Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/03/2011

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா? -மகான்களின் வாழ்க்கையில்



கிரேக்க ஞானி "சாக்கரடீஸ்" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. சாக்கரடீசின் மனைவி எப்போதும் அவரிடம் சண்டை போட்டு கொண்டிருப்பார். எதை செய்தாலும் ஏட்டிக்கு போட்டியாய் நடந்துகொள்வார் மனைவி.
ஒரு நாள் தன நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சமயலறையில் பாத்திரங்கள் உடைபடும் சத்தம் கேட்டது.

நண்பர்கள் உள்ளே என்ன சத்தம் என் கேட்டார்கள். "இடி இடிக்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே ... நண்பர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. சிறிது நேரம் கழித்து வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து சாக்கரடீசின் தலையில் ஊற்றினார் அவரது மனைவி.

அந்த தண்ணீர் அவருடைய நண்பர்களின் மீதும் தெளித்தது. நண்பர்களுக்கோ சங்கடமாக இருந்தது. சாக்கரடீஸ் தன் மீது ஊற்றப்பட்ட தண்ணீரை துடைத்துக் கொண்டே "இடி இடிக்கிறது என்று கூறினேன் அல்லவா, இப்போது மழை பெய்கிறது"  என்றார் சிரித்துக்கொண்டே.

எல்லார் வீட்டிலேயும்  இந்த மனைவிகள் இப்படித்தானா?

29 comments:

  1. சாக்ரடிஸ் மனைவியும் இப்படி தானா

    ReplyDelete
  2. உண்மைய இப்படி போட்டு ஒடச்சிட்டீங்களே...

    அப்ப இந்த ஒலகமே இப்படித்தான் இருந்திருக்கா...

    ReplyDelete
  3. மச்சி, உன் அனுபவம் ஒரு கதையா சொல்லி இருக்குற?

    ReplyDelete
  4. பொண்டாட்டி மேல உள்ள கோபத்தை பதிவில் கொட்டி தீர்த்து நிம்மதி அடைந்தார் வாத்தி ஹி ஹி...

    ReplyDelete
  5. ஹி ஹி ஹி. சூப்பர்

    ReplyDelete
  6. வணக்கம்!இந்த சம்பவம் நிகழ்ந்தது உண்மையே!முன்பே படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. உமக்கு பதில் சொல்வதனால் எனது சோத்துக்கே ஆப்பு வைச்சுடுவீங்க போலிக்குறதே..

    ReplyDelete
  8. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க

    ReplyDelete
  9. பாஸ் இப்படி பப்பிளிக்கா உண்மை எல்லாம் பேசப்படாது..... அவ்

    ReplyDelete
  10. சுவாரஸ்யம் பாஸ்

    ReplyDelete
  11. இது எல்லாம் சகசம்(சாகசம்) வெளியில் சொல்லப்பாடது ஒக்கே

    ReplyDelete
  12. Arumai. But naan earkanave paditha visayam. Reminder pola irunthathu. Nanri.
    TM 4.

    ReplyDelete
  13. சாக்ரடீஸின் இந்த கதை மிக பிரபலம். சும்மா வெட்டியா திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர் வம்பு பேசினால் தண்ணி ஊத்தாம என்ன செய்வாங்க?

    ReplyDelete
  14. Unga illatharasi unga blog padikkirathillai pola. Adhan thairiyamai ipadi padhivu pottirukkenga. Unga ammani mob.no9............. Irunga avangakitta pesuren.

    ReplyDelete
  15. நல்ல வேளை அம்மையார்
    எதையாவது எடுத்துச் சாடியிருந்தா
    புயல் அடிக்குதுன்னு சொல்லியிருப்பார்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. இந்த செய்தி ஒரு அவதூறு. எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் இதுகுறித்து விளக்கமாக எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்!
    ****

    ஒரு நாள் தனது பேச்சைக் கேட்காத சாக்ரடீஸின் தலையில் கோபத்தில் ஒரு வாளி தண்ணீரை தூக்கி ஊற்றினாள் ஜாந்திபி, முன்பு இடி இடித்தது தற்போது மழை பெய்கிறது என்று சாக்ரடீஸ் அதைப் பற்றி சொன்னதாக ஒரு கட்டுக்கதை நெடுங்காலமாகவே இருந்துவருகிறது, எதற்காக அந்தச் சண்டை வந்தது என்று எந்த வரலாற்று புத்தகத்திலும் குறிப்புகளில்லை

    இப்படி பலநூறு வருசமாகவே ஜாந்திபியைப் பற்றி நிறைய தவறான தகவல்கள். அவதூறுகள் உலவுகின்றன, அவை நிஜம் என்று மெய்பிக்க ஒரு சாட்சியுமில்லை, அந்த வம்புக் கதைகளின் வழியே உலகின் மோசமான மனைவிகளின் பட்டியலில் ஜாந்திபி எப்போதுமிருக்கிறாள்,

    http://www.sramakrishnan.com/?p=2518

    ReplyDelete
  17. மாப்ள நோ கமண்ட்ஸ் ஹிஹி!

    ReplyDelete
  18. இதையெல்லாம் பதிவில் எழுதலாமா? என்ன கோபம் சார் அவங்க மேலே?
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete
  19. வீட்டுல எலி வெளிய புலிங்கறது இதுதான்....கருன் சார் நீங்க எப்படி...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  20. மாப்ள , ரொம்ப நொந்துட்டே போல

    ReplyDelete
  21. அப்படியெல்லாம் இருந்தால்தான் பெரிய தத்துவ ஞானியாக முடியும்!

    ReplyDelete
  22. ஏட்டிக்கு போட்டி - மனைவி..
    தத்துவ நியநிகளுக்கு இதெல்லாம் சகஜம்...
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. பாஸ்...உண்மையை சொல்லுங்க...
    இந்த போஸ்ட் போட்ட நாள், ஹோட்டல்’லதானே சாப்டீங்க...

    ReplyDelete
  24. எத்தனை பேர் பின்னூட்டம், நண்பரே எல்லோரின் குரலாக ஒரு இடுகையை பதிந்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    நீங்களும் சாக்ரடீஸ் போல தத்துவஞானியாக...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"