Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/20/2011

இது எத்தனைப் பேருக்குத் தெரியும்? (மகான்களின் வாழ்க்கையில்)


இந்திய தேசியப் பாடல் "வந்தேமாதரம்"


இதை இயற்றியவர் 'பக்கிம் சந்திர சட்டர்ஜி'

இவர் வங்காளத்தில் ஒரு மாவட்டத் துணை ஆட்சியாளராக பணியில் இருந்தார். ஒரு தடவை சட்டர்ஜி தட்சினேஸ்வரம் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆசி பெற்றார்.

சட்டர்ஜிக்கு ஆசி வழங்கிய பரமஹம்சர் "உனது பெயர் என்று கேட்டார்"?
என்பெயர் 'பக்கிம் சந்திரர்' என்று பதிலளித்தார்.

வங்காள மொழியில் பக்கிம் என்றால் 'வளைந்த' என்று பொருள். வளைந்த சந்திரன் அதாவது 'பிறைச் சந்திரன்' என்று அர்த்தம். இதைக் கெட்ட பரஹம்சர் சிரித்தபடி,

நீ வளைந்த சந்திரனா? ஆங்கிலேய அரசில் பணிபுரிபவன் தானே நீ ! ஆங்கிலேயன் பூட்ஸ் காலால் மிதித்ததில் வளைந்து போய் விட்டாயா என்று கேட்டார்.

பரமஹம்சரின் வார்த்தையைக் கேட்ட சட்டர்ஜி குறுகிப் போனார். மிகவும் வருந்தினார். நேராக தம் வீட்டுக்கு வந்தவர், தனது துணை ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தேச விடுதலைக்குப் பாடுபட்டார். ஆனந்த மடம் என்ற நூலை எழுதினர். அந்த நூலில் தான் 'வந்தே மாதரம்' என்ற பாடம் இடம்பெற்றுள்ளது.

விடுதலை பெருநெருப்பை மூட்டிய வந்தேமாதரத்துக்கு முதல் பொறி கொடுத்தவர் பகவான் இராமகிருஷ்ணர்.

15 comments:

  1. இதுவரை அறியாத அரிய தக்வல்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே..

    விடுதலை தீயின் முதல் பொறி எங்கிருந்து என கேள்வி பல நாட்களாய் ஓடியது..

    ஓ அது பகவான் இராமகிருஷ்ணரிடம் இருந்து...

    அறிந்து கொண்டேன்..

    நன்றி பகிர்விற்க்கு

    ReplyDelete
  3. வியத்தகு தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தமிழனின் வரலாறே தெரியாதபோது இதுல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை

    நல்லதகவல் நன்றி

    ReplyDelete
  5. இன்னொரு விஷயம் தெரியுமா?
    இவர் இந்தியாவிற்கு மட்டும் தேசிய கீதத்தை தரவில்லை. வங்காளதேசத்திற்கும் இவர்தான் தேசிய கீதம் எழுதினார். ஆக, இரு நாட்டிற்கும் தேசியகீதம் எழுதிய பெருமை இவர் ஒருவருக்குத்தான் இருக்கும்

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி...
    வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து நம் வாழ்வு கேள்விக்குறியாகின்றது....

    இன்று என் பதிவு...
    உண்மையான போதிதர்மன் யார்?...

    ReplyDelete
  7. எனக்கு தெரியாத புது தகவல் இது மிக்க நன்றி மக்கா...!!!

    ReplyDelete
  8. //இன்னொரு விஷயம் தெரியுமா?
    இவர் இந்தியாவிற்கு மட்டும் தேசிய கீதத்தை தரவில்லை. வங்காளதேசத்திற்கும் இவர்தான் தேசிய கீதம் எழுதினார். ஆக, இரு நாட்டிற்கும் தேசியகீதம் எழுதிய பெருமை இவர் ஒருவருக்குத்தான் இருக்கும் ///

    @ரஹீம் காஸாலி- இந்தப் பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகவும்...
    இந்திய தேசிய கீதம் மற்றும் வங்க தேசிய கீதம் இரண்டையும் இயற்றியவர் தாகூர்.....
    :-)

    ReplyDelete
  9. ஹ்ம் சரிதான்.

    ReplyDelete
  10. desiya geetham endrathum naanum thagore endra sinthanaiyile intha pinnoottam pottuvitten. Avasarathil nadanthu vitta thavaru athu. Mannikkavum. Nandri vilangaathavan

    ReplyDelete
  11. பரமஹம்ஸ ராமகிருஷ்ணனர் இப்படி ஒரு நெருப்புக்குப் பொறி தந்தவரா? இது எனக்குப் புதிய தகவல். நன்றி கருன் ஸார்!

    ReplyDelete
  12. புதிய தகவல் நன்றி பாஸ்

    ReplyDelete
  13. //விடுதலை பெருநெருப்பை மூட்டிய வந்தேமாதரத்துக்கு முதல் பொறி கொடுத்தவர் பகவான் இராமகிருஷ்ணர்.//

    எப்படின்னு அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  14. அருமையான தகவல். நன்றி.

    த ஓ 9.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"