாளிகளுக்கும்
    அரசியல்வாதிகளுக்கும்
    மட்டுமே
    பாதுகாப்பு...!

    ஆமாம் உண்மைதான்..

    ReplyDelete
  2. //சராசரி
    இந்தியர்களின்
    சகிப்புத் தன்மையால்
    மட்டுமே
    என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது...!//
    உண்மைதான் மனிதம் இந்தியாவில்
    இருக்கின்றது

    ReplyDelete
  3. ஆம்... முற்றிலும் உண்மை. சகிப்புதன்மை மிக அதிகமாகவே இருக்கிறது. (அவசியமான விஷயங்களுக்குக் கூட கொந்தளிக்காத அளவுக்கு) என்ன செய்வது?

    ReplyDelete
  4. நண்பரே நேரடியாகவே சொல்லுங்களேன் சகிப்புத்தன்மை இல்ல அது சூடு சுரணை அற்ற சுயநல வாதிகளாக நாம் மாறியதின் விளைவு மேலே நீங்கள் சொன்ன அனைத்திற்கும் காரணம்

    ReplyDelete
  5. சவுக்கடி பின்ன நிஜம்தானே

    ReplyDelete
  6. அளவு கடந்த சகிப்புத்தன்மை.

    ReplyDelete
  7. சகிப்பு தன்மை என்று சொல்வது தவறு ?
    அடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை

    ReplyDelete
  8. அப்படிதான் இருக்கு என்னத்த சொல்ல????

    ReplyDelete
  9. //சராசரி
    இந்தியர்களின்
    சகிப்புத் தன்மையால்
    மட்டுமே
    என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது//


    இது உண்மையான வார்த்தை
    சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. மச்சி, கவிதையின் உட் கருத்து ஓக்கே. ஆனால் எம் தேசம் எரிய வேண்டும் என நினைப்பதை விட, எம் தேசத்தில் நிகழும் அநீதிகளை ஒழிக்கும் வல்லமை படைத்தவர்களாக எம் சந்ததியினையாச்சும் மாற்ற ட்ரை பண்ணலாம் அல்லவா?

    ReplyDelete
  11. உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் கருண்.

    ReplyDelete
  12. சகிப்புத்தன்மை அளவுக்கு அதிகமா இருக்குரதுனாலதான் எங்கே போனாலும் அடி வாங்கிட்டு இருக்கோமா...?

    ReplyDelete
  13. இந்தியர்களின் சகிப்புத்தன்மை பற்றி விழிப்புணர்வு தேவை அவசியமும் கூட...!!

    ReplyDelete
  14. அட நாதாரிகளா இதுக்கும் மைனஸ் ஓட்டா அடின்கொய்யால...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"